Page 164 of 305 FirstFirst ... 64114154162163164165166174214264 ... LastLast
Results 1,631 to 1,640 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #1631
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    [QUOTE=RAGHAVENDRA;964376]டியர் சாரதி,
    மறக்க முடியாத மற்றொரு பாடல் - படம் - நெஞ்சிருக்கும் வரை. கிட்டத் தட்ட இந்தப் பாடலின் பெரும் பகுதி படப் பிடிப்பைப் பார்த்த நினைவுகள் இன்றும் பசுமையாக உள்ளது. காலையில் துவங்கி மதியம் வரை நடைபெறும் படப்பிடிப்பில் மக்கள் கூட்டத்தை மிகவும் சிரமப் பட்டு கட்டுப் படுத்த போலீஸ் முயன்ற போது, நடிகர் திலகம் தன் வேண்டுகோளின் மூலம் அந்தப் படப்பிடிப்பை சுமுகமாக நடக்க வைத்த சாதுர்யம் மறக்க முடியாது. காலையிலேயே பெருமளவில் மக்கள் கூட்டம். அப்போதெல்லாம் நாங்கள் கடற்கரையில் காலையில் விளையாடும் வழக்கம் உண்டு. இந்தக் காட்சியிலேயே நீங்கள் கவனிக்கலாம். ஒரு கட்டத்தில் மணலுக்கு முன்புறம் இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் காட்சி இதில் வரும். வி.கோபால கிருஷ்ணன் முத்து ராமன் இருவரும் மிகச் சிறந்த கலைஞர்கள். அதில் சந்தேகம் இல்லை. இருந்தாலும் இந்தப் பாடல் காட்சியில் அவர்கள் நடிகர் திலகத்திற்கு ஈடு கொடுக்க முடிய வில்லை என்பதை நாங்கள் கண் கூடாகப் பார்த்தோம். அதுவும் அந்த மக்கள் கூட்டத்தில் நிறைய பேர் எம்.ஜி.ஆர். அவர்களின் ரசிகர்கள் இருந்தார்கள். அவர்களே வியந்து போனார்கள் என்ற அளவிற்கு நடிகர் திலகத்தின் திறமை பளிச்சிட்டது. பாடலில் காலணி இருக்காது. ஒரு கட்டத்தின் போது காலணியுடன் மூவருமே நடந்து விட்டார்கள். அது படமும் பிடிக்கப் பட்ட போது நடிகர் திலகம் திடீரென அதனை நிறுத்தச் சொல்லி விட்டு தன் காலில் வெயில் உரைக்க வில்லையே என காலைப் பார்த்து செருப்பினைக் கழட்டி விட்டு மீண்டும் நடநது வந்தார். அடிக்கடி டேக் எடுக்க வேண்டி வந்ததால் [காரணம் நடிகர் திலகமல்ல] ஷாட் எடுக்கும் போது வெயில் வந்து விடும். அந்த சுட்டெரிக்கும் வெயிலில் வெறும் காலுடன் நடந்து பாடல் முழுவதையும் மூவரும் நடித்து கொடுத்தது பாராட்டத் தக்கது. சாலையில் கடற்கரை ஒட்டிய நடைபாதையை ஒட்டிய பகுதி படப்பிடிப்பிற்காக ஒதுக்கப் பட்ட போது வாகனங்கள் அதனை ஒட்டிய பகுதியில் சாலையில் கடந்து சென்றன. அதனை மிகவும் திறமையுடன் காவல் துறையினர் ஒழுங்கு படுத்தித் தந்தது பிரமிக்கத் தக்க கடமையுணர்வாகும்.

    It must had been a privilege to watch NT in action! I missed that opportunity in my life. You are really lucky! But please mention the good memories of NT only.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1632
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    [QUOTE=Pappimma KP;964066]வணக்கம். இது தான் நான் இங்கு முதல் முறை போஸ்ட் செய்வது. அந்த strangers in the night வீடியோ செய்தது நான் தான். ஆனால் மன்னிக்க வேண்டும், அது சிவாஜிக்காக செய்ததில்லை, ????பத்மினிக்காக செய்தது. I'm a huge Padmini fan. இது என் பத்மினி blog - http://athousanddances.posterous.com.

    The video fits well with Frank Sinatra's song, fantastic! But the comment about NT in the blog will certainly not make NT fans happier. On that blog, you have mentioned that NT over acted just because he wanted to look better than his co-stars (or something like that). That is absolutely wrong. Everybody knows that NT always encouraged his co-stars and even went out of the way to advise them, giving acting tips to make the shot good. What Padmini mentioned in the interview that NT and her tried to outperform each other, was only in a sense that they wanted to give their best, not as a competition. No matter who he acted with, he performed as he always did; brilliantly. He acted with his piers like Banumathi, Kannamba, MRR, etc...too as well as Radha, Ambika and Vijay. Did he have to overact with them too? sounds ridiculous to me.

  4. #1633
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் பார்த்தசாரதி சார்,

    பாடல் ஆய்வுத் தொடர் மூலம் தொடர் சந்தோஷங்களை அள்ளி வழங்கி வருகிறீகள். 'நல்லவன் எனக்கு நானே நல்லவன்' அனுபவித்துக் கொண்டிருக்கும் போதே மற்றுமொரு பம்பர் லாட்டரி. நெஞ்சிருக்கும் எங்களுக்கு நினைவிருக்கும் வரை மறக்க முடியாத பாடல். அதன் பின்னணியை அற்புதமாக ஆய்வு செய்யும் தங்கள் பா(ப)ணி... பாடலில் நடிகர் திலகம் புரியும் அட்டகாசங்கள் தங்கள் வைர வரிகளில் ஜொலிக்கும் அற்புதம்... அனைத்தும் படு ஜோர். உள்ளத்தில் நுழைந்து என் ஊனில் ஊடுருவிய பாடல். அத்தகைய பாடலின் ஆய்வு அதுவும் தங்கள் எழுத்துக்களில் என்றால் கேட்கவும் வேண்டுமோ! நன்றிகள் பல.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #1634
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள பார்த்தசாரதி சார்,

    சீக்கிரமாக அடுத்த பாடல் பதிவைத் தாருங்கள் என்று நாங்கள் கேட்டது உண்மை. அதற்காக இவ்வளவு சீக்கிரம் தருவீர்களென்று எதிர்பார்க்கவேயில்லை. எதிர்பாராமல் அள்ளித்தருபவர்கள்தானே நம் அன்பர்கள்.

    நெஞ்சிருக்கும் வரை திரைப்படத்தின் அனைத்துப்பாடல்களும் தேன் சொட்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. முத்துக்களோ கண்கள், பூமுடிப்பாள் இந்தப்பூங்குழலி, எங்கே நீயோ நானும் அங்கே, கண்ணன் வரும் நேரமிது, நினைத்தால் போதும் பாடுவேன், நெஞ்சிருக்கும் எங்களுக்கு என அனைத்துமே அட்டகாசமான, வெவ்வேறு வடிவங்களைக்கொண்ட பாடல்கள். அவற்றில் முதலிரண்டு பாடல்களூம் அனைவராலும் அடிக்கடி சிலாகிக்கப்படும் பாடல்கள் என்பதால் யாரும் அதிகம் தொடாத பாடலான 'நெஞ்சிருக்கும் எங்களுக்கு' என்ற பாடலைத் தேர்ந்தெடுத்து அலசியிருக்கிறீர்கள். வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை நடிகர்திலகத்தின் மூவ்மெண்ட்டுகளைக் குறிப்பிட்டு ஆய்ந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    வழக்கமாக இம்மாதிரி வெளிப்புறங்களில் படமாக்கப்படும் பாட்ல்களை, இயக்குனர்கள் பாதிப்பாடலுக்கு மேல் ஸ்டுடியோக்களில் 'பேக் ப்ரொஜக்ஷன்' முறையைப் பயன்படுத்தி, நடிப்பவர்களை இடுப்புக்கு மேல் காண்பித்து ஒப்பேற்றுவார்கள். ஆனால் பெர்ஃபெக்ஷனிஸ்ட் ஸ்ரீதர் அப்படிச்செய்யவில்லை. பாடல் முழுவதிலும் மூவரையும் பீச்ரோட்டில் ஆடல் பாடல்களுடன் நடக்கவைத்து முழுப்பாடலையும் இயற்கையாகவே எடுத்துள்ளார்.

    நேற்றுமாலை, இப்பாடல் பதிவிடப்பட்ட சிறிது நேரத்திலேயே படித்து விட்டேன். உடனே பதில் பதிவிட முடியாததற்கு இரண்டு காரணங்கள். ஒன்று நேரமின்மை (அவசரமாக வெளியில் செல்ல வேண்டியிருந்தது). இன்னொன்று சிறிது மன வருத்தம். அதாவது...

    இதே போல இசைஞானி இளையராஜா அவர்களின் பாடலொன்றை ஒருவர் ஆய்வு செய்திருந்தால் குறைந்த பட்சம் பத்து இடங்களிலாவது இளையராஜா பெயர் இடம் பெற்றிருக்கும். ஆனால் நேற்று பவர் கிளாஸ் போட்டுத் தேடியும், என்னிடமிருக்கும் பெரிய பூதக்கண்ணாடியை வைத்துத்தேடியும் ஒரு இடத்தில்கூட அந்த பாவப்பட்ட மனுஷன் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.யின் பெயரைக்காணவேயில்லை. (நெஞ்சிருக்கும் வரை படத்துக்கு பாடல்கள் ஒரு பெரிய பலம் என்பதையும், பாடல்களுக்காகவே பலர் திருப்பித்திருப்பிப் பார்த்தார்கள் என்பதையும் மறுக்க முடியாது).

    மத்திய அரசிலிருந்து, அவர் பாடல்களை ஒளிபரப்பும் டிவி காம்பியர்களிலிருந்து, டிவிக்களில் பேட்டி கொடுக்கும் வி.ஐ.பி.க்களில் இருந்து, இன்னும் பலரும் அவர் பெயரைக்குறிப்பிட்டு அவருக்குரிய 'கிரடிட்'டைக் கொடுக்க மறுக்கிறார்களென்றால் நீங்களுமா என்று எண்ணி வியந்தேன். நடிகர்திலகமும் மற்றவர்களும் இப்பாடலில் துள்ளல்நடை போடுகிறார்களென்றால் அதற்கு முழுமுதல் பக்கபலம் மெல்லிசை மன்னர் அள்ளித்தந்த அந்த துள்ளல் இசை மற்றும் மெட்டு அல்லவா?.

    இன்று காலை மீண்டும் பதிவைப்படித்தபோது 'ஒரு இடத்தில்' மெல்லிசை மன்னரின் பெயர் செருகப்பட்டிருந்ததைக் கண்டேன். தானாக சேர்க்கப்பட்டதா அல்லது யாரும் சுட்டிக்காட்டியபின் சேர்க்கப்பட்டதா என்பது தெரியவில்லை.

    அடுத்த முறையாவது 'சாபம்' வாங்கி வராமல், 'வரம்' வாங்கி வா விஸ்வநாதா.

  6. #1635
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    பார்த்தசாரதி சார் ஆய்வு செய்தபின் அப்பாடலை பார்க்காமல் விட்டு விடுவோமா என்ன! அப்போதுதானே அப்பாடலின் சிறப்பம்சங்கள் இன்னும் நமக்குத் தெரியும்... புரியும். இதோ ரசிக்கத் தயாராவோம்.

    நடிகர் திலகமே தெய்வம்

  7. #1636
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு கார்த்திக் சார்,

    "நெஞ்சிருக்கும் வரை' பாடல் வீடியோவில் தங்களுக்காகவே மெல்லிசை மன்னரின் பெயரை பச்சை வண்ணத்தில் மேலேயும், பாடகர் திலகத்தின் பெயரை மஞ்சள் வண்ணத்தில் கீழேயும் வாட்டர் மார்க் செய்து ஒரு புண்ணியவான் அப்லோட் செய்துள்ளார் போலும். இப்போது தங்கள் மனம் சற்று அமைதி பெற்றிருக்கும் என நம்புகிறேன். எங்கே நீங்களோ நானும் அங்கே உங்களோடு.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #1637
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் புகழ் பெற்ற 'நெஞ்சிருக்கும் வரை' போஸ். 'என்ன' போஸ்!

    நடிகர் திலகமே தெய்வம்

  9. #1638
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு முரளி சார்,

    தங்கள் 'துணை'யான அன்புப் பாராட்டிற்கு மிக்க மிக்க நன்றி!
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #1639
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைக் காட்சிகள் (வீடியோ தொடர்) 7.

    படம்: எங்கள் தங்க ராஜா

    வெளிவந்த ஆண்டு: 1973

    தயாரிப்பு: V.B.ராஜேந்திர பிரசாத் (ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ்)

    சண்டைப்பயிற்சி: A.D.வெங்கடேஷ், M.K.சாமிநாதன்




    சண்டைக்காட்சியின் அட்டகாசமான நிழற்படங்கள் சில.









    இந்த அற்புதமான சண்டைக்காட்சியை 'வியட்நாம்' கோபால் சாருக்கு ஆனந்தத்தோடு சமர்ப்பிக்கிறேன்.

    எங்கள் தங்க ராஜாவில் பட்டாக்கத்தி பைரவனின் புகழ்க்கொடி நாட்டிய மோட்டார் பைக் காட்சியையும் இந்த சண்டைக்காட்சியுடன் இணைத்துள்ளேன். பைரவனின் அமர்க்களம் உலகிற்கே தெரிந்த விஷயமாயிற்றே! ராமதாஸ் மற்றும் ஸ்டன்ட் குழுவினருடன் பைரவர் போதும் பயங்கரமான சண்டைக்காட்சி. சும்மா சுறுசுறுப்பு என்றல் அப்படி ஒரு சுறுசுறுப்பு... வேகமென்றால் அப்படியொரு வேகம்... ஹோட்டலுக்குள் நுழையும் போதே ரசிகர்களின் முதுகெலும்பு நேராகி விடும். ரெட் கலர் பேன்ட் மற்றும் நெக் பனியனுடன் மேலே அணிந்த பிளாக் கலர் கோட்...(ஓப்பன் கோட்டாய் இல்லாமல் வயிற்றின் அருகே மட்டும் பட்டனுடன் கோட் ஸ்டைலாக இணைக்கப்பட்டிருக்கும்). கையில் புகையும் சிகரெட் வலதுபுறமாய் கை விரல் சுண்டுதலில் பறக்கும். வலது காலில் சாக்ஸிலிருந்து கண நேரத்தில் கத்தி எடுக்கப்பட்டு ராமதாஸ் முன் உள்ள டேபிளில் கரெக்டாக கண்'ணென்று செருகும். பின் காலருகே இருக்கும் சேர் ஒரே உதையில் ஒய்யாரமாய் நகர்ந்து சென்று நச்சென்று டேபிள் அருகில் இவர் அமர ரெடியாக நிற்கும். சிம்மம் ஸ்டைலாக நடந்து வந்து சேரை திருப்பிப் போட்டு அமரும். பின் ஆரம்பமாகும் அனல் பறக்கும் சண்டை. ஹோட்டலின் உத்திரத்தை பிடித்து தொங்கியவாறு டூப்பே இல்லாமல் எதிரிகளைத் தாக்கும் போதும், bar-ஐ பிடித்துக் கொண்டு வில்லன்களைப் பந்தாடும் போதும் விசில் சத்தம் விண்ணைக் கிழிக்கும். முற்றிலும் வித்தியாசமான நடை, உடை, பாவனைகள், கர்ஜனை, அலாதி சுறுசுறுப்பு, கால்களின் விறைப்பு, பெல்சும் பெல்சுமல்லாத ரகத்தில் விறைத்து நிற்கும் பேன்ட், கண்களில் குடிகொள்ளும் கையகல கூலிங் கிளாஸ், வாயில் சதாசர்வ காலமும் நர்த்தனமாடிக் கொண்டிருக்கும் சூயிங்கம்... பைரவன்னா பைரவன்தான். நம் எல்லோரையும் அவன்பால் பைத்தியமாக்கிய பைரவன்... பாருங்கள்.

    முதன்முறையாக இணையத்தில் தரவேற்றி உங்களுக்காக



    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 10th October 2012 at 08:26 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #1640
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Arab Emirates
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Vankv View Post
    The video fits well with Frank Sinatra's song, fantastic! But the comment about NT in the blog will certainly not make NT fans happier.
    Thank you for the kind words about the video! Yes I agree the blog in its entirety may not go down well with the readers of this thread. However, I thought that they might find some things there interesting, such as the Vinnodum Mukilodum song's video.


    Quote Originally Posted by Vankv View Post
    On that blog, you have mentioned that NT over acted just because he wanted to look better than his co-stars (or something like that). That is absolutely wrong.
    Perhaps I was unclear in the blog, but this interpretation is incorrect. I did not suggest that he overacted in order to look better than his costars. I do not think so either, because it's somewhat illogical - he was a famous actor and had no reason whatsoever to try and look better than the others - and from what little I've read about him, he sounds like a warm and nice person.


    However, the question of whether he overacted is not one that I'm prepared to argue about, here. To each his own - you love NT and I love Padmini and we both benefit from watching them, and the blog is the place to discuss what I write there.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •