-
29th January 2020, 03:07 PM
#11
Senior Member
Devoted Hubber
ஐஸ்வச்சா வரி தள்ளுபடி ஒருவருக்கு.ஆனால் எங்கள் சிங்கத்தமிழன் நேர்மை யாருக்கு வரும் #வருமான_வரி_சிவாஜியின்_நேர்மை.
1980 - சிவாஜிக்கு காங்கிரஸில் 5 MP தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது. திருச்சி, கரூர், கோவை, ஈரோடு, தென் சென்னை தொகுதிகளில் சிவாஜி சிபாரிசு செய்யும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகின்றனர். அனைவரும் வெற்றியும் பெறுகின்றனர். அதில் தென் சென்னையில் வென்ற திரு.R.வெங்கட்ராமன் அவர்கள் மத்திய நிதி அமைச்சராக பொறுப்பேற்றார்.
சிவாஜியின் வரவு செலவுகளை அவரது தம்பி சண்முகம் பராமரித்து வந்...தார். ஒரு நாள் அவரது தணிக்கையாளர் சிவாஜியிடம் வந்து வருமான வரி தாக்கல் செய்ததில் சிறு தவறு நடந்து விட்டது. நம்ம வெங்கட்ராமனுக்கு ஒரு போன் செய்தால் போதும் சரி செய்து விடலாம் என்கிறார். கோபத்தின் உச்சிக்கே சென்ற சிவாஜி நீங்கள் செய்த தவறுக்கு நான் அவரிடம் கெஞ்ச வேண்டுமா! அதோடு அவர் எனக்கு அமைச்சரல்ல. இந்த நாட்டிற்கு நிதி அமைச்சர். கட்சிகாரங்கிற உறவெல்லாம் தேர்தலோடு முடிஞ்சிப் போச்சி. தவறு செஞ்சது நீங்கள்தான் அபராதத்தை கட்டித் தொலையுங்க! தம்பி இன்னொரு தடவை தப்பு நடந்துச்சி அபராத தொகையை இவனுங்க சம்பளத்திலே பிடிச்சு கட்டிடு என்று கத்திவிட்டு ஷுட்டிங்சென்று விட்டார்.
(திருச்சி தமிழ் சங்கத்தில் நடைபெற்ற "நடிகர் திலகம் ஒரு நேர்மையாளர்" நிகழ்ச்சியில் திரு.வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் உரையிலிருந்து).
நன்றி Vijay Rai Kumar.
..............................................
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
29th January 2020 03:07 PM
# ADS
Circuit advertisement
Bookmarks