-
6th September 2015, 12:10 PM
#3451
Senior Member
Senior Hubber
ரவி
//நம்மவர்கள் சில பேர் பழிவாங்கற விதமே தனி . // சூப்பர் ரொம்ப அருமையான விஷயம்..
நான் எழுதியதற்கு யெஸ் ஆர் நோ சொல்லாமல் இப்படி எழுதியதில் இருந்தே உங்களை வெளிப்படுத்திக் கொண்டு விட்டீர்கள்..
நிறைய நண்பர்களின் சொல்படி நான் உங்களை ஒதுக்கியிருக்கவேண்டும்.. என்னை நீங்கள் ஒதுக்குவதற்கு அதாவது இன்னோர் செய்வதற்கு இடம் கொடுத்திருக்கக் கூடாது.. விளக்கமும் கொடுத்திருக்கக் கூடாது
வெரி நைஸ் ஆஃப் யூ.. தொடருங்கள் உங்கள் எழுத்துக்களை.. சிந்தனைகளை, தெரிந்த வீடியோக்களை..
மிக மென்மையான மனசு உங்களுக்கு .யாரையும் நோக வைககாத மனசு.. ஒரு நண்பரைதவறு எதுவும் செய்யாத போது திட்டுவது உஙக்ளால் மட்டுமே முடியும்....
ஆனால் நான் ஒதுங்க மாட்டேன்.. எழுதிக் கொண்டே இருப்பேன் என்ன விதமான கமெண்ட்ஸ் நீங்கள் அடித்தாலும் சரி..
உங்க்ள் இடுகைக்கு இதுவரை நான் எதுவும் சொல்லவில்லை..பட் எனது விமர்சனங்கள் வ்ரும்.. எனது அறச்சீற்றத்தை நீங்கள் இனிமேல் பாருஙகள்..
அன்புடன் அன்பில்லாத ரவிக்கு
Last edited by chinnakkannan; 6th September 2015 at 12:13 PM.
-
6th September 2015 12:10 PM
# ADS
Circuit advertisement
-
6th September 2015, 12:51 PM
#3452
Junior Member
Seasoned Hubber
CK - இது என்ன வம்பா போச்சு?? - எது எழுதினாலும் , எப்படி எழுதினாலும் அந்து உங்களைப்பற்றித்தான் இருக்கும் என்று மீண்டும் என் மீது ஒரு பழியை சுமத்துகிறீர்கள் . குறிப்பாக உங்களிடம் இருந்து நான் இதை எதிர்ப்பார்க்கவில்லை . சொல்லாத கருத்துக்கள் , உங்களை மன வேதனை படுத்திருக்கும் என்று அறிந்ததால் " unconditional apology " வேறு கேட்டிருந்தேன் . என்னை ஒதுக்கச்சொல்லும் அளவிற்கு உங்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி . இந்த நகைச் சுவை உணர்வு வேண்டும் என்பதை சரியான நேரத்தில் ஆரம்பிக்க வில்லை என்று நினைக்கிறேன் - நல்ல கருத்துக்கள் என்பதால் பதிவிட்டேன் - சத்தியமாக உங்கள் நினைப்பே எனக்கு பதிவு இடும் போது வரவில்லை - நீங்களாக கற்பனை செய்துகொண்டு என்னென்னவோ எழுதுகிறீர்கள் . எனக்கும் பல நல்ல நண்பர்கள் உள்ளனர் - இந்த திரியினில் இனி தொடர்வதில் ஒரு அர்த்தமும் இல்லை என்ற அவர்களின் அறிவுரையை இது வரையில் சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ளவில்லை . இப்பொழுது உங்கள் பதிவினால் அப்படி எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது . இங்கு எல்லோரையும் என் சகோதர்களாகத்தான் , நல்ல நண்பர்களாகத்தான் நினைக்கிறேன் - நீங்கள் உட்பட - இனிமேலும் அன்பே இல்லாத என்னிடம் இருந்து அந்த உறவு முறை கண்டிப்பாக தொடரும் . நீங்கள் தொடருங்கள் - உங்களுக்கு போட்டியாகவோ , தொந்தரவாகவோ இனி நான் இங்கு வரமாட்டேன் - நன்றி
-
6th September 2015, 01:25 PM
#3453
Senior Member
Senior Hubber
Originally Posted by
g94127302
CK - இது என்ன வம்பா போச்சு?? - எது எழுதினாலும் , எப்படி எழுதினாலும் அந்து உங்களைப்பற்றித்தான் இருக்கும் என்று மீண்டும் என் மீது ஒரு பழியை சுமத்துகிறீர்கள் . குறிப்பாக உங்களிடம் இருந்து நான் இதை எதிர்ப்பார்க்கவில்லை . சொல்லாத கருத்துக்கள் , உங்களை மன வேதனை படுத்திருக்கும் என்று அறிந்ததால் " unconditional apology " வேறு கேட்டிருந்தேன் . என்னை ஒதுக்கச்சொல்லும் அளவிற்கு உங்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி . இந்த நகைச் சுவை உணர்வு வேண்டும் என்பதை சரியான நேரத்தில் ஆரம்பிக்க வில்லை என்று நினைக்கிறேன் - நல்ல கருத்துக்கள் என்பதால் பதிவிட்டேன் - சத்தியமாக உங்கள் நினைப்பே எனக்கு பதிவு இடும் போது வரவில்லை - நீங்களாக கற்பனை செய்துகொண்டு என்னென்னவோ எழுதுகிறீர்கள் . எனக்கும் பல நல்ல நண்பர்கள் உள்ளனர் - இந்த திரியினில் இனி தொடர்வதில் ஒரு அர்த்தமும் இல்லை என்ற அவர்களின் அறிவுரையை இது வரையில் சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ளவில்லை . இப்பொழுது உங்கள் பதிவினால் அப்படி எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது . இங்கு எல்லோரையும் என் சகோதர்களாகத்தான் , நல்ல நண்பர்களாகத்தான் நினைக்கிறேன் - நீங்கள் உட்பட - இனிமேலும் அன்பே இல்லாத என்னிடம் இருந்து அந்த உறவு முறை கண்டிப்பாக தொடரும் . நீங்கள் தொடருங்கள் - உங்களுக்கு போட்டியாகவோ , தொந்தரவாகவோ இனி நான் இங்கு வரமாட்டேன் - நன்றி
மீண்டும் அன்பில்லாத ரவி..
ஒதுங்குவது தவறு..தொடர்ந்து எழுதி சந்தியுங்கள்.. நீங்கள் எனக்குப் போட்டியோ தொந்தரவோ இல்லை.
. இங்கு எழுதுவதில் அர்த்தமில்லைஎன்று எந்த நண்பர்கள் சொன்னார்கள் எனச் சொல்லவும் முடிந்தால்.
அவர்கள் பெயரைச் சொல்ல வேண்டாம் எனில் சரி பரவாயில்லை ..எதனால் உங்களை எழுதவேண்டாம் என்று சொன்னார்கள், இங்கு உங்களை யார் என்ன கிண்டல் செய்தார்கள் - எனச் சொல்லவும்..
ஏனெனில் அவர்கள் சொல்வதற்கும் ஒரு காரணம் இருக்குமில்லையா.. இழை போரடிக்கிறதா..நான், வாசு, மது, ராஜ்ராஜ், ராஜேஷ்,எஸ்.வி, கலை, ராகவேந்தர்,கல் நாயக், ஆதிராம் எல்லோரும் கரெக்ட் செய்து கொள்ளத் தயாராக இருக்கிறோம்.. (அவர்களைக் கேட்காமலேயே இதை எழுதுகிறேன்)
ச்சும்மா வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என இஷ்டத்திற்குச் சொல்ல வேண்டாம் ரவி.. என்பதிவினால் விலகுகிறேன் என்றெல்லாம் சொல்லாதீர்கள்..உங்கள் பதிவுகளினால் தான் நீங்கள் விலகுகிறீர்கள் எனச் சொல்கிறீர்கள்..
பெருமைக்கும் ஏனைச்சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்..
உங்களிடம் எழுதியிருந்தேன் பி.எம்மில் நினைவிருக்கிறதா.. இங்கேயே நான் வரப் போவதில்லை.. வேறு இழைகளுக்குச் செல்கிறேன் என..பிகாஸ் நீங்கள் என்னால் மனம் நொந்ததாக எழுதியிருந்தீர்கள்.. எதுவுமே நான் சொல்லாத போது..எதனால் வந்தேன்.. எனில் இந்த ச்சூழல் எனக்குப் பிடிக்கும்..உங்களுக்கும் அப்படியே
நகைச்சுவை உணர்வான கதைகள் போடுவதாக நீங்கள் நினைப்பது உங்கள் நினைப்பு.. ஆனால் ஒரு ஆள் உங்களுக்கு ப் பதில் சொல்லி மாய்ந்து மாய்ந்து எழுதியிருந்தால் அதை ஜஸ்ட் லைக் தட் இக்னோர் செய்துவிட்டு முந்தா நாள் கிடைக்காத ஓணானை இப்ப அடிக்கிறேன் என்றெல்லாம் எழுதி விட்டு ச்சும்மா எழுதறேன் என்றால்..ஐயாம் சாரி.. என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது..மற்றவராலும்..
தைரியமாக வந்து உங்கள் பத்துப்பாட்டு வீடியோக்கள் மற்ற விஷயங்க்ளைத்தொடருங்கள்..
யார் என்ன எழுதினாலும் இன்னும் எழுதுங்கள் என்று ஊக்குவிப்பதில் முதலானவன் நான்.. வாசு முதலான மற்ற்வர்களும் அப்படியே..
தவறுகளை அப்படியே சுட்டியும் காட்டுவேன்..எழுத்துப் பிழை என முன்பொருமுறை சொன்ன போது அது உங்களுக்குப் பிடிக்கவில்லை..இன்னமும் அப்படியே தான் தொடர்கிறீர்கள்.. உதா: இருக்கிண்டீர்கள் தவறு இருக்கின்றீர்கள்..சரி..
மானாவாரியாக வீடியோ க்ளிப் ப்ளஸ் நெட்டில் எடுத்தது, ஸ்லோகங்கள் கருவின் கரு தந்தை என எடுத்து வீடியோபடஙக்ளை த் திரும்பத் திரும்பப் போட்டதினால் - இவை எல்லாம் சொல்லாமல் ரவி கொஞ்சம் இடைவெளி விடுங்கள் என நான் சொன்னது உங்களுக்கு மாபெரும் தவறாகப் போய்விட்டது.. அதற்கு ஆயிரத்தெட்டு குத்தல் பேச்சு வேறு என்னை மட்டுமின்றி சி.செயையும் கலாய்த்தீர்கள்..குளியலறை எல்லாம் எழுதுகிறார்கள் என்று..அவர் நிறுத்தியும் விட்டார்..இப்பொழுது தற்காலிகமாக நின்றும் விட்டார்..
இந்த மண்டப எழுத்திற்கு நான்பதில் கொடுக்க ஒரு நாள் தாமதம் செய்த போது என்ன சொன்னீர்கள்..இங்கும் கோப தாபமெல்லாம் இருக்கின்றது என்றீர் கிண்டலாக.. நினைவிலில்லையா
நேற்று வாசு ஒரு கண்ணன் பாட்டு ந.தி போட்டார்..அவரே சொல்லியிருக்கிறார் வீடியோ போட்டால் டவுன்லோட் ஆக நேரம் பிடிக்கிறது என்று.. என்ன செய்தீர்கள்.. எத்தனாவது முறை அந்தப் பாடல்கள் போடுகிறீர்கள் என்று யோசித்தீர்களா..
நானும் ந.தியின் ரசிகன் தான்..உங்கள் அளவு, மற்றவர்கள் அளவு இல்லாவிட்டாலும் வெகு தம்மாத்தூண்டு ரசிகன்.. ஆனால் ஏன் போடுவதில்லை அடிக்கடி.
உங்கள் உற்வு முறை - நண்பன் என்று நீங்களே சொல்லியிருப்பது உண்மையானால் மறுபடி வாருங்கள்..நீங்கள் சொல்வது போல உங்களுக்காகவே எழுதி இங்கு இடுங்கள். தவறு இருப்பின் எழும் விமர்சனங்களை எதிர் கொள்ளுங்கள்..
அன்புடன் அன்பில்லாத ரவிக்கு..
Last edited by chinnakkannan; 6th September 2015 at 01:37 PM.
-
6th September 2015, 07:31 PM
#3454
Senior Member
Diamond Hubber
வாசு ஜி..
ரங்கராட்டினம் படம் பார்த்ததில்லை. ஆனால் இரண்டு சௌகார் ஜானகிகள். ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன் என்று இரு ஹீரோக்கள்.. "முத்தாரமே" பாடல் ஜெமினிக்கும் படித்த பணக்கார சௌகார் ஜானகிக்குமாக இருக்கலாம். இன்னொரு சௌகார் பைத்தியம். "காத்தாடி வாங்க காசு கொடுப்பியா" என்று விவிதபாரதி விளம்பரத்தில் குரல் கொடுப்பார். ஆத்தாடி பறக்குது காத்தாடி என்று பாடும் அவர் பைத்தியமாக இருக்கும்போது ஒரு மழை நாளில் ஒரு மல்லிகை மொட்டு பாடும் ரவியை சந்தித்திருக்கலாம். திருடனான ரவியை மணம் புரிந்தபின் ரவி போலிசில் சிக்கியிருக்கலாம். மீண்டு வந்து பார்க்கையில் பைத்தியம் தெளிந்து ஜெமினி வீட்டில் தங்கி இருக்கலாம். அவரிடமே டிரைவர் வேலை பார்க்கும் ரவி "தங்கத் தொட்டில்" பாடியிருக்கலாம். கடேசியில் ராட்டினம் தரைக்கு வந்து எல்லாம் சுபமாக முடிந்திருக்கலாம்.
இதெல்லாம் என் ஹேஷ்யம்தான்.. பாடல்களை வைத்துக் கொண்டு கதையை ஜோடித்தேன்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
6th September 2015, 09:29 PM
#3455
Senior Member
Senior Hubber
//இதெல்லாம் என் ஹேஷ்யம்தான்.. பாடல்களை வைத்துக் கொண்டு கதையை ஜோடித்தேன்// ஹை..நல்ல கதையாய் இருக்கே மதுண்ணா.. .. கபாலி டிஸ்கஷன்ல கலந்துக்குங்கோ!.. இப்படி சொன்னா விட்டுருவோமா.. ஒழுங்காகப் படத்தைத் தேடிக் கண்டுபிடித்து படம்பார்த்துக் கதை சொல்க..
ரங்க ராட்டினம் எனத் தேடினால் ராட்டினம் படம் தான் வருகிறது.. நேற்று கிருஷ்ண ஜெயந்தி எல்லாம் கொண்டாடியாச்சா..
*
இன்று தான் எங்கள் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி..
டயட்டில் இருப்பதால் நிறையச் செய்யவில்லை.. சீடை, வெல்லச்சீடை, தட்டை,பாதாம் கீர் மட்டும் தான்.. முதல் மூன்றையும்- ஸ்ரீ ராமன் போல் - இந்த டயட் இருக்கும் வரை இவற்றைச் சிந்தையாலும் தொடேன் என்றிருக்கிறேன்..தவிர...என்னன்னாக்க...
காலையிலிருந்து கொஞ்சம் விரத டைப்பாய்த் தண்ணீர் குடித்தேன்..ஈவ்னிங்க் வந்து பசி..இரண்டு கொய்யாக்காய்கள் உண்டபிறகு பசி அடங்கியது..என் தாய் தந்தைக்கு எப்படி இருந்திருக்கும்..கொஞ்சம் கொசுவர்த்திச் சுருள் வைத்துப் புகை புகையாய்ப் பின்னால் போனால்..
*
கிருஷ்ண ஜெயந்திக்கு முதல் நாளே அம்மா ஊறப்போட வேண்டியதெல்லாம் ஊறப் போட்டுவிடுவாள்..மாவு மெஷின் போன்ற சின்ன வேலைகள் எனக்கு..மிக்ஸி க்ரைண்டர் எல்லாம் வீட்டில் நுழையாத காலம்..வெகு சின்னக் கண்ணன்..எட்டு ஒன்பது வயது வைத்துக்கொள்ளுங்களேன்..
அதி அதிகாலையிலேயே எழுந்து குளித்து மடியாய் எல்லாவித பட்சணங்களும் ஒண்டி ஆளாய்ச் செய்வார் அம்மா.. அப்பா குளித்து கடை சென்றுவிட்டு மாலை ஆறுமணிக்கே கடை பூட்டி வந்துவிடுவார்..வந்து குளித்து சாலிக்கிராமத்தை எடுத்து பூஜை..
சொல்ல மறந்துவிட்டேன்.. மற்ற நாட்களில் எல்லாம் சந்தையில் சுலபமாகக்கிடைக்கும் நாவற்பழம் கிருஷ்ண ஜெயந்தி அன்று கிடைக்காது கொஞ்சம் அலைந்து திரிந்து வாங்கிவருவார் இரண்டாவது சகோதரர்.. (கொஞ்சம் வளர்ந்தபின் நான் போய்வந்திருக்கிறேன்)
பின் பூஜை.. ஒன்றரை மணி நேரம் நடக்கும்..பாலகிருஷ்ணனின் படம் (ரவிவர்மாவா வேறு யாரோ நினைவிலில்லை) வெள்ளி டப்பாவிலிருந்து சாலிக்ராமம் திறந்திருக்க அதில் பால்விட்டு அபிஷேகமா என நினைவிலில்லை..
பின் அம்மா பண்ணிய பட்சணங்கள் ஓமப்பொடி, தேன்குழல், முறுக்கு, தட்டை, சீடை, வெல்லச்சீடை,சுக்குவெண்ணெய், பழங்களில் நாவற்பழம்,ஆப்பிள், திராட்சை, கொய்யாப்பழம்,ஆரஞ்ச் வாழைப்பழம் இன்னும்பல எல்லாவற்றையும் நைவேத்தியம் செய்வார்.. நான் சகோதர சகோதரிகள் புடை சூழ நின்றிருப்பேன்..கண் மட்டும் பட்சணங்களில்..
கடைக்குட்டி என்பதனால் பூஜை முடித்து சேவித்து அட்சதைஎல்லாம் வாங்கிய பின் எனக்குத்தான்முதல் மரியாதை..பெருமாள் தேர்த்தம், சுக்குவெண்ணெய் பின் அம்மா எல்லாருக்கும் தட்டு கொடுத்துஎடுத்துக் கொள்ளச் சொல்வார்..(பட்சணம் கொஞ்சமா சாப்பிடுங்கடா..ராத்திரிக்கு(அப்போதே எட்டு ஆகியிருக்கும்) சாப்பிடணும்..
அப்பாவும் கொஞ்சம் ஒரு தட்டை சீடை வாயில் போட்டுக்கொண்டு அம்மாவிற்கும் கொஞ்சம் கொடுக்க- அது தான் அவர்கள் இருவரும் உண்ணும் முதல் உணவு அன்று..பின்னும் கூட கொஞ்சம் குறைவாகத் தான் இருவரும் சாப்பிடுவார்கள்,.
ம்ம்..அந்த நாளும் வந்திடாதோ..
*
ஊர்விட்டு வந்துபலவருடங்கள் போனாலும் கிருஷ்ணன் பிறந்த நாள் விசேஷம் தான்..வரையப்பட்ட குட்டிக்கால்கள் எல்லா இடத்திற்கும் சென்று வருவது ஒரு அழகு..
சொல்ல மறந்துவிட்டேன்..மதுரை எட்டுகட்டு வீட்டில் என் அம்மாவும் காலிடுவார்..அக்காக்களும் இட்டிருக்கிறார்கள்.. சட்டையே செய்யாமல் விளையாடி வந்த காலால் மாக்கால்கள் மீது அழித்தால் கோபம் வந்து அக்காகக்ள் கத்துவர்..இந்தக் கண்ணாவப்பாரேன் மிதிச்சுட்டுப் போறான்..போடி.. மறுபடி இரு..குழந்தையைத்திட்டாதே எனக் கைவேலை பார்த்துக்கொண்டே பதில் வரும்..
ம்ம்.. அந்த நாளும் வந்திடாதோ..
*
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th September 2015, 09:50 PM
#3456
Senior Member
Diamond Hubber
தன்னைத்ததானே மறந்திருந்தாள் உன்னை ஈன்ற அன்னை
திரும்பி வந்த நினைவிருந்தும் மறந்ததென்ன என்னை
மது அண்ணா!
சௌகார் சுய நினைவு இல்லாதிருந்திருப்பாரோ! ரவிக்கும், அவருக்கும் ஏற்பட்ட உறவு ஏதோ ஒரு விதத்தில் மறந்து போய் ரவியை அவர் மறந்திருக்கக் கூடுமோ!
புலம்ப விட்டுட்டாங்களே! எப்படியாவது பிடிப்போம். ராகவேந்திரன் சார் பாட்டுப் புத்தகம் வச்சிருந்தா அதுல கதைச் சுருக்கம் இருக்கும் இல்லே! ஒரு ஸ்டில் கூட கிடைக்கலையே! என்ன இது நமக்கு வந்த சோதனை! அதுவும் இப்போ 1971 ல வந்த படம்தான்.
ஒருவேளை முரளி சார் பார்த்திருப்பாரோ! சின்னா பார்த்துட்டு ஞாபகம் இல்லேன்னு கையை ஈஸியா விரிச்சுட்டார். 'ஆசீர்வாதம்' கரெக்ட்டா? 'நெஞ்சம் நிறைய' பாடலைப் போடுவீர்கள் தானே!
Last edited by vasudevan31355; 6th September 2015 at 09:56 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th September 2015, 09:54 PM
#3457
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார்,
தங்களின் பங்களிப்பை தொடர வேண்டுகிறேன். அரிய பொக்கிஷப் பாடல்களை அள்ளித் தந்த நீங்கள் இப்போது திரிக்கு வருவது குறைந்து விட்டதே. தயவு செய்து தங்கள் பொன்னான அற்புத பதிவுகளை தினமும் தந்து நாங்கள் மகிழ்வுற தொடர வேண்டுகிறேன். நன்றி! அப்படியே 'ரங்க ராட்டினம்' பற்றியும்.....
-
6th September 2015, 09:57 PM
#3458
Senior Member
Senior Hubber
Originally Posted by
vasudevan31355
ஆச்சர்யமாக இருக்கு சின்னா! நிச்சயம் கேட்டிருப்பீர்கள். கேட்காமல் இருக்க வாய்ப்பே இல்லை.
கேட்டுட்டேன்னா.. கேட்டிருக்கேன் நினைவு வந்துடுத்து..
பாட்டு படத்துல ரவிச்சந்திரன் பாடற பாட்டுன்னு நினைக்கறேன்..
தன்னைத்ததானே மறந்திருந்தாள் உன்னை ஈன்ற அன்னை
திரும்பி வந்த நினைவிருந்தும் மறந்ததென்ன என்னை
பைத்திய செள மயங்கியிருந்தப்ப உணர்ச்சி வசப்பட்டுருப்பாரோ.. பின் ஏதோ காரணத்தினால் ரவிச்சந்திரன் பிரிய இங்கோ செளக்கு பிரசவம் ஆகிப் பைத்தியம் தெளிய..இபபடி இருக்குமோ..ஆனா..ரவிச்சந்திரன் காதலிச்சது புத்திசாலியான செளகார் (ரெண்டு செளகார்னு சொல்றீங்களே) ம்ம் என்னவோ போங்க..
-
6th September 2015, 09:58 PM
#3459
Senior Member
Diamond Hubber
//ரங்க ராட்டினம் எனத் தேடினால் ராட்டினம் படம் தான் வருகிறது//
நாங்கதான் அவஸ்தைப் பட்டுட்டோம் இல்லே. அப்புறம் ஏன்? இருந்தா ஏன் எழுத்துப் பதிவோடு விடறோம்? இருந்தாலும் உங்க முயற்சியைப் பாராட்டறேன் சின்னா!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th September 2015, 10:00 PM
#3460
Senior Member
Diamond Hubber
//பைத்திய செள மயங்கியிருந்தப்ப உணர்ச்சி வசப்பட்டுருப்பாரோ//
இன்னைக்கும் கரீட்டா உம்மை நிரூபிச்சிட்டீரே!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks