வாசு சார்,

முன்பு ஒரு முறை நடிகர் திலகத்தின் திரியில் கிராமத்தில் டெண்ட் கொட்டகையில் சினிமா பார்த்த அனுபவங்களை நீங்கள் எழுதிய போது அதில் இந்த விஷயங்களை குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த சினிமா அனுபவங்களை தவிர்த்து விட்டு நீங்கள் பதிவிட்டிருக்கும் நினைவுகளில் கிராமீய மணம் கமழ்கிறது என்பதை நான் சொல்லாமலே படிக்கும் அனைவரும் புரிந்துக் கொள்வர். நகரத்திலேயே பிறந்து வளர்ந்த என் போன்றோருக்கு இது போன்ற அனுபவங்கள் படிக்க மட்டுமே கிடைக்கும். நிறைய எழுதுங்கள்.

அன்புடன்