-
13th July 2011, 01:50 PM
#11
Senior Member
Seasoned Hubber
ஞாயிறு கொண்டாட்டம்
ஓவர்- ஆக்டிங் வாழ்க்கைக்கு ஒத்து வராது!
என் நிஜப்பெயர் ராஜேஸ்வரி. "சின்னக்காளை' என்ற படத்தின் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானேன். அந்தப் படத்தை இயக்கிய பாரதிமோகன் தான் என் பெயரை பூரணி என மாற்றினார். நேற்றுதான் நடிக்க வந்ததுபோல் இருக்கிறது. ஆனால் இருபத்தி ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. "தங்கராசு', "தாமரை', "டேக் இட் ஈஸி', "சத்தியம் அது நிச்சயம்' போன்ற பத்துக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறேன். திருமணத்துக்குப் பிறகு சின்னதிரையில் மட்டுமே நடித்து வருகிறேன். தற்போது "உறவுக்கு கைகொடுப்போம்' என்ற தொடரில் நடித்து வருகிறேன். என் கணவர் ரமேஷ் பாபு. குழந்தை சாய் ரக்சிதா யு.கே.ஜி படித்து வருகிறாள்.'' மேலும் தொடருகிறார் பூரணி
தமிழில் நடிக்க வந்து இவ்வளவு நாள் ஆகிறது இன்னும் தெலுங்கு கலந்து பேசுகிறீர்களே, தொடரில் நீங்கள் பேசுகிறீர்களா?
சாதாரணமாகப் பேசும்பொழுதுதான் சில நேரங்களில் தெலுங்கு கலந்து பேசிவிடுகிறேன். மற்றபடி தமிழ் நன்றாகவே பேசுவேன். அதுமட்டுமில்லாமல் தொடரில் பேசும்பொழுது ரொம்ப கவனமாக, சரியாகப் பேசிவிடுவேன். "சக்தி' தொடரில் நடிக்கும் பொழுது எல்லாம் தமிழ் அவ்வளவாக பேசமாட்டேன். பேப்பரில் என்ன எழுதி கொடுக்கிறாங்களோ அதை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்பித்துவிடுவேன். ஏதாவது தப்பாகப் பேசிவிட்டாலும் அதற்கு மாற்றாக என்ன பேச வேண்டும் என்று அப்பொழுது தெரியாது. ஆனால் இப்பொழுது கொஞ்சம் முன்னேறி நன்றாகவே தமிழ் பேசுகிறேன்.
இப்பொழுது பெரிய திரையில் படங்களின் வாய்ப்புகள் வருகிறதா?
நிறைய படங்களின் வாய்ப்புகள் வருகின்றன. படங்கள் ஒத்துக் கொண்டால் அவுட்டோர் போக வேண்டியது இருக்கும். என் குழந்தையை விட்டுவிட்டுப் போக முடியாது என்பதால் படங்களில் நடிக்க முடியவில்லை.
நந்தி விருது வாங்கியிருக்கிறீர்களாமே?
ஆமாம். தெலுங்கில் மௌலி சார் டைரக்ட் செய்து சின்னா ஹீரோவாக நடித்த "கின்னஸ் ரெக்கார்ட்' என்ற தொடரில் நடித்ததற்காக எனக்கு நந்தி விருது கிடைத்தது. பொதுவாக நான் நடித்த தொடர்களில் எல்லாம் அழுது கொண்டே இருப்பது போலத்தான் நடித்திருக்கிறேன். அந்தத் தொடரில்தான் முதன் முதலில் காமெடி கலந்த வேடத்தில் நடித்தேன். அந்தத் தொடருக்கு எனக்கு விருது கிடைத்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
தொடர்ந்து ஒவ்வொரு தொடரிலும் அழுவது போலவே நடிக்கும் பொழுது உங்களுக்கு சலிப்பு ஏற்படவில்லையா?
எந்த நடிகையாக இருந்தாலும் அடுத்தடுத்து நடிக்கும் தொடரில் வேறு வேறு வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். நானும் அப்படித்தான். ஆனால் என்ன செய்வது அழுவது போன்ற கேரக்டர்களே அமைகின்றன. சலிப்பு ஏற்படுவது என்பதைவிட ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்றால் தினமும் தொடர்களில் அழுது அழுது இப்பொழுதெல்லாம் கிளிசீரின் போட்டால் கூட அழுவதற்குக் கண்ணில் நீர் வருவதில்லை. அந்த அளவுக்குக் கண்கள் வற்றிவிட்டன. இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் அப்படி அழுது நடிக்கும் பொழுது அந்த கேரக்டருக்கு ஆதரவு நிறைய இருக்கும். அதனால் அழுவதனால் சலிப்பு ஏற்படுவதில்லை சந்தோஷமே கிடைக்கிறது.
கிட்டதட்ட இருபத்தி ஐந்து வருடங்களாக இந்தத் துறையில் இருக்கிறீர்கள். ஆனால் தற்பொழுது ஒரு சில நடிகைகள் வரும் பொழுதே ரொம்ப ஆர்பாட்டமாக வருகிறார்களே, அவர்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?
சினிமா, சீரியல் எதுவாக இருந்தாலும் சரி பந்தா இல்லாமல் இருந்தால்தான் நிலைத்து நிற்க முடியும். நாம யாருக்கும் தொந்தரவாக இல்லாமல் இருந்தாலே போதும். நம்மை தேடி நன்மைகள் பல வரும். இது சினிமாத்துறைக்கு மட்டும் என்பதில்லை வாழ்க்கைக்கும் பொருந்தும். சினிமாவில் ஓவர் ஆக்டிங் செய்தால் கட்பண்ணி தூக்கிவிடலாம். ஆனால் வாழ்க்கையில் ஓவர் ஆக்டிங் செய்தால் வாழ்க்கையே காணாமல் போய்விடும்.
Nandri. dinamani
-
13th July 2011 01:50 PM
# ADS
Circuit advertisement
Bookmarks