-
11th May 2016, 06:28 PM
#11
Moderator
Diamond Hubber
இன்னொரு துளசி கேரக்டர் தேடுகிறேன்! -ஸ்ருதிராஜ்
தென்றல், ஆபீஸ் சீரியல்களுக்குப் பிறகு அபூர்வ ராகங்கள் தொடரில் நடித்து வருகிறார் ஸ்ருதிராஜ். இதையடுத்தும் குடும்பப் பொறுப்புள்ள அப்பாவித்தனமான தொடர்களில் நடிப்பதில் அவர் ஆர்வமாக இருக்கிறாராம்.
இதுகுறித்து ஸ்ருதிராஜ் கூறுகையில், சீரியல்களைப் பொறுத்தவரை மற்றவர்கள் நம்மை கொடுமைப்படுத்துவது போன்ற வேடங்களில் நடித்தால் அது சீரியல் பார்க்கும் பெண்களின் மனதில் ஆழமாக பதிந்து விடும். அதனால் அந்த கேரக்டர் களில் எப்போது திரையில் வந்தாலும் உச் கொட்டிக் கொண்டேயிருப்பார்கள். கிராமப்புறங்களில் உள்ள பாட்டிகள் கண்கலங்கவும் செய்வார்கள். அந்த வகையில், தென்றல் சீரியலில் எனக்கு கிடைத்த துளசி கேரக்டர் என்னை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு போய் சேர்த்தது. அந்த மாதிரியான ஒரு வேடம் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றுதான் சொல்வேன்.
அதோடு, அந்த சீரியலில் நடித்த எனது பெயர் மட்டுமின்றி சீரியலின் பெயரான தென்றல் என்பதைகூட குறிப்பிடாமல், துளசி நாடகம் என்று பெண்கள் குறிப்பிட்டனர். அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரம் பெயர் வாங்கியது அதன்பிறகு ஆபீஸ் சீரியலில் நடித்த ராஜூ கேரக்டரும் ஓரளவு பெயர் வாங்கித்தந்தது. இப்போது அபூர்வ ராகங்கள் சீரியலும் ரீச்தான். என்றாலும், இன்னொரு துளசி கேரக்டருக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறேன் என்று கூறும் ஸ்ருதிராஜ், அப்பாவி பெண் வேடங்களில் நடிப்பதில் அதிக ஆர்வமாக இருப்பதாக சொல்கிறார்.
நன்றி: தினமலர்
-
11th May 2016 06:28 PM
# ADS
Circuit advertisement
Bookmarks