-
26th May 2013, 01:46 PM
#11
Senior Member
Seasoned Hubber
டியர் கோபால் சார்
Perfect analysis of the presentation of larger than life characters. சரித்திர, புராண புருஷர்களைப் பற்றி நாம் படித்துள்ள இலக்கியங்களாகட்டும், அவற்றிற்கென சித்தரிக்கப்பட்ட ஓவியங்களாகட்டும், அந்த கதா பாத்திரங்களை பிரம்மாண்டமாகத் தான் காட்டியுள்ளன. அது மட்டுமின்றி அந்தக் கால கட்டத்தில் இப்படித் தான் உரையாடல்கள் இருந்திருக்கக் கூடும் என்கிற அனுமானத்தில் தான் அந்த உரை நடையும் இருந்தது. Therefore the larger than life concept has been arrived at through various literary sources. அது மட்டுமின்றி தாங்கள் கூறியிருப்பது போல் அந்த பாத்திரங்களின் தன்மையும் கூட அந்த கால கட்டங்களை சித்தரிப்பதாகத் தான் உருவாக்கப் பட்டிருந்தன.
என்றாலும் கூட இவற்றை நடமாடும் ஓவியங்களாக ... அதாவது செல்லுலாய்டில் பாத்திரங்களாக ... சித்தரிக்க வேண்டுமென்றால் அதற்கு சராசரிக்கு மீறிய திறமை கொண்டவர்களால் மட்டுமே சாத்தியம். அப்படி முனைந்த பல கலைஞர்களுக்கு முன்னோடி நடிகர் திலகம். ஆனால் அவருக்கு யார் முன்னோடி ... சுயம்புவாக அந்த பாத்திரங்களுக்கு இறைவன் தனக்களித்த திறமையினாலும் அபூர்வ சிந்தனா சக்தியாலும் ஜீவனூட்டியவர் நடிகர் திலகம்.
இப்படிப் பட்ட பாத்திரங்களுக்கு முன்னுதாரணம் கட்டபொம்மன், என்றால் அதற்கு சற்றும் குறைவில்லாமல், அதே போல் மேலும் பாத்திரங்களைப் படைத்திருக்கிறார் நடிகர் திலகம்.
தொடருங்கள் .... ஆவலைக் கூட்டுகிறது தங்கள் கட்டுரை.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
26th May 2013 01:46 PM
# ADS
Circuit advertisement
Bookmarks