-
18th September 2014, 05:18 PM
#11
சி கே சார்
உங்கள் பாசுரம் படித்த உடன் எனக்கு ஏற்பட்ட அன்பவத்தின் விளைவு இந்த பாடல் மாணிக்க வாசகரின் திருவாசக பாடல்
தயவு செய்து சைவ வைணவ பேதம் மனதில் கொள்ளாமல் படிக்கவும்
நானும் மனதில் எந்த துர் எண்ணமும் இல்லாமல் சொல்கிறேன்
'வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேன்ட முழுந் தருவோய் நீ
வேண்டுமயன்மாற் கரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா(து) அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்(று) உண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே! [திருவாசகம்-மாணிக்கவாசகர்]
இது போல் நீங்களும் எங்களுக்கு வேண்டும் பாசுரம் எல்லாம் தந்து எல்லாம் வல்ல இறை ஆற்றல் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
18th September 2014 05:18 PM
# ADS
Circuit advertisement
Bookmarks