Page 262 of 401 FirstFirst ... 162212252260261262263264272312362 ... LastLast
Results 2,611 to 2,620 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #2611
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தீபம்- 1977- சில நினைவுகள்.

    உனக்காக நான் - அரசியல் சூழ்நிலையால் சுமாரான வெற்றியை ஈட்டியது. 1976 -உத்தமன் தவிர மற்ற படங்கள் superhit range இல் இல்லை. தீக்கனல் என்ற மலையாள படத்தின் உரிமையை வாங்கிய பாலாஜி (கே.ஜீ .ஜார்ஜ் - ஸ்ரீவித்யா கணவர் அல்ல)அன்னகிளி யை super ஹிட் ஆக்கி இருந்த தேவராஜ்-மோகனை அணுக, அவர்கள் மறுக்க, ஆஸ்தான இயக்குனர் சி.வீ.ராஜேந்திரனிடம் கேட்க, subject பிடிக்கவில்லை (????) என்று அவரும் மறுக்க, ஏற்கெனவே காவல் தெய்வத்தில் இயக்குனராய் இருந்து, என்.வீ.ராமசாமி புண்ணியத்தில் ரோஜாவின் ராஜாவில் ஒப்பந்தம் செய்ய பட்டிருந்த கே.விஜயனுக்கு அடித்தது யோகம்.

    சிவாஜிக்கு, விஜயனுக்கு பெரிய திருப்பு முனையாய் அமைந்த 1977 இல், சிவாஜியின் மாபெரும் வெற்றி சரித்திரத்தின் ஆரம்பமாய் அமைந்த நல்ல படம். நடிகர்திலகத்தின் அற்புதமான நடிப்பு ,படத்தின் range எங்கேயோ கொண்டு போய் விட்டது.

    வாசு சார் முடிந்தால் சுஜாதாவை கடலை போடும் காட்சி.

    பேச்சு கொடுத்து, அவர் எதில் impress ஆவார் என்று தேடி, பேச்சை வளர்க்கும் காட்சி.

    அதே போல தன் வீட்டு guest house வந்து போகும் சுஜாதாவை பார்த்து பொறாமையும்,ஆற்றாமையுமாய் அவர் சுஜாதா அப்பா சுப்பையாவிடம் பொருமல்,ஆத்திரம்,ஆங்காரத்துடன் பேசும் கட்டம்.

    சத்யப்ரியாவை piece piece ஆக்கும் ஆழமான ,குரூரம் நிறைந்த சத்தமில்லா மிரட்டல்.

    நடிகர்திலகம் நடிகர்திலகம்தான்.
    Last edited by Gopal.s; 10th April 2013 at 04:31 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2612
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    நான் ஒரு paranoid என சிலர் கோபத்தில் சொல்வதுண்டு.

    ஆனால் நானே மிகவும் அஞ்சும் கதிரியக்கம் மிகுந்த "சிந்துபைரவி"க்கு சில நண்பர்கள்
    என்னைக் கடத்துகிறார்களோ என்ற பயம் என் மனதில் இப்போ வந்து விட்டது.

    மனித உடலிலிருந்து வாயு பிரிதல் என்று ஒரு genre உள்ளது.
    பாடுதல்,பேசுதல்,ஏப்பம் விடுதல் ,கொட்டாவி விடுதல்,தும்முதல்,சொடக்கு போடுதல் மற்றும் அபான வாயு (தன்னிச்சையாகவோ & முயற்சி செய்தோ) என்பவை இதில் அடங்கும்.

    உலகின் ஜனத்தொகையான 720 கோடி பேரில் சுமார் 1 கோடி பேரே பாடுவார்கள். ஆனால்720 கோடி பேரும் அந்த கடைசி செயலை செய்வார்கள்.இதை வைத்து இரண்டு பிரிவினரையும் ஒரே குழுவில் அடக்க முடியுமா? கேட்டால் அதிக மக்களால் நேசிக்கப்பட்டு,பயிற்சி செய்யப்படும் கலை என சொல்லி விடலாமா?

    சில கலைகள் மனிதனை பின்னோக்கி அவன் மூதாதயரிடம்(Darwin theory) அழைத்து செல்லும்.சிலவோ முன்னோக்கி அவன் இலக்கை நோக்கி அழைத்துசெல்லும்.இரண்டும் ஒன்றா?

    ஜில் ஜில் நல்ல பெண் இல்லை என்று யார் சொன்னார்கள்? அவள் மோகனாவை விட நல்லவள்.ஒரு உயர்ந்த ஜீவன்!ஆனால் அவள் ஆட்டம்? அது நாட்டியமா? எனக்கு தெரிந்து திரைப்பட அநாட்டியமணிகள்.டி ஆர்.ராஜகுமாரி,மைனாவதி,
    ராஜ சுலோச்சனா ஆகியோர் அடங்கிய குழுவில் வேண்டுமென்றால் ஜில் ஜில்லை சேர்க்கலாம்.

    நகுமோமு வுடன் நாக்கு முக்கா வை ஒப்பிடலாமா?
    (ஒப்பிடலாம் என்று ஒரு பய சொல்லட்டும்!
    "சிவாஜியையும் விஞ்சிய சிவகுமார்" என்று நான் அடுத்த கட்டுரை எழுதுவேன்.உஷார்)

    வியட்னாமிலிருந்து பாலசந்தர் சொல்கிறார்..
    நாட்டு புற பாடல்களில் உள்ள ஆழமோ ,அழுத்தமோ,வாழ்வியல் முறைகளோ,nerrative nuiances எதுவுமே, எந்த கீர்த்தனைகளிலும் இல்லை. (நான் வந்தேன்,போனேன்,தொழுதேன்,அருள் புரி, என்ற ஆழமற்ற lyrics .ஆனாலும் ஒஸ்தி!!!)

    ஆஹா என்ன கண்டுபிடிப்பு!!

    இது ஒரு ஸ்டைல்..

    park ஷெரட்டன் buffet சாப்பிடும்போது "என்ன இருந்தாலும் அந்த பாண்டிபஜார் கையேந்தி பவன் பரோட்டா டேஸ்ட் இல்லை" (அந்த கடையில் பரோட்டாவை compound சுவர் மீதுதான் காய வைத்திருப்பார்கள்.அப்படி ஒரு hygiene)

    ஹாங்காங்கில் ஸ்டீம் பாத் எடுத்து கொள்ளும்போது "என்ன இருந்தாலும் திருத்துறைபூண்டி விறகு வெந்நீருக்கு ஈடாகுமா!" என்பது..
    (அதைத்தாண்டி ஒரு படி மேலே போகாத எங்கள் மனம் என்ன பாடு படும்!)

    சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை சங்கமம் எனும் பெயரில் ஒரு இரண்டு வாரம் லூட்டி அடிப்பார்கள்.மாநிலம் முழுவதிலுமிருந்து பல்வேறு நாட்டுப்புற கலைஞர்களை நூற்றுக்கணக்கில் வரவழித்து சென்னை கலைஞர் ஒருவர் பணம் பண்ணுவார்.அதில் ஒரு நிகழ்ச்சிக்கு என் ஆதர்ச எழுத்தாளர் JK தலைமை தாங்குகிறார் என அறிந்து நானும் போயிருந்தேன்.இடம் film chamber hall அங்கே திடீரென ஒரு மேளம் அடிக்க ஆரம்பித்தார்கள் பாருங்கள்! நான் என்னமோ ஏதோ என பதறி விட்டேன்.

    வாசலிருந்து JK அவர்களை மேடைக்கு கூட்டி வந்தனர் அக்கலைஞர்கள்.செவிப்பறை கிழிந்து விட்டது.மேலும் அவ்வகையான இசைக்குப்பின்னால் ஒரு பிரமுகர் நடந்து வருவதையும் அப்பொழுதுதான் நான் முதன் முதலில் பார்த்தேன்(பொதுவாக அவர்கள் படுத்துக்கொண்டுதான் வருவார்கள்)எல்லாம் ஓய்ந்ததும்அவர் மைக்கில் கர்ஜித்தாரே பார்க்கலாம் ..
    "இதுவல்லவா இசை! பாலக்காடு மணியெல்லாம் இதற்கு அருகில் வர முடியுமா?"
    அந்த சிங்கம் உளறி அப்போதான் நான் முதலில் பார்த்தேன்.

    முடிவாக ...
    அவரவர் ரசனை அவரவர்களுக்கு என்று சொல்லுங்கள்..(விட்டு) விடுகிறேன்.
    எல்லாம் ஒன்றுதான்! வித்தியாசம் இல்லை என்றால்..விடமாட்டேன்.
    Last edited by Ganpat; 10th April 2013 at 04:36 PM.

  4. #2613
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    . பரத நாட்டியம், கர்நாடக இசையின் உயர்வு பற்றி எனக்கு மாற்று கருத்து இல்லை.

    இப்படித்தான் அந்த பதிவே தொடங்குகிறது. சிலருக்கு reinventing the wheel at an exorbitant cost ரொம்ப பிடிக்கிறது. (வேலை பார்த்த இடத்தின் வாசனையோ?)

    நான் எங்கே நமது இசையையோ, கலையையோ குறை சொன்னேன்? ஆனால் அவற்றை மட்டுமே அழகுணர்ச்சி என்பதன் benchmark ஆக்கி, மற்றதை உதாசீனம் செய்தல் சரியில்லை என்று சொன்னேன்.

    கீர்த்தனை பற்றி நான் எழுதியதற்கு மறுப்பு ஒன்றும் இல்லையே?

  5. #2614
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    // சத்யப்ரியாவை piece piece ஆக்கும் ஆழமான ,குரூரம் நிறைந்த சத்தமில்லா மிரட்டல். //

    maadippadiyin naduvil amarndha vannam, idhaivida saththmillaamal S.V.Ramadossai mirattum thoranai. ("officela mattumillai, indha oorla unnai enge paarththaalum un thalaiyai eduththiduven.. get out")

  6. #2615
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    VOICE MODULATION - .
    ராகவேந்தர் சார்!

    நீங்கள் பொதுவாக ஒரு காணொளியோ media cuttings ஓ தானே போடுவது வழக்கம்?

    என்ன இந்த முறை, வித்தியாசமாக ஒரு பாட புத்தகம் போட்டிருக்கிறீர்கள்?

    GREAT becomes too small a word in front of தலைவர்.

    மிக்க நன்றி.

  7. #2616
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    // ஜில் ஜில் நல்ல பெண் இல்லை என்று யார் சொன்னார்கள்? அவள் மோகனாவை விட நல்லவள்.ஒரு உயர்ந்த ஜீவன்!ஆனால் அவள் ஆட்டம்? அது நாட்டியமா? எனக்கு தெரிந்து திரைப்பட அநாட்டியமணிகள்.டி ஆர்.ராஜகுமாரி,மைனாவதி,
    ராஜ சுலோச்சனா .அவர்கள் குழுவில் வேண்டுமென்றால் ஜில் ஜில்லை சேர்க்கலாம்.//

    Rajasulochana..?.

    Thirumal perumaiyil "karaiyeri meen vilaiyaadum kaaviri naadu" paadalil Padminikku equal aaga aadiya pinnum idhai ezhudha eppadi manam vandhathu..?.

    next, andha varusham 'mohanaangi' varuvatharku mundhaiya aandu varai koyil mandapaththil Jil Jil thaane aadiyirukkiraal..? (mittathaar nagalingam (nakkalaaga): "koyilla indha varusham unnoda naattiyam illemmaa").

  8. #2617
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    தில்லானா மோகனாம்பாள்

    ஆஹா! இந்தப் படம் இளைஞர் திரு. பிரபு ராம் அவர்களை ருஷ்ய கலாச்சார மய்யத்துக்கு வரவழைத்தது ஒரு மகிழ்ச்சி என்றால், அவரது ஆழ்ந்த அலசல்களையும் சேர்த்து இந்தத் திரிக்கு வரவழைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி!!

    ஒரு திரைப்படம் மிகச் சிறந்த படம் என்று சொல்வதற்கு நிறைய காரணங்களைச் சொல்லலாம் - சிறந்த கதை/திரைக்கதை, இயக்கம், நடிப்பு, இசை, எடிட்டிங், etc. ஆனால், மிக மிக முக்கியமான தலையாய காரணம் எனக்குத் தெரிந்து ஒன்று தான். காலங்கள் கடந்து நிற்கும் தன்மை - one which stands the test of time!

    ஒரு திரைப்படத்தின் அனைத்து அம்சங்களிலும் 99 சதவிகிதம் நிறைவை அடைந்த படம் என்றால் அது தில்லானா மோகனாம்பாள் மட்டும் தான். நகைச்சுவை, சோகம், பிரம்மாண்டம் என்று அனைத்து அம்சங்களும் அழகாகவும்/அளவோடும் அமைந்திருக்கும். தான் சார்ந்திருக்கும் சமூகம்/கலாச்சாரத்தைப் பற்றி அமைந்ததும், அனைத்து பாத்திரங்களுக்கும் மிகச் சரியான நடிக/நடிகையர்களைத் தேர்வு செய்து, அவர்கள் அனைவரும் தத்தம் பங்கினைச் செம்மையாகச் செய்ததும், ஏ.பி. நாகராஜன் அவர்களின் அற்புத இயக்கமும், இந்தப் படத்தைக் காலங்கள் கடந்து நிற்கின்ற படமாக்கி விட்டது. 100 சதவிகிதம் கிடைக்காததற்கு மிக முக்கிய காரணம் படத்தின் இறுதியில் வரும் மதன்பூர் எபிசோட் தான்! இதில் குறை ஏதும் இல்லை; இருப்பினும், அது வரை இருந்த வேகத்தையும் சரளத்தையும் சற்றே குறைத்து விட்டது. நலம் தானா பாடலுடன் முடிந்திருந்தால், உலகத்திலேயே இது தான் சிறந்த திரைப்படம் என்கிற அளவிற்குச் சென்றிருக்கும்!

    நடிகர் திலகம் மிக மிக நேர்த்தியாகவும், அதே சமயம் சரளமாகவும், பாத்திரத்திற்கு என்ன எவ்வளவு தேவையோ அதை மிகச்சரியாகத் தந்து நடித்த பல படங்களில் இது தலையாய படம். (திரு. கோபால் அவர்களின் கட்டுரையில் சொல்வது போல், அவர் பல தரப்பட்ட பள்ளி நடிப்பை வெவ்வேறு படங்களில் நடித்து விட்டது வேறு விஷயம்.) இத்தனைக்கும், இந்தப் படம் வருவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னரே புதிய இன்னொரு பாட்டையில் - "தங்கை" மூலம் பயணிக்கத் துவங்கி விட்டார்! புதிய இளைஞர் கூட்டம் அவரை ரசிக்கத் துவங்கி விட்டது! (இது போன்ற படங்கள் எந்தப் பள்ளிகளிலும் வராதோ!)

    இன்று காலை எங்கள் நிறுவனத்திற்கு வந்திருந்த ஒரு Trainer-இடம் பேசிக் கொண்டிருந்த போது தெரிந்தது அவரும் என்னைப் போல் நடிகர் திலகம் மற்றும் கவியரசுவின் ரசிகர் என்று. அவரிடமும் இதைப் பற்றி தான் பேசி கொண்டிருந்தேன் (of course உணவு இடைவேளை நேரத்தில் தான்). 1968-ஆம் வருடத்தில் தான் அவர் எத்தனை வித்தியாசமான பாத்திரங்கள் மற்றும் படங்களில் நடித்துள்ளார் என்று (மேலும் பல வருடங்கள் உண்டு - தில்லானாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததால் இந்த வருடம்) - திருமால் பெருமை - (பக்திப் படம்); ஹரிச்சந்திரா (புராணப் படம்); கலாட்டா கல்யாணம் (முழு நீள நகைச்சுவை); என் தம்பி (காரம், மணம், குணம், ஸ்டைல் நிறைந்த மசாலா - அற்புத நடிப்பையும் தாங்கி); தில்லானா (எல்லாம் சொல்லியாகி விட்டது); எங்க ஊர் ராஜா (மசாலா செண்டிமெண்ட் ஒருங்கிணைந்த ஜனரஞ்சகம்); லட்சுமி கல்யாணம் (ஒரு விதமான கலைப் படம் - off beat to a great extent - திரைக்கதையில் சொதப்பியிருந்தாலும்!); உயர்ந்த மனிதன் (மிகச் சிறந்த உயர் தரக் குடும்பப் படம்).

    அது எப்படி இவரால் மட்டும் ஒரே நேரத்தில் விமர்சகனுக்கும், அனைத்து தரப்பினருக்கும், வெகு ஜனத்திற்கும், தன்னுடைய ரசிகனுக்கும், தனக்கும் (ஆத்ம திருப்தி) நடிக்க முடிந்தது?

    தொடரும்.....

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி

    P.S.:- திரு பிரபு ராம் - "ங்கொப்புரான" - நான் சொல்லவில்லை! "ஏய்..." சொன்னது - அது நாந்தேன் ஹி...ஹி... (இந்த முழுப் படத்தில் நடிகர் திலகத்தின் ரசிகனுக்கான பிரத்தியேக நடிப்பு இந்த ஒரு இடத்தில் தான் - எல்லோரும் காத்துக் கொண்டிருப்பார்களே!)

    நலந்தானா பாடலில் - நானும் அன்று தான் கவனித்தேன் - மூலையில் focus ரேஞ்சின் மூலையில் இருக்கும் வடிவாம்பாளின் கடு கடு முகத்தை! ஏ பி என் - இவரது நுணுக்கம் மற்றும் [பரிபூரணத்துவம் வியக்க வைக்கிறது. இதே குணங்கள் நடிகர் திலகத்திடமும் இருந்ததால் தான் இருவரும் இணைந்து காலத்தைக் கடந்து நிற்கின்ற படங்களைத் தந்தார்கள்!)
    Last edited by parthasarathy; 10th April 2013 at 05:21 PM.

  9. #2618
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    திரு. கோபால் அவர்களே,

    தீபம் - ஒரு சிறிய திருத்தம் - அது மாபெரும் வெற்றி சரித்திரத்தின் ஆரம்பம் - இல்லை அது தான் பராசக்தியிலேயே ஆரம்பமாகி விட்டதே! 1976-இல் இருந்த ஒரு தற்காலிகத் தொய்வில் இருந்து மீண்டும் மாபெரும் வெற்றிப்பாதையில் நடை போட அனுகூலமாய் இருந்த படம்! சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் ரோஜாவின் ராஜாவிலேயே வெற்றிப்பாதையில் மீண்டும் பயணிக்க ஆரம்பித்து விட்டார்!

    திருக்கழுக்குன்றத்தில் இருந்த என் பெரியம்மா வீட்டிற்கு பள்ளிப் படிப்பை முடித்து லீவில் சென்றிருந்தபோது செங்கல்பட்டு அங்கமுத்து திரை அரங்கத்தில் - ஜே..ஜே.. என்ற மக்கள் கூட்டத்திற்கிடையே பார்த்து ரசித்தது மறக்க முடியாத அனுபவம்.

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி
    Last edited by parthasarathy; 10th April 2013 at 05:35 PM.

  10. #2619
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post

    Rajasulochana..?.

    Thirumal perumaiyil "karaiyeri meen vilaiyaadum kaaviri naadu" paadalil Padminikku equal aaga aadiya pinnum idhai ezhudha eppadi manam vandhathu..?.

    next, andha varusham 'mohanaangi' varuvatharku mundhaiya aandu varai koyil mandapaththil Jil Jil thaane aadiyirukkiraal..? (mittathaar nagalingam (nakkalaaga): "koyilla indha varusham unnoda naattiyam illemmaa").

    பரத நாட்டியத்திற்கு மிக முக்கியமானவை ஒயில்,தளர்வான உடலமைப்பு, பல பா(bha)வங்களை காட்டவல்ல முகம்.
    இதில் பானுமதி,ராஜசுலோச்சனா போன்றோருக்கு இறுகிய உடலமைப்பு.ஒயில் மிக குறைவாகவே இருக்கும்.
    இதை கொஞ்சிக்கொஞ்சி பேசி(படம் கைதிக்கண்ணாயிரம்) பாடலில் காணலாம்.மாறாக வஞ்சிக்கோட்டை வாலிபன் நாட்டிய போட்டியை நல்ல உதாரணத்திற்கு சொல்லலாம்.

    ஆம் ஜில் ஜில் தான் அதுவரை ஆடிக்கொண்டிருந்தார். அது "ஆலை இல்லா ஊரில் இலுப்பைப்பூ சக்கரை" என்பதை போன்றது.EID Parry ஆலையாக மோகனா வந்ததும் அங்கே பூவிற்கு என்ன வேலை?

  11. #2620
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    .
    கீர்த்தனை பற்றி நான் எழுதியதற்கு மறுப்பு ஒன்றும் இல்லையே?
    கோபால் அவர்களே!

    மேலெழுந்தவாரியாக பார்த்தால் எல்லா கீர்த்தனைகளும் ஒன்று போல தோன்றினாலும்,ஒவ்வொன்றிலும் ஓவ்வொரு அணுகுமுறை இருக்கும்.புகழ்வாய்ந்த தியாகராஜ கிருதிகளில் ஸ்ரீராமனை புகழ்வன,தான் படும் இன்னல்களை அவரிடம் சொல்லி அவரை விரைவில் தன்னை காக்க வருமாறு வேண்டுவன என்று இரு பகுதிகள்.இதில் ஒவ்வொரு கிருதியும் வெவ்வேறு அணுகு முறையில் இருக்கும்.ஒரு உதாரணம்.ஒரு பாடலில் "இன்னும் ஏன் என்னைக்காக்க வரவில்லை ஸ்ரீராமா?" என முறையிடும் போது,அழகாக சொல்வார் "நீ நிச்சயம் வந்திருப்பாய் ஸ்ரீராமா.ஆனால் உன் சாரதியான கருடன்தான் தாமதப்படுத்துகிறான் என எண்ணுகிறேன்" என்று.இதில் என்ன ஒரு அழகான management approach உள்ளது! நேரடியாக boss ஐ blame செய்யாமல் பழியை அவர் secretary மேல் போடுவது. (இது உண்மையில் வேலை பார்த்த இடத்தின் வாசனையே!)
    அதே போல தமிழில் பாபநாசம் சிவன் பாடல்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள்.
    "பிறவா வரம் தாரும்" என்பதில் "அப்படி பிறந்தால் மறவா வரம் தாரும்" எனும் உயரிய கருத்தினை இணைத்திருப்பார்.
    இது boss இற்கு option அளிக்கும் நல்ல அணுகுமுறை.

    கா என்ற சொல்லிற்கு காத்தல் என்ற பொருளும் உண்டு.
    "முரு கா வா வா ..என்னை கா வா வா"என நயம்பட எழுதியிருப்பார்.

    இப்படி உதாரணங்கள் பல உள்ளன.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •