என் அபிமான பாடகி சுசிலா ஜாலம் புரிவார். என்றது என்பதில் கிக் ஆன கொக்கி போட்டு வா வா என்று அழைத்து மூன்றாவது என்றது என்று emphatic tone .
ஒஹொஹொஹொஹொஹொ என்ற அருமையான ஹம்மிங். சுசிலா பாட்டிற்கு ஏற்ற pitch ,tone எடுக்கும் அழகே அழகு. சில எல்.ஆர்.ஈஸ்வரி பாட வேண்டிய பாடல்கள் இவருக்கு வந்து விடும். அதையும் இவர் பாடும் அழகே அழகு. PBS ,மேடம் ஸ்கோர் பண்ண விட்டு விட்டு தோதாய் தொடர்வார் பாருங்கள் ,அடடா!!!
இது அற்புதமான பாடல். இதை விட்டு ஒரு சோதா பாடல் சித்திரமே ஹிட் அடித்தது எனக்கு வருத்தமே.
அதே போல பார் மகளே பார் படத்தில் என்னை தொட்டு சென்றன தென்றல்.பாட்டில் வாவென்று நீ சொல்ல மாற்றம் கண்டேன் பாட்டில் வா சொல்லும் அழகு, கலை கோவில் படத்தில் நான் உன்னை சேர்ந்த செல்வம் பாட்டில் வாட்டும் என்ற சொல்லில் வாட்டுவார் இந்தியாவின் மிக சிறந்த versatile பாடகி.
ஒருவன் காதலி பாடலை "நெஞ்சிருக்கும் வரை" டீசிங் செய்யும் இடத்தில் உபயோகிப்பார் ஸ்ரீதர்.