நான் எழுதினால்தான் நீ எழுதுகிறாய்
தோழீ! உனக்கும் எனக்கும் வாய்த்தது
என்ன பொருத்தமோ? -- இதற்கு
என்ன அருத்தமோ?
நான் சிரித்தால் நீயும் சிரிக்கிறாய்,
தோழீ ! உன்னுள்ளம் எனதோடு
ஒன்று பட்டதோ?--சிரிக்காதபோது
நின்றுவிட்டதோ?
நான் அழுதுவிட்டால் நீயும் அழுதுவிடுவாயோ?
தோழீ! காரணம் தேவையில்லையோ?
அறியவும் ஆவலில்லையோ?
Bookmarks