-
5th October 2013, 06:06 PM
#1
Senior Member
Seasoned Hubber
மெய்ப்பொருள் காண்ப தறிவு
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
திருக்குறள் மணிகளில் இது எடுத்துப் போற்றப்படவேண்டிய, நாளும் பின்பற்றப்பட வேண்டிய ஒளிமணி ஆகும். இது பத்திரிகைச் செய்திகட்குப் பொருந்துமோ? தாளிகைச்செய்திகள் வாய்ச்சொல்லாக வராமல், எழுத்து மூலமாக வருகின்றன.எனினும் அவையும் "சொல்லக் கேள்வி" என்பதில் அடக்கப்பட வேண்டியனவே. தாளிகைச் செய்தி hearsay என்பதில் அடங்குவதாகச் சட்டவல்லுநர் கருதுவரோ? நீங்கள் கேட்டறிந்து கொள்ளுங்கள். எப்படியாயினும் தவறான செய்தி வெளியிட்டமைக்காக தாளிகைகள் சில நீதிமன்றம் சென்றுள்ளன என்பதையும் நாம் கருதவேண்டியுள்ளது,
-
5th October 2013 06:06 PM
# ADS
Circuit advertisement
Bookmarks