என்றோ உள் அமிழ்ந்த
நினைவு விதைகளை
ஒவ்வொன்றாய்
துளிர்க்க வைத்து
நெஞ்சம் கீறி
மேலெழுப்புகிறது
நில்லாமல் பெய்யும் மழை..!

-- சண்முக வடிவு