-
20th June 2015, 08:33 PM
#1261
Junior Member
Seasoned Hubber
நன்றி திரு ஆதிராம் - உங்களைப்பற்றிய சர்ச்சைகள் மனதிற்கு மிகவும் கஷ்ட்டமாக இருந்தாலும் , விடாமல் எல்லா பதிவுகளையும் படிக்கும் குணமும் - படித்ததோடு நிற்காமல் உடனே மனமுவந்து பாராட்டும் நல்ல எண்ணமும் உங்கள் நல்ல உள்ளத்தை எடுத்துக்காட்டுகின்றது .
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
20th June 2015 08:33 PM
# ADS
Circuit advertisement
-
20th June 2015, 10:12 PM
#1262
Junior Member
Diamond Hubber
புரட்சி தலைவரின் 'தொழிலாளி' திரைப்படத்தில் வரும் பாடலிருந்து சில வரிகள்...
'இருப்பதைக்கொண்டு
சிறப்புடன் வாழும்
இலக்கணம் படைத்தவன், தொழிலாளி
உருக்குப் போன்ற
தன் கரத்தை நம்பி
ஓங்கி நிற்பவன், தொழிலாளி
கல்லை கனியாக மாற்றும் தொழிலாளி
கவனம் ஒரு நாள் திரும்பும்
அதில் நல்லவர் வாழும் புதிய சமுதாயம்
நிச்சயம் ஒரு நாள் அரும்பும்
...
ஆண்டவன் உலகத்தின் முதலாளி'
இப்பாடலுக்கே உரித்தான சில சிறப்பு அம்சங்கள்...
முதலாவதாக, முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இசையமைக்கப்பட்டிருக்கும் ஒரு இனிமையான பாடல்.
குறிப்பாக, குறைந்தயளவு இசைக்கருவிகள் பயன் படுத்தப்பட்டிருக்கும்.
இரண்டாவதாக, நமது அன்பிற்குறிய, மறைந்த TMS அவர்கள், மிகவும் தாழ்ந்த சுருதியில் (Low Pitch) பாடிய பாடல்.
குறிப்பாக, TMS அவர்களின் பாடல்களை அவ்வளவு எளிதாக பாடிவிட முடியாது.
பாட்டில் எங்கேயாவது உயர்ந்து சுருதி (Hi Pitch) கலந்திருக்கும், நிச்சயம் பட முயற்சிப்பவரின் காலை வாரிவிடும்.
ஆனால் இந்த பாடலை எவர் வேண்டுமானாலும் பாட முயற்ச்சிக்கலாம்.
மூன்றாவதாக, தலைவர் மிகவும் அமைதியாக தரையில் அமர்ந்து பாடும் பாடல், அதுவும் ஒரு தத்துவப்பாடல்.
மிக எளிதாக, மிகவும் இயற்கையாக, முகத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதைத் தவிர வேறு எந்த உடலசைவுகளையும் காட்டியிருக்க மாட்டார்.
இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படைத்தவர்களாக ஏன் ஒரு 'தொழிலாளி' மட்டும் இருக்க வேண்டும்?
மேல்மட்டத்தில் உள்ள துறைகளில் பணிபுரிபவர்கள், ஏன் இதை கடைபிடிக்கக் கூடாது?
மேல்மட்டத்துறைகளில் உள்ள நிறுவனங்களில், ஏன் இத்தனை ஆடம்பரம், விளம்பரங்கள்?
தேவையற்ற விஷயங்களுக்கு பொருளாதாரத்தையும், நேரத்தையும், ஏன் செலவிட வேண்டும்?
இவையெல்லாம் குறைந்தால், உருக்குப் போன்ற தன் கரத்தை நம்பி ஓங்கி நிற்கும் தொழிலாளியின் வாழ்வு மலர, ஏன் வழி பிறக்காது?
இப்பொழுது இருக்கும் நிலை தொடர்ந்தால், கல்லை கனியாக மாற்றும் தொழிலாளியின் கவனம் ஒரு நாள் திரும்பும்.
அப்பொழுது (அதில்), நல்லவர் வாழும் புதிய சமுதாயம் நிச்சயம் ஒரு நாள் அரும்பும் நிலை உருவாகும்.
courtesy venkatrao fb
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
21st June 2015, 12:15 AM
#1263
Junior Member
Diamond Hubber
ஊருக்கு உழைப்பவன்” படத்தில் ஜேசுதாஸ் பாடிய “பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்” ஒரு சூப்பர் ஹிட் பாடல்...
இந்தப் பாடல் காட்சிக்காக முதலில் இரண்டு , மூன்று பல்லவிகள் எழுதப்பட்டனவாம்...
அதில் ஒரு பாடலின் பல்லவி...
"நெஞ்சுக்குள்ளே அன்பு என்னும் கடல் இருக்குது
நினைக்கும் போது பாசம் என்னும் அலையடிக்குது
என் கண்ணுக்குள்ளே குழந்தை என்னும் மலர் சிரிக்குது
என் கவிதைக்குள்ளே மழலை ஒன்று குரல் கொடுக்குது
எது நடக்கும் எது நடக்காது
இது எவருக்கும் தெரியாது
எது கிடைக்கும் எது கிடைக்காது
இது இறைவனுக்கும் புரியாது"
இயக்குனர்..இசையமைப்பாளர் ...எல்லோரும் இந்தப் பாடலை ரசித்து ஓகே சொல்லி விட்டாலும் , எம்.ஜி.ஆர் மட்டும் ஒன்றுமே சொல்லாமல் அமர்ந்திருந்தாராம்...
எல்லோரும் எம்.ஜி.ஆர் முகத்தைப் பார்க்க ..
"நீங்க சொல்றது போலவே இந்தப் பாட்டு நல்லாயிருக்கு ஆனா பிள்ளைத் தமிழ் என்று தொடங்கும் பாட்டுத்தான் பாப்புலராகும்... ரொம்ப கேட்சிங்கா இருக்கு"என்றாராம் எம்.ஜி.ஆர்....
அப்புறம் என்ன..? பல்லவியோடு சரணமும் உருவாகி பாடல் பதிவானதாம்...
"பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் - ஒரு
பிள்ளைக்காகப் பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும்
மழலைக்காக பாடுகிறேன்
நான் பாடுகிறேன்”
“வான மழைத் துளி யாவும்
முத்தாக மாறாது
வண்ணமிகு மலர் யாவும்
உன் போல சிரிக்காது
தேடி வைத்த பொருள் யாவும்
தேன் மழலை ஆகாது
திருவிளக்கின் ஒளியழகும்
உன் அழகைக் காட்டாது..”
இந்தப் பாடல் வரிகளை ஜேசுதாஸ் எந்த உணர்ச்சியோடு பாடினாரோ..?
ஆனால் இதற்கு வாயசைத்து நடிக்கும்போது எம்.ஜி.ஆரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்..?
# “எது நடக்கும் எது நடக்காது
இது எவருக்கும் தெரியாது
எது கிடைக்கும் எது கிடைக்காது
இது இறைவனுக்கும் புரியாது..”
courtesy net
-
21st June 2015, 12:22 AM
#1264
Junior Member
Diamond Hubber
உங்களுக்கு யாருடனும் கருத்து வேறுபாடு வரவில்லையென்றால்
நீங்கள் சரியான ஜால்ரா என்று புரிந்து கொள்ளுங்கள்..”
என்றார் நண்பர்...!
உண்மைதான்...!
இதோ..ஒரு இனிய பாடல் உருவாக எத்தனை காரசாரமான கருத்து மோதல்கள் உருவாக வேண்டியதிருக்கிறது.....!
# ‘இளைய நிலா பொழிகிறது’ ....
‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலை , முதலில் ‘சலவை நிலா பொழிகிறது’ என்றுதான் வைரமுத்து எழுதி இருந்தாராம்....
படித்துப் பார்த்த இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் ...“அந்தச் ‘சலவை’ என்ற வார்த்தை நன்றாக இல்லையே... அதற்குப் பதிலாக வேறு வார்த்தையை போடுங்களேன்..”என்று சொல்ல ..வைரமுத்து மறுக்க...ஆர்.சுந்தரராஜன் சொன்னாராம்...” எனக்கு அது புரியலீங்க..”.
வைரமுத்து உடனே , “உங்களைவிட அறிவாளிகள் நிறைய பேர் தமிழ்நாட்டுல இருக்காங்க..” என்று பட்டென்று பதில் சொன்னாராம்..
“இருக்கலாம் ஸார்.. ஆனா எனக்கே அது என்னன்னு புரியலையே..? அப்புறம் எப்படி நான் மத்தவங்களுக்கு புரிய வைக்கிறது..?” என்று சண்டைக்கு போய் விட்டாராம் ஆர்.சுந்தர்ராஜன்.
இளையராஜாவும் ஆர்.சுந்தர்ராஜனை அழைத்து, “இது உனக்கு முதல் படம்.... கொஞ்சம் விட்டுக் கொடுத்து போ.. கவிஞர் சொன்ன மாதிரியே இருக்கட்டும்..” என்று அட்வைஸ் செய்திருக்கிறார்.
“இல்ல ஸார்.. ‘சலவை’ன்னு போட்டா நல்லாயிருக்காது ஸார்..” என்று விடாப்பிடியாக விட்டுக் கொடுக்காமல் விறைப்பாக நின்றாராம் ஆர்.சுந்தரராஜன்....!
அப்புறம்தான் ‘சலவை நிலா’வை ....‘இளைய நிலா’வாக மாற்றிக் கொடுத்தாராம் இளையராஜா ..!
“சலவை”நிலாவை விட இளையராஜாவின் “இளைய நிலா”தானே இனிமையாக இருக்கிறது...?
வைரமுத்து அன்று ஏன் அத்தனை அடம் பிடித்து நின்றார் என்று இன்றுவரை எனக்குப் புரியவில்லை...!
# “அடம் பிடிக்கும் குழந்தைகளை , அம்மாக்கள் “தரதர” வென இழுத்துப் போவதைப் போல ...
காலம் எனும் தாய் ,
இளையராஜாவையும் , வைரமுத்துவையும் எங்கெங்கோ இழுத்துச் சென்று விட்டாள்..”
# இளையராஜாவுடன் இணைவது பற்றி , வைரமுத்து எழுதிய வரிகள் நினைவுக்கு வருகின்றன..
“நீயும் நானும் சேர வேண்டுமாம்.
சில தூய இதயங்கள் சொல்லுகின்றன.
உனக்கு ஞாபகமிருக்கிறதா?
‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம். திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன்.
நீ துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்.
மழை வந்தது.
நின்று விட்டேன்.
என்னை நீ பிடித்து விட்டாய்.
அப்போது சேர்ந்து விட்டோம்.
ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்.இப்போது முடியுமா?
இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்?"
# “பூங்காற்று திரும்புமா..?”
j
courtesy net
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st June 2015, 08:21 AM
#1265
Senior Member
Diamond Hubber
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
(நெடுந்தொடர்)
10
'பொன்னென்றும் பூவென்றும்'
படம்: 'நிலவே நீ சாட்சி'
இசை: 'மெல்லிசை மன்னர்'
பாடலாசிரியர்: 'கவிஞர்' வாலி
பாலாவின் தொடரில் அடுத்து வரும் பாடலின் படமும் இதற்கு முந்தைய தொடரில் நாம் பார்த்த அதே 'நிலவே நீ சாட்சி' படம்தான்.
ஹைய்யா! ஜாலி! கதை எழுத வேண்டிய அவசியமில்லை. போன தொடரிலேயே படத்தைப் பற்றி விவரம் தந்தாயிற்று.
பாலு பாடிய பாடல்களில் உச்ச நிலை தொடும் பாடல். ஜெய், விஜயா காதல் பாடல் என்றாலும் இப்பாடலை பாலு ஒருவரே பாடி அசத்துவார்.
ஆனால் பாடல் மனதில் பதிந்த அளவிற்கு காட்சி பதியாமல் அம்பேல். சுரத்தே இல்லாமல் ஜெய் பாடுவது, சம்பந்தமே இல்லாமல் விஜி பாடல் முழுக்க செயற்கையாக சிரித்துக் கொண்டே இருப்பது, ஒரே ஒரு மரம், அதன் பின்னால் ஆர்ட் இயக்குனரின் கை வண்ணத்தில் வரையப்பட்ட நிழலுருவு மரங்கள் என்று பாடலுக்கான காட்சியமைப்பு போர்தான்.
வாலி இப்பாடலின் நாயகர். வார்த்தை சித்தர்.
'மூன்று கனிச்சாறு ஒன்றாக பிழிந்து
மோகரசம் கொஞ்சம் அளவோடு கலந்து
போதை மதுவாக பொன்மேனி மலர்ந்து
பூவை வந்தாள் பெண்ணாக பிறந்து'
இதைவிட ஒரு காதலன் மோகம் கொண்டு தன் காதலியை வர்ணித்து விட முடியாது.
'கண்கள் ஒளிவீசும் அதிகாலை வெள்ளி'
என்று கற்பனையில் வாலி கலக்குவதை எவரும் ரசிக்காமல் இருக்க முடியாது.
அது மட்டுமா?
'இன்பம் அவள் இன்னும் அறியாத கல்வி'
என்று காதலியின் மீது காதலன் பாடும் வார்த்தைகள் அர்த்தம் நிறைந்தது. அதில் காதலனின் ஏக்கமும் நிறைந்திருப்பதை நாம் உணரலாம்.
'ம் ம்ம்ம் ஹூம்
ஹா ஹாஹாஹாஹாஹா'
என்று பாலா படுசுவாரஸ்யமாய்த் பாடலைத் தொடங்க, பின்னால் கிறங்க வைக்கும் கிடாரின் பின்னணி முழங்க, எப்படிப்பட்ட சுகமான பாடலை நாம் அனுபவிக்கத் தொடங்குகிறோம்! வயலினின் பின்னணி சுகமாய் நெஞ்சை வருடும்.
பல்லவி முடிந்து முதல் சரணம் தொடங்குவதற்கு முன்னும், அதே போல மூன்றாவது சரணம் ஆரம்பிக்கும் முன்பும் ஒலிக்கும் அந்த சாக்ஸ்போனின் இனிய இசையை இன்று முழுதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். தொடர்ந்து வரும் சந்தூரின் அழகே அழகு. பாடல் முழுதும் பின்னால் உருண்டு கொண்டிருக்கும் பாங்கோஸ் பரவசம் தரும்.
'மெல்லிசை மன்னர்' தன் அற்புத இசையாலும், டியூனாலும் நம்மை மிரள வைத்த படம் இது.
குறிப்பாக இந்தப் பாடலை விரும்பாதவர்களே இருக்க முடியாது. எந்த வயதினரும், எந்த தலைமுறையும் கேட்டால் சொக்கிப் போக வைக்கும் பாடல் இது.
விஜய் தொலைகாட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் இந்தப் பாடலை பாடினால் பாடுபவருக்கு வெற்றி நிச்சயம்.
பாலா மிக மிக மிக மிக அனுபவித்து, குழைத்து, நமக்கு அளித்த காயகல்ப சஞ்சீவி இந்தப் பாடல்.
பொன்னென்றும் பூவென்றும்
தேனென்றும் சொல்வேனோ
பொன்னென்றும் பூவென்றும்
தேனென்றும் சொல்வேனோ
பெண்ணைப் பார்த்தால் சொல்லத் தோன்றும்
இன்னும் நூறாயிரம்
ம்ம்ம்ம்...இன்னும் நூறாயிரம்
(இடையிசை கலக்கல்)
மூன்று கனிச்சாறு ஒன்றாகப் பிழிந்து
மோகரசம் கொஞ்சம் அளவோடு கலந்து
போதை மதுவாக பொன்மேனி மலர்ந்து
பூவை வந்தாள் பெண்ணாகப் பிறந்து
பூவை வந்தாள் பெண்ணாகப் பிறந்து
பொன்னென்றும் பூவென்றும்
தேனென்றும் சொல்வேனோ
பெண்ணைப் பார்த்தால் சொல்லத் தோன்றும்
இன்னும் நூறாயிரம்
ம்ம்ம்ம்...இன்னும் நூறாயிரம்
கோடை வசந்தங்கள் குளிர் காலம் என்று
ஓடும் பருவங்கள் கணநேரம் இன்று
காதல் கவி பாடும் அவள் மேனி கண்டு
காண கண் வேண்டும் ஒரு கோடி இன்று
காண கண் வேண்டும் ஒரு கோடி இன்று
(இடையிசை கலக்கல்)
கன்னி இளம் கூந்தல் கல்யாண பள்ளி
கண்கள் ஒளிவீசும் அதிகாலை வெள்ளி
தென்றல் விளையாடும் அவள் பேரை சொல்லி
இன்பம் அவள் இன்னும் அறியாத கல்வி
பொன்னென்றும் பூவென்றும்
தேனென்றும் சொல்வேனோ
பெண்ணைப் பார்த்தால் சொல்லத் தோன்றும்
இன்னும் நூறாயிரம்
ம்ம்ம்ம்...இன்னும் நூறாயிரம்
Last edited by vasudevan31355; 23rd June 2015 at 08:19 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 5 Likes
-
21st June 2015, 09:10 AM
#1266
Senior Member
Senior Hubber
-
21st June 2015, 09:19 AM
#1267
Senior Member
Senior Hubber
நிலவே நீ சாட்சி
அருமையான பாடல்கள்
நன்றி ஜி
-
21st June 2015, 09:44 AM
#1268
Senior Member
Senior Hubber
Hi good morning to all from Gurgaon!..
Congrats to ravi for completing the karuvin karu series part 1.
Thanks vasu sir for nilave nee satchi
Thanks Rajesh, Gopal for the feed back on Julia. Gopal I didn't try any baani of Sujathaa..Just I tried to write on that movie, Thanks for your naermaiyana comments about me . I also used to write in 5 punai peyarkaL chinnakkannan, kr.iyengar, Gayathri srinivas,Xavier dasan, kannan rajagopalan in old days. ippo chinnak kannan only. ennai patri enna ninaikkireerkaL.. (Ithu thaan vambai vilai koduththu vaanguvathu enbathu)
Day before yesterday went to haridwar and returned yesterday mid night. Tomorrow again starting another tour for a week.
Welcome kumar sir do contribute about the songs of ma.thi.
I will read and try to come as and when
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
21st June 2015, 10:52 AM
#1269
Junior Member
Seasoned Hubber
கடலூர், இரும்புக்கோட்டை, சென்னை, சவூதி அரேபியா முதலிய இடங்களில் கோல்மாலுக்குப் பெயர் பெற்றது 'கோபால்' கல்பொடி. பொய்களை முத்துப் போல் பிரகாசிக்க செய்வது கோபால் பல்பொடி. தில்லுமுல்லுகளுக்குத் துணை போவது கோபால் பற்பொடி. ஏமாந்த சோணகிரி கோபால் பற்பொடி.
கோபால்,
ஒரு ஆள் பல வேஷம் போட்டு இங்கிருப்பவர்கள் எல்லோரையும் மாற்றி மாற்றி ஏமாற்றி நான் வேறு அவர்கள் வேறு என்று நம்ப வைப்பது மோசடி செயல்தானே. நல்ல பதிவுகள் தருபவர்கள் ஒரே பெயரில் தரலாமே. நல்லதோ கேட்டதோ தாங்கள் ஒரே பெயரில் நேர்மையாக பதிவிட வில்லையா? ஒரு ஆள் நான் அவனில்லை என்று சாமர்த்தியம் பண்ணிக் கொண்டிருக்கிறார். அந்த தில்லுமுல்லுகளுக்கு நீங்கள் சப்போர்ட் செய்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. குற்றம் செய்பவரை விட குற்றம் செய்ய தூண்டுபவருக்குதான் தண்டனை அதிகம்.
ஒரு நபர் 5 பேராக வந்தாலும் அந்த ஏமாற்று வேலையை ரசிக்கிறேன் என்று அந்த நபர் பலவேஷம் கட்டுபவர்தான் என்று மனப்பூர்வமாக திரியில் ஒத்துக் கொண்டதற்கும், தைரியமாகத் திரியில் பதிந்து உண்மையை உணர்த்தியதற்கும் உங்களுக்கு மிகவும் நன்றி. ஆமாம்!
ஆறு வயது ஆதி குழந்தை போட்டோ உங்களிடம் எப்படி வந்தது?
-
21st June 2015, 11:53 AM
#1270
Junior Member
Newbie Hubber
குமார்,
அவர் என்ன ஏமாற்றி பணம் பிடுங்கினாரா? அல்லது பலரை மணந்தாரா?(நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில்)
திரியை சுவாரஸ்யமாக்கினார். மார் தட்டி சொல்லுவேன், எனக்கு முன்னாள் நடிகர்திலகம் திரிக்கு வந்த பலர் ,அத்திரியை சுவாரச்யமாக்கி மையத்துக்கு பெருமை சேர்த்தனர். நல்லவர்,நேர்மையாளர் என்று மொண்ணை பதிவுகளை போட்டு வெறித்தனமாக செயல்படும் போர் ஆட்களால் திரி சுவாரஸ்ய படவில்லை.
அப்படி அவர் பல பெயரில் பதிவுகள் போட்டதால் என்ன கேடு வந்தது?
திரிக்கு சுவாரஸ்யம் சேர்த்து வள படுத்தியது பெரிய குற்றமா என்ன ? பல பெயரில் வருவது மட்டும் மோசடியல்ல. தவறான தகவல்கள், பொய்யானவற்றை தூக்கி பிடித்தல் எல்லாமே மோசடி. ஒரு தலை பட்சமாக வழிபாடு செய்வது பகுத்தறிவு மோசடி.
நீங்கள் ஏன் இவ்வளவு மோசமாக தாக்குகிறீர்கள் என்பது புரியவில்லை. Administator ,Moderators இவர்களிடம் புகார் செய்வதை விட்டு ,நிரூபணமாகாத ஒன்றை சொல்லி ஏன் ஒரு அங்கத்தினரை கொதிப்படைய செய்கிறீர்கள்?அவர்கள் இருவரும் சேர்ந்து வந்து உங்களை சந்தித்தால் முகத்தை எங்கு கொண்டு வைப்பீர்கள்?
நான் திரும்ப சொல்கிறேன். என்னை போன்ற சிலர் திரிக்கு வந்த காரணம் முன்னோடிகள் கார்த்திக்,சாரதா,முரளி போன்றோர்தான்.
நான் உங்களை கேலி செய்து தாக்க நேரம் பிடிக்காது. ஆனால் பம்மலார் உங்களை பற்றி மிக உயர்வாக குறிப்பிட்டுள்ளார். என் மதிப்புக்குரிய உங்களிடம் ,தற்காலிக பொறுமை காட்டுவதில் எனக்கு தயக்கம் இல்லை.
காற்றாலையுடன் Don Quixote போல மோதாதீர்கள்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks