-
21st January 2016, 07:53 AM
#11
Junior Member
Newbie Hubber
ராகவேந்தர்,
நீங்கள் என்னை புரிந்து கொள்ள மாட்டீர்கள் .ஆனால் ,நான் உங்களை புரிந்ததோடு மட்டுமன்றி ,மிக மதிக்கவும் செய்கிறேன்.எங்களை விட,உங்களை போன்றோர் ,நடிகர்திலகத்தின் புகழை உலக அளவில் எடுத்து செல்ல தேவை.இதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை.
புதிய எண்ணங்கள் ,முயற்சிகள்,புதிய நபர்கள் வரும் போது ,வரவேற்காமல் சந்தேக பார்வை பார்ப்பது ,தங்களை போல சுமங்கலி,தராசு,மோகனபுன்னகை, சிரஞ்சீவி, அமரகாவியம் எல்லாமே உன்னதம் என்று ஜால்ரா தட்டாவிட்டால் மற்றவர்களின் பார்வையில் அவர்களை வீழ்த்துவது என்று செயல்படுவது. நான் 2012 இல் சுணங்கியிருந்தால்,உங்களுக்கு இந்த வீர்யமான எழுத்துக்கள் கிடைத்திருக்குமா?
ஐரீன் வரும் போதெல்லாம்,வீறு கொண்டு எழுவது என்ன விவேகம்?அவரின் பார் மகளே பார் போன்று உங்களால் எழுத முடியுமா? புதிய எண்ணங்கள்,எழுத்துக்கள் வருவது,அதை வரவேற்பதே இந்த திரிக்கு வலு சேர்க்கும்.
மற்ற திரிகளுக்கும்,நமது திரிக்கும் உள்ள வித்யாசம்,இது என்னை போன்று,முரளி போன்று,கார்த்திக் போன்று,சாரதி போன்று,ஐரீன் போன்று,பிரபு ராம் போன்று,வாசு போன்று,ஜோ போன்று புத்தி கூர்மையுள்ளவர்கள் மிக்க திரி. இங்கு பாமரர்கள் ,படிக்காத ,பகுத்தறிய தெரியாதவர்கள் போல நாம சங்கீர்த்தன பஜனை நடக்க வாய்ப்பே இல்லை. வேதங்கள் போல,உபநிடதங்கள் போல,பாரதம் போல,திருக்குறள் போல பிரச்சினைக்குரிய கருத்துக்கள் வந்தே தீரும். கேனோபநிஷத் போல கடவுள் மறுப்பும் வரும். ஆனால் அது கடவுளின் இருப்பை ஆழ சொல்லும் முகாந்திரம் ஆகும்.
இங்கு வரும் அறிவின் ஊற்றை வரள செய்யாதீர்கள். ஐரீன் வருக,எண்ணங்களை தருக.
Last edited by Murali Srinivas; 21st January 2016 at 11:39 AM.
-
21st January 2016 07:53 AM
# ADS
Circuit advertisement
Bookmarks