-
24th March 2016, 06:57 PM
#11
Junior Member
Diamond Hubber
நாங்கள் போய்க்கொண்டிருந்த படகுக்கு எதிரே சுமார் 15அடி நீளமுள்ள "ராஜநாகம்"இருந்ததைப் பார்த்த நண்பர்கள்,பெரிய கலைமான் ஒன்று நீந்தி வருகிறது என்றார்கள்.இங்கேயே வேட்டை கிடைத்துவிட்டது என்று சப்தம் போட்டார்கள்.
அருகில் சென்று பார்த்ததும்தான் அது பெரிய ராஜநாகம் என்று தெரிந்தது.நான் படகை இன்னும் அருகில் செலுத்தச் சொன்னேன்.மற்றவர்கள்'அது படகின் மீது பாய்ந்து விடும்.பலரை விரைவாக கடிக்கும் சக்தி அதற்கு உண்டு.பக்கத்தில் போக வேண்டாம் என்று எச்சரித்தார்கள்.
என்னுடைய அசட்டுத்தைரியம்
அதற்கு செவி சாய்க்கவில்லை.விசைப்படகை அருகில் செலுத்தி அதை வட்டமிடச் சொன்னேன்.படகின் வேகத்தினால் எழுந்த அலையிலே அது சிக்கி எங்கள் படகின் மீது பாய முடியாமல் படமெடுத்துச் சீறிய அந்த அழகிய காட்சி என் வாழ்க்கையில் நான் பார்த்த கண் கொள்ளாக் காட்சிகளில் ஒன்று.
யார்?
எங்கே?
எப்போது?
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
24th March 2016 06:57 PM
# ADS
Circuit advertisement
Bookmarks