-
24th May 2013, 07:36 PM
#3861
Junior Member
Newbie Hubber
மாசானம் சார்,
நீங்கள் எங்கள் திரிக்கு வந்து போதனை செய்து விட்டு போனதை நினைவு கூறுகிறோம். யாரை எப்படி வேண்டுமானாலும் புகழ்ந்து கொள்ளுங்கள். ஆனால் உலக தமிழர்களில் உன்னதம் கண்ட எங்கள் திரையுலக தெய்வத்தை சீண்டாதீர்கள். ஆயிரம் நீதி போதனை பாடல் கேட்டும் மற்றவர்களுத்தான் அறிவுரை என்று வாழ்ந்தால்?
-
24th May 2013 07:36 PM
# ADS
Circuit advertisement
-
24th May 2013, 07:57 PM
#3862
Junior Member
Newbie Hubber
Originally Posted by
masanam
கோபால் ஸார், மக்கள் திலத்தைப் பற்றி மட்டுமே பதிவிடுகிறேன். மற்ற கலைஞர்களை நான் ஒருபோதும் அவதூறு செய்வது/செய்தது இல்லை. என்னுடைய பதிவுகளைப் பார்த்தால் தெரியும். மக்கள் திலத்தைப் பற்றிய Glorification மட்டுமே என்னுடைய பதிவுகள். நன்றி ஸார்.
எஸ்வி சாரின் பதிவுகளில் எங்களுக்கு ஆட்சேபிக்க வேண்டிய பகுதிகள் உள்ளன. அதை நீங்கள் reply with quote செய்துள்ளது உங்களின் போதனையை நீங்களே மீறுவதை காட்டுகிறது. மக்கள் சமூகம் ,சரியான புரிதல் இல்லாத காலத்தில் எவ்வளவோ நடந்திருக்கலாம். popularity அளவை மட்டுமே வைத்து பார்த்தால் காந்தியை விட ஹிட்லர் ,இடி அமீன் முன்னணியில் வர வாய்ப்புண்டு.(அவர்கள் காலத்திலேயே பொய் பிரசாரத்தின் மூலம் அவர்கள் அடைந்த மக்கள் செல்வாக்கை விடவா மற்றவர்கள் அடைய போகிறார்கள் ?)
Last edited by Gopal.s; 24th May 2013 at 08:06 PM.
-
24th May 2013, 08:28 PM
#3863
Junior Member
Newbie Hubber
நாங்களும் புத்தகங்களில் இருந்து மேற்கோள் காட்டலாமா? நீங்களே சொல்வதற்கு பதில் ஆள் வைத்து சொன்னால் ,அது உங்கள் சார்பில் எழுத பட்ட புத்தகங்களில் இருந்தென்றால்?
இணைய தளத்திலும்,குப்பை புத்தகங்களிலும் இருந்து உங்களை பற்றி மேற்கோள் காட்டி கொண்டு உங்களுக்குள்ளே பேசி கொண்டிருங்கள். எங்கள் உலக தமிழர்களின் ஒப்பற்ற நடிப்பு தெய்வத்தை வீணில் இழுக்க வேண்டாம்.அதை பம்மலாரே விரும்ப மாட்டார் என்று நினைக்கிறேன்..
ஆனாலும் நண்பர்களை பாராட்டத்தான் வேண்டும். நேருவை பற்றிய பதிவுகளில் இமேஜ் உருவாக்க படும் விதம் பற்றி குறிப்பிட்டு ,ஒப்புதல் வாக்குமூலங்கள் வழங்கியதற்காக.
திரையுலக செல்வாக்கை பொறுத்த வரை நடிகர் திலகம் பெற்ற ,பெற்று கொண்டிருக்கும் ,பெற போகும் செல்வாக்கை மற்றவர்களால் கனவு கூட காண முடியாது.
Last edited by Gopal.s; 24th May 2013 at 09:27 PM.
-
24th May 2013, 08:53 PM
#3864
Senior Member
Seasoned Hubber
ஒப்பீடு செய்யும் போது பாதிக்கப் பட்டவர் குரல் கொடுப்பது ஜனநாயகத்தில் மட்டுமல்ல, பகுத்திறிவிலும் உலகெங்கும் ஒப்புக் கொள்ளப் பட்ட விஷயம். மீண்டும் மீண்டும் நடிகர் திலகத்தை சீண்டும் விஷயம் வரும் போது அமைதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும். செல்வாக்கு என்பது தேர்தலை வைத்து அளக்கப் படும் விஷயமல்ல என்பதை பல முறை கூறியாகி விட்டது. நடிகர் திலகம் யாருக்காக தான் கஷ்டப் பட்டு வளர்த்த இயக்கத்தை விட்டு விலகினார், யாருக்காக தேர்தலில் ஓட்டுக் கேட்டார் என்பதையெல்லாம் மனசாட்சியுள்ள ஒவ்வொரு எம்.ஜி.ஆர் அவர்களின் ரசிகரும் மறக்க மாட்டார்கள். அதையெல்லாம் மறந்து விட்டு அவர்கள் திரும்பத் திரும்ப நடிகர் திலகத்தின் செல்வாக்கை குறைத்துக் கூறுகிறார்கள் என்றால் அது அவர்களின் மனசாட்சி தான் எடுத்துரைக்க வேண்டும். இதை யார் உணருகிறார்களோ இல்லையோ வினோத் சார் போன்று எம்.ஜி.ஆர். அவர்களின் உண்மையான பக்தர்கள் நினைத்துப் பார்ப்பார்கள் என்று நம்புவோம்.
Last edited by RAGHAVENDRA; 24th May 2013 at 09:01 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
24th May 2013, 10:17 PM
#3865
Senior Member
Seasoned Hubber
இந்த முகம் போதுமய்யா எங்களுக்கு ...
போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும்....
தொடர்வோம் எங்கள் பணியை ...
எம் கடன் தங்கள் புகழ் பாடிக் கிடப்பதே...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
24th May 2013, 11:03 PM
#3866
Senior Member
Diamond Hubber
"நன்னா சொன்னேள் போங்கோ!" னு உங்ககிட்ட சிவாஜி சொல்லிக்கொண்டே சிரிப்பது போல இருக்கு.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
25th May 2013, 05:07 AM
#3867
Junior Member
Newbie Hubber
இந்த மாதிரி புகழ்வதற்கு பதில் திட்டியே எழுதலாமே? நடிகர்திலகம் ,"அவரை மாதிரி செலக்ட் பண்ணி நடிச்சிருக்கணுமாம்.". இதை விட insult தேவையே இல்லை.அப்படியெல்லாம் செய்யாததனால்தான் அவர் உலகத்தில் எந்த நடிகனும் கனவு காண கூட முடியாத அளவு வித விதமான character கள் செய்து உலக புகழ் அடைந்து இந்தியாவிலேயே முதன் முறையாக international Award வாங்கி,அமெரிக்க அரசாங்கத்தால் கௌரவிக்க பட்ட முதல் இந்திய கலைஞர் ஆகி , Chevaliar பெற்று அன்றும் இன்றும் என்றுமே எல்லோரும் போற்றும் படி அவர் தொழிலில் No 1 ஆக விளங்கினார்.அவர்தான் உலகத்துக்கே role model . அவர் வேறு யாரையும் role model ஆக கொள்ள வேண்டிய அவசியமில்லை.
அவர் அடைந்திருக்க வேண்டிய உயரம் இன்னும் அதிகம் என்று ஒப்பு கொள்கிறோம். அதை அடைய விடாமல் செய்த "முறைகளும் " எங்களுக்கு தெரியும்.
ராகவேந்தர் சார் சொன்ன படி தேர்தல் வெற்றிகளை வைத்து தீர்மானிக்க படுவதில்லை சாதனைகளும்,உன்னதங்களும்.
Last edited by Gopal.s; 25th May 2013 at 05:56 AM.
-
25th May 2013, 06:14 AM
#3868
Junior Member
Platinum Hubber
நட்புடன் - உரிமையுடன் உரியவருக்கு
நடிகர் திலகம் அவர்களின் நடிப்பை பற்றி மக்கள் திலகம் பல முறை மக்கள் மத்தியிலும் - சினிமா விழாக்களிலும் -புகழ்ந்து பேசியுள்ளார் . கடைசி வரை இருவரும் நட்புடன் இருந்து வந்தனர் .
தொழில் ரீதியாக இருவரின் நிலையும் , நடிப்பும் இருவகையாக இருந்ததால் இரண்டு ரசிகர்கள் குழுவாக பிரிந்தது இயற்கையே.
மக்கள் திலகத்தின் தனிப்பட்ட நடிப்பு
அவரது கொள்கை சார்ந்த கதா பாத்திரங்கள்
கதைக்கு ஏற்ற வசனங்கள் - பாடல்கள் அவருக்கு பொருத்தமாக இயற்கையாகவே அமைந்த காரணத்தால் அவர் படங்கள் மீது மக்களுக்கு ஒரு தனி ஈர்ப்பு இருந்தது .
அவரது புகழ் பற்றி சில முரண்பாடான கருத்துக்கள் - விமர்சனங்கள் வருவது தவிர்க்க முடியாதது .
''யாருடைய உயர்வையும் - முன்னேற்றத்தையும் - வளர்ச்சியினையும் கண்டு பொறாமை படவோ - தடுக்கவோ ''
இல்லை . மீண்டும் மீண்டும் அதே கருத்தை கூறுவது
ஏமாற்றத்தின் '' உச்சத்தில் இருக்கும் ஒருவரின் மன நிலை குறித்து பரிதாப படுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும் .
நடிகர் திலகம் அவர்களின் படங்கள் - அவரது பட சாதனைகள்
தனிப்பட்ட அவரது புகழ் மீது எங்களுக்கு மதிப்புள்ளது .
பத்திரிகைகள் - ஊடகங்கள் - இணயதளம் - மற்றும் பொது மக்கள் ;''விமர்சனம் என்று வரும்போது ,காரணங்களை அலசும்போது ஒப்பீடு செய்யும்போது மாறுபட்ட கருத்துக்கள்
கூறுவார்கள் . அதை தாங்க கூடிய பக்குவம் இல்லாதவரின்
மறு முனை கிண்டல் தாக்குதல் மூலம் அவரது அறியாமையை
வெளிபடுகிறது .
''கூட்டு குடும்பத்தில் இருந்தால் கலகலப்புடன் மகிழ்ச்சியாக வாழலாம் . என்ன செய்வது என் நண்பரை தனிக்குடுத்தனம் வைத்துவிட்டார்கள் . தனிமை அவரை இந்த நிலைமைக்கு தள்ளிவிட்டது .''
எப்படியோ 24 x 7 நம் தலைவரின் நினைவுகள் அவரது நெஞ்சிலும் அலைபாய்கிறது என்பதை அறியும்போது
அனுமன் இதயத்தில் ராமன் உள்ளது போல் நம் நண்பரின் இதயத்திலும் மக்கள் திலகம் இருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி
''கடல் கடந்து வாழும் பத்மநாப பாரதவிலாசே ''.
-
25th May 2013, 06:36 AM
#3869
Junior Member
Newbie Hubber
எஸ்வி சார்,
உங்கள் வருகைக்கு நன்றி. நீங்களே பார்த்திருப்பீர்கள் ,எங்கள் திரியில் யாரையும் குறித்து எந்த எதிர் மறையான கருத்தும் வராமல் கவனமாக தவிர்க்கிறோம். அந்த மாதிரி லட்ச கணக்கில் எதிர்மறை கருத்துக்கள் குவிந்துள்ளன. ஆனால்,எங்கள் நடிகர்திலகத்தை புகழ எங்களுக்கு கோடி விஷயங்கள் குவிந்துள்ள போது , குப்பைகளை தவிர்த்தே வருகிறோம்.
நானும் ஒப்பு கொள்கிறேன்.இருவரும் நட்புடன் இருந்ததை. மலைக்கள்ளன் படத்தில் நடிக்க சொல்லி பட்ஷி ராஜா நடிகர்திலகம் வீட்டு வாசலில் தவம் இருந்த போது ,adventure படத்திற்கு அண்ணனை போடுங்கள் ,எனக்கு தற்போது நேரம் இல்லை என்று தன் போட்டியாளரிடமும் பெருந்தன்மை காட்டியவர் நடிகர்திலகம்.பின்னாளில் இதே பட்ஷி ராஜா நடிகர்திலகத்தை வைத்தே தொடர்ந்து படங்கள் எடுத்தார்.
தாங்கள் செல்வாக்கு விஷயத்தில் தவறான ஒரு விஷயத்தை quote செய்ததால் நான் இடையூறு செய்ய நேர்ந்தது. தொடருங்கள்.
தனி குடித்தனம் என்பதெல்லாம் சரக்குள்ளவர்களுக்கே தகுதியான விஷயம்.அதை பற்றி தாங்கள் கவலை படவே தேவையில்லை.தற்காலத்துக்கு பொருத்தமானதும் கூட..
Last edited by Gopal.s; 25th May 2013 at 07:34 AM.
-
25th May 2013, 07:37 AM
#3870
Senior Member
Seasoned Hubber
Bookmarks