ஆலமரத்தின் பழம் சிறிதே
அதிலே உண்டு ஆயிரம் விதை
அதனுள் ஒன்று வித்தாகி
அகல மரமாய் அதை ஆக்கி
அனேக விழுது அதை தாங்கி
ஆயிரம் பறவைக்கு அடைக்கலமே
அரிக்கும் கரையான் அடிமரத்தை
ஆனால் ஆலோ தழைத்தோங்கும்
ஆயிரம் விழுது ஊன்றியதால்
அதுபோல் மனிதா ஆவாயே !
ஆல் போல் தழைத்து வாழ்வாயே !
Bookmarks