-
14th June 2015, 09:20 AM
#11
Senior Member
Diamond Hubber
நன்றி ராகதேவன். என்ன ஒரு அருமையான பாடல்! இப்பாடல் பற்றி பாலா தொடரில் விரைவில் வரும்.
இருந்தாலும் மனம் கேட்கவில்லை
நீ உறவுக்கு உதவிடும் சரசாங்கி
இன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி
குரல்வழி பிறந்தது ஹம்சத்வனி
உன் தாலாட்டில் விளைந்தது நீலாம்பரி
நான் வாவென அழைக்கையில் விரைந்'தோடி'
வந்து தழுவிடும் தேவ மனோகரி
ஆ(யா)ரபிமனமும் தேவையில்லை
இந்த அகிலத்தில் உன் போல் பாவை இல்லை
நீ எனக்கே தாரம் என்றிருக்க
உனை என் வசம் தாவென நான் கேட்க
என் நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்சனியே
இந்த நாயகன் தேடிடும் நாயகியே
ராகத்தின் பெயர்களைக் கொண்டு அருமையான ராகத்தில் ரகளை பாட்டு ராகதேவன் சார். அளித்ததற்கு மீண்டும் நன்றி!
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
14th June 2015 09:20 AM
# ADS
Circuit advertisement
Bookmarks