-
14th September 2014, 10:22 PM
#6
Senior Member
Senior Hubber
பாசுரம் பாடி வா தென்றலே
**
மூன்று
**************
அ’னாவில் ஆரம் பித்து
…அழகுற பாடங் கற்று
’வ’னாவில்’ தொடங்கும் வண்ண
…வாலையாம் பருவம் கொண்டு
’ம’னாவில் வந்து அங்கே
..மங்கையாம் பருவந் தன்னில்
’’க’னாவில் மதிம யங்கி
….காதலுங் கொள்வ தேனோ....
இது நான் சொல்லவில்லை பக்கத்து ஃப்ளாட் மாமி., ஒரு பெண்ணின் அம்மா சொல்கிறார்.. அவர் என்ன சொல்கிறாரென்று கேட்போம்..
என்னத்த சொல்றது போங்க.. அழகாப் பொண்ணு பொறந்துச்சேன்னு போற்றி வளர்த்தேன்..எல்லாத்துக்கும் நான் வேண்டும்.அவளுக்கு பள்ளிப்பருவத்துல ஹோம் வொர்க், கொஞ்சம் பருவமடைஞ்சப்போ சினேகிதியா அவளுக்குச் சொல்லிக் கொடுத்தேன்.. கிடுகிடுன்னு வளர்ந்து காலேஜ் போய்ட்டு முடிச்சு ஒரு வேலையும் தேடிக்கிட்டா..
அப்பப்ப நட்சத்திரத்தப் பாக்கறா, மொட்டை மாடில்ல ஒக்காந்துக்கிட்டு தானா பேசறா.. என்னடின்னா போம்மா செல்ஃபோன்ல தான் பேசிக்கிட்டிருந்தேன்னு புருடா விடறா.. பாத்தா கீழ சார்ஜர்ல போட்டிருக்கா..
திடீர்னு சிரிப்பு சிரித்துக்கறா.. சரி.. போனாப் போவுது.. நமக்கா தெரியாது..இவ வயசக் கடந்து வந்தவ தானே நானு..இவர்கிட்ட சொல்லி ஜாதகம் எடுக்கலாம்னா ஷ்.. கொஞ்சம் ஃப்ரீயா இருக்க விடேன்ங்கறா.. சரின்னு இருக்கலாம்னு பார்த்தா..
அவ படிக்கற புத்தகத்தில இருந்து ஒரு புள்ளையாண்டான் ஃபோட்டோ விழுது..ம்ம் இதானா சமாச்சாரம்..
ஏட்டி.. யாருடி இவன்.. ம்ம்ம் கூட வொர்க் பண்றவர்.. என்னடீ விஷயம்.. ம்ம் அதான் பாத்தேல்ல ஹேண்ட்ஸம்மா இருக்காரில்லை.. ஹீ ஈஸ் மை வுட்பி.. அடிப்பாவி உங்க அப்பா கேட்டார்னா.. ஸோ வாட்.. மம்மி நீ தான் அவரக் கன்வின்ஸ் பண்ணணும் ப்ளீஸ் ப்ளீஸ்..
இதான் எனக்குப் புரியலை.. நீயே சொல்லு கண்ணா..இந்தக் காதல் எப்படி பொண்ணுங்க மனசுல புகுந்துக்கிட்டு விளையாடுது..
ம்ம் பெத்தமனம் பித்து பிள்ளை மனம் கல்லுன்னு பழமொழி சொல்வாங்க.. இவ பொண்ணு தானே.. ஒருவேள கிராமத்து பாஷையில புள்ளன்னா பொண்ணு..அந்த மாதிரி சொல்லியிருப்பாங்களோ”
***..
அந்த மாமியின் நிலை கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கிறது.. காதலிக்கும் பெண்கள் எல்லாம் தன்னைப் பெற்ற அம்மாவும் ஒரு பெண் என்பதை மறந்து விடுகிறார்களோ. என்னமோ.. புத்திரன் பிரிந்த சோகம் தசரதனை முன்பு சொன்னபாடலில் பற்ற.. புத்திரி புரியாமல் காதலில் அலமலத்து இருப்பது பார்த்து இந்த அம்மாவிற்கு சோகம் ஏற்பட்டிருக்கிறது..
இதே போல வேறு ஒரு தாய்க்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது ஒரு பாடலில்..
கார்வண்ணம் திருமேனி கண்ணும் வாயும்
…கைத்தலமும் அடியிணையும் கமல வண்ணம்
பார்வண்ண மடமங்கை பத்தர்; பித்தர்
…..பனிமலர்மேல் பாவைக்கு; பாவம் செய்தேன்
ஏர்வண்ண என்பேதை என்சொல் கேளாள்
…எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும்
நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன்’ என்னும்
…இதுவன்றோ நிறையழிந்தார் நிற்குமாறே..
(தலைவியின் நிலை குறித்து பெற்ற தாய் இரங்குவதாக உள்ள பாசுரம் இது)
“என்ன சொல்வதென்று தான் தெரியவில்லை.. என் மகளோ எம்பெருமானையே தலைவனாக நினைத்துக் கொண்டு பித்துப்பிடித்தவள் போல் புரியாத விதமாக ஏதேனும் பேசிக்கொண்டே இருக்கிறாள்..கார்மேகத்தின் கரிய நிறம் கொண்டது பெருமானது திருமேனி..திருக்கண்கள்,திருவாய்,திருவடிகள்,தி ருக் கைகள் எல்லாம் தாமரைப் பூவைப் போல சிவந்த நிறமுடையன..
என்னடீ ஆச்சு உனக்கு என்ன பைத்தியமா என்றால்..அடபோம்மா.. நான் ஒண்ணும் பித்துப் பிடிச்சவள் இல்லை..இந்த எம்பெருமான் இருக்கிறாரே அவர் தான் பூமிப்பிராட்டியின் அன்பர்.. அதுக்குமேல.. திருமகள்பால் பித்தர்.. என்கிறாள்..
என்னடி சொல்ற..
போம்மா..ஒண்ணு சொல்லு..திருவரங்கம் எங்கே இருக்கு? நீர்வண்ணன் கோயில் கொண்டிருக்கும் திரு நீர் மலைக்குப் போகப் போகிறேன்”
என்ன செய்வது நான் சொல்லுங்கள்.. அழகான என் பெண் என் பேச்சைக் கேட்க மாட்டேன் என்கிறாள்.. நான் என்ன பாவம் செய்தேனோ..என் மகளுக்கு இப்படி மன அடக்கம் இல்லாதவாறு அவள் எம்பெருமான் மீது கொண்ட காதல் செய்துவிட்டதே..அதனால் தான் இந்த நிலையோ” எனச் சொல்லி அந்த தாய் புலம்புவதாக திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரத்தில் வருகிறது..
என்ன தான் சொல்லுங்கள்... லவ்னா;லே கஷ்டம் தான்.. எந்தக் காலத்திலயும்!!!
வரட்டா..
(தொடரும்..)
Last edited by chinnakkannan; 14th September 2014 at 10:26 PM.
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
-
Forum Rules
Bookmarks