-
7th January 2013, 07:36 PM
#1331
Senior Member
Seasoned Hubber
திரு கோபால் அவர்களே ,
சவாலே சமாளி - தங்களின் விமர்சனக் கட்டுரை அருமை.
-
7th January 2013 07:36 PM
# ADS
Circuit advertisement
-
7th January 2013, 07:39 PM
#1332
Senior Member
Seasoned Hubber
திரு.முரளி சார்,
மதுரையில் நடிகர்திலகம் சிவாஜி சமூநலப்பேரவை சார்பில் நடைபெற்ற பராசக்தியின் வைர விழா தொகுப்பை சுருக்கமாக அழகாக அளித்ததற்கும், தங்களின் பாராட்டுக்கும் நன்றி.
இந்த நிகழ்வு குறித்து அனைத்து பத்திரிகைகளிலும் செய்தி வெளியாகியுள்ளது. அவை எனக்கு வரப்பேற்றவுடன் பதிவிடுகிறேன்.
-
8th January 2013, 12:03 PM
#1333
Senior Member
Seasoned Hubber
மதுரையில் நடிகர்திலகம் சிவாஜி சமூநலப்பேரவை சார்பில் நடைபெற்ற பராசக்தியின் வைர விழா - பத்திரிக்கை செய்திகள் தொகுப்பு -1
http://www.facebook.com/photo.php?fb...type=1&theater
http://www.facebook.com/photo.php?fb...type=1&theater
-
8th January 2013, 08:19 PM
#1334
Junior Member
Newbie Hubber
மோட்டார் சுந்தரம் பிள்ளை- 1966- பகுதி-1
ஒரு லாரி டிரைவர் ,அமெரிக்காவில், இரு குடும்பங்களை இரு நகரங்களில் ,ஒருவருக்கு தெரியாமல்,மற்றதை வைத்திருந்து, அவர் ஒரு விபத்தில் இறந்து விட,இரு மனைவியரும் ,இழப்பீடு கோரி ,காப்பீட்டு நிறுவனத்தை அணுகிய பிறகே உண்மை தெரிந்தது என்ற பர பரப்பான உண்மை கதையை, "The Remarkable Mr .Penny Packer" என்ற பெயரில் நாடகமாகவும்,பிறகு இதே பெயரில் ஹாலிவுட் படமாகவும் வந்து வெற்றி கண்டது.
வேப்பத்தூர் கிட்டு என்ற ஜெமினி கதை இலாகா எழுத்தாளர், இதை வாசனுக்கு சிபாரிசு செய்து, திரைக்கதை அமைத்தார். இதில் நடிக்க ,நடிகர் திலகமே சரியானவர் என்று முடிவு செய்து,அவரை 1962இல் அணுகிய போது ,என்ன காரணத்தாலோ மறுத்து விட்டார். வாசன் வேறு வழியின்றி, அசோக் குமாரை வைத்து, க்ருஹஸ்தி என்ற பெயரில் ஹிந்தியில் படமாக்கி வெற்றி கண்டார்.இந்த படத்தை பார்த்த சிவாஜி ,இதில் நடிக்க ஒப்புதல் கொடுக்க மளமளவென்று ,ஜெமினி நிறுவன தயாரிப்பாக ,அவர் மகன் எஸ்.எஸ்.பாலன் இயக்கத்தில், வளர்ந்து 1966 இல் வெளியாகி, வெற்றி கண்டது. சிவாஜி,சற்றே உடல் நிலை சரியின்றி,ஓய்வு எடுத்து,துரும்பாக இளைக்க தொடங்கிய 1966 இல் வந்த நான்கே படங்களில் ஒன்றானது.
ஒரு கார் garage வைத்திருக்கும் சுந்தரம் பிள்ளை தன் பழைய vintage காரிலேயே பயணிக்கும் பெரிய குடும்பஸ்தர். மனைவி மீனா, பிள்ளைகள் பாபு,விஜி,ராஜி,லல்லி,நிர்மலா,மாலா,விமலா,கமலா , அக்கா, அக்கா மகன் சாம்பு என அழகான குடும்பம். வெள்ளி இரவு வீடு வந்து, மனைவி மக்களுடன் தங்கி ,திங்கள் காலை தன் தொழிற்சாலை வேலைக்கு பட்டணம் செல்லும் குடும்பஸ்தர். மென்மையான, அதிர்ந்தும் பேசாத நற்பண்பாளர்,அனைவராலும் மதிக்க படும் பெரிய மனிதர், பல உதவிகள் சமூகத்துக்கு புரிபவர். மூத்த பெண் கமலா கல்யாணம் ஆகியும், கணவர் படித்து கொண்டிருப்பதால் ,புகுந்த வீட்டின் நிர்பந்தத்தின் பேரில், பிறந்த வீட்டிலேயே ,தாம்பத்யம் துறந்து ,தங்கியுள்ளாள்.அந்த ஊர் ஸ்டேஷன் மாஸ்டர் பையன் சேகரை, இரண்டாவது பெண் விமலா காதலிக்கிறாள் . சேகரின் தங்கை ரேவதியை சாம்பு விரும்புகிறான். மூன்றாவது பெண் மாலா ,principal பையன் மோகனை விரும்புகிறாள். இதற்கிடையில், மீனா கற்பமாகி, சுந்தரம் பிள்ளைக்கு ஒன்பதாவது குழந்தை பிறக்கிறது.கமலாவின் கணவன் கோபால் அப்பாவுக்கு தெரியாமல், சுந்தரம் பிள்ளை வீட்டுக்கு வந்து ,மனைவி கமலாவுடன் தங்கி செல்கிறான்.
பெண்களின் விருப்பம் அறிந்த சுந்தரம் பிள்ளை , principal ,ஸ்டேஷன் மாஸ்டர் வீடு சென்று சம்பந்தம் பேசி முடித்து, நிச்சயதார்த்த நாளை குறித்து,
நாளும் வருகிறது.
சம்பந்திகள் கூடி இருக்கும் போது ,சுந்தரம் பிள்ளைக்காக அனைவரும் காத்திருக்க, கண்ணன் என்ற விடலை சிறுவன் வீட்டுக்கு வந்து சுந்தரம் பிள்ளைதான் தன தந்தை என்றும்,அவசரமாய் school fees காட்ட பணம் வேண்டியிருப்பதால், factory சென்று அங்கும் இல்லாததால், விலாசம் விசாரித்து இங்கு வந்ததாக சொல்ல வீடே அல்லோல கல்லோல பட்டு நிச்சயதார்த்தம் நிற்கிறது. வீடு வரும் சுந்தரம் பிள்ளை கண்ணனை அன்போடு உபசரித்து பணம் கொடுத்து ,விடை கொடுக்கிறார். மொத்த குடும்பமே ,சுந்தரம் பிள்ளைக்கு எதிராக திரள, சுந்தரம் பிள்ளை வீட்டை விட்டு கிளம்புகிறார்.பிறகு,குடும்பத்தினர் வற்புறுத்தலால் திரும்பி வந்து, எல்லோரையும் சமாதான படுத்துகிறார். மீனா ஒருநாள், கணவனின் அடையாறு வீட்டின் தகவல் தெரிந்து அங்கே செல்ல, அங்கே தாயிழந்து தனித்து வாழும் லீலா,ரமேஷ்,கண்ணன்,சாந்தி என்ற நான்கு குழந்தைகளும் தன கணவன் குழந்தைகளே என்றறிந்து, இறந்த தாயில் படத்தை பார்த்து மயங்கி விழுகிறாள்.இதற்கிடையில் , கணவன் படிப்பு முடிந்து கமலா புகுந்த வீடு சென்று, அங்கே அவள் ஏற்கெனெவே கற்பம் என்ற உண்மை தெரிந்து திருப்பி கொண்டு விட படுகிறாள்.அங்கு ஏற்கெனெவே சுந்தரம் பிள்ளை வேண்டி வற்புறித்தி வர வழித்த ஸ்டேஷன் மாஸ்டர், பிரின்சிபால் இவர்களுடன் மூத்த சம்பந்தியும் அமர வைக்க பட்டு ,தன கதையை சொல்கிறார்.
மாமா வீட்டில் வளரும் சுந்தரம் பிள்ளை மாமாவின் இளைய பெண் மரகதத்தை விரும்ப, மாமா தன மூத்த பெண் மீனாவை அவள் விருப்பபடிsundaram உடன் கல்யாணம் செய்ய திட்டமிடுகிறார். அக்கா விருப்பமறிந்து ,மரகதம் ,காதலை விட்டு கொடுத்து அந்த திருமணத்தை நடத்தி வைக்கிறாள்.சுந்தரம் தன அக்கா கணவர் வேலை வாங்கி கொடுக்க ,குடும்பத்துடன் ரங்கூன் செல்கிறான்(யுத்த காலம்) அங்கு ஒரு விபத்தில் ,மனைவி, அக்கா குடும்பம் இறந்து விட்டதை எண்ணி, திரும்பி ஊர் வந்து சேர்கிறான். தன தவறையுணர்ந்த மாமா வற்புறுத்தலின் பேரில் மரகதத்தை மீண்டும் மணக்கிறான். திடீரென்று, அக்கா,அவள் மகன் சாம்பு, மீனா அனைவரும் உயிரோடு திரும்புவதாக சேதி வர, மாமாவின் கடைசி ஆசை படி, இருவருக்கும் பாதகம் வராமல், இருவரோடும் ஒருவர் அறியாமல் இன்னொருவரோடு குடும்பம் நடத்துகிறான்.கடைசியில் எல்லோரும் உண்மையறிந்து ,சமாதானமாகி சுபமாய் முடியும்.
(தொடரும்)
Last edited by Gopal.s; 9th January 2013 at 07:03 PM.
-
9th January 2013, 07:31 AM
#1335
Junior Member
Veteran Hubber
Motor Sundaram Pillai is a remarkable NT movie in which his subtle acting makes you feel like you are also with him till the end of the movie. No songs for him! He was the father of Jayalalitha, Kanchana .... who has the guts to act like this at this age! Without any dialogue in the climax NT brought the screen down in Karnan and in this movie he makes us tear jerking by his depiction as a victim father of circumstances!
-
9th January 2013, 11:28 AM
#1336
Senior Member
Seasoned Hubber
-
9th January 2013, 06:35 PM
#1337
Junior Member
Newbie Hubber
மோட்டார் சுந்தரம் பிள்ளை- 1966- பகுதி-2
நடிகர்திலகத்தின் மிக சிறந்த படங்களில் ஒன்றாக ,பல விமரிசகர்கள் இதை கொண்டாடுகிறார்கள். நடிகர்திலகத்தின் நடிப்பும் மிக மிக சிலாகிக்க படுகிறது. நடிகர்திலகம்,ஒரு இடத்தில் கூட குரலையே உயர்த்த மாட்டார். உடலசைவுகள் பத்திரத்தை ஒட்டியே இருக்கும். பின்னால் அவரின் கதாநாயகிகளாய் வலம் வந்த ஜெயலலிதா, காஞ்சனா ஆகியோருக்கு அப்பாவாக. அதுவும் ,அவர்கள் இருவருடனும் முதல் படம். அகில இந்தியாவிலும், இந்த தைரியம் , இமேஜ் என்பதை நடிப்பு திறமையால் உடைக்கும் திறமை, ரசிகர்களுடன் உள்ள நம்பிக்கை ,எவனுக்கும் இன்று வரை கிடையாது.
குழந்தைகள் ,மனைவி ஆகியோருடன், subtle demonstrative பாணியில் தன் வாஞ்சை,பாசம் ஆகியவற்றை வெளிபடுத்தும் அழகு. வாரம் ஒரு முறை குடும்பத்துடன் கழிக்கும் ,தலைவன் பாத்திரத்துக்கு அவ்வளவு மெருகு சேர்க்கும். இந்த பாத்திரத்தில், ஒரு குற்ற உணர்ச்சியில்லாத , எச்சரிக்கையான ஒரு உணர்வினை படம் முழுதும் தேக்கி ,தனது அசைவுகள் வசனம் பேசும் முறை அனைத்திலும் காட்டுவார். குழந்தை பிறக்க போகும் செய்தியை ஒரு மென்மையான கூச்சத்துடன்,இயல்பாய் அணுகும் கட்டம் இருக்கிறதே ,அடடா. வீட்டுக்கு வந்து,குழப்பத்துக்கு காரணமான மகனுக்கு, துளிகூட ,வேண்டா விருந்தாளி என்ற உணர்வோ, அல்லது குற்ற உணர்வோ எழ கூடாது, என்று அழகாய் உபசரணை செய்து, அனுப்பிய பிறகு, சிறிது uneasiness காட்டுவார். குடும்பத்தினருடன், பிடிபட்ட உணர்வு இன்றி, அவர்கள் நம்பிக்கையை தெரிந்து கொள்ளும் காட்சி, சிறியது ஏமாற்றத்துடன் வெளியேறும் காட்சி, பிறகு தான் தவறு செய்தவன் அல்ல என்ற ரீதியில் எல்லாரையும் பேச்சாலும்,செயலாலும் அணைத்து செல்லும் காட்சிகள்.(எவ்வளவு வேறுபாடு காட்டுவார் ,முன்னாள் வந்த பார் மகளே பார், வர போகும் உயர்ந்த மனிதன் சாயல்கள் துளியும் வராமல்)முரண்டும், சுந்தரராஜன்(சம்பந்தியை) உட்கார வைத்து உண்மையை உணர்த்த , ஒரு சில decibel கண்டிப்போடு உயர்த்தி பணிய வைப்பாரே!!!flashback காட்சியில் சைக்கிள் ஓட்டி வரும் காட்சியில், சிறிது இளைக்க ஆரம்பித்து,இளமையும்,அழகும்,துறுதுறுப்பும் மின்ன அவ்ளோ அழகுனா அப்படி ஒரு அழகு. ஒவ்வொரு வேறு பட்ட உறவுகள் ,நண்பர்களுடன் வேறு பட்ட சூழ்நிலைகளில் பேசும் போது ,subtle acting முறையில் staleness வர வாய்ப்புள்ளது. ஆனால் நடிகர்திலகம்,அதை handle செய்திருக்கும் விதம், ஏன் இன்று வரை இத்தனை கோடி பேர் உலக நடிப்பு மேதைகளில் முதல்வர் என்று கொண்டாடுகிறோம் என்ற காரணம் விளங்கும்.
supporting cast ,நிறைய கூட்டமாக வர வேண்டியிரு ப்பதால் ,NT தவிர யாருக்குமே தனி கவனம் போகாவிட்டாலும், சௌகார், பண்டரி பாய், மணிமாலா மனதில் நிற்பார்கள்.(சரோஜாதேவிக்கு பின் பின்னழகு ராணி என்றால் மணி மாலாதான்). எல்லாரும் ,அவரவர் பங்கை நன்கு பண்ணியிருப்பார்கள். crowded shots ,அபார கவனத்துடன் கையாள பட்டிருக்கும். ரவிச்சந்திரன்,சிவகுமார்,சுந்தரராஜன்,ஜெயலலிதா, காஞ்சனா எல்லோருக்கும் நடிகர்திலகத்துடன் முதல் படம்.
நகைச்சுவை காட்சிகள்,ஆனந்த விகடனில் தொடராக வந்த,தேவன் அவர்களின் துப்பறியும் சாம்பு ,நகைச்சுவையை ஒட்டி அமைந்திருக்கும்.(நாகேஷ் பெயரும் சாம்பு) கதையின் போக்கை ரொம்ப நெருடாமல், சுமாராக இருக்கும். வித்தியாசமான இந்த கதைக்கு, சுவாரஸ்யம் கெடாமல்(அத்தனை பாத்திரத்துக்கும் தேவையான spacing ,காட்சிகள் கொடுத்து) கம்பி மேல் நடக்கும் வித்தையை நன்றாக கையாண்டு,இயல்பான ,உயிரோட்டமான, பாத்திரத்தின் தன்மைக்கு இடைஞ்சல் தராத வசனங்களையும் அமைத்திருப்பார் வேப்பத்தூர் கிட்டு. (கிட்டு, கே.ஜே .மகாதேவன், கொத்த மங்கல ம் சுப்பு போன்றோரை தமிழ் பட உலகம் இன்னும் நன்றாக பயன் படுத்தி இருக்கலாம்).எஸ்.எஸ்.பாலன் இந்த படத்தை மிக நன்றாக ,தந்தை மேற்பார்வையில் கையாண்டிருப்பார். அந்த நாய்க்குட்டியை அழகாக பயன் படுத்தியிருப்பார்.குழந்தையை காட்ட ,எல்லோரும் பார்க்க முந்தும் காட்சியில் ,நாய் குட்டியும் முண்டியடித்து பார்க்கும். சிவாஜிக்கு எதிராக குடும்பமே அம்மா பக்கம் நிற்கும் போது ,நாய் குட்டியும் அம்மா பக்கம் போகும் அழகு.(நீயுமா என்று சிவாஜி செல்லமாக வெதும்புவார்).
சிவாஜி-மணி மாலாவிற்கு ஒரு நல்ல duet கொடுத்திருக்கலாம். காத்திருந்த கண்களே ,MSV இசையில் super -hit பாடல்.ரவிச்சந்திரன்-ஜெயலலிதா ஜோடி கண் படும் அளவு அவ்வளவு பொருத்தம்.மற்ற பாடல்கள் ஓகே ராகம்.(துள்ளி துள்ளி விளையாட, மனமே முருகனின், ஜிகு ஜிகு ஜிகு , காதல் என்றால் என்ன)MSV க்கு வாழ்க் கை படகு அளவு scope உள்ள படமல்ல.
மற்ற படி ஜெமினி நிறுவங்களின் பிரம்மாண்ட படங்களை விடவும்,இன்றளவும் பேச படுகிற படம் இது. (மற்றவை சந்திரலேகா ,ஒளவையார்,வஞ்சிகோட்டை வாலிபன்,இரும்புத்திரை ).
(முற்றும்)
Last edited by Gopal.s; 9th January 2013 at 07:05 PM.
-
9th January 2013, 07:02 PM
#1338
Junior Member
Seasoned Hubber
Mr Gopal,
Indepth analysis on MSP. As you mentioned, nobody have the guts
to takeup this type of role. This shows our NT not bothered about
image.
-
9th January 2013, 09:47 PM
#1339
Junior Member
Senior Hubber
Originally Posted by
Murali Srinivas
இன்றைய தினத்தில் மதுரை மாநகரில் நடைபெற்ற பராசக்தியின் வைர விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றிருக்கிறது. இன்று காலை 10 மணிக்கு துவங்கிய விழா மதியம் 2.30 மணி வரையிலும் மீண்டும் மாலை 6 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரையிலும் நடைபெற்றிருக்கிறது.
காலையில் நடிகர் திலகம் நடித்த பல்வேறு படங்களின் கிளிப்பிங்க்ஸ் திரையிடப்பட்ட நிகழ்வோடு விழா தொடங்கியிருக்கிறது. 11 மணிக்கு மேல் விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்த சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றியிருக்கின்றனர். இறுதியாக சிறப்பு விருந்தினராக வந்திருந்த திருச்சி சிவா அவர்கள் மதியம் 1.30 மணிக்கு பேச துவங்கி 2.30 வரை பேசியிருக்கிறார். நண்பகல் நேரம் ஆயினும் கூட ஒருவர் கூட கலைந்து செல்லாமல் பேச்சை கேட்டிருந்தனராம்.
மாலை 6 மணிக்கு மெல்லிசை கச்சேரி நடைப்பெற்றிருகிறது. நடிகர் திலகம் நடித்த படங்களிருந்து பாடல்கள் பாடப்பெற்றனவாம். மெல்லிசை குழுவில் இசை கருவிகளை இசைத்தவர்களும் பாடகர்களும் தங்கள் பங்கை செவ்வனே செய்தனர் என்று கேள்வி.
இனி சில விழா துளிகள்.
விழா நடைபெற்ற இடம் காமராஜர் சாலையில் அமைந்துள்ள v.s.செல்லம் கல்யாண மஹால். ஒரு காலத்தில் மதுரையில் மிகவும் பிரபலமாக விளங்கிய v.s.செல்லம் சோப் நிறுவனத்தினர் ஒரு திரையரங்கை புதிதாக கட்ட வேண்டும் என்று எண்ணத்தில் காமராஜர் சாலையில் [மாரியம்மன் தெப்பகுளத்திற்கு சற்று முன்னதாக] கணேஷ் தியேட்டருக்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ் /தினமணி பத்திரிக்கை அலுவலகத்திற்கும் நடுவில் உள்ள இடத்தை தேர்ந்தெடுத்தனர். ஆனால் பிறகு அவர்கள் திட்டம் மாறி அந்த இடத்தில கல்யாண மண்டபம் கட்டினார்கள். தியேட்டர் என்பதற்காக பெரிய இடம் வாங்கப்பட்டு பின்னர் அது மண்டபமாக மாறியதால் மதுரையில் அமைந்துள்ள பெரிய திருமண மண்டபங்களில் இதுவும் ஒன்று. அந்த மண்டபம் வழிய வழிய ஆட்கள திரண்டு விட்டனராம்.உள்ளே நிற்க கூட இடம் இல்லாமல் மண்டபத்திற்கு வெளியே, மண்டப வளாகத்தையும் தாண்டி சாலையில் ரசிகர்கள் கூட்டம் அணி திரண்டிருந்ததாம். காலை பத்து மணிக்கு விழாவிற்கு சென்ற நண்பன் அப்போதே மண்டபத்தில் இருந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு சிறிது நேரத்தில் மண்டபம் நிறைந்து விடும் என அலைபேசியில் தகவல் சொன்னான். அதே போன்றே நடந்தது. ஆயிரக்கணக்கில் ஆட்கள் வந்திருந்ததாக தகவல்.
காலையில் கே.கே.நகரில் ராஜா முத்தையா மன்றம் மற்றும் நீதிமன்றத்திற்கு எதிரில் அண்மையில் காலமான திரு வி.என். சிதம்பரத்தால் அமைக்கப்பட்டுள்ள நடிகர் திலாக்தின் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு ரசிகர்கள் வாகனங்களில் ஊர்வலமாக விழா மண்டபத்திற்கு சென்றதாக தகவல். செல்லும் வழியெல்லாம் ஒரே அலப்பரையாம்.
மாலையில் மண்டபத்தை சுற்றிலும அமைக்கப்பட்டிருந்த நடிகர் திலகம் பானர்களுக்கும் கட் அவுட்களுக்கும் மாலை எல்லாம் அணிவிக்கப்பட்டு தெருவில் ஒரே அமர்க்களமாம்.(வழக்கம் போல்) போலிஸ் வந்து ரசிகர்களை மண்டப வளாகத்திலேயே கொண்டாட்டங்களை வைத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தனராம்.
மதியம் உணவு தயாராக இருந்தும் கூட காலை விழா முடியும் வரை யாரும் எழுந்து செல்லாமல் பேச்சை ரசித்து கேட்டனராம். நெருங்கிய உறவினர் வீட்டு திருமணங்களில் கூட சாப்பிட்டவுடன் கிளம்பி போய் விடும் இன்றைய காலகட்டத்தில் மதிய உணவு அருந்திய பிறகும் கூட, அதன் பிறகு மாலை 6 மணிக்குதான் விழா நிகழ்ச்சிகள் என்று தெரிந்திருந்த போதும் யாரும் மண்டபத்தை விட்டு வெளியேறாமல் அங்கேயே அமர்ந்து பல பழைய நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டிருந்தனராம்.
நடிகர் திலகத்தின் மேல் ரசிகர்ள் வைத்துள்ள இத்தகைய அன்பை சுட்டிக் காட்டிய திருச்சி சிவா இப்படி பேசினாராம்.ஒரு மனிதன் வாழும் போது மனிதர்கள் அபிமானிகள் அவனை சூழ்ந்திருப்பது அதிசயமல்ல. ஆனால் ஒருவன் மறைந்த பிறகு, அவன் இறந்து 11 வருடங்கள் ஆன பிறகு, இறக்கும் போது எந்த அரசு/கட்சி பதவிகளிலும் இல்லாத ஒரு மனிதன், அவன் பெயர் நினைவில் நிறுத்தப்படுகிறது, அவன் புகழை பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் அதன் பின்னால் வலுவான சக்தி இயங்க வேண்டும், அப்படிதான் நாம் இதுவரை கண்டு வருகிறோம். ஆனால் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் கூட்டத்தை பார்த்தோமென்றால் அரசியல் ரீதியிலான இயக்கம் பின்னணியில் இல்லை. அரசாங்க நிர்வாகத்தின் பின்துணை இல்லை. அரசு பதவிகளிலோ அல்லது அதிகாரிகள் மட்டத்திலோ இவற்றை தூக்கி நிறுத்தும் முயற்சிகள் இல்லை. இதை செய்தோம் என்றால் பட்டம் பதவி காசு பணம் என்று பிரதி பலன் கிடைக்ககூடிய வாய்ப்புகள் இல்லை. கூட்டத்திற்கு வந்து போவதற்கு காசு பணம் கொடுப்பதில்லை இத்தனை இல்லைகளையும் மீறி இங்கே ஆயிரக்கணக்கில் வந்திருக்கிறீர்கள் என்று சொன்னால் இன்னும் வர முடியாத இது போன்ற பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் இப்படிப்பட்ட படை இப்படிப்பட்ட ஒரு மாஸ் வேறு யாருக்கும் அமைந்திருக்காது. இப்பேர்பட்ட ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்று சொன்னால் நடிகர் திலகம் கொடுத்து வைத்தவர்.
ஏறத்தாழ ஒரு மணி நேரம் பேசிய சிவாவின் பேச்சு மிகவும் ரசிக்கத்தக்கதாய் அமைந்திருந்தது என்று சொன்னார்கள். மேடையிலும் மண்டபத்திலும் மகாத்மா பெருந்தலைவர் மற்றும் நடிகர் திலகத்தின் படங்கள் வைக்கப்பட்டிருந்தனவாம்.
இது நண்பர்கள் மூலமாக சேகரித்த தகவல்கள். மேலதிக்க தகவல்கள் கிடைத்தவுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இந்த விழாவை இத்துணை சிறப்பாக நடத்திய சந்திரசேகர் அவர்களுக்கும் மாநில நிர்வாகிகளுக்கும் பல்வேறு வகையில் உதவி ஓத்துழைப்பு நல்கிய அனைத்து நல இதயங்களுக்கும், வெளியே தன பெயரை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் விழா சிறப்பாக நடைபெற உதவிய நண்பர் மதுரை சந்திரசேகர் போன்றவர்களுக்கும் நான்மாடக்கூடல் வாழ் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் நமது இதயங்கனிந்த நன்றியும் நல்வாழ்த்துகளும்!
தன் மன்னவன் யார் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்த மதுரையே! உனக்கு என் சிரந்தாழ்ந்த வணக்கம்!
அன்புடன்
Murali sir. excellent write-up. madurai endral ninaivukku varuavar murali first and formost. neril poga mudiyatha kuraiyai pokki vittir murali sir. indrum madurai NT yin kottai ena prove panniya kc sir and madurai NT fans organisations mikka nandri.
-
10th January 2013, 10:39 AM
#1340
Senior Member
Seasoned Hubber
Bookmarks