-
30th June 2020, 01:35 AM
#11
Senior Member
Devoted Hubber
மேன்மக்கள் என்றென்றும் மேன்மக்களே
""""""""""""""""""""""""""::::"""""""""""""""""""" :::"""""""""""""""
1990களில், எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் உடல் நலம் குன்றியிருந்த சமயம், அவரைக் காண, மனைவி கமலாவுடன் சிவாஜி, எம்.எஸ். அவர்களின் இல்லத்திற்குச் சென்றார். எம்.எஸ்., அவரது கணவர் சதாசிவம் ஆகியோரைக் கண்டு உடல் நலம் விசாரித்தார் சிவாஜி. கிளம்புவதற்கு முன், சிவாஜி சதாசிவத்தை நோக்கி, "எம்.எஸ். அவர்களை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். அவர் பூரண உடல் நலம் பெற வேண்டும். அவரது குரல் இந்த தேசத்திற்கே சொந்தம்" என்றார். அதற்கு சதாசிவம் சிவாஜியிடம்,"உங்களுக்கும் உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டேன். எங்களால் வந்து உங்களை பார்க்க முடியவில்லை. தவறாக எண்ண வேண்டாம். எம்.எஸ்.ஸின் குரல் மட்டும் தான் இந்த தேசத்திற்கு சொந்தம். ஆனால், உங்கள் உடம்பே இந்த நாட்டிற்கு சொந்தம். ஆகையால், உங்கள் உடம்பையும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார். மேன்மக்கள் என்றென்றும் மேன்மக்களே!
Thanks Anand Pandurankan
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
30th June 2020 01:35 AM
# ADS
Circuit advertisement
Bookmarks