-
16th September 2014, 10:03 AM
#2361
ராஜேஷ் சார்
வாங்க ரொம்ப நாளாக ஆச்சு உங்க கூட பேசி
நேற்று உங்க face புக் படித்த நினைவு .
தமிழ் திரை இசையில் ஆண் குரல்கள் னு ஒரு பதிவு படித்தேன்
மிக அருமை.
-
16th September 2014 10:03 AM
# ADS
Circuit advertisement
-
16th September 2014, 10:03 AM
#2362
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்,
சண்டைப் பயிற்சியாளர் மாஸ்டர் நித்தியானந்தன் அவர்களின் விரிவான பேட்டி அருமை. இவ்வளவு விவரமான விவகாரமான விஷயங்கள், சண்டைப் பயிற்சியாளர்களின் போராட்ட வாழ்க்கை தளம் வேறு எந்த கட்டுரையிலும் வந்ததாக நினைவில்லை.
இளைய திலகம் பிரபு சண்டைக் காட்சிகளில் அற்புதமாகப் பங்களிப்பதில் முதன்மையானவர் என்று மாஸ்டர் கூறியிருப்பது நமக்கெல்லாம் பெருமை.
தாங்கள் பதிவிட்ட கட்டுரையைப் படித்தவுடன் எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வந்து விட்டது.
ஒருமுறை பிரபு என்னை நீதியின் நிழல் ஷூட்டிங்கிற்கு வரச் சொல்லி இருந்தார். வாகினி ஸ்டுடியோவில். அப்போது அப்படத்திற்காக ஒரு சண்டைக் காட்சி எடுத்தார்கள். அப்போது இளைய திலகத்தின் பங்களிப்பு என்னை பிரமிக்க வைத்தது. மாடி போல ஒரு செட் போட்டு அங்கு பிரபு சண்டை காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார். துணை ஸ்டன்ட் நடிகர்கள் ஒவ்வொருவரும் பிரபு அடிக்கையில் குட்டிக் கரணம் அடித்து மேலிருந்தவாறு கீழே அடுக்கப்பட்டிருந்த பஞ்சு மூட்டைகளில் விழுந்து எழுந்தது பரிதாபமாக இருந்தது. ஒவ்வொருவரியும் பிரபு தனியே அழைத்து 'அடிபட்டு விட்டதா' என்று அக்கறையுடன் விசாரித்துக்கொண்டே இருந்தார். (நடுவில் மறக்காமல் அவருடைய உதவியாளர் பாபு மூலம் எனக்கு கூல் ட்ரிங்க்ஸ், காபி என்று அனுப்பிக் கொண்டே இருந்தார்) அந்த ஒரு சண்டைக் காட்சியை 3 மணி நேரத்துக்கும் மேலாக எடுத்தார்கள். எனக்கே போரடித்துவிட்டது. ஆனால் அதுதானே பயிற்சியாளர்களுக்கும், ஸ்டன்ட் நடிகர்களுக்கும் பிழைப்பு.
அது போல ஒருமுறை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் 'ஜூடோ' ரத்னம் மாஸ்டரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது நான் அவரிடம் 'ஜூடோ சார்! தற்சமயம் யார் சிறப்பாக சண்டைக் காட்சியில் நடிக்கும் ஹீரோ? என்று கேட்டேன். அதற்கு அவர் கொஞ்சமும் யோசியாமல் 'பிரபுதான் தம்பி. அது சிங்கக் குட்டியாச்சே' என்றார். எனக்கு பெருமை பிடிபடவில்லை.
இப்படி பல மாஸ்டர்கள் பிரபு சண்டைக் காட்சிகளில் அற்புதமாகப் பரமளிக்கக் கூடியவர் என்று பேட்டிகளிலும் படித்திருக்கிறேன்.
'சிம்ம சொப்பனம்' என்ற அருமையான நடிகர் திலகத்தின் படம். அதில் அப்பா நடிகர் திலகத்தின் ஆணை கேட்டு எதிரிகளுடன் சண்டையிடப் புறப்படுவார் பிரபு. நடிகர் திலகத்தின் மனைவி கே.ஆர். விஜயா "ஒரு அப்பாவே பிள்ளையை இப்படி தூண்டி சண்டைக்கு அனுப்பலாமா.. அவனுக்கு ஏதாவது அடிபட்டால் என்னாவது? நீங்களும் துணைக்குப் போகக் கூடாதா?" என்று கோபிப்பார்.
அதற்கு நடிகர் திலகம் கொஞ்சம் கூட ஈகோ இல்லாமல் "என்னைவிட சண்டையில் அவன் பெட்டர்" என்பாரே பார்க்கலாம்!
எத்தனை பேர் இதுமாதிரி ஒத்துக் கொள்வார்கள் அது உண்மையாய் இல்லாவிட்டாலும் கூட.
உத்தமபுத்திரன், வணங்காமுடி, தங்கை, ராஜா, நீதி, தங்கைக்காக, தர்மம் எங்கே, எங்க ஊர் ராஜா, திருடன், என் தம்பி, நேர்மை, இருதுருவம், தங்கச் சுரங்கம், நீதிபதி, தீர்ப்பு, சங்கிலி, புதையல் என்று பல படங்களில் சண்டைக் காட்சிகளில் பின்னியெடுத்த நடிகர் திலகம் அகந்தை இல்லாமல் இப்படி ஒரு வசனம் தந்திருப்பார்.
வழக்கம் போல எல்லாப் பதிவுகளையும் போல சண்டைக்காட்சி பதிவும் நடிகர் திலகத்திடமே முடிவடைகிறது பார்த்தீர்களா?
நல்ல பதிவுக்கு நன்றி கிருஷ்ணா சார்.
'தர்மம் எங்கே' படத்தில் நடிகர் திலகம் பங்கு பெற்ற அபாரமான சண்டைக் காட்சி இதோ.
கொடுங்கோலாட்சி புரியும் கொடியவனின் கொட்டத்தை அடக்க எரிமலையென எழுகிறான் சேகர். ஊருக்காகப் போராடும் அவன் வழக்கம் போல ஊர்மக்கள் ஆதரவின்றி வில்லனின் ஆட்களால் கைது செய்யப்பட்டு சிறைக்குக் கொண்டுவரப் படுகிறான். சிறைக்காவலரும், யானை பலம் கொண்ட பயில்வான் ஒருவனும் சேகரைப் புரட்டி எடுக்கின்றனர். எரியும் தீயில் அவன் முகத்தைப் பொசுக்குகின்றனர் எதிரிகள். அனல் தாங்க மாட்டாமல் அலறுகிறான் அவன். பொறுமைக்கும் எல்லை உண்டல்லவா! எரிமலையாகி வெடிக்கிறான். எதிரிகளைத் தூக்கிப் போட்டுப் பந்தாடுகிறான். துவம்சம் செய்கிறான். சிறையிலிருந்து தப்பித்து சென்று ஆற்றில் குதித்தவன் ஒரு நாடோடிக் கும்பலால் காப்பாற்றப்பட்டு, கொடியவனுக்கெதிராக கொடி பிடித்து, புரட்சிப்படை அமைத்து, வில்லனை தவிடு பொடியாக்கி, தானே ஆட்சியையும் பிடிக்கிறான்.
புரட்சி வீரனாக நம் சிங்கம். சிறையில் வீரர்கள் அடைக்க வருகையில் ஆரம்பிக்கும் அனல் கக்கும் சண்டைக்காட்சி. சங்கிலியால் பிணைக்கப்பட்டு சிறைக்குக் கைதியாய் கொண்டு வரப்படும் போதே அந்த நடையிலேயே உக்கிரம் தெரிய ஆரம்பித்து விடும். மூன்று காவலர்களும், ஒரு பயில்வானுமாய் சுற்றி நின்று மாறி மாறித் தாக்க, ஒவ்வொரு அடிக்கும் நம்மவர் அலறித் துடிப்பது பார்ப்பவர் அடிவயிற்றைக் கலங்க வைக்கும். வாயில் ரத்தம் ஒழுக, கழுத்தில் சங்கிலியுடன் அவர் போராடும் போது மெய் சிலிர்க்கும். அடிகளைப் பொறுத்துக் கொண்டு ஒரு கட்டத்தில் தாங்க மாட்டாமல் ஒரு காவலனை கழுத்தை விடாப்பிடியாய் இறுக்கி (அவன் இறக்கும் வரை) மற்ற காவலர்கள் கண்மண் தெரியாமல் அடிக்கும் அவ்வளவு அடிகளையும் தாங்கிக் கொண்டு, தன் காரியத்தை வெற்றி வெறியுடன் செய்து முடிப்பது அமர்க்களம். பின் சங்கிலியை ஆயுதமாக்கி சண்டமாருதமாய் சண்டையிடும் போது இன்னும் அமர்க்களம். பயில்வானும், ஒரு காவலனும் தன்னை அப்படியே குண்டுக்கட்டாகத் தூக்கி எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் முகத்தையையும், முடியையும் பொசுக்குகையில் அனல் பட்ட புழு போல அவர் அலறும் அலறு பாறை நெஞ்சையையும் பதைபதைக்க வைத்து விடும். முடியெல்லாம் கருகி, முகமெல்லாம் பொசுங்கி முகத்தில் அவர் காட்டும் வலிகளின் பிரதிபலிப்பு பிரமாதப் படுத்திவிடும். அந்த அவலட்சண ஒப்பனை ரத்தக் கண்ணீர் ராதாவை ஒத்திருக்கும். பின் பழி உணர்ச்சி மேலிட அதே சங்கிலியால் ஆசாத் பயிவானை மலையைக் கட்டி இழுப்பது போல பிணைத்து அதே நெருப்பில் தன்னை பொசுக்கியது போலவே பொசுக்கிப் பழி தீர்ப்பது கைத்தட்டல்களை அள்ளும். பின் தப்பித்து செல்கையில் அங்கு சங்கிலியால் தூணில் கட்டப்பட்டு நிற்கும் ஒரு அப்பாவிக் கைதியை அவ்வளவு வலி வேதனைகளிலும் விடுவித்து விட்டுச் செல்வது அவரது மனிதாபிமானத்தைக் காட்டும். அவருக்குள்ளிருக்கும் மானுடத்தை வெளிப்படுத்தும்.
மிக மிக அற்புதமான சண்டைக்காட்சி. வாயடைத்துப் போகச் செய்யும், மூக்கின் மேல் விரல் வைக்க செய்யும் கலக்கல் பைட். இந்த சண்டைக்காட்சியில் பெரும்பாலும் டூப்பே போடாமல் அவ்வளவு பிரமாதப்படுத்தியிருப்பார். (ஒரு சில லாங் ஷாட்களில் மட்டும் டூப்)
மற்ற ஸ்டன்ட் கலைஞர்கள் அவரை அலாக்காகத் தூக்கும் போதும், மற்றும் நெருப்பின் அருகில் அவர் முகத்தைக் காட்டும் போதும் எப்படி இவரால் இவ்வளவு துணிச்சலாக நடிக்க முடிகிறது என்ற கேள்விக்கணை நம் மனதில் எழாமல் இருக்காது. முகமும், உடலும் வேறு நெருப்பில் சிதைந்தது போல ஒப்பனை வேறு. அதையும் maintain செய்ய வேண்டும். மேலும் இந்த சண்டைக்காட்சியின் பிரதான அம்சம் சுறுசுறுப்பு... விறுவிறுப்பு... எதிர்பாராத பல நிகழ்வுகள் திடுமென திருப்பங்களை ஏற்படுத்தி நம்மை இருக்கையின் நுனிகளில் இருக்க வைத்துவிடும். A.D வெங்கடேசன், M.K சாமிநாதன், திருவாரூர் தாஸ் என்ற மூன்று ஜாம்பவான்களின் சண்டைப்பயிற்சி, நடிகர் திலகத்தின் ராட்சஷ ஒத்துழைப்பு, ஒளிப்பதிவாளரின் ஒப்பில்லா ஒளிப்பதிவு இந்த மூன்றும் இந்த சண்டைக்காட்சியை எங்கோ தூக்கிக் கொண்டு போய் நிறுத்தி விடடது
இந்த அமர்க்களமான சண்டைக் காட்சியை நம்மில் பலர் மறந்திருக்கக் கூடும். சிலர் காணாமலும் இருந்திருக்கலாம். இப்படம் சற்று சரியாகப் போகாததினால் எடுபடாமலும் போய் இருக்கலாம். இப்போது பாருங்கள் எப்பேர்பட்ட சண்டைக் காட்சிகளில் நம் இதயதெய்வம் புகுந்து விளையாடி இருக்கிறார் என்று!
அதே போல திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் 'அன்னமிட்டகை' படத்தில் பங்கு கொண்ட இந்த சண்டைக் காட்சி என்னை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். மிக அருமையான சிலம்பாட்டம். சுறுசுறுப்பு, விறுவிறுப்பு நிறைந்த அற்புதமான சண்டைக்காட்சி. சுற்றிலும் எதிரிகள் சூழ்ந்திருக்க நடுவில் எம்.ஜி.ஆர் அவர்கள் புயலென சிலம்பம் சுழற்றி புகுந்து விளையாடுவது ரொம்பவே நம்மை ரசிக்க வைக்கிறது.
Last edited by vasudevan31355; 16th September 2014 at 10:14 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
16th September 2014, 10:09 AM
#2363
வாசு சார்
பார்த்தீங்களா ரசனை எப்படி ஓத்து போகிறது . இளைய திலகம் ,நடிகர் திலகம்,மக்கள் திலகம் சண்டை காட்சிகள் தொகுப்பு அருமை
எத்தனை stunt மாஸ்டர்கள் 'ஜூடோ ரத்னம்,ஆம்பூர் பாபு,மாடக்குளம் தர்மலிங்கம்,அழகிரிசாமி ,ஷ்யாம் சுந்தரம்,வெங்கடேசன்,திருவாரூர் தாஸ் ,சூப்பர் சுப்பராயன்,'
-
16th September 2014, 10:14 AM
#2364
Senior Member
Diamond Hubber
Originally Posted by
gkrishna
கபில்தேவ் சுலக்ஷனா நடித்து வந்த படம்
இந்த கபில்தேவ் என்ன ஆனார் என்று தெரியவில்லை
இவர் 1 நிமிஷம் வர நடிகர் இல்லை. இந்த படத்தின் ஹீரோ
பின்னாளில் ஒரு பேய் படத்தில் வந்த நினைவு .(அதிசய மனிதன் )
இதயக் கோவிலில் வந்த "கபில்தேவ்" இவர்தான் என்று நினைக்கிறேன்
-
16th September 2014, 10:17 AM
#2365
Senior Member
Diamond Hubber
நானும் புது பாட்டு பதியப் போகிறேன்.
ஜீப் வண்டி பாட்டு ஒண்ணு
உண்ணி மேனன் குரலில் ஜெய் ஆகாஷ் நடித்த கிச்சா வயது 16 பாட்டு
சில நேரம் சில பொழுது சோதனை வரும்பொழுது
நம்பிக்கையால் மனம் உழுது வானில் உன் பெயரெழுது
இன்னொண்ணு சத்யராஜ், ஸ்ரீவித்யா நடித்து டி.எம்.எஸ்., சுசீலா குரல்களில் தாய் நாடு படப்பாடல் ( இது சாரட்டு வண்டிதானே )
ஒரு முல்லைப் பூவிடம் கொஞ்சும் பூமணம் தஞ்சம் ஆனது கண்ணா
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th September 2014, 10:25 AM
#2366
தேங்க்ஸ் மது சார்
என் ஜீவன் பாடுது னு ஒரு படம் சுந்தர்ராஜன் இயக்கம்
இதிலும் கபில்தேவ் வருவார் என்று நினைவு
பல நல்ல பாடல்கள் நிறைந்த ராஜாவின் இசை
70 களில் வந்த படம் அல்ல
86-87 காலகட்டத்தில் வந்த படம் என்று நினைவு
-
16th September 2014, 10:29 AM
#2367
Senior Member
Diamond Hubber
ராஜேஷ் சார்/ கிருஷ்ணா சார்,
ஒரு நெகிழ்ச்சியான நினைவு. மறைந்த நம் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பாடகி சொர்ணலதா அவர்களின் ஒவ்வொரு நினைவு தினத்தையும் எங்கள் நெய்வேலியில் உள்ள இன்னிசைக் கச்சேரி இசைக் கலைஞர்கள் மறக்காமல் நினைவு அஞ்சலி போஸ்டர் அடித்து நகரம் முழுது ஒட்டி அந்த இசைக் குயிலுக்கு பெருமை சேர்ப்பார்கள். இந்த 4 ஆவது ஆண்டு நினைவு தினத்திற்கு அவர்கள் அடித்துள்ள போஸ்டர். நிஜமாகவே பாராட்டப்பட வேண்டிய விஷயம்தானே!
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
16th September 2014, 10:30 AM
#2368
வாசு சார்
தர்மம் எங்கே நிழல்படம் அந்த கோரமான நடிகர் திலக ஒப்பனை கொஞ்சம் பயமாய் இருந்தது
இப்போது தான் லோட் ஆயிற்று . எப்பேர்பட்ட நடிகன் .
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வஞ்சனை செய்யோம்
என்ற தமிழ் பழமொழி படி வாங்கின காசுக்கு வஞ்சனை செய்யாமல் செய்யும் தொழிலே தெய்வம் னு வாழ்ந்த நடிகன்
-
16th September 2014, 10:36 AM
#2369
வாசு சார்
பாடகி சொர்ணலதா நினைவு சுவரொட்டி .
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.இது போல் யார் என்று ஊர் சொல்லவேண்டும்
திரை உலகில் இருந்த காலமோ ஏறத்தாழ 20-25 ஆண்டுகள் .மறைந்து 4 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனாலும் நினைவு கூர்ந்து வெளியிட்ட நெய்வேலி ரசிகர்களும் அதை எங்களுக்கு எல்லாம் தெரியவேண்டும் என்ற எண்ணம் கொண்டு வழங்கும் நல்ல உள்ளத்திற்கு சொந்தகாரர் வாசு தவிர வேறு யார் இருக்க முடியும் . நன்றி நன்றி
தமிழ் ரசிகர்களின் ரசனை கொண்டாடப்பட வேண்டிய ஒன்று
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th September 2014, 10:49 AM
#2370
வாசு சார்
சண்டை காட்சி பற்றிய உங்கள் பதிவு நிறைய நினைவுகளை கிளறி விட்டது .
ரந்தாவா நடிகர் திலகம் ஸ்டைல் fight ,கவர்ச்சி வில்லன் கே கண்ணன் உடன் இடும் சங்கிலி சண்டை (வெரி ஸ்மார்ட் னு கண்ணன் கத்தியை எடுத்த உடன் NT ஒரு பார்வை பார்த்து கொண்டு கண்ணன் மேல் பாயும் காட்சி ). சற்று நேரம் கழித்து சண்டையில் கத்தி வாசலில் வந்து விழுவது அதை பாலாஜி காலால் அமுக்குவது . பின்னாடியே வந்து கலைச்செல்வி 'சும்மா பார்த்துட்டு நிக்கறீங்களே போய் காப்பாத்த கூடாதா ?' சொல்லும் போது உடன் பாலாஜி 'இன்னைக்கு காப்பதிடலாம் ஆனால் வேறு ஒரு சந்தர்ப்பம் யாரும் இல்லாத நேரத்தில் ராஜா என்ன செய்வான் ' அவனே தனி ஆளாய் சமாளிக்கட்டும் .
(வசனம் AL நாராயணன் )
அதே போல் மக்கள் திலகத்தின் உசுவா ஜஸ்டின் உடன் fight ,குருசாமி நம்பியார் உடன் புத்த விகார சண்டை ,மனோகர் உடன் இடைவேளைக்கு முன் வரும் சண்டை 'நாயோடு திறமையை அவங்க பார்க்கட்டும் என்னோட திறமையை நீங்க பாருங்க ' உடனே இடைவேளை கார்ட் , 'இந்த படத்தின் பாடல்களை கொலம்பியா இசை தட்டுகளில் கேட்டு மகிழுங்கள்' என்ற வாசகத்துடன் . அவளுவுதான்
திரை அரங்க கழிவறைகளிலும்,டீ ஸ்டால்களிலும் அந்த சண்டை பற்றிய பேச்சு தான்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks