அன்புச் சகோதரி வனஜா,
தங்களுடைய விருப்பமான ஞாயிறும் திங்களும் நிழற்படம் - மிக அபூர்வமானது . ஆனால் தனி ஸ்டில் தான் என்னிடம் உள்ளது. 40 ஆண்டுகள் கழித்து தற்போது தங்களுக்காக அதனைத் தேடியெடுத்து வெளியே எடுத்து நிழற்படமாக்கித் தந்துள்ளேன். இது நிச்சயம் அனைவருக்குமே உள்ளம் மகிழ்வூட்டும் என்பதில் ஐயமில்லை.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
டியர் வாசுதேவன் சார்,
தங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி. ஒன்றினைத் தவிர மற்றவை அனைத்தும் நம் பம்மலாரின் கைங்கரியம் தான். அவருக்குத் தான் நன்றி. ஏற்கெனவே மற்றொரு திரியில் பதியப் பட்ட நிழற்படங்களே.
அன்புடன்
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
அன்புச் சகோதரி வனஜா
தங்களுக்காக மேலே தரப்பட்டநிழற்படம் முற்றிலும் கருப்பு வெள்ளையாக்கப் பட்டு இணைக்கப் பட்டுள்ளது.
பயனுள்ளதாய் இருக்கும் என எண்ணுகிறேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
மெய்சிலிர்க்க வைத்த கட்டுரை... வாசுதேவன் அவர்களுக்குப் பாராட்டும் நன்றியும்..
மெத்தப்பொருத்தமாய் கூடுதல் சித்திரங்கள்... இராகவேந்திரருக்கு நன்றிகள்..
கண்பட் அவர்கள், கோபால் அவர்களின் களைகட்டும் பதிவுகளுக்கும்
வரைகலை வனஜா அவர்கள் வழங்கிய +வழங்கப்போகும் விழிவிருந்துகளுக்கும்
பாராட்டுகள்+ நன்றிகள்....
நடிகர்திலகத்தின் உடல்மொழி வரிசையில் அந்தத் தங்கச்சுரங்கத்தில் இருந்து அள்ள அள்ளக் குறையாத கட்டிகளை வெட்டி வெட்டித்தரும் அனைவரோடு என் சிறுகரமும்...
படம்: பாபு
பாடல்: இதோ எந்தன் தெய்வம்
உடல்மொழிக் கவிதை:
குழந்தையை ஆலவட்டம் சுற்றிய நடுவயது மனிதனுக்கு வரும் அந்த தலைச்சுற்றல்..
சில நொடிகளில் அது சரியாகும்போது வரும் விழி+ முகத்தெளிவு ----> செய்துகொண்டிருக்கும் பணியை அச்சிறு தடங்கல் தாண்டி செவ்வனே தொடரும் மனநிறைவு முகபாவம்..
உலகில் எங்கும் காணா அந்த அரிய கலைதேவன் நமக்காய் வந்தது நம் அதிர்ஷ்டம்...
2) படம்: படிக்காத மேதை..
பாடல் : ஒரே ஒரு ஊரிலே..
பாடச்சொன்னது சௌகார் ஜானகியை..
பாடவிரும்பி இடையில் வருபவர் ஓசையின்றி கை ஜாடையால் '' இரு... இங்கு நான் தொடர்வேன்'' என
ஜதி விலகாமல் சொல்லும் அந்த வினயமான கைமொழி..
கற்றதால் பெற்றதா ...பிறவியிலேயே இருந்ததா?
Nature OR Nurture?
NT is always a wonderful puzzle to me!
சில கேள்விகளுக்கு விடையில்லை!
சில கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருப்பதே அழகு!
Last edited by kaveri kannan; 29th January 2013 at 01:01 AM.
தங்களின் நடிகர்திலகத்தின் உடல்மொழி வரிசை பதிவு (பாபு பற்றும் படிக்காத மேதை) உன்னதம். தங்களின் தன்னிகரில்லா தமிழ் உணர்வைப் போற்றுகிறேன். தங்கள் தமிழைப் படிப்பதில் பெருமை அடைகிறேன். நன்றி! "கற்றதால் பெற்றதா ...பிறவியிலேயே இருந்ததா?" எனக் கேட்டிருந்தீர்கள். அவர் 'தெய்வப் பிறவி' அல்லவா!
நடிகர் திலகம் வெறும் பத்து நிமிடங்கள் மட்டுமே நடித்த "குழந்தைகள் கண்ட குடியரசு" படத்தைப் பற்றி நீண்ட, ஆனால் சுவையான ஒரு கட்டுரையை அளித்து மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்து விட்டீர்கள்.
தாங்கள் மீண்டும் வருகை புரிந்தது இந்தத் திரிக்கு புதிய வேகத்தைக் கொடுத்து விட்டது. பம்மலாரும் இணைந்தால்? ஆஹா! (பம்மலாரே:- காதில் விழுகிறதா?)
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
அன்புள்ள திரு. காவேரி கண்ணன் அவர்களே,
நடிகர் திலகத்தின் உடல் மொழிக் கவிதை அபாரம். அதை விட தங்கள் தமிழ் மிகவும் அபாரம்!
அதே "பாபு" படத்தில், முதல் முறை பாலாஜி வீட்டில் கீழே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, பக்கத்தில் அமர்ந்திருக்கும் ஸ்ரீ தேவி, இவரது இலையில் இருந்து பதார்த்தத்தை எடுத்து சாப்பிட்டவுடன், பயந்து, பாலாஜி மற்றும் சௌகாரிடம் குழந்தையை மன்னித்து விடுங்கள் என்று கூறியதும், இருவரும் மாறி மாறி ஸ்ரீ தேவியை, இவ்வளவு நாள் கத்திரிக்காயே சாப்பிட மாட்டாள், இப்போது சாப்பிடுகிறாளே என்று கூறியவுடன், நடிகர் திலகத்தின் முகத்தில் வினாடி நேரத்தில் தோன்றி மறையும் அதிர்ச்சி, அதிசயம், நம்ப முடியாத தன்மை, கண்ணீர் மற்றும் ஆனந்தம்! Spontaneity - இந்த வார்த்தையின் இலக்கணம் நடிகர் திலகம் வகுத்ததன்றோ!
தொடருங்கள்,
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
Last edited by parthasarathy; 28th January 2013 at 03:08 PM.
Bookmarks