சஹான்ய என்ற சங்கதச் சொல்லினின்று "சேகர்" என்ற பெயர்
தோன்றியிருத்தல் கூடுமென்பது ஒரு கருத்து. சஹா - சேஹ - சேக
என்று திரிதல், அ > ஆ > ஏ திரிபுவிதியின்பாற் படும்.

அங்ஙனமாயின், சந்திர சேகர என்ற தொடருக்கு: நிலா
மலை என்று பொருள் கொள்ளவேண்டும்.

தமிழ்வழியில்் நோக்கின் இதற்குப் பொருள் யாது?