None of the single quotes "refer" to any other poetry or a particular/specific issue, so that it can made to sound ironic! except the obvious ones like :
'வலம்புரியா?'...'இடம்புரியா?' and 'பொன்னரைஞானும் பூந்துகிலாடையும்'.
பழைய பதிவுகளில் அவ்வளவா கவிதைகள் இல்லை; ஆனால் சில கவிதை "முயற்சிகள்" உண்டு!
வைரமுத்துவால் கவரப்பட்ட ஒரு தலைமுறையில் பிறந்த ஜந்துக்கள் - எப்படியாவது கவி எழுதுவது/முயற்சி செய்வது என்பது ஒரு கடமை மாதிரி முன்பு இருந்தது! சுஜாதா 1991-1994 இடைப்பட்ட காலத்தில் குமுதம் இதழ் ஆசிரியராக இருந்த போது புதிய விசைக் கவிதைகள் நிறைய அறிமுகம் செய்தார் (குமுதம் ஸ்பெஷல்-இல் நடுப்பக்க தாராள அழகிகளையும் அறிமுகம் செய்து மகிழ வைத்தார்!)....
.......அம்மாதிரி கவிதைகளில் - ந.மகுடேசுவரன், பசுவய்யா, தருமு சிவராமு, ப்ரமிள், கல்யாண்ஜி, ஞானக்கூத்தன், கலாப்ரியா, மனுஷ்யபுத்திரன் - என்று நிறைய படிக்கக் கிடைத்தது..இன்னும் அதில் சிலதை - பக்கங்கள் கிழித்து சேகரித்து என் வீட்டு மொட்டை மாடி பரணில் வைத்திருக்கிறேன் (ஆனால் தேடினால் அப்பம் நான் வாங்கியிருந்த ஒரு மேட்டர் புக்குதான் கெடைச்சது!)......
இதேபோல, கமல் பேட்டிகளை வெட்டி ஸ்டேப்ளர் போட்டு வைத்திருக்கிறேன்..அவருடைய "தேடித் தீர்ப்போம் வா" புத்தகம் கூட இருக்குது..ஒருமுறை அதை ஜோவுக்காக எடுத்து ஸ்கேன் பண்ணலாம்னு தேடினேன் - அது கெடைக்கலை! பழைய காதலி அனுப்பியிருந்த ஒரு க்ரீட்டிங் கார்டு! நேரில் கிடைக்காதது அதில் "ஒற்றி"...
கவிதை எழுதுவது, படிப்பது எல்லாம்போய் - முன்னாடி படிச்சதை நினைப்பதே ஒரு சுகானுபவமாகி விட்டது; "மேசை நடராசர்" என் நினைவில் இருந்து தேடி எடுத்ததுதான்! கூகுளாண்டவர் முழு கவிதையையும் கொடுத்து விட்டார்!
எப்போதாவது எனக்கு மீண்டும் கிடைக்கப் போகும் கவிதைகளை சேகரித்து வைத்திருக்கும் என் மொட்டை மாடிப் பரணுக்கு நன்றி..எப்போது கிடைத்தாலும் அந்த செல்லரித்த தாள்களில் என் பால்ய கால சந்தோஷமும் இருக்கப் போகிறது.
Bookmarks