-
21st February 2016, 01:01 PM
#1
Junior Member
Devoted Hubber
மனநோய் !
உன்மத்தமாய் மகன் ஆடுகிறான்
ஊரைக்கூட்டி யாருடனோ பாடுகிறான்
உறக்கத்தில் யாரையோ தேடுகிறான்
உண்மையென்ன சொல்லுங்கள் டாக்டர்
கண்மணியின் கவலை இது கலங்கினாள்
கண்ணன் சின்ன குழந்தை அவன்
கண்முன் தான் யாரும் இல்லையே பின்
காரணம் என்ன டாக்டர் ?
கவலை வேண்டாம் - டாக்டர் தில்லை
காரணம் இது மனநோய் இல்லை
கற்பனைக்கு கடிவாளம் இல்லை
கண்ணனுக்கு ஒன்றுமேயில்லை
கூட்டி வா உன் மகனை சரியாகும் !
கூட வந்த கணவனுக்கோ ஆச்சரியம்
அதெப்படி சாத்தியம் டாக்டர் ?
அவளுக்குத்தான் மகனே இல்லையே !
-
21st February 2016 01:01 PM
# ADS
Circuit advertisement
Bookmarks