-
14th July 2015, 12:12 PM
#11
Senior Member
Seasoned Hubber
மெல்லிசை மன்னரும் நடிகர் திலகமும் இணைந்து நமக்கு இரு கண்களாகவே திகழ்ந்தனர். இன்னும் சொல்லப் போனால் கண்களுக்கு நடிகர் திலகமும் செவிகளுக்கு மெல்லிசை மன்னரும் என இறைவன் நமக்களித்த கொடையாகவே நாம் பாவிக்கிறோம்.
மெல்லிசை மன்னரின் பூவுடல் மட்டுமே பிரிந்துள்ளதே தவிர அவரல்ல. நம் வாழ்நாள் முழுதும் அவருடைய இசை நமக்குத் துணையாக இருந்து நமக்கு துயரமும் சோகமும் தெரியாமல் ஆறுதலாக அரவணைத்துச் செல்லும்.
அவருக்கு நம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மெல்லிசை மன்னரின் மானசீக குருவான இசை மேதை ஜி.ராமநாதன் அவர்களுக்கும், உலக நடிகர்களுக்கெல்லாம் தலையாய நடிகர் திலகம் அவர்களுக்கும் காலத்தால் அழியாத புகழ் தேடித்தந்த வீரபாண்டிய கட்டபொம்மன் டிஜிட்டல் வெளியீட்டிற்கான அரசாங்க துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டு விட்டன. அநேகமாக நாளை நாளிதழில் விளம்பரம் வெளிவரலாம் எனத் தெரிகிறது.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
14th July 2015 12:12 PM
# ADS
Circuit advertisement
Bookmarks