-
11th January 2016, 09:34 AM
#1791
Senior Member
Seasoned Hubber
நிறைகுடம் - காணொளிகள்
தேவா தேவா அழைக்கின்றேன் தேவா
விளக்கே நீ கொண்ட ஒளி நானே
கண்ணொரு பகம் நெஞ்சொரு பக்கம்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
11th January 2016 09:34 AM
# ADS
Circuit advertisement
-
11th January 2016, 12:34 PM
#1792
Junior Member
Newbie Hubber
நிறைகுடத்தின் சிறப்புக்கள்.
1)சுபதினம் படத்தில் ,வாலி எழுதிய ,சீர்காழி பாடிய ,ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி பாட்டில் நிறைகுடம் போலொரு திரைப்படம் வந்தால் ரசிகருக்கதுதான் சுபதினம் என்று ஒரு வைரவரி.
2)நிறைய முதல்கள். முக்தா .ஸ்ரீனிவாசன் சிவாஜியுடன் இயக்குனராக இணைந்த முதல். மகேந்திரன் சிவாஜிக்காக எழுதிய முதல் படம். சோ ,கதை வசனகர்த்தா வாக சிவாஜியுடன் பணி புரிந்த முதல் படம்.(ஒரே படம்).வீ.குமார் ,சிவாஜிக்கு இசையமைத்த முதல் படம்.(ஒரே படம்).வாணிஸ்ரீ ,முழு கதாநாயகியாக சிவாஜியுடன் இணைந்த முதல் படம்.
3)முக்தாவிற்கு மிக பெரிய வெற்றி படம். அவரின் தேன்மழை,நினைவில் நின்றவள் சூத்திர படியே கதை. கல கல முன்பாதி. பிரச்சினையால் ஒருவரோடு மற்றவர் கண்ணாமூச்சி ஆட ,அது வெளிபடாமல் ,காமெடியன் துணையுடன் ஹீரோ போராடும் பின்பாதி.
4)சிவாஜி-வாணிஸ்ரீ காதல் காட்சிகள் இளைஞர்,இளைஞி,பெண்கள்,பெரியோர் எல்லோர் மனைத்தையும் கொள்ளையிட்டது.இருவரின் chemistry பல ஜோடிகளுக்கு முன்னுதாரணம்.
5)இடைவெளி திருப்பு முனையும், இறுதி காட்சி திருப்பமும் லாஜிக் மீறிய சுவை.
6)என் நண்பர்களும் ,நானும் எத்தனை முறை ரசித்தோம் என்ற கணக்கே இல்லை. சிவாஜி ,நகைச்சுவையிலும் பின்னி பெடலெடுப்பார்.
7)சிவாஜியின் வெற்றிக்கு பெரிய வலுவான கதை பின்புலம் தேவையில்லை என்பதை ,கலாட்டா கல்யாணமும்,நிறைகுடமும் நிரூபித்தன.(அஞ்சல் பெட்டியின் .வெற்றியும் கூட)
8)ராஜாராணி போல cute படம்.
Last edited by Gopal.s; 11th January 2016 at 12:36 PM.
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
11th January 2016, 03:45 PM
#1793
Senior Member
Seasoned Hubber
நடிகர் திலகம் - நிறைகுடம் - நினைவலைகள்
தமிழகமெங்கும் 8.8.1969 அன்று வெளியிட நிச்சயிக்கப்பட்ட நேரத்தில், 01.05.1969 அன்று வெளியாகி, 08.08.1969 அன்று, எம்.ஜி.ஆர். அவர்களின் அடிமைப் பெண் திரைப்படம் நூறாவது நாளைக் கண்டது. இதனை அறிந்த நடிகர் திலகம், சென்னைை மிட்லண்ட் உட்பட அடிமைப் பெண் நூறாவது நாளைக் கொண்டாடும் வகையில் சில திரையரங்குகளில் மறுநாள் 09.08.1969 அன்று வெளியிட வேண்டும் என்று விரும்பிக் கேட்டுக் கொண்டதன் பேரில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தர்களும் சேர்ந்து ஒரு நாள் தள்ளி, அதாவது 09.08.1969 அன்று நிறைகுடம் படத்தை வெளியிட்டார்கள்.
இதனிடையே காவல் தெய்வம், அடிமைப் பெண் உட்பட 01.05.1969 அன்று வெளியான திரைப்படங்கள், 03.05.1969 அன்று அப்போதைய ஜனாதிபதி ஜாகிர் ஹூஸேன் அவர்களின் மறைவிற்காகவும், 18.05.1969 அன்று அப்போதைய தமிழக அமைச்சர் திரு ஏ.கோவிந்தசாமி அவர்கள் மறைவிற்காகவும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டன.
Last edited by RAGHAVENDRA; 11th January 2016 at 03:48 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
11th January 2016, 04:11 PM
#1794
Senior Member
Seasoned Hubber
Vasu Sir's Post reproduced:
எங்கள் 'தெய்வ மகனே' வருக! வருக!
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
11th January 2016, 05:01 PM
#1795
Junior Member
Newbie Hubber
தெய்வ மகன்.(1969).
மத்திய அரசு தனது தென்னிந்திய படங்களை பற்றிய மாற்றாந்தாய் பார்வையை மாற்றி கொண்டு, அன்றைய பாராமுக மாநில அரசையும் மீறி, உலக பட தர கோட்பாடுகளை தளர்த்தி,அத்தனை அறிவுஜீவிகளையும் நடிப்பு என்ற ஒரே அம்சத்தால் மட்டுமே அசர வைத்து, oscar போட்டிக்கு தேர்ந்தெடுக்க பட்ட முதல் தென்னிந்திய திரை படம் தெய்வ மகன்.(1969).
பலர் ரசித்த காட்சிகளில் என்றுமே முன்னணியில் நிற்கும் மூன்று சிவாஜி தோன்றும் காட்சியை ரசித்த கோடி கணக்கானோருக்கு,தாங்கள் ரசித்தது மூன்று வெவ்வேறு உலக நடிப்பு கல்லூரி பாணியில் அந்த உலத்திலேயே ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நடிகன் நடித்த ஒப்பில்லாத காட்சிதான் ,என்பது புரிந்திருக்குமா என்பது சந்தேகமே. இப்போது நாம் அலச போவது அந்த படத்தை பற்றி அல்ல.
நான் ஏற்கெனவே விளக்கிய மூன்று முக்கிய நடிப்பு பள்ளி/கோட்பாடுகளான method Acting school ,Chekhov school ,Oscar wilde concept என்ற மூன்றையும்தான் மூன்று பாத்திரங்களாக்கி அந்த மேதை மூன்று பாணிகளையும் மோத விட்டார். வேறு வேறு நடிகர்கள் அந்த மூன்று பாத்திரங்களில் மோதியிருந்தால், ஒவ்வொரு நடிகனுக்கும் உள்ள திறமையளவின் ஏற்ற தாழ்வால்,நமக்கு முடிவு தெரியாமலே போயிருக்கும். ஒரே நடிகர்,சம திறமை,சம அக்கறையுடன் மூன்று பாத்திரங்களையும் வார்த்ததால் ,போட்டிக்கு ஒரு மாதிரி தீர்ப்பு வந்தது. இரண்டு சம வலுவுள்ள சங்கர்(அப்பா), கண்ணன்(மூத்த மகன்) பத்திரங்களை method acting (அப்பா),Chekhov (மூத்த மகன்) முறைகளிலும், மிக casual ஆக உருவான light ஆன விஜய்(இளைய மகன்) பாத்திரத்தை oscar Wilde பாணியில் சுதந்திர கற்பனை திறத்துடன் கையாண்டிருந்தார்.
இங்கேதான் நமக்கு ஒரு பாடமே நடத்த பட்டுள்ளது. உலக திறமையாளனான ஒரு versatile நடிகன்,தன் கற்பனை வளத்தை பயன் படுத்தி,சராசரி வாழ்க்கையில் பார்க்கவே முடியாத ஒரு பாத்திரத்தை தன் அழகுணர்ச்சியில் வடித்தால்?
எந்த கொம்பனி டம் வேண்டுமானாலும் இன்று கூட கேளுங்கள். தெய்வமகனில் உன்னை கவர்ந்த பாத்திரம் எதுவென்று? நூற்றுக்கு நூறு பேரின் விடை விஜய்தான்.இப்போது அந்த பள்ளிகளுக்கு போட்டி வைத்தால், சமமான பாத்திர வார்ப்பாக இல்லாவிடினும்,
Method Acting , Chekhov என்ற வலுவான பள்ளிகளை புறம் தள்ளி,Oscar Wilde சுதந்திர கற்பனை கோட்பாட்டில் ஜெயித்த அந்த ஒப்பற்ற கலைஞன்,மற்ற எல்லோரையும் விட எங்கு வேறு பட்டு நின்றார் என்பது உங்களுக்கு புரிந்திருக்குமே?இருந்தாலும் விளக்கத்தான் போகிறேன்,இந்த படங்களின் பாத்திரங்களையே பாடமாக்கி.
எந்த பள்ளிகளையும் முறையாக கல்லாமல், அந்தந்த பாத்திரங்களுக்கு , இன்னின்ன முறையில்தான் வடிவமைக்க வேண்டும், இந்த பாணியில்தான் நடிக்க வேண்டும் என்று அந்த மேதைக்கு எப்படி தெரிந்தது? பிறவி மேதை என்ற பிறகு இந்த ஆராய்ச்சியே தேவையில்லை.
தெய்வமகன் சங்கர், கண்ணன் பாத்திரங்களை எடுத்து கொள்வோம்.இரண்டுமே, தன் முகத்தின் அழகு கெட்டு ,விகாரமாகி, அதனால் மற்றவர்களின் கேலிக்கும், சீண்டலுக்கும் பாத்திரமாகி , inferiority complex இனால் அவதி படும் பாத்திரங்களே. தந்தை-மகன் என்ற உறவு முறை வேறு. நடிகர்திலகம் நினைத்திருந்தால், இரண்டையுமே, ஒரே பாணியில் வடிவமைத்து சில நு ட்பங்களை மட்டுமே மாற்றியிருக்கலாம். ஆனால் பாத்திரங்களை அவர் பார்த்த முறையே வேறு.
சங்கர், சிறு வயதில் அவமானங்களை சுமந்து அவதி பட்டிருந்தாலும் ,அது அவன் வாழ்வில் ஒரு பகுதியே. Trauma என்ற சொல்லோடு கடந்து போகும். அவன் வாழ்வில், அப்பா,அம்மா, அன்பான மனைவி,பிள்ளை,நண்பர்கள் மற்றும் கஷ்ட பட்டு முன்னேறி அடைந்த தொழில் செல்வாக்கு எல்லாமே, ப்ரம்மாண்டமாகி அவன் குறையை சிறிதாக்குகிறது.தன் குறையை தினம் தினம் ஞாபக படுத்தி சித்திரவதை படுத்த வாய்ப்புள்ள ஒருவனை ,பிறவியிலேயே அழிக்க சொன்னது தனக்காக கூட இருக்கலாம்.
ஆனால் கண்ணனோ, அனாதை விடுதியில், அனுதினமும் குறையை மட்டுமே பார்க்கும் சக மனிதர்களுடன் கூட்டு புழுவாக வாழ்பவன்.மொழியறிவு, சிறிது இசை, சிறிது பாபாவின் அன்பு இவை தவிர வேறு வெளிச்சமே இல்லாத வாழ்க்கை. Herzog எடுத்த ஒரு ஜெர்மன் படத்தில், இருபது வயது வரை மோசமான நிலையில், captivity யில் இருந்த ஒரு மனிதனை, திடீரென்று ஒரு நகரத்தில் விட்டு விட்டு போய் விடுவார்கள்.(உண்மை கதை).கண்ணன் நிலை கிட்ட தட்ட அப்படித்தான்.டாக்டர் வீட்டிலும் இருட்டறை சிறை வாழ்வே. அப்போது கண்ணனின் வாழ்வே அவன் முகதழும்பு, அவமானம், சார்ந்தே சிறுது இசையுடன் பயணிக்கிறது. உள்ள போராட்டம் சங்கரை விட கண்ணனுக்கு ஏராளம்.
அதனால் சங்கருக்கு, inferiority காம்ப்ளெக்ஸ் கொண்ட ஒரு normal மனிதனை சித்தரிக்கும் method Acting .ஆனால் கண்ணனுக்கோ, முழுதும் ஆதி மனிதனின் impulsive basic instincts மட்டுமே தலை தூக்கும் பதுங்குதல்,பாய்தல்,அன்புக்கு உருகுதல் (இசை) என்ற அடிப்படை உணர்வு மட்டுமே கொண்ட,தந்தையின் தாக்கம் சிறிதளவே கொண்ட ,உளவியல் தாக்கம் நிறைந்த chekhov பாணி.
விஜய்க்கு, இப்படி எந்த சிக்கலும் இல்லாததால், சாதாரணமாக ஓயவெடுத்திருக்கலாம். ஆனால் மேதைகளுக்கு ஏது ஓய்வு? P _R சிலாகித்த அற்புத ராஜின் மேம்பட்ட பிரதியாக சிறிதே effeminacy கலந்த ஒரு spoilt lover boy .ஆக realism பாணியில் இன்றி, முழுக்க synthetic ஆக,ஒரு கலவையான கற்பனை கலந்த அழகுணர்ச்சியில் வடிவமைக்க பட்டு....
இப்போது கண்ணனை மிக நுணுக்கமாக ஆராய்வோம். ஆஸ்கார் பரிசு பெற்ற Robert de Niro போன்ற நடிகர்கள்,தங்கள் நடிப்பில் இயற்கையின் ,மிருகங்களின் சாயலில் தங்கள் பாத்திரங்களை வடிவமைத்து வெற்றி கரமாக தங்களது பாத்திரங்களை கையாண்டுள்ளனர்.
"He based the movement of his character Travis Bickle in Taxi Driver (1976) on that of a crab. He thought the character was indirect and tended to shift from side to side."
நடிகர்திலகம் 1954 இலிருந்தே இதனை கையாண்டுள்ளார். நடைகளில், சிரிப்பில்,உறுமலில், mannerism என்று சொல்லப்படும் mood related gesture இல்.பின்னாட்களில் பாலா பிதாமகன் பாத்திரத்தில் இதனை புகுத்தி வெற்றி கண்டார்.தெய்வ மகன் கண்ணன் , body language சில சமயம், மானின் மருளல், அடிபட்ட வேங்கையின் சீற்றம்,எலியின் survival ஒடுக்கம் ,நாயின் உருகும் அன்பு என்று.
இதை உன்னிப்பாக கவனிக்க வேண்டுமென்றால் , திருடன் பட்டம் சுமந்து ,பெண்ணுடன் அவள் hand bag திருப்பி கொடுக்கும் காட்சி, ஜெயலலிதாவிடம் தன்னை மறைத்து ஒடுக்கும் காட்சி, மற்ற படி அவர் hyper ecstacy ,( அ ) extreme emotions like anger நிறைந்த காட்சிகள்,ஜெயலலிதா தன் காதலை வெளியிட்டதும் காட்டும் சுய வெறுப்பு காட்சிகளில் கவனித்து பாருங்கள்.(கர்ணனின் உறுமல் ,சாமுண்டியின் சீற்றம் obvious )
டாக்டர் தன்னை நிலை கண்ணாடியில் காட்டும் போது அலட்சியம் செய்யும் விகார முகம் , ஒரு பெண் தன்னை காதலிப்பதாய் கற்பனை செய்து (ஒதெல்லோ பற்றி சொன்னதும் டாக்டரின் கையை உடையும் அளவு இறுக்கும் வெறி கலந்த எதிர்பார்ப்பு),அது தன கற்பனையே என்றவுடன் சுய வெறுப்பின் உச்சமாய் கண்ணாடியில் தன் உருவத்தை தானே காறி உமிழ்ந்து, கண்ணாடியை உடைக்கும் மூர்க்க சுய வெறுப்பு.அந்த காட்சியில் அவர் காட்டும் subtle change in tempo and body position , தன் வீட்டுக்கு வந்து தாய்,தந்தை, தம்பியை கண்டு காட்டும் உருக்கம் கலந்த, euphoric ecstacy, டாக்டரிடம் அதை கொட்டி விட்டு, பசித்து சோர்ந்த நாய் குட்டி போல் மடி மேல் சோரும் கட்டம்.
கண்ணனை, விஜய் வெல்வதாவது என்று தோன்றுகிறதல்லவா?
சங்கர் பாத்திரத்தை method acting பாணியில் அந்த மேதை முடிவு செய்ததற்கு, இரண்டு காரணங்கள். முதல் காரணம் , குறையை பெரிதாக நினைக்க வேண்டாத நிலையில் நிகழ்காலத்தில் இருப்பவன்.அவன் இறந்த காலத்தை நினைக்க வேண்டிய மூன்று இடங்கள் முதல் பிள்ளை பிறந்த போது, மூத்த பிள்ளை உயிரோடு இருப்பதை அறிந்ததும் அதிர்ச்சி கலந்த குற்றவுணர்ச்சி. டாக்டரை சந்திக்கும் போது. இந்த கட்டங்கள் எல்லாமே sense memory யில் அமைய வேண்டியவை. இரண்டாவது காரணம், method acting முறையில் மற்ற நடிகர்களின் performance தூக்கலாகும். கண்ணனும் விஜய்யும் ஓங்கி தெரிய ,சங்கரின் method acting முறையில் அமைந்த பாணி யாலும், இந்த முறையில் scene stealing என்பது முடியாதென்பதும் ஒரு காரணம்.(சமீபத்தில் Lincoln படத்தில் Daniel Day Lewis இதே முறையில் method Acting செய்திருக்கிறார்.now now now என்று சொல்லும் போது சங்கர் ,ராஜுவிடம் you you சொல்லும் அதே gesture )
முதல் காட்சியில்,புற முதுகு காட்டியே , குழந்தை பிறந்த மகிழ்ச்சிக்கு expansive hand ,gesture ,ராஜு சமாதான படுத்த வரும் போது elbowing gesture ...அடடா, எத்தனை மேதைமை!!! ராஜுவுடன், தான் சிறு வயது trauma வை விவரித்து, குழந்தையை கொன்று விட சொல்லி ,குற்ற உணர்ச்சியேயின்றி உலர்ந்த மனதோடு ஆணையிடுவது போல், சிறு வயதின் உணர்ச்சியின் பால் பட்டு maturity இன்றி பேசும் விதம், ஒரு method acting ஸ்கூலில் பாடமாக வைக்க வேண்டும்.sense memory அடிப்படையில் நடிக்க விரும்புவோருக்கு பாடம்.
விஜய் உடன் அவர் கண்டிப்பு காட்ட நினைத்து இளகி சிரிப்பது, மனைவியின் வற்புறுத்தல் பேரில் இணங்குவது போல் தன கனிவை,செல்லத்தை மறைப்பது, மனைவியிடன் காட்டும் romance கலந்த நன்றியுணர்வுடன் கூடிய அன்பு இவை பார்த்து அனுபவிக்க வேண்டியவை.
டாக்டருடன் பல வருடங்களுக்கு பிறகான சந்திப்பு காட்சி ஒரு கல்வெட்டு. தயக்கம் கலந்த anxiety உடன் நுழைவது ஓர கண்ணால் சிறி து தயக்கம்,சங்கடம், curiousity கலந்த eye follow up என்று ஆரம்பித்து, formal ஆக தொடங்கி,கேட்க விரும்புவதை கேட்டு, நட்பை re -assert செய்து விட்டு,முடிவில் சிதார் ஓசை கேட்டு அலையும் மனதுடன், restless ஆக ,மகனை பார்க்க விழைந்து ,அரை மனுதுடன் ,திரும்பி செல்லும் கட்டம்.சுந்தர்ராஜன்,சிவாஜி இருவருமே உணர்ந்து, அருமையாய் நிமிர்த் தியிருப்பார்கள் . இந்த காட்சி எதை உரைக்க வேண்டுமோ, அதை உரைத்து , எதை உயிர்ப்பிக்க வேண்டுமோ அதை உயிர்ப்பித்து, எதை அடைய வேண்டுமோ அதை அடைகிறது. perfect sub text for method acting .
கண்ணன் சந்திக்க வரும் காட்சியில், உணர்வுகளை காட்டும் அளவே காட்டி, மிகை குற்றவுணர்வு இன்றி, ஆனால் கண்ணன் அநாதையாக்க பட்டு வாழ்ந்ததன் வலிகளை மட்டுமே, ,ஒரு தந்தையாக empathise செய்வார். இந்த காட்சி ,இன்றளவும் பேச படுவதற்கு காரணமே,மற்றவர்களை தூக்கி காண்பிக்கும் அளவு perform செய்த சங்கரே.
காணாமல் போன விஜய் பற்றி வரும் டெலிபோன் காட்சியில் , பதற்றம் ,எச்சரிக்கை, பதைபதைப்பு,மகனுக்கு எதுவும் நேர கூடாது என்று அவர் விடும் இயலாமை கலந்த வெற்று மிரட்டல் என்று ,ஒரு சராசரி காட்சியில் கூட நடிப்பு கொடி பறக்கும்.
ஆயிற்று. இத்தனை மேம்பட்ட கண்ணன் பாத்திரத்தை,சங்கர் பத்திரத்தை, ஒரு மேதை தன் வாழ்நாளின் one of the best என்று சொல்லும் அளவு பண்ணி விட்ட பிறகு, to lighten the proceedings என்று filler பாத்திரமான விஜய் என்ன செய்து ,இவர்களை சமாளிக்க போகிறது?
விஜய் என்னதான் செய்யவில்லை?ஒரு உலகத்திலேயே சிறந்த மகா கலைஞன், தன் சுதந்திர கற்பனைகளோடு, எந்த realism சார்ந்த விஷயங்களோடும் சமரசம் செய்து கொள்ளாமல், முழுதும் தன் திறமை மற்றும் creativity ஐ நம்பி மட்டும் ஒரு பாத்திரத்தை conceptualise செய்து execute செய்தால்? தங்கத்தை போன்று ஜொலித்தன நெல் மணிகள் என்று கவிஞன் எழுதும் சுதந்திரத்தால் தான் கலைகள் ஜீவிக்கின்றன. மொக்கை தனமாக, நெல் மணிகள் நெல் போல தானே இருக்க வேண்டும் என்போருக்கு, கலைகளை ரசிக்கும் பக்குவமோ,அறிவோ இல்லை என்று பொருள். சரோஜா தேவியின் புத்தகம் கூட realism தான். அதை படிப்பதும் சுலபம். ஆனால் ஒரு காளிதாசன் ,கம்பனை பயில பயிற்சி தேவை. அல்லது என் போல ஒரு பொழிப்புரையாளன் தேவை.அப்படித்தான் அந்த உலக கலைஞனின் பாத்திர வார்ப்புகளும்.
விஜய் முதல் shot இலேயே ஈர்த்து விடுகிறான். பிறகு ஈர்க்க பட்டவர்களை தன்னிடையே தக்க வைக்கிறான். scene stealing செய்கிறான்.Antics செய்கிறான்.. பக்கத்திலிருக்கும் ,காமெடியன் ஒருவனை அவன் விளையாட்டிலேயே ஜெயிக்கிறான்.(beating bull in its game ). வேறு படுத்தி கொள்கிறான், நடை ,உடை,பாவனைகளில்.முக்கியமாய் இது வரை காணாத புதுமை ஆக்குகிறான். அதே நேரத்தில் ஒரு பாத்திரமாகவும் establish செய்கிறான்.ஜனங்களை ஆசுவாச படுத்துகிறான்.(heavy emotion ridden proceeding இல் இருந்து) .இன்னும் நிறைய காட்சிகளில் வர மாட்டானா என்று ஏங்கவே வைத்து விடுகிறான்.
கூர்ந்து கவனித்தால் , விஜய் much more than a spoilt mother 's virgin boy and a rich brat . பணத்தின் சௌகரியங்கள் கிடைத்தும், ஒரு identity crisis and false start உள்ள vested interest கொண்ட நண்பர்களால் சூழ பட்டவன். அம்மா, அப்பாவின் அதீத அரவணைப்பில் இருந்தாலும், முழு அப்பாவியும் அல்ல.அதீத பாதுகாப்பே ,அவன் ஆபத்துகளை உணர முடியாமல் செய்து விடுகிறது.தன்னால் தன்னை காத்து கொள்ள முடியும் என்ற அசட்டு நம்பிக்கை வேறு.ஆனால் விஜய்யை புன்னகையோடு தொடர முடியும்.
நண்பன் என்று சூழ்ந்தவனின் அதீத gimmick ஐ எள்ளுகிறான். (அதான் நான் வரை வரைக்கும் கயிறு கூட மாட்டிக்காமே???), விஜய் உனக்குன்னு கேளு என்றதும், இல்லை,இல்லை உனக்குன்னு கேட்கிறேன், அப்பத்தான் குகுளுன்னு என் daddy கொடுக்கும் என்று சொல்லும் அழகு.(நாகேஷ் வேடிக்கை தான் பார்ப்பார் என்ன பண்ணி புகுரலாம் என்று. ம்ஹும் chance இல்லவே இல்லை). மழலையான ஆங்கிலம் கலந்த தமிழ் உச்சரிப்பிலிருந்து , சுருட்டி கொண்டு சோம்பேறி கோழி தூக்கம் போடுவதாகட்டும்,அம்மா வை ice வைப்பதாகட்டும் (first class Tamil Picture கூட்டிட்டு போறேன் )உன் மேலதான் daddy க்கு எவ்ளோ லவ்வு என்று லொள் விடுவது என்று. (பின்னாடி மௌன ராகம் கார்த்திக் character இதிலிருந்து inspire ஆனதே.சந்திரமௌலி போன்ற antics .அந்த character உம் ஈர்ப்பு கொண்ட synthetic கற்பனையே ).
தன் ரூமில் யாரோ இருப்பதை தெரிந்து, அப்பா அம்மா இல்லை என்று உறுதியானதும், thief என்று மிரட்டல் ,பயம் கலந்த மெல்லிய மிரட்டல், anxiety யுடன் தேய்ந்த குரலில் மூன்றாவது thief என்று விஜய் என்னை முழுவதும் ஆட்கொண்ட பிறகு, சங்கராவது,
கண்ணனாவது?
தன்னிடம் வீட்டிலிருக்கும் கண்ணனை பற்றி பேசும் நிம்மியிடம், அவள் மடியில் உறங்குவது போல் disinterest காட்டி பின் சகிப்பு தன்மை இருக்கிறது. யாரோ புல்புல்தாரா வாசிப்பான் அவன் ரூமுக்கு போறேன் என்று என் கிட்டேயே என்று cute ஆக காதலன் possessiveness குழந்தை தனமாக வெளியிடும் அழகு.(முந்திய வருடம் 80 வயது அப்பரான மனிதன், அடுத்த வருடம் retire ஆக போகும் ஒரு பிராமணன், 20 வயது lover boy ஆக எல்லோர் மனதையும் அள்ளும் அழகு ). அப்பா அமாவிடம் அவர் காதலியை அறிமுக படுத்தும் அழகே அழகு.(certainly not .அதனால்தான் மம்மியை கட்டிக்கிட்டீங்களா, இது செய்யனும்....போன்ற one liner ).
அது மட்டுமல்ல, விஜய்யின் entry தான் அந்த மூன்று சிவாஜி தோன்றும் காட்சிக்கே, epic cult status கொடுக்கிறது. தன் தம்பியே ,தன் பெற்றோர்களுக்கு போதும் என்று கண்ணனை convince செய்து விடுகிறது. அதற்கு முன்னாள் நடந்த அத்தனை உணர்ச்சி மிகு encounter செய்யாத அதிசயம். பார்வையாளர்களும் convince ஆகி விடுகிறோம்.(கண்ணன் cheque ஐ நிராகரிக்கும் நிர்தாட்சண்யம் , விஜய் அதை உரிமை நிறைந்த ஆவலுடன் எடுக்கும் அழகு-- இந்த காட்சியையே அர்த்த படுத்தி விடவில்லையா)
கடைசி காட்சியிலும், அவ்வளவு பெரிய வில்லன் கும்பலிடம், அசட்டு மிரட்டலுடன் போராட்டம். டே... head லியா அடிச்சே என்று மயங்கி சாய்வது.
எனக்கு தெரிந்து character identity establish செய்து சாதாரண one liners ஐ அதீத ரசிக்கும் காமெடி ஆக்கிய அதிசயம் இந்த படத்தில்தான் நிகழ்ந்தது. ஒரு சாதாரண வலுவில்லாத பாத்திர படைப்பு, உலகத்திலேயே அதிக வலுவுள்ள நடிகனின் கற்பனையால் மட்டும் அமர துவம் பெற்று, அவரே நடித்த வலுவுள்ள மற்ற பாத்திரங்களை இரண்டு, மூன்று என்று வரிசை படுத்தும் உலக அதிசயம் நிகழ்ந்த ஒரே காரணம்---தெய்வ மகன் விஜய்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
12th January 2016, 06:31 AM
#1796
Senior Member
Seasoned Hubber
Sivaji Ganesan Filmography Series
132. DeivaMagan தெய்வமகன்
தணிக்கை - 28.08.1969
வெளியீடு - 05.09.1969
தயாரிப்பு - சாந்தி ஃபிலிம்ஸ்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெயல்லிதா, சுந்தர்ராஜன், எம்.என்.நம்பியார், நாகேஷ், வி.நாகையா, பண்டரிபாய், விஜயஸ்ரீ, எம்.பானுமதி, மாஸ்டர் ராஜ்குமார், செந்தாமரை, மற்றும் பலர்.
மூலக்கதை - டாக்டர் நிகர் குப்தா (உல்கா)
வசனம் ஆரூர்தாஸ்
பாடல்கள் - கவிஞர் கண்ணதாசன்
பின்னணி - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
ஒலிப்பதிவு - பாடல்கள் & ரீரிக்கார்டிங் - ஜே.ஜே.மாணிக்கம் - ஏவி.எம். ஒலிப்பதிவு வசனம் - வி.எஸ்.எம். கோபால்ராம் -ஏவி.எம், மூசா இப்ராகிம் - வாசு
கலை -- ஏ. பாலு
செட்டிங்ஸ் - வி.நாகன் ஆசாரி - ஏவி.எம், எம். சுப்பையா ஆசாரி - வாசு
பின்னணி ஓவியம் - என். மோகன் ராஜ், என்.குப்புசாமி - ஏவி.எம். வி.ராமலிங்கம் - வாசு
செட் பிராபர்டீஸ் - சினி கிராஃப்ட்ஸ்
மேக்கப் - ஆர் .ரங்கசாமி, எம். கோபால், எம். ராமசாமி, கே. நாராயணசாமி. உதவி - கே.ஆர். பல்குணன்.
சிகை அலங்காரம் - ரவி
உடைகள் - பி.ராமகிருஷ்ணன், ஜி.சீனிவாசன்
நடனம் - ஏ.கே.சோப்ரா.
சண்டைப்பயிற்சி - டி.வெங்கடேசன்
விளம்பரம் - எலிகண்ட்
டிசைன்கள் - பக்தா
டைட்டில் - ஜி.கே. ஜெயராமன்
வெளிப்புறப்படப்படிப்பு - ஏ.பி.ஆர். யூனிட்
ஸ்டூடியோ - ஏவி.எம். வாசு
புரொடக்ஷன் நிர்வாகம் - ஓ.என்.நாராயணசாமி
துணை நடிகர் ஏஜெண்ட் - எஸ்.ஏ. தங்கம்
ஸ்டில்ஸ் - சாரதி, உதவி - லட்சுமிகாந்த்
ஆபரேடிவ் கேமராமேன் - கே.எஸ்.பாஸ்கர் ராவ்.
ப்ராஸ்ஸிங் - விஜயா லாபரட்டரி by எஸ். ரங்கநாதன்
எடிட்டிங் - பி.கந்தசாமி
உதவி டைரக்ஷன் - நாஞ்சில் எஸ்.ராஜேந்திரன், ப.புகழேந்தி, டி.எஸ்.பாலன்
ஒளிப்பதிவு டைரக்டர் - தம்பு
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
தயாரிப்பு - பெரியண்ணா
Screenplay & Direction - A.C.TIRULOKCHANDER
திரைக்கதை - டைரக்ஷன் - A.C. திருலோகசந்தர், M.A.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
12th January 2016, 06:36 AM
#1797
Senior Member
Seasoned Hubber
தெய்வமகன் - நிழற்படங்கள்.. ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து...
பொக்கிஷப் புதையல்
அரிய நிழற்படம்
அரிய நிழற்படம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி : 5.9.1969
100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 13.12.1969
இக்காவியத்தின் மற்றொரு விளம்பரம் : பொம்மை : செப்டம்பர் 1969
வரலாற்று ஆவணம் : பொம்மை : செப்டம்பர் 1969
தனித்தனிப் பக்கங்களாக...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
12th January 2016, 06:39 AM
#1798
Senior Member
Seasoned Hubber
காணொளிகள் / பாடல் காட்சிகள்
தெய்வமே தெய்வமே
நடிகர் திலகம் ஏற்று நடித்த மூன்று கதாபாத்திரங்களும் சந்திக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க காட்சி...
காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
காதல் மலர்க் கூட்டம் ஒன்று
கேட்டதும் கொடுப்பவனே
அன்புள்ள நண்பரே
கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ
டைட்டிலில் இடம் பெறவில்லையென்றாலும் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் அசரீரியாக ஒலிக்கும் கண்கள் பேசுதம்மா பாடல் படத்தில் நம்மை சிலிர்க்க வைக்கும். நாம் முன்னரே கூறியது போல இப்பாடல் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டது. என்றாலும் படத்தின் முத்தாய்ப்பான காட்சியாக அமைந்தது, கோவிலில் கண்ணன் தன் தாயாரைப் பார்க்கும் அந்தக் காட்சியே. இணையத்தில் அந்தக் காட்சி தனியாக தரவேற்றப் படவில்லை. என்றாலும் இது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகிறது.
Last edited by RAGHAVENDRA; 13th January 2016 at 07:27 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
12th January 2016, 06:40 AM
#1799
Senior Member
Seasoned Hubber
மாத்ருபூமி இதழின் இணையப் பக்கத்தில் தெய்வமகன் திரைக்காவியத்தைப் பற்றிய குறிப்பு..
http://mathrubhuminews.in/ee/ReadMor.../daiva-magan/E
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
12th January 2016, 06:41 AM
#1800
Senior Member
Seasoned Hubber
நடிகர் திலகத்தின் ஒப்பனையாளர் திரு ரங்கசாமி அவர்களின் புதல்வர், திரு ஜெயந்த் அவர்கள், தன் தந்தையுடன் தெய்வமகன் படத்தில் பணியாற்றியுள்ளார். இதைப் பற்றிய அவருடைய பேட்டி...
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைய தளத்திலிருந்து...
http://www.newindianexpress.com/ente...?service=print
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks