என்றென்றும் மறக்க இயலாத 'எங்கமாமா' காவியப் பாடல்கள் (மிகத் தெள்ளத் தெளிவாக)
கொள்ளை அழகு கொஞ்சும் கோமகனின் கோமேதகப் பாடல்கள்.
crystal clear ஆக எங்க மாமா காவியத்தின் பாடல்களை மிக அழகாவும், நேர்த்தியாகவும் சமீபத்தில் தரவேற்றி நம்மை சந்தோஷத்தில் மிதக்க வைக்கும் ராஜ் வீடியோ விஷனுக்கு நமது திரியின் சார்பில் உளம் கனிந்த நன்றி!
"நான் தன்னந்தனிக் காட்டு ராஜா... என் தோட்டத்தில் எத்தனை ரோஜா"...
'சந்திப்பு' திரைப்பட அனுபவத்தைப் பதித்ததைத் தொடர்ந்து, அத்திரைக்காவியம் வெளியான கடலூர் முத்தையா தியேட்டரின் இன்றைய நிலையையும் பல்வேறு கோணங்களில் படம் பிடித்து, அவற்றை சுடச்சுட இங்கே பதிவிட்டு தங்கள் முந்தைய பதிவுக்கு மேலும் சிறப்பு சேர்த்து விட்டீர்கள். அத்திரையரங்கின் இன்றைய கோலம் தங்களைப்போலவே எங்களையும் வருத்தமுறச்செய்தது. (பொதுவாக எங்காவது ஒரு தியேட்டர் மூடப்படுகிறது, இடிக்கப்படுகிறது என்றால் , அது நான் இதுவரை கண்டிராத தியேட்டராக இருந்தாலும், என் மனது வலிக்கும். ஒரு தியேட்டர் மூடப்படுகிறது என்றால், திரையுலக பொற்காலத்தின் ஒரு ஏடு கிழிக்கப்படுகிறதென்று அர்த்தம்). அந்த வகையில், சென்னையில் நாங்கள் படம் பார்த்து மகிழ்ந்த முக்கால்வாசி தியேட்டர்கள் இப்போது இல்லை.
சென்னையில் நடிகர்திலகத்தின் கோட்டைகளாக விளங்கிய சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி அரங்குகளில் இப்போது சாந்தி மட்டும்தானே இருக்கிறது. மற்ற இரண்டு கோட்டைகளும் இப்போது இல்லையே. அதிலும் சாந்தியை விட அதிகமாக நடிகர்திலகத்தின் படங்கள் வெளியான ( சாந்திக்கு முன் சித்ரா, கிரௌன், சயானி காம்பினேஷனிலும் கிரௌன் இருந்தது) வடசென்னை மிண்ட் ஜங்க்ஷன் 'கிரௌன்' தியேட்டர், எங்கள் கண்ணெதிரிலேயே இடித்து தரை மட்டமாக்கப்பட்டபோது எங்கள் மனம் என்ன பாடுபட்டிருக்கும். அந்தத்திரையரங்கினுள் அமர்ந்து எத்தனை படங்களைக் கண்டு களித்திருப்போம். எவ்வளவு வாழ்த்தொலிகள் முழங்கிய இடம் அது.
அதுபோல புரசைவாக்கம் 'புவனேஸ்வரி' அரங்கும். இடிக்கப்படுவதற்கு முன் அப்பகுதி வழியாகச்செல்ல நேர்ந்தபோது, தியேட்டர் மூடப்பட்டு பல காலம் ஆகியிருந்ததால் பாழடைந்து பிரதான நுழைவாயில் உள்பட பட இடங்களில் புதர்கள் மண்டிக்கிடந்தது. எவ்வளவு பொலிவுடன் அந்த ஏரியாவுக்கே அழகு சேர்த்த அரங்கம் அது. அதன் நிலையைப்பார்த்து கண்ணீர் விட்டபடியே சென்றேன். இப்போது அதுவும் இடிக்கப்பட்டுவிட்டதாக கேள்விப்பட்டேன். அதுபோல மற்ற கோட்டைகளான திருச்சி பிரபாத் அரங்கும், மதுரை நியூ சினிமா அரங்கும் கூட இப்போது இல்லை.
மன்னர்கள் மறையும்போது அவர்கள் ஆட்சி செய்த கோட்டைகளை விட்டுச்செல்வது வழக்கம். நமது மன்னரோ கோட்டைகளையும் தன்னோடு எடுத்துச்சென்று விட்டார்.
கடலூர் முத்தையா தியேட்டர் நினைவுகளைப் பதிவு செய்து, எங்களின் பழைய நினைவுகளையும் கிளரிவிட்டீர்கள்.
திரு.கார்த்திக் அவர்கள் குறிப்பிட்டதுமாதிரி, புவனேஸ்வரி, மேகலா, பாரகன், பிளாசா போன்ற திரையரஙகங்கள் இருந்த பகுதிகளைக் கடந்து செல்லும்போது, நமது எண்ணங்கள் எங்கோ செல்கிறது.
Bookmarks