-
16th April 2013, 01:48 PM
#2731
Junior Member
Devoted Hubber
Originally Posted by
adiram
Ganpatji,
So. this 'nagai muran' will not be applicable for me.
No Mr.Adiram,I never said it was you.
When Mr.Gopal made some comments on Mr.Shanmugam in the same issue,
there were some hue and cries here, stating அண்ணனுக்கு அண்ணன் நமக்கும் அண்ணன்
So none should criticize NT's family members..etc etc.
So I called that as irony.
Thanks
-
16th April 2013 01:48 PM
# ADS
Circuit advertisement
-
16th April 2013, 01:50 PM
#2732
Junior Member
Devoted Hubber
Originally Posted by
Gopal,S.
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-1-11..........
Mr Gopal,
I wouldn't even try contemplating leaving a comment regarding this sequence of articles. Forget the content, but the jargons are too strong and intimidating for me. I wouldn't want to risk myself entering into an unfamiliar territory!! But I guess it's a landmark to this thread. Congratulations!
-
16th April 2013, 04:17 PM
#2733
Senior Member
Seasoned Hubber
திரு.கோபால் அவர்களின் தெய்வமகன் பதிவு, அதனை ஒட்டிய நண்பர்களின் பதிவுகளைப் பார்த்துவிட்டு, தொலைக்காட்சியைப் பார்த்தால், நேற்று (15-04-13) இரவு sun life -ல் தெய்வமகன்.
பதிவுகளை அசைபோட்டபடியே குடும்பத்துடன் உட்கார்ந்து, பார்த்தேன், ரசித்தேன்.... நன்றி.
-
16th April 2013, 06:38 PM
#2734
Senior Member
Diamond Hubber
Originally Posted by
RAGHAVENDRA
சற்று முன் வந்த தகவல். நாகர்கோவிலில் வசந்த மாளிகை மிகப் பிரம்மாண்டமான வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான ஒரே வாரத்தில் ரூ. மூன்று லட்சத்திற்கு மேல் வசூலாகியுள்ளதாக செய்தி. ரசிகர்கள் அளப்பரையும் அமர்க்களமாக நடைபெற்றுள்ளது. நாஞ்சில் நகரம் நடிகர் திலகத்தின் கோட்டை என்பதும் இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.
ஜோ சார்
காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளுங்கள்...
நன்றி ராகவேந்திரா சார் . வசந்தமாளிகையை பொறுத்தவரை நான் சிறுவனாக இருந்த போது ஒவ்வொரு வருடமும் நாஞ்சில் நகரில் திரையிடப்படும் . நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலயத் திருவிழா (டிசம்பர் 3) மாவட்ட அளவில் பிரசித்தி பெற்றது . அப்போதெல்லாம் சுற்று வட்டார கிராமங்களில் சிறுவர்கள் கோட்டாறு சவேரியார் திருவிழாவுக்கு செல்வதற்காக 5 பைசா , 10 பைசா என சேர்த்து திருவிழாவுக்கு வருவார்கள் . மூன்று நோக்கங்கள் ..கோவிலுக்கு செல்வது , தேன்குழல் மற்றும் சேவு வாங்கி சாப்பிடுவது ..மூன்றாவது முக்கியமானது .. நள்ளிரவு சிறப்பு காட்சி படம் பார்ப்பது .. எனக்கு தெரிந்து எல்லா வருடமும் சொல்லி வைத்தாற் போல வசந்த மாளிகையும் , உலகம் சுற்றும் வாலிபனும் வெளியாகும் .. தீபாவளிக்கு வந்த ஹிட் படங்கள் ஓடிக்கொண்டிருக்கும் . ஆனால் மொத்த கூட்டமும் வசந்த மாளிகைக்கும் , உலகம் சுஊரும் வாலிபனுக்கும் தான் மொய்க்கும் . அதிலும் நாஞ்சில் நகர் நடிகர் திலகத்தின் கோட்டை என்பது எல்லோருக்கும் தெரியும் .. வசந்தமாளிகை போஸ்டர்கள் திரும்பிய பக்கமெல்லாம் ஒட்டப்பட்டிருக்கும் . பல வருடங்கள் இது தொடர்ந்தது .
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்
-
16th April 2013, 06:57 PM
#2735
Mr. Joe sir,
You cant fully raise your collar, because in the first release of 1972, out of 13 centres where Vasandha Maaligai crossed 100 days there is NO Nagerkoil and NO Thirunelveli.
In southern Tamil Nadu only one centre Madurai crossed 100 days.
But in Central TN, four centres Trichy, Thanjai, Kumabakonam and Mayavaram enjoyed 100 days.
In western TN three centres Kovai, Salem and Erode.
In north TN Chennai and Vellore.
-
16th April 2013, 10:51 PM
#2736
Senior Member
Diamond Hubber
Originally Posted by
adiram
Mr. Joe sir,
You cant fully raise your collar, because in the first release of 1972, out of 13 centres where Vasandha Maaligai crossed 100 days there is NO Nagerkoil and NO Thirunelveli.
அதற்கு பிராயச்சித்தமாத் தான் எங்கூருல வருஷா வருஷம் வெளியிட்டு பார்த்தாங்க போல மக்கள்.
Jokes apart , நான் குமரியிலே பிறந்தாலும் திருச்சியியிலும் படித்திருக்கிறேன் , சென்னையிலும் களித்திருக்கிறேன் . மேற்கு தமிழகம் தவிர்த்து பிற பகுதிகளில் பரிச்சையம் உண்டு . நான் பார்த்தவரை சதவீத அளவில் குமரி மண்ணில் சிவாஜிக்குள்ள ரசிகர் பட்டாளத்துக்கும் , செல்வாக்குக்கும் நிகராக நான் எங்கும் கண்டதில்லை . நான் குமரி மைந்தன் என்பதால் இதை சொல்லவில்லை . முரளி , ராகவேந்திரர் போன்றவர்களுக்கு நன்றாகத் தெரியும் . சிவாஜியின் பிள்ளை என்பதற்காகவே பிரபுவை செல்லப்பிள்ளையாக கொண்டாடிய மண் குமரி மண் . பிரபுவின் 100-வது படம் சென்னையில் கூட இல்லை , தமிழகத்திலேயே 100 நாட்கள் ஓட வைத்த ஒரே இடம் இன்றைக்கு திண்டுக்கல் கூட மாநகராட்சியான பின்னரும் நகராட்சியாக தொடரும் நாஞ்சில் நகர் மட்டும் தான் . அதற்கு பல அரசியல் காரணங்களும் , அது பெருந்தலைவரை பிரதிநிதித்த மண் என்பதும் முக்கிய காரணம் .
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்
-
16th April 2013, 11:30 PM
#2737
ஜோ,
நடிகர் திலகத்தின் மகனுக்கு மட்டுமல்ல அவரது பேரனுக்கும் மாபெரும் வரவேற்பு கொடுத்திருக்கும் நகரம் நாஞ்சில் நகரம். கும்கி இப்போதும் நாஞ்சில் மாநகரில் ஓடிக் கொண்டிருக்கும் செய்தி உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
மே 12 அன்று நாஞ்சில் மாநகரில் படத்தின் 150-வது நாள் வெற்றி விழா நடைபெறும் என்று ஒரு தகவல் வந்திருக்கிறது.
அன்புடன்
கோபால்,
தெய்வ மகன் வந்தால் சாரதி வருவார் என்று தெரியும். வந்து விட்டார். நானும் வருவேன். சற்று பொறுங்கள்.
-
17th April 2013, 06:56 AM
#2738
Senior Member
Seasoned Hubber
டியர் கோபால் சார்
எட்டாவது உலக அதிசயம் மிக மிக அருமையான தொடர். நடிகர் திலகத்தைப் பற்றி இது வரை யாரும் இவ்வளவு உன்னிப்பாக கவனித்து எழுதியிருக்க மாட்டார்கள் என்று மார் தட்டிக் கூறும் அளவிற்கு ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் பெருமை கொள்ளும் தொடர். இதனை எழுதும் நீங்கள் அவ்வப்போது ஏதாவது கோபமாக எழுதி விட்டு தொடரின் நோக்கம் திசை திரும்புவதற்கு காரணமாகி விடுகிறீர்கள். பின்னர் அப்படி எழுதுவதை நீக்கி விடுகிறீர்கள். உணர்ச்சி வசப்பட்டு எழுதுவதை தவிர்க்கவும்.
Last edited by RAGHAVENDRA; 17th April 2013 at 07:02 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
17th April 2013, 07:11 AM
#2739
Senior Member
Seasoned Hubber
நிழற்படங்களும் ஆவணங்களும் நடிகர் திலகத்தின் புகழைப் பறை சாற்ற உதவும் ஒப்பற்ற ஆவணங்கள். அவரின் ஒரு பார்வையை வைத்து நாம் ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதலாம். நடிகர் திலகம் திரியைப் பொறுத்த மட்டில் அத்தனை பக்கங்களையும் அவருடைய நிழற்படத்தைப் பார்த்தாலும் இன்னும் பார்க்கத் தூண்டும். அவருடைய சாதனைகளை பரப்ப உதவுபவை விளம்பர நிழற்படங்களே. தங்களுடைய எட்டாவது உலக அதிசயம் தொடரும் நிழற்படமும் காணொளியும் இருந்தால் அவற்றைப் புரிந்து கொள்ள உதவும். இவையெல்லாம் தங்களுக்குத் தெரியாததல்ல. இதனை உருவாக்க தேவைப்படும் உழைப்பு, நேரம், சக்தி போன்றவை, தாங்கள் எழுதுவதற்கு எவ்வளவு செலவிடுகிறீர்களோ, அதற்கு சற்றும் குறைந்ததல்ல. இதனைத் தாங்கள் மனதில் நிறுத்த வேண்டும். நடிகர் திலகத்தின் பல சாதனைகள், திரைப்படம் மட்டுமின்றி, கற்றோர் நிறைந்த பல சபைகளிலே அவர் பெற்ற பெருமைகளும் பாராட்டுக்களும் நம்முடைய அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல உதவுபவை இவை போன்ற பத்திரிகை செய்திகளும் அவற்றின் நிழற்படங்களுமே.
இதனைத் தாங்கள் அப்பாச்சே இந்தியர்களுடன் அவர் இருந்த நிழற்படத்தை வைத்தே தெரிந்து கொண்டிருப்பீர்கள். எந்த ஒரு அரச பதவியிலும் இல்லாமல் அவர் உலகின் பல நாடுகளில் பல பெருமைகளையும் பாராட்டுக்களையும் பெற்றவர்.
அவற்றையும் நாம் இங்கே அவ்வப்போது பகிர்ந்து கொள்வது நம்முடைய கடமை என நான் எண்ணுகிறேன்.
நம் ரசிகர்களில் பலர் பல அரிய ஆவணங்களைத் தங்களிடம் வைத்திருப்பார்கள். அவற்றையெல்லாம் நாம் இங்கே பகிர்ந்து கொண்டால் எதிர்கால சந்ததியினர் நடிகர் திலகத்தைப் பற்றிய பல தகவல்களைத் தெரிந்து கொள்ள நாம் செய்யும் மிகப் பெரிய உதவியாக இருக்கும்.
இன்னும் பல அரிய ஆவணங்களை நானும் இங்கே பகிரந்து கொள்ள விரும்புகிறேன்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
17th April 2013, 07:15 AM
#2740
Senior Member
Seasoned Hubber
டியர் கோபால் சார்,
voice of america வானொலிக்காக நடிகர் திலகத்தை வி.கோபால கிருஷ்ணன் பேட்டி எடுத்தார். இது 1970களின் துவக்கத்தில் நடந்தது. அந்தப் பேட்டியில் நடிப்புக்கலையின் நுணுக்கங்களைப் பற்றி நடிகர் திலகம் கூறியிருக்கிறார். தங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் அதனை பெற முடியுமா என்று முயன்று பாருங்கள். நான் அவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்னர் மின்னஞ்சல் அனுப்பினேன். ஆனால் ஒன்றும் தகவல் இல்லை.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks