-
4th June 2009, 02:45 PM
#11
Veteran Hubber
அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே, அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும்,
களி ஆகி, அந்தக்கரணங்கள் விம்மி, கரைபுரண்டு
வெளியாய்விடின், எங்கனே மறப்பேன்,நின் விரகினையே?
அபிராமி தாயே! வண்டுகள் ஆர்க்கும் தாமரையில் வாழ்பவளே! பேரழகானவளே, உலகமெல்லாம் ஒளியாக நின்ற ஒளி வீசும் நின் திருமேனியை நான் நினைக்கும் போது களிப்படைகின்றேன். அக்களிப்பின் மிகுதியால் அந்தக் காரணங்கள் விம்மிக் கரைபுரண்டு, பரவெளியாகவுள்ள ஆகாயத்தில் ஒன்றி விடுகின்றன. இவ்வளவு பேரருள் காட்டியருளிய உன் தவநெறியை நான் எவ்வாறு மறப்பேன். மறவேன்.
aLi aar kamalaththil aaraNankE! akilaaNdamum nNin
oLiyaaka nNinRa oLir thirumEniyai uLLuthoRum,
kaLi Aki, anthakkaraNankaL vimmi, karaipuraNdu
veLiyaayvidin, eNGNGanE maRappEn, nNin virakinaiyE?
-
4th June 2009 02:45 PM
# ADS
Circuit advertisement
Bookmarks