-
20th August 2016, 06:32 AM
#11
Junior Member
Platinum Hubber
யாருக்கு வெற்றி?
நாடோடி மன்னன் படத்தின் வெற்றியை ஒட்டி ஒரு மலரைக் கொணரவேண்டுமென்றும், அதில் நானும் என் மனத்தின் அடித்தளத்தில் வைத்துப் பாதுகாக்கும் உண்மைகளில் சிலவற்றை எழுதவேண்டு மென்றும் கூறப்பட்ட நேரத்தில் , எழுதி விட்டால் போகிறது என்று தான் எண்ணினேன் அலட்சியமாக.
ஆனால் எழுத வேண்டுமென்று முடிவு செய்து பேனாவையும் கையில் எடுத்த பிறகுதான் நான் ஏற்றுக்கொண்ட (எழுதும்) பொறுப்பு எனக்குத் தொல்லையைத்தான் தரும்,வெற்றியைத் தராது என்று அறிந்தேன், ஏனெனில் எதை எழுதலாம், எதை மறைத்துவிடலாம், யார் யார் சம்பந்தப்பட்டதை வெளிவிடலாம், நீக்கிவிடலாம், என்ற கேள்விகளுக்கு விடை காண முடியாமல் குழப்பமடைந்த போது தான் மேலே சொன்ன உண்மை புரிந்தது. ஆயினும் பொறுப்பேற்ற பின் எப்படிப் பின்னிடுவது
.
யாருக்கும் மனச் சோர்வோ கோபமோ வருத்தமோ வெறுப்போ தோன்றாதபடி எழுதுவது என்று முடிவுக்கு வந்து எழுத ஆரம்பித்தேன்.
தலைப்பு ஏதாவதொன்று கொடுத்தாக வேண்டுமே?
பொங்கியெழும் அலைகள் போலப் பல நினைவுகள் ஒன்றோடொன்று தொடர்ந்து பின்னியவாறு எழுந்தன.
ஆம் !
படமெடுத்துக் கொண்டிருந்த காலத்தில் பலரால் தொல்லை ஏற்பட்ட போது அவர்களிடம், படம் முடியட்டும், உங்களைப்பற்றியெல்லாம் நான் படமெடுத்த கதை என்ற தலைப்பில் எழுதுகிறேன் என்று வேடிக்கையாகச் சொன்னேன்.
அது நினைவிற்கு வந்தது. ஆகவே நான் படமெடுத்த கதை என்ற தலைப்பிலேயே எழுதிவிடலாமா என்று யோசித்தேன். அது சரியாகப்படவில்லை.
வெற்றி மலருக்கு எழுதச் சொன்னால் , நடிகன் குரலில் வெளி வரவேண்டிய எனது கதையை (கதையென்றதும் கற்பனை என்று எண்ணிவிடாதீர்கள் ! ) இதில் வெளியிடுவது சரியல்ல என்று தோன்றிற்று.
பல தலைப்பு வேண்டுமே?
பலமான சிந்தனைப் போராட்டத்திற்குப் பின் கடைசியாக என் மனத்திற்குத் திருப்தி அளித்த ஒரு தலைப்பு கிடைத்தது
.
யாருக்கு வெற்றி என்பதுதான் அது.
நாடோடி மன்னனுக்கு வெற்றி என்கிறார்கள்.
நாடோடி மன்னன் படத்திற்கு வெற்றி
கதை அமைப்பிற்கு வெற்றி
வசன கர்த்தாவுக்கு வெற்றி
பாடலாசிரியர்களுக்கு வெற்றி
இசை அமைப்பாளர்களுக்கு வெற்றி
ஒளிப்பதிவாளர்களுக்கு
ஒலிப்பதிவாளர்களுக்கு-
ஒப்பனையாளர்களுக்கு-
உடை அமைப்பாளர்களுக்கு
வெட்டி ஒட்டி இணைப்பவர்களுக்கு (எடிட்டிங்)
மற்ற தொழிலாளர்களுக்கு
நடிகர், நடிகைகளுக்கு
இயக்குநர்க்கு
அடிப்படைக் கொள்கைக்கு
இப்படிப் பலரும் சொல்லுகிறார்கள், எழுதுகிறார்கள்.
இவைகளைப் பற்றி நான் என்ன சொல்வது என்று சிந்தித்த போதுதான் யாருக்கு வெற்றி? என்று தலைப்பில் எழுதுவது மிகவும் சரியானது என்ற முடிவிற்கு வந்தேன்.
நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர் எழுதிய புத்தகம்
-
20th August 2016 06:32 AM
# ADS
Circuit advertisement
Bookmarks