Page 169 of 401 FirstFirst ... 69119159167168169170171179219269 ... LastLast
Results 1,681 to 1,690 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #1681
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நீண்ட நாட்களுக்கு பிறகு திரிக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியுடன் வரவு.

    1974 ஜூன் 1 முதல் எப்போது வருகை புரிந்தாலும் மதுரை மாநகரை, அதன் மக்களை தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்து விடும் S.P சௌத்ரி இந்த முறையும் மதுரை மக்களை தன வசப்படுதியிருக்கிறார். வெள்ளியன்று சென்ட்ரலில் திரையிடப்பட்ட இந்தப் பதக்கம் முதல் இரண்டு நாட்களில் பெற்ற வரவேற்பு அமோகம்! கடந்த பல மாதங்களாக எந்த படமும் பெறாத வசூலை முதல் இரண்டு நாட்களிலேயே பெற்றிருக்கிறது. வெள்ளி மற்றும் சனி இரவுக் காட்சிக்கு கூட அண்மையில் எந்தப் படத்திற்கும் வராத கூட்டம் வந்திருக்கிறது. இன்று வரவேற்பு உச்சக்கட்டத்தை எட்டிவிட்டது. மதியக் காட்சிக்கே கணிசமான பேர் திரண்டு வந்திருந்தனராம்! மதியக் காட்சிக்கு பால்கனியில் பாதிக்கு மேல் தாய்க்குலங்கள் என்பதை தியேட்டர் ஊழியர்களே ஆச்சரியமாக சொன்னார்களாம்!

    மாலைக் காட்சிக்கு 5 மணி முதலே அலப்பரை ஆரம்பித்து விட்டதாம். மிகப் பெரிய பானர்கள் இரண்டு வைக்கப்பட்டிருந்தன என்றும் மாலைகளின் அணிவகுப்பு குவிந்து விட்டதாகவும் செய்தி. 1000 மற்றும் 5000 வாலாக்கள் காதை கிழிக்க [அலைபேசியில் சத்தம் கேட்ட எனக்கே நேரில் கேட்பது போல்] டவுன் ஹால் ரோடே ஸ்தம்பித்ததாம். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு [கோவிலின் மேல கோபுர வாசலுக்கு அந்த ரோடு வழியாகதான் செல்ல வேண்டும்] சுற்றுலா வந்திருந்த பல வெளிநாட்டினர் இதை கண்டு வியந்து என்னவென்று விசாரித்து விஷயம் புரிந்தவுடன் பிரமித்து புகைப்படம் எடுத்தனராம்.

    நமது நண்பரிடம் பேசிய இரு வெளிநாட்டினர் படம் 39 வருடங்களுக்கு முன்பு வெளியான பழைய படம் என்பதையும் படத்தின் நாயகன் இறந்து 12 வருடங்கள் ஆகிறது என்பதையும் கேட்டு அசந்து விட்டனராம் இந்திய, தமிழக அரசியலை பற்றி சிறிது அறிந்து வைத்திருந்த அவர்கள் " Do you get any political support for this ?" என கேட்டனராம். இல்லை என்றதும் ஆச்சரியப்பட்டனராம்.

    வெகு நாட்களுக்கு பின் சென்ட்ரல் திரையரங்கில் இன்றைய மாலைக்காட்சிக்கு நீண்ட வரிசையில் நின்று மக்கள் டிக்கெட் வாங்கி சென்றதாக கூறினார். தியேட்டரில் க்யூ வரிசையைப் பார்த்தே நாளாயிற்று என சொன்னார்களாம்!

    எல்லாவற்றையும் விட முக்கியமான செய்தி இன்று மதியக் காட்சி வரை வந்த வசூலிலேயே தியேட்டரின் ஒரு வார வாடகை [30,000 ரூபாய்] கவர் ஆகி அதற்கும் மேலாக சென்று விட்டதாம். இன்று இரவுக் காட்சியோடு வசூல் ரூபாய் 45,000/- ஐ தொடும் என தெரிகிறது. அண்மைக் காலங்களில் பல படங்கள் ஒரு வாரத்தில் பெற்ற மொத்த வசூலை விட இது அதிகம்!.

    இந்த நாளிலும் இந்த சாதனை எளிதாக வரவில்லை. சுற்றுலாவை ஊக்கப்படுத்தவும் மதுரையும் சிறப்புகளை வெளிநாட்டினரும் மற்றவர்களும் அறிந்து கொள்ளும் வண்ணம் கடந்த மூன்று நாட்களாக [வெள்ளி சனி மற்றும் இன்று ஞாயிறு] மதுரையின் தொன்மையான சங்க காலம் தொட்டு விளங்கி வரும் பாரம்பரிய சிறப்புகளை, பைந்தமிழரின் பல்வேறு வாழ்கை முறைகளை, பாரம்பரிய கலை வடிவங்களை கண்காட்சியாகவும், நகரின் மையப் பகுதியில் ஊர்வலங்கள், தெருமுனை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வடிவங்கள் மூலமாக வெளிப்படுத்தும் "மாமதுரை போற்றுவோம்" என்ற பெயரில் அரசு நிர்வாகம் ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது இதன் காரணமாக கடந்த மூன்று நாட்களாக பேருந்துகள் போலும் நகரின் மையப் பகுதிக்கு வர முடியாமல் சுற்றி செல்கின்றனவாம். போக்குவரத்து வழிகள் மாற்றப்பட்டு நினைத்த இடத்திற்கு செல்லும் பயணம் கடினமாகியிருக்கிறது. இதன் காரணமாக பலர் கார் மற்றும் வாகனங்களை வெளியில் எடுக்கவில்லையாம். இருப்பினும் சென்ட்ரல் திரையரங்கிற்கு மட்டும் கூட்டம் குறையவில்லை.

    அது போன்றே படத்தின் பிரிண்ட்-ம் சுமார் ரகம்தானாம். பிரிண்ட் மட்டும் நன்றாக இருந்திருந்தால் படம் இன்னும் உயரம் தொட்டிருக்கும் என சொல்கிறார்கள்.

    எத்தனை இடர் வந்தால் என்ன! எத்தனை சோதனைகள் வந்தால் என்ன! அனைத்தையும் வெல்லும் திறன் பெற்றவரல்லவா சௌத்ரி! அவர் பெயரே சொல்லுமே அதை!

    S.P.சௌத்ரி என்றாலே Supreme Performer சௌத்ரி என்றுதானே அர்த்தம்!

    அன்புடன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1682
    Devoted Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    33
    Post Thanks / Like
    மிக இனிக்கும் சேதி தந்த திரு முரளி ஶ்ரீனிவாஸ் அவர்களுக்கு நன்றி..

    ஜூன் 1 - புதுவகுப்புக்கான பாடநூல்கள், எழுதுபொருட்கள் மாலை 5 மணியளவில் வாங்கி, அதை இருவர் மடியிலும் சுமந்தபடி
    நானும் என் அன்பு அப்பாவும் தங்கப்பதக்கம் பார்த்த அந்த ஆறுமணி மாலைக் காட்சி..

    கதவடைக்குமுன் அரங்குள் எட்டிப்பார்த்த சூரியனின் கதிர்க்கீற்று வெளிச்சம் இன்னும் என் மனதில் அழியாக் கோலமாய்..
    அரங்கிருண்டபின் எஸ் பி சவுத்ரியின் ஆர்ப்பரிப்பில் அடங்கிப்போன அத்தனை ரசிக இதயங்களின் துடிப்பு இன்னும் உணரத்தக்கதாய்..

    நடிகர்திலகம் - நான் விழித்திருந்த பொழுதுகளில் எத்தனை சதம் இவரால் ரசனை நிரம்பிக் கழிந்திருக்கும்!

    நன்றி நடிகர்திலகத்துக்கு!
    Last edited by kaveri kannan; 10th February 2013 at 11:34 PM.
    நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  4. #1683
    Devoted Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    33
    Post Thanks / Like
    1968 - எனக்கு 5 வயது.

    அப்போதுதான் படிக்கப்பழகிய நேரம்.

    சிவாஜி ரசிகர்களான என் அப்பா -அம்மா இருவருமே ஏற்கனவே எங்க ஊர் ராஜா பார்த்துவிட்டார்கள்.. ( எனக்குத் தெரியாமலே!!!!)

    என்னை ஒரு நாள் மாலைக் காட்சிக்கு அழைத்துச் சென்றார்கள் என் பெற்றோர். சிவாஜி படம் என்றால்தான் வருவேன் என்றபடி சென்றேன்.

    அரங்க வாசலில் உயிரா மானமா என எழுத்துக்கூட்டிப் படித்துவிட்டு, எங்க ஊர் ராஜா படத்துக்குத்தான் போகணும் என அடம்பிடித்து ஆர்ப்பாட்டம் செய்த
    என்னை - மற்றவர்கள் ஆர்வத்துடன் பார்த்து விமர்சனம் செய்ததும், என் அப்பா -அம்மா நிலை தர்மசங்கடமானதும்..

    ஒரு வழியாய் அழுத்திக் கிள்ளி என்னைப் பலவந்தமாய் உள்ளே தள்ளிப்போன என் அப்பா -அம்மாவிடம் பிணங்கியபடி வேண்டாவெறுப்பாய் அரங்கில் இருந்த என் மனம்
    அப்படம் நெடுக... இந்நேரம் எங்க ஊர் ராஜா பார்த்துக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும் என ஏங்கிய ஏக்கம்... இன்னும் நினைவில் பசுமையாய்..


    எத்தனை ஆண்டுகளாய் என் இதயத்தின் ரசனை அங்கம் நம் நடிகர்திலகம் வசம்..


    நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  5. #1684
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Dear Murali Sir,

    Thanks for your information. "S.P.சௌத்ரி என்றாலே Supreme Performer சௌத்ரி என்றுதானே அர்த்தம்!" - Exactly said.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  6. #1685
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Murali Sir,

    Madurai always for NT. As you told, not only for SP for other NT's movies
    the response will be similar or more than that. If you could get any
    photos of the allapparai pls post the same.

  7. #1686
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    டியர் காவேரி கண்ணன் சார்,

    தங்களின் "எங்க ஊர் ராஜா" அனுபவம் அருமை. சுருங்கச் சொன்னாலும் பசுமையான தங்களின் நினைவுகளை, என் விருப்பம் மற்றும் பாடல் காட்சிகள் வர்ணனையை அழுத்தமாக, அழகாகச் சொல்லும் தங்களின் பாங்கு சிறப்பாக உள்ளது. நன்றி.
    Last edited by KCSHEKAR; 11th February 2013 at 10:45 AM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  8. #1687
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    "KUMUDHAM - 13-02-2013"



    Last edited by KCSHEKAR; 12th February 2013 at 10:40 AM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  9. #1688
    Devoted Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    33
    Post Thanks / Like
    ஜானகி அம்மாவின் பேட்டிப் பதிவுக்கு நன்றி திரு கேசி அவர்களே..

    தகுதியற்றவர்களுக்கு உயர்வு தந்த தேசங்களின் பின்கால வரலாற்றில் அங்கீகாரங்கள் பிடுங்கப்பட்டு அசிங்கப்படுத்தப்பட்டதை அறிவோம்..

    உண்மையை அரசியல்/ சர்வாதிகாரம்/ குழும மனப்பான்மையால் அமுக்கி எழுதிய தப்பான வரலாற்றுப் பந்துகளை காலவெள்ளம் மேலே கொண்டு வந்து தள்ளும்..
    இளைய தலைமுறை அந்த ஊதல் பந்துகளை நசித்துக் கிழித்து காணாமல் போக்கும்..

    உண்மையான திறமையாளர்களை அங்கீகரிக்கத் தவறிய நாடும் அரசும் அடுத்தடுத்த காலகட்டங்களில், அந்தப் புதுத்தலைமுறையிடம் நாணி மன்னிக்க வேண்டி மண்டியிடும்..

    கர்ணன் கண்ட இந்தத் தலைமுறை கேட்காதா?

    இவரை விடவா '' பாரத்'' பெற இன்னொருவர் இந்த தேசத்தில்?
    நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  10. #1689
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    My Choice என் விருப்பம்

    பாடல் - அழுவதா இல்லை சிரிப்பதா
    குரல்கள் - டி.எம்.எஸ், பி.சுசீலா
    இசை - பெண்டியாலா நாகேஸ்வரராவ்
    படம் - பெண்ணின் பெருமை

    பொதுவாகவே நடிகர் திலகம் என்றாலே சோகம் என்று கூறும் அளவிற்கு தவறான ஒரு கண்ணோட்டம் பரவியிருக்கிறது. இது ஏன் என்று தெரியவில்லை. நெடுந்தகடு நிறுவனங்கள் கூட நடிகர் திலகம் படப் பாடல்களின் தொகுப்பை வெளியிட்டால் உடனே சோகம் தத்துவம் அல்லது டூயட் என்ற வரையறைக்குள் நின்று விடுகிறார்கள். இந்த தவறான கண்ணோட்டத்தை உடைத்தெறிவது நம் கடமை. அதற்கு நமக்கு பயன் படக் கூடியவை அவர் நடித்த ஜாலியான பாடல்கள்.

    இந்த அழகு யாருக்கு வரும், வசீகர புன்னகை என்று பலவாறு வர்ணனைகளை நாம் கண்டிருக்கிறோம், கேட்டிருக்கிறோம். அழகு முகம் பழகு சுகம் என்று சொர்க்கம் திரைப் படத்தில் கவியரசர் வர்ணித்ததற்கேற்ப, அழகு சொட்டும் இந்த முகத்தைப் பாருங்கள். இந்தப் புன்னகையில் வசீகரிக்கப் படாதவர்கள் இப்புவியில் இருப்பரோ.

    பெண்ணின் பெருமை திரைப்படத்தில் இடம் பெற்ற அழுவதா இல்லை சிரிப்பதா என்கிற இப்பாடல் என் மிக விருப்பமான பாடல்களில் ஒன்று. மிகவும் சிறிய வயதில் விவரம் தெரியாத பிராயத்தில் இந்தப் பாடலின் ஹார்மோனிய ஒலியும் நடிகர் திலகத்தின் சிரிப்பும் அப்படியே பசுமரத்தாணி போல் நெஞ்சில் பதிந்து விட்டன. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக என் நெஞ்சில் தங்கியுள்ள பாடல்களில் இதுவும் ஒன்று.

    டி.எம்.எஸ். மற்றும் பி.சுசிலா என்கிற இணையற்ற டூயட் பாடகர்களின் சாம்ராஜ்யத்தை துவக்கி வைத்த பாடல் அல்லவா. சரியான துவக்கம். டி.எம்.எஸ். மற்றும் சுசீலா குரல்கள், நடிகர் திலகம் மற்றும் எம்.என்.ராஜம் இருவரின் வசீகரப் புன்னகை, பின்னணி இசை, சக நடிகர்களின் ஈடுபாடு கலந்த உழைப்பு யாவையும் இப்பாடலை சிரஞ்சீவித்துவம் பெற வைத்து விட்டன.

    பாடலைப் பாருங்களேன். நீங்களே உணர்வீர்கள்.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #1690
    Devoted Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    33
    Post Thanks / Like
    விருப்பப்பதிவுக்கு நன்றி திரு ராகவேந்திரா அவர்களே..

    எதையுமே சிறப்பாகச் செய்யும் திறமை பெற்றவர் நம் நடிகர்திலகம்..

    சோகச்சுவையையும் அவர் மிகச் சிறப்பாய்ச் செய்ததனால்..
    அச்சுவையை அவரைக் கொஞ்சமும் விஞ்சி எவரும் செய்யாததனால் அப்படி தொகுப்புகள் வருகின்றன .. என நினைக்கிறேன்.

    இப்பாடலில் இடது கையில் கடிகாரம் ..

    பின்னாளில் பல படங்களிலும் அது வலது கையில்!
    நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •