-
24th April 2013, 12:43 PM
#11
Senior Member
Diamond Hubber
Originally Posted by
mr_karthik
( அதுபோல படத்தின் துவக்கத்தில் முத்துராமன், பத்மப்ரியா இவர்களின் தந்தையாக வந்து தற்கொலை செய்துகொள்ளும் நடிகர் யார்?)
முத்துராமன் மற்றும் பத்மபிரியாவின் தந்தையாக வருபவர் ஒரு தெலுங்கு நடிகர். அவர் பெயர் சரியாகத் தெரியவில்லை.(தூலிபாலா or ஜானகி ராமன்!?) அவருக்கு 'வைர நெஞ்சம்' படத்தில் டப்பிங் குரல் கொடுத்திருப்பவர் வில்லன் நடிகர் கே.ஆர்.ராம்சிங். ("துணிவே துணை" படத்தில் பயங்கரமான பேயப்பாட்டான 'ஆகாயத்தில் தொட்டில் கட்டி' பாடலுக்கு காட்டுப் பகுதியில் விஜயகுமாரையும், ஜெய்சங்கரையும் தனித்தனியே வைத்து இரட்டை மாட்டு வில்லு வண்டி ஒட்டி வருவாரே... அவர்தான். நிறைய வானொலி நாடகங்களிலும் நடித்துள்ளார். 'அஞ்சல் பெட்டி 520' படத்திலும் சில காட்சிகள் வருவார். கணீரென்ற குரலுக்கு சொந்தக்காரர். குரலிலேயே நம்மை பயமுறுத்தும் ஆசாமி. உருவத்திலும் கூட...)
வில்லன் நடிகர் மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் கே.ஆர்.ராம்சிங்.('அஞ்சல் பெட்டி 520' படத்தில்)
Last edited by vasudevan31355; 24th April 2013 at 02:03 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
24th April 2013 12:43 PM
# ADS
Circuit advertisement
Bookmarks