Page 141 of 401 FirstFirst ... 4191131139140141142143151191241 ... LastLast
Results 1,401 to 1,410 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #1401
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    I came across a site that ranks NT's films
    http://www.ranker.com/list/sivaji-ga...aphy/reference

    Currently 87 films are added. Users can add more films.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1402
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிப்பு தெய்வத்தின் உடல் மொழி கவிதை.

    புதிய பறவை ,பார்த்த ஞாபகம் பாடலில், அன்னையின் இழப்பின் மெல்லிய சோகம், இழப்பை ஈடு செய்யும் ,பாடகியின் பாட்டில் அடையும் பரவசம்,sophisticated upbringing தந்த style ,எல்லாம் தேக்கி, நாக்கில் நெருடும் புகையிலை துகளை ,விரலால் எடுக்கும் நேர்த்தி.

    அதே புதிய பறவையில், கதையை சொல்லி முடித்து, அதீத துக்கத்தினால், அடைத்து கொண்ட மூக்கை, கைகுட்டையால் சிந்தும், improvisation .
    பார் மகளே பார் படத்தில், அழையா விருந்தாளியாய், வந்திருக்கும் வீ.கே.ராமசாமியுடன் காட்டும் நாசுக்கான உதாசீனம் கலந்த அலட்சியம்.

    அதே பார் மகளே பார் படத்தில், தனக்கு பிடிக்காத ஒரு வியாபார விஷயத்தை பேசும், வீ.கே.ஆரிடம், light ஆக சோம்பல் முறித்து, சோர்வையும்,அக்கறையின்மை கலந்த எதிர்ப்பை காட்டும் அற்புத உடல் மொழி.

    பாச மலரில், கொல்ல வந்த revolver ஐ வைத்து,பாசத்தினால் துளிர்க்கும் கண்ணீரை துடைக்கும் கவிதை.

    ஆண்டவன் கட்டளை, ஆறு மனமே ஆறு பாடலில், துறவறம் கலந்த,mystic detachment உடன் வேர்கடலை ஊதி சாப்பிடும் காட்சி.

    திருவருட்செல்வரின், அப்பூதி அடிகள் மனைவியின் முன் காஞ்சி பெரியவர் போல், ஒடுங்கிய துறவற pose .

    வசந்த மாளிகை குடிமகனே பாட்டில், ஒரு காமம் கலந்த mischievous பார்வை. காந்தம் போல் இருக்கும்.

    அதே பாடலில், அலட்சிய செல்லத்துடன் , CID சகுந்தலாவை உதைப்பது.

    வசந்த மாளிகையில், plum கடித்து,தன் வன்காதலை வாணிஸ்ரீயிடம் உணர்த்தும் காமம் தோய்ந்த கவிதை வன்மொழி.

    சவாலே சமாளியில், தற்கொலை முயற்சியில் ஜெயலலிதாவை காப்பாற்றி, அவர் tandrum throw பண்ணும் பொது, இவ்வளவுதானா நீ, என்னை புரிந்து கொண்டது என்று உடலசைவின்றி,பார்வையில் உணர்த்தும் அழகு.

    சுமதி என் சுந்தரியில், பலூன் காட்சியில், மரத்தை கைகளால் சுரண்டி, வாலிபர்களை உன்மத்தம் கொள்ள வைத்த அழகு.

  4. #1403
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Vankv View Post
    வருட வாரியாக, நடிகர்திலகத்தின் படங்கள் என் விருப்பம்.(ஒன்றிரண்டு என்று பின்னால் வரிசை படுத்த போகிறேன்.)
    1952- Parasakthi
    1953-Thirumbi Paar
    1954-Manohara,Andha Naal,Kalyam Panniyum Bramhachari,Thuli Visham,koondu Kili,Thooku Thooki,Ethirparadhadhu
    1955-Mudhal thedhi,Mangayar Thilagam,Koteeswaran
    1956-Naan petra Selvam,Nane raja,Pennin Perumai,Raja Rani,Amara deepam,Rangon radha
    1957-Makkalai Petra Maharasi,Pudhayal,Manamagal Thevai
    1958-Uthama Puthiran,Annaiyin Aanai,Sabash Meena
    1959-Veera Pandiya Kattabomman,Maragatham,Aval yaar,Baga Pirivinai
    1960-Irumbu Thirai,Deiva Piravi,Padikkatha Medhai,Pavai Vilakku
    1961-Pava Mannippu,Pasa Malar,Ellam Unakkaga,Palum Pazhamum,Kappalottiya Thamizhan
    1962-Parthal Pasi theerum,Valarpirai,Padithal mattum Podhuma,Bale Pandiya,Alaya Mani
    1963-Arivali,Iruvar Ullam,Kulamagal Radhai,Paar magale paar
    1964-Karnan,Pachai Vilakku,Andavan kattalai,Kaikadutha Deivam,Pudhia Paravai,Navarathri
    1965-shanthi,Thiruvilayadal,Neelavanam
    1966-Motor Sundaram Pillai,Mahakavi Kalidas,Saraswathi Sabatham,Selvam
    1967-Kanthan Karunai,Pesum Deivam,Thangai,Paladai,Thiruvarutchelvar,Iru Malargal,Ooty Varai Uravu
    1968-Galatta kalyanam,En Thambi,Thillana Mohanambal,Enga Oor Raja,Uyarntha Manidhan
    1969-Thanga Churangam,Kaval deivam,Anjal Petti 520,Nirai kudam,Deiva Magan,Sivantha Mann
    1970-Virtnam veedu,Ethiroli,Raman Ethanai ramanadi,Engiruntho Vanthal,Padhukappu
    1971-Kulama Gunama,Sumathi En sundhari,Savale Samali,Thenum Palum,Babu.
    1972-Raja,Gnana Oli,Pattikada pattanama,Vasantha maligai,Needhi
    1973-Bharatha Vilas,Engal thanga raja,Gowravam,Rajapart Ranga Durai,Manitharil manickam
    1974-Sivagamiyin Selvan,Thanga Padakkam,Anbai Thedi
    1975-Avanthan Manithan,Anbe aruyire,Pattum Bharathamum
    1976-Uthaman,Rojavin Raja
    1977-Deepam,Ilaya Thalaimurai,Annan Oru Koil
    1978-Andhaman Kathali,Thyagam,Ennai Pol Oruvan,General chakravarthi,
    1979-thirisoolam,Kavarimaan,Naan Vazha vaipen
    1980-Rishi Moolam
    1981-Kalthoon,Lorry Driver rajakannu,Keez Vanam Sivakkum
    1982-Hitler umanath,Vaa Kanna vaa,Thyagi,Thunai,Parikshaikku Neramachu
    1983-Miruthanga Chakravarthi,Vellai Roja
    1984-Vazhkai,Dhavaki Kanavugal
    1985-Mudhal Mariadhai,Rajarishi
    1986-Sadhanai,Marumagal,Anandha Kanneer,Viduthalai,Thaikku oru thalattu
    1987-Anbulla Appa
    1992-Thevar Magan,Chinna Marumagal,Naangal,
    1996-Oru Yatra Mozhi
    1997-Once more
    1998-En Aasai Rasave
    1999-Padayappa,Pooparikka Varugirom
    Last edited by Gopal.s; 19th January 2013 at 10:22 AM.

  5. #1404
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Vankv View Post
    looks like I've watched 98% of NT movies!
    Madam,
    The above is not the full list of his movies. It is only my pick of his movies yearwise. I watched all the movies in this list.

  6. #1405
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    என்னை பொறுத்த அளவில் அவரின் மிக சிறந்த பத்து படங்கள்.

    1)புதிய பறவை
    2)தில்லானா மோகனாம்பாள்.
    3)அந்த நாள்.
    4)முதல் மரியாதை.
    5)இருவர் உள்ளம்.
    6)கர்ணன்.
    7)கப்பலோட்டிய தமிழன்.
    8)உயர்ந்த மனிதன்.
    9)பராசக்தி.
    10)தேவர் மகன்.

    அவர் நடிப்பு திறனை மட்டும் வைத்து நான் தேர்ந்தெடுக்கும் சிறந்த பத்து.

    1)தெய்வ மகன்.
    2)கர்ணன்.
    3)நவராத்திரி.
    4)திருவிளையாடல்.
    5)முதல் மரியாதை
    6)உயர்ந்த மனிதன்.
    7)உத்தம புத்திரன்.
    8)தெய்வ பிறவி.
    9)திருவருட்செல்வர்.
    10)கெளரவம்.
    Last edited by Gopal.s; 19th January 2013 at 12:28 PM.

  7. #1406
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Gopal,

    என்னடா இன்னும் மேட்டூர் dam திறந்து விடப்படவில்லையே என இரண்டு வாரமாக யோசித்துக்கொண்டிருந்தேன்.
    இப்போ வேலை முடிஞ்சது..'வெல்ல' (pun intended) அபாய எச்சரிக்கை.."கரை ஓரம்" வசிப்பவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு இடம் பெயருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    நடத்துங்கள்..

  8. #1407
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இப்படி ஒரு short list கொடுக்கப்போய்தான் நான் திருமதி சாரதா விடமிருந்து டோஸ் வாங்கி கொண்டேன்.
    அது வேறு ஒரு தளத்தில்..சம்பாஷணை வெகு சுவாரசியமாக இருக்கும்.any-three interested to know the details?

  9. #1408
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் திலகம் உடல் மொழி.

    பாசமலரில், தன் மனைவியுடன் முதலிரவின் போது ,தங்கை மற்றும் அவள் கணவன் கொண்ட புகைப்படத்தை திருப்பி வைக்கும் ,நாணம் கலந்த பாச பண்பு.

    கௌரவத்தில், மன அமைதியிழந்து தவிக்கும் தந்தை, இரவில் சரியாக தூக்கம் இல்லாத போது , ARTIFACT யானை மரமிழுக்கும் பொம்மையிலுள்ள அறுந்து போன CHAINLINK ஒன்றை சீர் செய்ய முயலும் காட்சி.

    தங்க சுரங்கத்தில், சந்தன குடத்துக்குள்ளே, கிணற்று காட்சியில், SWING ஆகி ,திரும்பி வரும் , BUCKET ஐ ,ஸ்டைல் ஆக காலால் நிறுத்தும் அழகு.

    எங்க மாமாவில், நான் தன்னந்தனிக்காட்டு ராஜா பாடலில், குழந்தைகள் ஊதல்,horn ஊதி லூட்டி அடிக்கும் போது ,அடைத்து கொள்ளும் காதை ,விரலால் CLEAR செய்யும் 10 வினாடி GESTURE .

    சுமதி என் சுந்தரி, ஒரு தரம் பாட்டில், இளமை குறும்புடன், குளத்தில் கல் வீசும் bowling action .

    தெய்வ மகனில், வீட்டில் திருடன் புகுந்து விட்டான் என்றெண்ணி, இளைய மகன் hocky மட்டையை எடுத்து, anxiety , சிறிது அச்சம் கலந்த, தைரியத்துடன் ,முகம் தெரியாத திருடனை எதிர்கொள்ளும் அழகு.

    உத்தம புத்திரனில், பாதி ஆட்டம் பாட்டத்தில், அம்மா அட்வைஸ் பண்ண வரும் இடைஞ்சலை, ஒரு குழந்தையின் பிடிவாத மன நிலையில், காலை உதைத்து வெளியிடும் விக்ரமன்.

    அதே காட்சியில், no love ,no hate ,மனநிலையில், அம்மாவிடம் உணர்ச்சி பூர்வமான ஈடு பாடு இன்றி, மறுத்தும் பேச இயலாமல், ஊஞ்சலில் casual ஆக ஆடி கொண்டு, ஓர கண்ணால் அன்னையை பார்த்து, அவர் அறிவுரைகளை ,காதில் வாங்காத பாங்கு.

    அன்னையின் ஆணையில், உணர்ச்சி வச பட்டு, முரண்டி பனியனை கிழித்து, கீறி விடும் சாவித்திரியிடம் உடனே பதிலுக்கு வன்முறை பிரயோகிக்காமல்,washbasin போய் ,clean செய்து கொள்ளும், காட்சி.
    Last edited by Gopal.s; 20th January 2013 at 10:39 AM.

  10. #1409
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Ref:#1516

    vankv: yes.

    நாட்டாமை: நீங்க Ganpat ற்கு ஏதேனும் வேண்டப்பட்டவரா?

    vankv: ஆம் அவர் என் நண்பர்

    நாட்டாமை: செல்லாது! செல்லாது !! வேற யாரச்சும் ???

    பி.கு: அகிரா குரசாவாவும் பரிச்சயம் இல்லை ..கவுண்டமணியும் தெரியாது
    இப்போ விஜயகுமாராவது?
    Last edited by Ganpat; 20th January 2013 at 11:08 AM.

  11. #1410
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவர் கோபால் அவர்களே,,

    இப்பட்டிமன்றத்தில்,

    "தலைவர் உடல்மொழியில், அலட்சியம்" எனும் தலைப்பில் நான் பேச விழைகிறேன்:

    அலட்சியம்... பெயரில்தான் அலட்சியம்... உண்மையில் அதை வெகு ஜாக்கிரதையாக கையாள வேண்டும்.
    அவ்வகையில் "இலட்சிய நடிகர்" என்பது SSR ஐக்குறிக்கும் என்றால் "அலட்சிய நடிகர்" என்பது நம்மவரையே குறிக்கும்.மிக சிரத்தையாக உழைத்து நடிப்பையே அலட்சியப்படுத்திய பல நடிக நடிகையர் நடுவில், அலட்சியமாக நடித்து நடிப்பை இமயத்தின் உச்சிக்கு கொண்டு சென்றவர் தலைவர் அவர்கள்.உடனே தலைவர் கோபால் தன்னை சொல்வதாக நினைத்துக்கொள்ள வேண்டாம்.நான் சொன்னது அவருக்கும் தலைவனை..(மன்னிக்கவும் நம் தமிழ் கலாச்சாரப்படி பட்டி மன்றம் எனும் தகுதி பெற,ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் இப்படி ஒரு மொக்கை போடுதல் அவசியம்)

    "ஹ, என்ன துப்பாக்கி காட்டினால் பயந்துவிடுவேன் என நினைத்தாயா? நீ என் மனைவி தானே! கத்துவதை கத்திவிட்டு சமையலறைக்குள் ஒடுங்கு" என சொல்வது போல தான் பாட்டிற்கு துணிமணிகளை பயணத்திற்கு பெட்டிக்குள் வைத்துக்கொண்டே,பண்டரிபாயை அலட்சியப்படுத்துவதை சொல்வதா?

    "நாயே! சில காலத்திற்கு முன் என்னிடமே வேலைதேடி வந்து, என் தயவால் வாழ்ந்து கொண்டு, இப்போ எனக்கு எதிராகவே கொடி பிடிக்கிறாயா,உன் வாலை ஓட்ட நறுக்குகிறேன் பார்!" என சொல்வது போல , தன் முன்னே குதித்துக்கொண்டிருக்கும் ஜெமினியை, பர்ர்க்ககூட செய்யாமல், ஒரு பென்சிலை தன் கண் முன் நிறுத்தி, அதை பார்த்து பேசும் அலட்சியத்தை சொல்வதா?

    தலைவரே சற்று முன் நீங்களே சொன்னது போல (இது பட்டிமன்ற ஐஸ்) "இவன் என்ன இங்கே? சமய சந்தர்ப்பம் தெரியாமல்!" என நினைத்து தன் முன்னாள் நண்பன் ராமசாமியை, கண்டும் காணாதது போல காட்டும் அலட்சியத்தை சொல்வதா,

    "என்னால் அலட்சியப்படுத்தப்படும் அளவிற்கு கூட உனக்கு தகுதியில்லை. நீ ஒரு வெத்து சவடால் வைத்தி! கபடனும் கூட" என நாகேஷிற்கு சொல்லாமல் சொல்வது போல அவருடன் இணையும் ஒவ்வொரு காட்சியிலும் காட்டும் அலட்சியத்தை சொல்வதா,

    "நீ நல்லவன் ,ஆனால் அப்பாவி. அதனால் நீ உன் எஜமானியிடம், (அதாவது என் மனைவியிடம்) படும் பாட்டை பார்த்து வருந்திகொண்டே, ரசிக்கிறேன்.ஏனெனில் அவளும் அப்பாவிதான்! ஆனால் என்ன, பணக்கார அப்பாவி! enjoy. ஆனால் நான் உன் எஜமானன்; பணக்கார சமர்த்தன். ஆகவே நம் இடைவெளி அப்படியே இருக்கட்டும்" என சிவகுமாரிடம் சொல்லாமல் சொல்லும் ஒரு உயர்ந்த மனிதனின் நேர்மையான அலட்சியத்தை சொல்வதா,

    "என்னை அவன் ஜெயிச்சுடுவானோ! ஹ! நாளைக்கு, அவனுக்கு வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு பாடத்தை கோர்ட்டில் கறபிக்கிறேன்!" என அலட்சியத்தை உடலாலும்,ஆனால் 'அப்படி எதாவது அவன் ஜெயிச்சுட்டானா?' எனும் மனதில் உதிக்கும் ஒரு சிறிய பயத்தை கண்ணாலும்,அதை அடக்க இன்னும் அலட்சியத்தை ஏற்ற, புகைக்கும் பைப்பை ஊதி ஊதி காட்டுவது..
    எனும் இந்திய திரைப்படங்களுக்கே ஒரு கெளரவம் ஏற்படுத்திய காட்சியை சொல்வதா,

    "எனக்கு எப்படிடா நீ வந்து பொறந்தே? உதவாக்கரை! வயசுதான் ஆறது கழுதைபோல. ஆனால் படிப்பும் கிடையாது! வேலை வெட்டியும் கிடையாது!" என சொலவது போல "அப்பா!" என மரியாதையை கலந்த பயத்துடன் விளிக்கும் பாண்டியராஜனை "என்ன?" என ஒரு சொல்லால் குத்தி சாய்க்கும் அந்த தந்தைக்கே உரித்தான affectionate அலட்சியத்தை சொல்வதா,

    அல்லது

    அதே "என்ன?" எனும் சொல்லை, தான் உயிர் நண்பன் என நினைத்திருக்கும் தன் நம்பிக்கை சின்னாபின்னமாக, தன் மேல் அபாண்ட களங்கம் சுமத்தி, தன் தங்கையை திருமணம் செய்ய மறுக்கும் ஒரு சந்தேகப்பேர்வழியை, பயமுறுத்தி, திருமணத்திற்கு இணங்க செய்துவிட்டு, "எப்படியோ எடுக்கப்படவேண்டிய இந்த முடிவு, இப்படி எடுக்க நேரிட்டதே!" எனும் விரக்தி கலந்த துக்கத்தைத் தேக்கி, நண்பன் அறையை விட்டு மெதுவாக வெளியேறும் போது, "ஆனால் ஒன்று!" என அவன் கூவ, மிக அலட்சியமாகக் திரும்பிச் சொல்லும் அந்த காட்சி, நெஞ்சிருக்கும் வரை நிலைத்திருக்கும் அல்லவா?
    Last edited by Ganpat; 20th January 2013 at 11:09 AM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •