-
19th September 2011, 12:17 AM
#11
Senior Member
Senior Hubber
மாயை தானா எல்லாம்
பெற்றவளின் மிச்சங்களைக்
கடலில் கரைத்துவிட்டு
வீடு வந்து குளித்து
கண்ணோரம் ஈரத்துடன்
திண்ணையில்
வெறித்து அமர்ந்தவனின்
வெற்று முதுகில்
ஒரு பிஞ்சுக் கரம் தொட
திரும்பினால் சிரிக்க
யார் வீட்டுக் குழந்தை..
தெரியவில்லை
வா வென்றால்
பயந்து பலத்து அழ..
ஒரு நொடியில் சிரிப்பு அழுகையாய்
மாறியது என்ன விந்தை..
இல்லை
இது தான் இயல்பு..
இது தான் வாழ்க்கை..
எல்லாம் நாட்பட மாறும்
மெல்லமெல்ல
கொஞ்சம்
நிலைக்கு வந்தது.. தேர்
-
19th September 2011 12:17 AM
# ADS
Circuit advertisement
Bookmarks