Results 1 to 10 of 11

Thread: இடி....

Threaded View

  1. #1
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like

    இடி....

    இடி

    சின்னக் கண்ணன்

    (பல வருடங்களுக்கு முன் எழுதியது..திண்ணையில் வெளியானது..)

    *****************************
    (மேடை அமைப்பு: நான்கு தூண்கள் சற்றே நடுவில் இருப்பது போல வைத்துக் கொள்ளலாம். பின்புலத்தில் பாழடைந்த மண்டபம் போல வரைந்திருக்கலாம்..இன்னும் சில தூண்கள் இருப்பது போல்..சற்றே மங்கலான வெண்ணிற ஒளி எல்லா இடங்களிலும் படர்ந்து இருக்க வேண்டும்)

    (காட்சி ஆரம்பிக்கும் போது இடது பக்க மூலையிலிருந்து ஒரு ஆண், ஒரு பெண் வருகிறார்கள். ஆணின் உடை வேஷ்டி,கொஞ்சம் பளபளா மேல்சட்டை ; பெண் சேலையுடுத்தி இருக்கிறாள்..சில பல ஆபரணங்கள் அணிந்து இருக்கிறாள். இருவரையும் உற்றுப் பார்த்தால் இந்தக் காலத்து ஆசாமிகள் போலத் தெரியவில்லை.. அட...ஆமாம்..
    இது சரித்திர நாடகம்!)

    (ஆணின் பெயர் விஜயன்; பெண்ணின் பெயர் கலாராணி)
    கலாராணி: (இ.ப.மூவிலிருந்து முதல் தூணின் அருகில் நின்று) அப்பாடி.. நல்ல வேளை..

    விஜயன்: (அவள் அருகில் வந்து நின்று) என்ன சொல்கிறாய் ராணி.. எது நல்ல வேளை..

    கலாராணி: இது கூடத் தெரியவில்லையா..வெளியில் பார்த்தீர்களா..வானமெங்கும் மேக மூட்டமாக இருக்கிறது..காற்றும் சுழன்றடிக்கிறது.. மழை எந்த நேரத்திலும் பெய்யும்.. அதற்குள் தங்குவதற்கு இந்த மண்டபம் கிடைத்ததே..

    விஜயன்: ஆமாம் ராணி..காற்றில் கூட மெல்லிய ஈரம் கலந்திருக்கிறது.. நல்ல மழை எந்நேரத்திலும் வரலாம்..

    கலாராணி: இது எந்த ஊர் ?

    விஜயன்: இங்கிருந்து இன்னும் ஒரு காதம் சென்றால் ராஜகிரி என்ற ஊர் வரும்..

    கலாராணி: அங்கிருந்து குடந்தை..எவ்வளவு நேரம் ஆகும்..

    விஜயன்: என்ன இப்படியே நடக்க ஆரம்பித்தால் ஒரு ஜாமத்தில் போய் விடலாம்..ராணி.. போவதைப் பற்றி என்ன பேச்சு இப்போது...அழகாய் இங்கு தங்கிவிட்டு காலை செல்லலாம்..(அருகில் வந்து) ராணீ...ராணிக்குட்டி..ராணிப் பட்டூ.....

    கலாராணி: ம்ம்.. என்ன ராணிக்கு....

    விஜயன்: ராணி... வானம் முழுக்க சூழ்ந்திருக்கும் இந்தக் கருமேகத்தைப் பார்க்கும் போது...உனது அழகு விழிப்பாவையின் கருமை அதற்கில்லையே என நினைக்கத் தோன்றுகிறது.. அவ்வப்போது மேகத்தைத் துளைத்து வரும் நட்சத்திரங்கள் தான் உனது வெள்ளை விழிப் படலமோ... அட.. இன்னும் கொஞ்ச நேரத்தில் மின்னலும் வரும்...ஆனால் அது உனது புன்சிரிப்பின் முன்னால் ஒளி மங்கிவிடும்..தெரியுமா..

    கலாராணி: (வெட்கத்துடன்) ரொம்ப மோசம் நீங்கள்...ஒரு தனியிடம் கிடைத்து விட்டதென்றால் போதும். அழகை வர்ணிக்கிறேன் பேர்வழி என்று என்னிடம் நாடக வசனம் பேச ஆரம்பித்து விடுவீர்கள்..

    விஜயன் (ஆச்சர்யத்துடன்): அதெப்படி ராணி உனக்குத் தெரியும் ?

    கலா: எது ?

    விஜயன்: நான் பேசியது நாடக வசனம் என்று.. தஞ்சையில் இரு நாட்கள் முன்னால் அரண்மனை வாசலில் ஒரு நாடகம் பார்த்தேன்.. அதில் வருவது தான் இது.. ஒரு வேளை.. நீயும் அதைப் பார்த்தாயா..
    கலாராணி: அது தானே பார்த்தேன்.. நீங்களாவது சொந்தமாய்ப் பேசுவதாவது.. எனது தாய் தந்தையை நினைத்தால் தான் கவலையாக இருக்கிறது.

    விஜயன்: இதில் என்ன கவலை ராணி.. நானும் நீயும் திருமணம் செய்வது என முடிவெடுத்து விட்டோம்.. அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை..குடந்தையில் இருக்கும் என் மாமன் வீட்டிற்குச் சென்று அங்கிருந்து நாளை மறு நாள் சாரங்கபாணி கோவிலில் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம்..இந்தக் கவலை எல்லாம் விடு...

    (வெளியில் காற்று சுழன்றடிக்கும் சப்தம்...கூடவே சடசடவென மழை பெய்யும் சப்தம்)

    கலாராணி: கொஞ்சம் வெளிச்சம் இருந்தால் நன்றாக இருக்கும்..இந்த நிலவொளியும் ஆங்காங்கே தான் தெரிகிறது..

    விஜயன்: ராணி, இந்த மழை நேரத்தில் தீப்பந்தத்திற்கு நான் எங்கே போவேன்.. அதுவும் உன்னைத் தனியாக விட்டு விட்டு..

    கலாராணி: நீங்கள் எங்கும் போக வேண்டாம் (இடுப்பிலிருந்து ஒன்றை எடுக்கிறாள்) இவை இருக்கின்றன்..

    விஜயன்: என்ன அது ? வீட்டில் இருந்து கொண்டுவந்த அதிரசமா..கொடு..கொடு..

    கலாராணி: ச்..அதெல்லாம் இல்லை..சிக்கி முக்கிக் கற்கள்..இதை வைத்துக் கொஞ்சம் நெருப்பை வரவழைப்போம்..நீங்கள் அந்த சுள்ளிகளை இங்கு போடுங்கள்..

    (சற்று நேரத்தில் சுள்ளிகள் எரிவதைக் காட்டுவதற்கு..அரங்கில் அவர்கள் பக்கம் வெளிச்சம் கூடுகிறது)

    கலாராணி: ஸ்.. அப்பா... நல்ல மழை பெய்ய ஆரம்பித்து விட்டது...கொஞ்சம் குளிருகிறது..

    விஜயன்: (காதலுடன்) ராணி... அருகில் வாயேன்...

    கலாராணி: (அருகில் வந்து) ம்ஹீம்.. வரமாட்டேன்...

    விஜயன்: ஏன் செல்லம்..

    கலாராணி: போங்கள்... எனக்குப் பசிக்கிறது.. கால்களும் வலிக்கின்றது...ஆனாலும் நீங்கள் மோசம்..

    விஜயன்: இன்னும் தொடக் கூட இல்லையே ராணி, நான் என்ன செய்து விட்டேன்..

    கலாராணி: தஞ்சையில் இருந்து புறப்பட்டு வரும்போது கருந்தாட்டாங்குடியில் போயும் போயும் ஒரு குதிரை வாங்கினீர்களே..குதிரையா அது...சரியான கழுதை..

    விஜயன்: அந்தப் பையனைப் பார்த்தால் கஷ்டமாக இருந்தது..நான்கு பொன் என்பது கூடுதலான விலை தான்.. அரபு நாட்டுக் குதிரை.. அப்பா ஆசையாய் வளர்த்தது, போரில் மடிந்து விட்டார்..கஷ்ட ஜீவனம்..அது இது என்றான்..சரி என்று வாங்கினேன்..ஆனால் பாவி..ஏமாற்றி விட்டான்...

    கலாராணி: அரபுக் குதிரையா என்ன.. உள்ளூர்க் கழுதை கெட்டது..பாதி வழியிலேயே படுத்து விட்டது...சே...அதன்பிறகு இவ்வளவு நடக்க வேண்டியதாகி விட்டது...ம்ம்..உங்களைக் கல்யாணம் செய்து கொள்ளும் முன்னமேயே நான் கஷ்டப் படுகிறேன்..

    விஜயன்: இனிமேல் கஷ்டமே கிடையாது...

    (மழையின் சத்தம் கொஞ்சம் வலுக்கிறது.. ஒரு மாட்டுவண்டியின் ஜல்..ஜல்.. ஒலி..ஹேய்..ஓய்.. என்ற சப்தம்..வண்டி நிற்கும் ஒலி

    மருதவாணர் தலையில் துண்டு போட்டு உள்ளே வருகிறார்..உடன் அவரது மனைவி அம்சவேணி, சிறுவன் சுந்தரன். கலாராணியையும் விஜயனையும் ஒரு பார்வை பார்த்து விட்டு இரண்டு மற்றும் மூன்றாவது தூணிற்கருகில் நிற்கிறார்கள்)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •