படுத்திய பாடு இருக்கிற்தே என
எதிர்வீட்டு ராமசாமி ஆரம்பித்தால்
விடமாட்டார்.
அவரது பழைய அலுவலகம், வீட்டில் மகன்,மருமகள்,
பேரன், பேத்தி,
பார்த்த படம் என
எல்லாவற்றையும் குற்றம் சொல்வார்..
ம் கொட்டிக் கேட்பேன்..
சில நாட்களாகக் கிழவரைக் காணோம்...
எங்கே எனக் கேட்டால்.
முதியோர் இல்லத்திலாம்..
“ரொம்ப்ப் படுத்தறார்ங்க’ என வந்தது பதில்...
Bookmarks