சந்தேகம் கொண்டானா அண்ணல் அன்று
..சஞ்சலந்தான் கொண்டானா உளத்தில் இல்லை..
பந்தமென வந்தவந்தப் பாவை தன்னை
..பங்கமிடும் தழலினிலே புகத்தான் சொல்லி
சொந்தங்கள் நண்பர்கள் கலங்கி நிற்க
..சோகத்தால் கண்களுமே சற்றே மூட
நிந்தனைகள் உலகத்தார் பேசும் பேச்சு
..நிறுத்துதற்கு வழியாகச் சொன்னான் தானே..
Bookmarks