Page 332 of 401 FirstFirst ... 232282322330331332333334342382 ... LastLast
Results 3,311 to 3,320 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #3311
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    ஹ்ஹ... எங்கே பார்த்திபன்? என் பராக்கிரமம் கண்டு ஒளிந்து கொண்டு விட்டான். அவன் அரசாட்சி பெற கூட என்னை மாதிரி வேடமிட்டு வந்தால்தான் முடியும்.
    வெளியில் வா......
    -----விக்ரமன்.
    Sir,

    எந்த படம் என்று தெரியவில்லை. ஆனால் ரசிக்கும்படியான ஒரு காமெடி காட்சி. திரு.கௌண்டமணி அவர்களிடம் திரு செந்தில் வழக்கம் போல பித்தலாட்டம் செய்வார்..அதை திரு.கௌண்டமணி அவர்கள் சவுக்கால் அடித்து உண்மையை திரு.செந்தில் வாயால் வரவழைப்பார்..பின்பு தான் முக்கியமான காட்சி...அவர் கூறுவார்..."மவனே ஸவுகெடுத்தாதான் பாதி பேருக்கு நாட்ல புத்தியே வருது என்பார். காட்சி நகைச்சுவைக்காக எடுத்தது என்றாலும் அந்த பஞ்ச் வாஸ்தவமான பேச்சு -

    என்னமோ தெரியவில்லை அந்த காட்சி டக் என்று நினைவுக்கு வந்தது..!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3312
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post

    எனது சிவாஜியின் சாதனை சிகரங்கள் தொடரில் திருவிளையாடல் வெளியான காலக்கட்டத்தில் நிகழ்ந்தவற்றை பற்றி நான் எழுதிய பதிவை மீண்டும் மீள் பதிவு செய்தது மட்டுமல்ல அதற்காக எனக்கு நன்றியையும் தெரிவித்த srs அவர்களுக்கு எனது மனங்கனிந்த நன்றி.

    அன்புடன்
    சார்,
    " உங்களுடைய " என்று எழுதும்போதே அது நீங்கள் எழுதியது தானே !
    அதனால் தானே கட்டுரைக்கு உங்களுக்கும் ...புள்ளி விவரத்திற்கு திரு பம்மலர் அவர்களுக்கும் உரியது என்பதை உணர்த்தும் விதமாக "courtesy " என்று போட்டேன் !

    ஒரு சில விடுபட்ட வார்த்தைகளை நீங்கள் எழுதிய அந்த கட்டுரையில் புகுத்தியும் உள்ளேன்...உதாரணம் : திராவிட கட்சிகள் etc

    நாங்கள் தான் சார் உங்களுக்கு நன்றி கூறவேண்டும் !

  4. #3313
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    [QUOTE=adiram;1040527]
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    டியர் சௌரிராஜன்
    நம்முடைய திரியில் நடிகர் திலகத்தைப் பற்றி இடம் பெற்றுள்ள சாதனை விவரங்கள், நிழற்படங்கள் இவையனைத்துமே மேற்கோள் காட்டப் படலாம். ஆனால் அவற்றை உரிய முறையில் நாம் எடுத்தியம்ப வேண்டும். அப்படி செய்யும் போது, அந்த பதிவின் நாள், எந்த பாகம் போன்ற விவரங்களுடன்

    Mr. Raghavendar sir,

    exactly you told what I want to tell. When I started reading Thiruvilaiyaadal achievements, on the first line itself I fount out it is the one which our Murali sir wrote in 'Sivajiyin saadhanai sigarangal' thread. Every line of our Murali sir's posts are 'manappaadam' for our fans.
    நண்பர் ஆதிராம் அவர்களே ,
    முதலில் ,
    நீங்கள் திரு.ராகவேந்திர சாரிடம் கூறியது முற்றிலும் உண்மை என்பது உலகறியும்.

    ஆகையால் தான் நீங்கள் கூறியது போல நம் ரசிகர்கள் அனைவருக்கும் "மனப்பாடமாக" தெரியுமே என்பதால் அந்த பேஜ் மற்றும் இத்தியாதி...இதிதியாதி சமாசாரங்களை மீண்டும் இடவில்லை. சுருக்கமாக "Courtesy - Mr பம்மலர் & Mr முரளி ஸ்ரீநிவாஸ் என்று எழுதி இருந்தேன். உங்கள் கண்களுக்கு Courtesy ஏ தெரியவில்லை போல இருக்கிறது ! அடுத்த முறை போடும்போது சற்று பெரிய வடிவத்தில் உங்களுக்காக இடுகை செய்கிறேன்.

    இரண்டாவது,
    கிட்டத்தட்ட இரண்டு மூன்று நாட்களாக நீங்கள் திரிபக்கம் வரவே இல்லையே ? அலுவல் அதிகமா? நீங்களும் இல்லை, Khalnayakum இல்லை, VanKv யும் இல்லை. திரியின் விறுவிறுப்பு குறைந்தது போன்ற ஒரு தோற்றம் ! அது ஒருவேளை மாயையாக கூட இருக்கலாம். !

    மாயாபஜார் திரைப்படத்தின் வசனம் நினைவிற்கு வருகிறது..கடோல்கஜன் சகுனியிடம் உரைப்பார், ஒன்று இரண்டாக தெரிந்தால் நீங்களும் ஜெயிததுபோல்தான் நானும் ஜெயிததுபோல்தான் என்று !

    மூன்றாவது,

    நீங்கள் இடுவதை பார்க்கும்பொழுது நடிகர் திலகத்தை பற்றிய நிறைய விஷயங்களை எழுதிஇருகிறீர்கள் போல தெரிகிறது எனக்கு அவைகளை படிக்க மிகவும் ஆவலாக இருக்கிறது !

    நீங்கள் நடிகர் திலகத்தை பற்றி இடுகை செய்துள்ள விஷயங்களின் பக்கங்களை இங்கு தயவு செய்து இடுகிறீர்கள?

    அந்த போஸ்ட் நம்பர், பேஜ் நம்பர், திரி எண் இடுங்களேன் ...ப்ளீஸ் !!

  5. #3314
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Sowrirajann Sri View Post
    Sir,

    எந்த படம் என்று தெரியவில்லை. ஆனால் ரசிக்கும்படியான ஒரு காமெடி காட்சி. திரு.கௌண்டமணி அவர்களிடம் திரு செந்தில் வழக்கம் போல பித்தலாட்டம் செய்வார்..அதை திரு.கௌண்டமணி அவர்கள் சவுக்கால் அடித்து உண்மையை திரு.செந்தில் வாயால் வரவழைப்பார்..பின்பு தான் முக்கியமான காட்சி...அவர் கூறுவார்..."மவனே ஸவுகெடுத்தாதான் பாதி பேருக்கு நாட்ல புத்தியே வருது என்பார். காட்சி நகைச்சுவைக்காக எடுத்தது என்றாலும் அந்த பஞ்ச் வாஸ்தவமான பேச்சு -

    என்னமோ தெரியவில்லை அந்த காட்சி டக் என்று நினைவுக்கு வந்தது..!
    நிஜமாகவேதானே வருகிறான் பார்த்திபன்? நான் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். நீங்கள் எழுதவில்லையென்றால், வாசு துடித்து கொண்டிருக்கிறார்.

  6. #3315
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    [QUOTE=RAGHAVENDRA;1040468]டியர் சௌரிராஜன்
    இந்த மய்யம் திரியில் நடிகர் திலகம் என்ற பெயர் சொன்னவுடனே பல புதிய தலைமுறையினர் உடல் சிலிர்த்துக் கொண்டு உடனே ஓடி வந்து REFER செய்தது முரளி சாரின் பதிவுகளைத் தான். அந்த அளவிற்கு அவர் ஆணித்தரமாக நடிகர் திலகத்தின் சிறப்புகளையும் சாதனைகளையும் இங்கே பதித்திருக்கிறார். பம்மலார் வந்த பின்னர் முரளி சாரின் பதிவுகளுக்கு ஆதார ஸ்ருதியான ஆவணங்களைத் தந்து நடிகர் திலகத்தின் சாதனைகளை ஊரறியச் செய்தது மட்டுமல்லாமல் அது வரை நிலவி வந்த MYTHகள் அனைத்தையும் உடைத்தெறிந்து விட்டனர். அது மட்டுமில்லாமல் வாசு சாரும் எங்கும் கிடைக்காத பல அரிய ஆவணங்களைப் பகிர்ந்து கொண்டு அவர்கள் இருவரின் முயற்சியில் பங்கு கொண்டு சிறப்பான பணியாற்றியுள்ளார்.

    இந்த முயற்சியில் பம்மலார், வாசு மற்றும் அடியேன் சந்தித்த மனக் கஷ்டங்கள் தாங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். பயனற்ற பதிவுகள் என்று ஆவணங்களையும் நிழற்படங்களையும் கிண்டலடித்தவர்களும் உண்டு. அவற்றின் மகிமை தெரியாமல் மேம்போக்காக கேலி செய்தது மட்டுமின்றி இங்கு அவை இடம் பெறக் கூடாதென்பதற்கும் முயற்சிகள் நடந்தன. இதற்காக தனித்திரி துவங்கப் பட்டு பம்மலார் தன் பணியினை ஆற்றி வந்தார். அவர் வருகையில்லாமல் இப்போது அத்திரி முடக்கப்பட்டுள்ளது.

    இவையெல்லாம் தங்களிடம் கூறுவதற்குக் காரணம், எவ்வளவு சிரமங்களை எதிர்கொண்டு இந்த பதிவுகள் இடம் பெற்றுள்ளன என்பதைத் தங்களுக்கு உணர்த்தவே.

    திருவிளையாடல் பதிவினைப் பொறுத்த வரை தங்களுக்கு நான் பாராட்டுத் தெரிவித்ததற்குக் காரணம் ... [பொதுவாக அனைத்து நண்பர்களின் பதிவுகளுக்குமே நான் பாராட்டுக் கூறாமல் இருக்க மாட்டேன் ...] தாங்கள் அதனைக் கூற முன் வந்த விதமே.

    நம்முடைய திரியில் நடிகர் திலகத்தைப் பற்றி இடம் பெற்றுள்ள சாதனை விவரங்கள், நிழற்படங்கள் இவையனைத்துமே மேற்கோள் காட்டப் படலாம். ஆனால் அவற்றை உரிய முறையில் நாம் எடுத்தியம்ப வேண்டும். அப்படி செய்யும் போது, அந்த பதிவின் நாள், எந்த பாகம் போன்ற விவரங்களுடன்
    என்று தனியாக பிரித்துக் காட்டுங்கள். அந்த QUOTE முடிந்த வுடன் தங்கள் கருத்தைத் தொடர்ந்து எழுதி முடியுங்கள்.

    அதே போல் பம்மலார் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கிடையே ஆவணங்களை இங்கு வழங்குகிறார். ஆனால் இதே ஆவணத்தை மற்ற சமூக வலைத் தளங்களில் பயன்படுத்தும் நம் நண்பர்கள் பம்மலாரின் WATERMARK கின் மேல் தன்னுடைய WATERMARK கினை overwrite செய்து தாங்கள் பேணிப் பாதுகாத்தது போன்ற தொரு சித்திரிப்பினை ஏற்படுத்துகின்றனர். இது நம் நண்பர்களுக்கு நாமே செய்தும் துரோகம் போன்றது. இப்படி செய்தால் மேற்கொண்டு அரிய ஆவணங்களை நாம் பெறாமல் போய் விட வாய்ப்புள்ளது. அந்த நண்பர்கள் இனிமேல் இந்த மாதிரி செய்யாமல் இருக்க வேண்டும் என நான் விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

    இது தங்களுக்கு மட்டுமின்றி நம் அனைத்து நண்பர்களுக்கும் தான், நான் உள்பட.
    அன்புள்ளம் கொண்ட திரு.ராகவேந்திர சார்,

    உங்கள் கண்களுக்கு கூட நான் போட்ட Courtesy தென்படவில்லை போல் உள்ளதே. ! என்னுடைய நேரத்தை நான் என்னவென்று சொல்ல !

    உங்களுடைய, திரு.கோபலுடைய, திரு.முரளி அவர்களுடைய மற்றும் இரண்டு மூன்று நாள் திரிபக்கமே வராமல் இருந்து திடீரென்று இந்த ஒரு விசயத்தை பற்றி எழுத வந்த திரு.ஆதிராம் இப்படி அனைவரும் நான் என்னமோ முரளி சார் எழுதியதை காபியடித்து எனது இடுகை போல இட்டுவிடனோ என்று இம்மியளவும் சந்தேகம் வேண்டாம்.

    நான் எழுதுவதை போல அந்த விஷயத்தை எழுத நினைத்திருந்தால் நொடியில் முடித்திருபேன் . அனால் அது என் வழி அல்ல !

    நான் Courtesyil : கட்டுரைக்கு திரு.முரளி அவர்களையும் புள்ளிவிவரதிர்க்கு திரு.பம்மலர் அவர்களையும் மனதில்வைத்து எழுதினேன். காரணம்...திரு. முரளி அவர்கள் கட்டுரையில் மற்றும் மதுரை மற்றும் அதன் சுற்றுபுரத்தின் புள்ளிவிவரங்களை தருவதில் தலைசிறந்து விளங்குபவர் & திரு.பம்மலர் அவர்கள் புள்ளிவிவரத்தில் மட்டும் அல்லாது ஆதார ஆவணங்களிலும் தலைசிறந்து விளங்குபவர். இந்த இரெண்டும் ஒன்று சேர்ந்தால்தான் அனைவருக்கும் சிறப்பு.

    கட்டுரையில் அவரும்...புள்ளிவிவரத்தில் இவரும் தலைசிறந்தவர்கள் என்பது நம் திரியில் உள்ளவர்களுக்கு மட்டும் அல்ல மையத்தில் இருக்கும் முக்கால் வாசி திரியில் உள்ளவர்களுக்கும் தெரிந்த உண்மை.

    உங்கள் அனைவரின் சந்தேகங்களும் நான் காபி அடித்து பேர் வாங்க நினைகிரேனோ என்பதாகும் பட்சத்தில் நீங்கள் என்னிடம் கேட்டு தெரிந்துகொள்ள, புரிந்துகொள்ள சந்கோஜபட்டிருந்தால், என்னுடைய இந்த பதில் அந்த சந்தேகத்தை தீர்க்கும் என்று நம்புகிறேன்.

    நமது திரையுலக சித்தர் திரைப்பட பாடலின் வரியுடன் முடிக்கிறேன் -

    இதற்க்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல ?
    Last edited by Sowrirajann Sri; 7th May 2013 at 03:05 PM.

  7. #3316
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அட பாவி ,இப்போதான் கவனிக்கிறேன். sree எப்போ sri ஆச்சு?170 எப்போ 4 ஆச்சு? சவுக்கு எங்கே?

  8. #3317
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    sri (sree ?) சார்,
    அந்த சந்தேகம் யாருக்கும் இல்லை.நீங்கள் தெளிவாகவே போட்டிருக்கிறீர்கள். அதனால் பிரச்சினை ஏதும் இல்லை. முரளியும் clarify பண்ணி விட்டார்.

  9. #3318
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இங்கு இருக்கும் சிவாஜி ரசிகர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு புலமை உள்ளது. இதனை நான் முன்னமேயே கூறியுள்ளேன். நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு எழுத்து என்பது கைவந்த கலை. மிகக் குறுகிய காலத்தில் தமிழில் பதிவுகளை இட பழகி விட்டதே தங்கள் திறமையைக் காட்டுகிறது. அப்படி இருக்கும் போது தங்கள் கருத்துக்களைப் பதியும் தங்களின் புலமை தெரியாமலா இருக்கும். அதில் எள்ளளவு ஐயமும் இல்லை.

    இது தங்களுக்காக என்பதை விட பொதுவாக எழுதியதாய் எடுத்துக் கொள்ளுங்கள். அதனைத் தாங்கள் தனியே quote பண்ணியிருந்தால் தெரிந்திருக்கும்.

    Anyway, I am very happy that you have taken this in right perspective and thank you very much.

    இது ஒரு புறம் இருக்கட்டும்... கோபால் கூறியது போல் Sree வேறு Sri வேறா ... சந்தேகத்தை தீர்த்து வையுங்களேன் ... ப்ளீஸ்...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #3319
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    அட பாவி ,இப்போதான் கவனிக்கிறேன். sree எப்போ sri ஆச்சு?170 எப்போ 4 ஆச்சு? சவுக்கு எங்கே?
    Yeah....I deleted by mistake my Facebook account trying to do something there ! So, I created a new account and logged in to continue the discussion here more than facebook. சவுக்கு செஞ்சுகிட்டு இருக்கேன். வரும்..உங்களுக்கு சாதாரண சவுக்கு போதாதே அதுதான் ஸ்பெஷல் தயாரிப்பு நடந்து கிட்டு இருக்கு...

    I was just kidding...I will write it shortly...!

  11. #3320
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    sri (sree ?) சார்,
    அந்த சந்தேகம் யாருக்கும் இல்லை.நீங்கள் தெளிவாகவே போட்டிருக்கிறீர்கள். அதனால் பிரச்சினை ஏதும் இல்லை. முரளியும் clarify பண்ணி விட்டார்.
    So nice to read that Murali sir also clarified..! So..all are in touch on minute by minute basis, i suppose ? Good !

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •