-
8th October 2007, 01:35 AM
#1
Senior Member
Devoted Hubber
SANGAM LITERATURE PERIOD TAMILS
சங்க இலக்கியம் காட்டும் தமிழர் சமுதாயம்.
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம ஆன் துயில் எழிதல் அல்லதை,
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே. பரிபாடல்-திரட்டு 8:7-12
பூவினுள் பிறந்தோன்- பிரம்மா
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப- ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் முழக்கம் அந்தணர் ஓத
வஞ்சியும் -சேர தலைநகர்- வஞ்சி
கோழியும்- உரையூர்- சோழ தலைநகர்
கோழியின் எழாது- சேவல் கூவலில் எழ
பாண்டி நாட்டு தலைநகர் மதுரைவாசி சொல்கிறா: சேர தலைஅகர்- வஞ்சிவாழ் மக்களும், உரையூர் சோழ தலைநகர்வாழ் மக்களும் தினமும் அதிகாலை சேவல் கூவலில் எழுகின்றனர். நாங்கள் அதிகாலையில் அந்தணர் ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் ஓதும் முழக்கம் கேட்டு எழுகிறோம் என பெருமை கொள்கின்றார்.
பின்குறிப்பு: பாவணர் வழியோர்படி சங்கம், சமுதாயம் இரண்டும் சமஸ்க்ருத சொற்கள், அவற்றின் தமிழ் கழகம், குமுகாயம்.
-
8th October 2007 01:35 AM
# ADS
Circuit advertisement
Bookmarks