-
2nd November 2012, 10:22 PM
#1131
RS,
People at various points of time had written about Vijay of Deivamagan and Marudu of Bale Pandiya including yours truly but if you ask whether it was a detailed write up on this characters, it was not. Vani Rani was an entirely different story. NT did it when CVR and Vanishree requested him to help out. Chankiya the original director of the film passed away during half stage and CVR took up the mantle from there.
The likes of Parthasarathy and Gopal would love to write about these characters and NT's depiction of the same.
Regards
-
2nd November 2012 10:22 PM
# ADS
Circuit advertisement
-
2nd November 2012, 10:26 PM
#1132
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
rsubras
there had been numerous write ups on the celebrated characters played by Sivaji ganesan sir. ......But I believe Sivaji sir would have given some nuances in these roles also. would be nice if someone can throw light on roles such as these?
YOU HAVE COME TO THE POINT. THIS IS WHAT I HAVE BEEN EXPECTING FROM THE CONNOISSEURS LIKE YOU TO ASK. This is what is the approach I was looking for. Thank you Subramani. Definitely your questions will be answered. There are lots and lots of nuances in each and every film of his. Please look out for postings in these lines as usual ... usual because ... this is what we have been doing all this long .. And so in future.
In fact these roles too have nuances. Particularly the song "Parthu Po" which was picturised partly in the India International Trade Fair at Island Grounds and indoors has a few nuanced performance by NT.
Raghavendran
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
2nd November 2012, 11:43 PM
#1133
சாரதி,
நடிகர் திலகத்தின் நடிப்பில் nuances எனப்படும் நுண்ணிய வெளிப்படுத்தல்களை காட்சியமைப்பின் உதவியோடு அழகாய் பதிவு செய்திருக்கிறீர்கள். ஒரு நாள் அல்லது ஒரு மாதம் ஏன் பல வருடங்கள் இடைவெளி நேர்ந்தாலும் அவரால் (மட்டும்) அதே உணர்வை முகத்திலும் சரி வசனம் பேசுவதிலும் கொண்டு வர முடியும். அது அவருக்கு கை வந்த கலை.
இதை படிக்கும் போது ஒரு விஷயம் நினைவிற்கு வந்தது [அதைதான் அலை பேசியில் பேசும் போது வேலை பளு இருப்பதால் சற்று நேரம் கழித்து தொடர்பு கொள்கிறேன் என்று சொன்னேன்]. ஒரு சந்தர்ப்பத்தில் இயக்குனர் நடிகர் மனோ பாலாவிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் ஒரு செய்தியை பகிர்ந்துக் கொண்டார்
முதல் மரியாதை படப்பிடிப்பு இரண்டு மூன்று கட்டமாக மைசூர் சுற்றுவட்டாரங்களில் நடைப்பெற்றது. முதல் கட்டப் படப்பிடிப்பில் நடிகர் திலகம் ஒரு காட்சியில் தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு கையில் ஒரு மம்மட்டி வைத்து தரையில் ஏதோ தோண்டி வசனம் பேசுவதாக காட்சி [படத்தில் இடம் பெற்றதா என்பது நினைவில்லை]. இயக்குனர் பாரதி ராஜாவும் சரி ஒளிப்பதிவாளார் கண்ணனும் சரி ஓகே சொல்லி விட்டனர். சென்னைக்கு திரும்பி வந்து பிலிம்-ஐ கழுவி பார்த்த போதுதான் அந்த காட்சி பிலிம்-ல் சரியாக பதிவாகாமல் Out of Focus ஆக இருந்திருக்கிறது. காட்சி எடுத்த பின் நடிகர் திலகம் இரண்டு முறை சரியாக வந்திருக்கிறதா என்று கேட்டாராம். சரி அடுத்த கட்ட படப்பிடிப்பில் adjust செய்துக் கொள்ளலாம் என்று இருந்து விட்டனராம்
இரண்டாம் கட்டம் முடிந்து இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடக்கும் தறுவாயில் இந்தக் காட்சியின் ஞாபகம் வந்தவுடன் இதை எப்படி எடுப்பது அல்லது இதை எப்படி நடிகர் திலகத்திடம் சொல்வது என்று பெரிதும் தயங்கியிருக்கிறார்கள். காரணம் அந்த குறிப்பிட்ட காட்சியின் படபிடிப்பு முடிந்து அப்போதே ஒரு ஆறு மாதத்திற்கு மேல் ஆகி விட்டது பிறகு வசனம் இல்லாமல் காட்சியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். வசனத்தை voice over-ஆக செய்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
நடிகர் திலகத்திடம் சென்று இந்த costume பிளஸ் முண்டாசு கட்டி கையில் மம்மட்டி வைத்து நிலத்தை தோண்டுவது போல் போஸ் கொடுங்கள். Promotional still--ற்காக என்று சொல்லி விட்டார்கள் நடிகர் திலகமும் சரி என்று சொல்லி விட்டார். காமிராவை silent ஆக ஸ்டார்ட் பண்ணி விடுவதாக் பிளான்.
முண்டாசு கட்டி கையில் மம்மட்டி வைத்து நிலத்தை தோண்டுவதற்கு முன் நடிகர் திலகம் நிமிர்ந்து " ஏம்பா பாரதி, நான் சும்மா நிலத்தை தோண்டற மாதிரி போஸ் கொடுத்தா போதுமா இல்லை அன்னைக்கு பேசின அந்த வசனத்தையும் பேசணுமா?" என்று கேட்டாராம். அப்படியே பூமி பிளந்து தன்னை விழுங்கி விடாதா என்று ஒரு கணம் பாரதி ராஜாவிற்கு தோன்றி வெட்கி தலை குனிந்தாராம். அதன் பிறகு சிறிது நாட்களுக்கு நடிகர் திலகத்தின் முகத்தை பார்க்கவே அவருக்கு வெட்கமாக இருந்ததாம்.
இங்கே இதை குறிப்பிட காரணம் நீங்கள் சுட்டிக் காட்டிய அந்த ஒரு நுணுக்கமான நகாஸ் வேலைகள் மற்றும் நினைவாற்றல் எந்தக் காலத்திலும் அவரிடமிருந்து மறையவுமில்லை, குறையவுமில்லை.
மீண்டும் நன்றி சாரதி.
அன்புடன்
Last edited by Murali Srinivas; 2nd November 2012 at 11:50 PM.
-
3rd November 2012, 09:42 AM
#1134
Senior Member
Seasoned Hubber
டியர் சசிதரன்
தங்களுடைய பதிவினைப் படிக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதே சமயம் தங்களுடைய பணிவு, மரியாதை போன்ற நற்குணங்களை எடுத்துக் காட்டுகிறது. தாங்கள் கூறியது போல் 80களின் சூழ்நிலை பல நல்ல படங்களைப் பார்க்கும் வாய்ப்பினை தங்களைப் போன்ற பல சிவாஜி ரசிகர்களுக்கு நல்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமே. உண்மையில் சொல்லப் போனால் தமிழகத்தை விட இலங்கையில் நடிகர் திலகத்தின் பல படங்கள் மக்கள் வரவேற்பை அதிக அளவில் பெற்றுள்ளன. உத்தமன், வசந்த மாளிகை, பைலட் பிரேம்நாத் போன்ற படங்களைக் கூறலாம். 70 மற்றும் 80களில் தகவல் தொழில் நுட்பம் அதிகமாக வளராத கால கட்டங்களில் கடிதப் போக்குவரத்து மட்டுமே சாத்தியமாக இருந்த கால கட்டத்தில் இலங்கையில் எனக்கு ஓரிரு நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் மூலம் நடிகர் திலகத்தின் படங்களின் வரவேற்பினைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வோம். அவையெல்லாம் மறக்கவொண்ணா நாட்கள்.
தங்களிடம் விஎச்எஸ் பிரதிகள் இன்னும் உள்ளதா. அவற்றை ஓரளவு சரி செய்து பிரதி எடுக்க முடியுமாயின் தயவு செய்து மறக்காமல் செய்யுங்கள். காரணம் தற்போது வெளிவரும் நெடுந்தகடுகள் பல முழுப்படத்தைக் கொண்டு வருவதில்லை. சில படங்களின் முக்கியமான காட்சிகள் விடுபடுகின்றன. எனவே தாங்கள் விஎச்எஸ் பிரதிகளை முடிந்த வரை பிரதி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பின் மேலும் தொடரும்
அன்புடன்
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
3rd November 2012, 02:03 PM
#1135
Junior Member
Newbie Hubber
Originally Posted by
rsubras
there had been numerous write ups on the celebrated characters played by Sivaji ganesan sir. Interested to know if there had been similar write ups on certain low profile, less noted roles such as Bale Pandia Rowdy character, Vani Rani Vaanisree's lover character, Deiva magan younger son character etc., to be frank these are roles that I do not like that much..the rowdy character and younger son character fading in front of the more like-able and powerful roles played by NT in the same movie. Vani Rani role... I dont know if that role required some one as great as Sivaji at all....... But I believe Sivaji sir would have given some nuances in these roles also. would be nice if someone can throw light on roles such as these?
Subra Sir,
My short write up on Deiva magan Vijay.
http://www.mayyam.com/talk/showthrea...592#post843592
-
3rd November 2012, 02:06 PM
#1136
Junior Member
Newbie Hubber
Originally Posted by
Vankv
I would like read more info about NT movies which were never released.
You may find it interesting
http://www.mayyam.com/talk/showthrea...723#post844723
-
3rd November 2012, 02:36 PM
#1137
Junior Member
Newbie Hubber
Originally Posted by
RAGHAVENDRA
YOU HAVE COME TO THE POINT. THIS IS WHAT I HAVE BEEN EXPECTING FROM THE CONNOISSEURS LIKE YOU TO ASK. This is what is the approach I was looking for. Thank you Subramani. Definitely your questions will be answered. There are lots and lots of nuances in each and every film of his. Please look out for postings in these lines as usual ... usual because ... this is what we have been doing all this long .. And so in future.
In fact these roles too have nuances. Particularly the song "Parthu Po" which was picturised partly in the India International Trade Fair at Island Grounds and indoors has a few nuanced performance by NT.
Raghavendran
Well said Subras sir, Raghavendar Sir. It is my wish also to throw more light on unnoticed ,well-done characters and scenes. I'll try my best to bring it up in my future write-ups.
-
3rd November 2012, 10:45 PM
#1138
-
4th November 2012, 01:28 PM
#1139
Junior Member
Junior Hubber
Originally Posted by
Murali Srinivas
இன்று மாலை நீலவானம். பல முறை பார்த்த படம்தான். இருந்தும் கூட ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தின் வலிமை குறையவில்லை. ஒரு வித பாரம் மனதில் தானாகவே ஏறிவிடும். ஆண்டுகள் பல கடந்தாலும் படத்தை பார்க்கும் போது அந்த திரைக்கதை வளரும் போது பார்வையாளனை ஒரு சோகம் மெதுவாக கவ்விக் கொள்ள துவங்கி இறுதியில் முழுமையாக ஆக்கிரமித்து விடும் அந்த நிகழ்வு இன்றும் நடந்தது. நடிகர் திலகமும் சரி தேவிகாவும் சரி நம்மை இழுத்துக் கொள்கிறார்கள். கதை திரைக்கதையின் depth என்று சொல்லுவார்கள் அது இந்தப் படத்தில் எந்தளவிற்கு இருக்கிறது என்பது இன்று படம் பார்க்கும் போது புரிந்தது.
மொத்தத்தில் ஒரு மறக்க முடியாத படத்தை மீண்டும் மறக்க முடியாத மாலையில் பார்த்த திருப்தி
அன்புடன்
with regards,
This is really true. So many good movies are there acted by Sivaji Ganesan and Devika. But Neelavanam is defenitely a different
one and acting by both is fantastic. I used to see immediately 'Kulamagal Radai/Andavan Kattalai " after this movie.
-
5th November 2012, 04:28 PM
#1140
Junior Member
Newbie Hubber
ஆலய மணி- 1962 -part 1
மன நலம் குன்றியவர்களை சமூகம் நடத்திய விதம் குறித்து ஆராய்ந்தால் மனம் பதைக்கும். 20 ஆம் நூற்றாண்டில்தான் psycho -analysis துறை fraeud என்பவரால் அறிமுக படுத்த பட்டு ,முன்னேற்றம் கண்டது. மன நலம் குன்றியவர் குறித்து சமூகத்தின் பார்வையும் மாறியது. அதற்கு முன் அவர்களுக்கு சமூகத்தால் சிகிச்சை என்ற பெயரிலும் (அரைகுறை வைத்தியர்,பூசாரி),வேண்டாத பிரஜைகள் என்ற முறையிலும் பட்ட கொடுமைகளை பற்றி ஒரு தனி பதிவே போடலாம். இதிலாவது,தன உலகத்தில் வாழும் ,வெளியுலகம் அறியா முழு மனம் குன்றியவர்கள் கொடுத்து வைத்தவர்கள். விளிம்பு நிலை மனிதர்களோ தன் உலகம்,சமூக உலகம் இரண்டிலும் ஊசலாடி, இரு நிலை பாதிப்பினால் சொல்லொணா துயரம் எய்தினர். இந்த வகை மன நிலை பிறழ்வுகளை வைத்து , 1950 களிலும், 1960 களிலும், வெகு சில ஹாலிவுட் படங்களே வெளியாயின. அவையும் பெரும்பாலும் thriller வகைதான். ஆனால் இந்திய சினிமா சரித்திர வரலாற்றிலேயே ,முதன் முறையாய், விளிம்பு நிலை பிறழ்வு கொண்ட ஒரு கதாநாயகனை, முன்னிறுத்தி , வடிவம்,உள்ளடக்கம் எல்லாவற்றிலும் ,மாறுபட்ட படமாய்(ஒரு அந்நிய பட inspiration ) ஒரு தமிழ் படம், சிவாஜி, ஜி.பாலசுப்ரமணியம்,ஜாவர் சீதாராமன்,கே.சங்கர், பீ.எஸ்.வீரப்பா கூட்டு முயற்சியில் வெளியானதும் இன்றி, எல்லாதரிப்பினராலும் ஆதரிக்க பட்டு பிரம்மாண்ட வெற்றி பெற்று, பிறகு தெலுங்கு,ஹிந்தி எல்லா மொழிகளிலும் தழுவ பட்டது. சினிமா சரித்திரமே, அதற்கு முன்னும்,பின்னும் ,அந்த ரசவாத அதிசயத்தை கண்டதில்லை.காணவில்லை. காதல்,நட்பு,விசுவாசம்,பொறாமை, possessiveness , மனித-மிருக மனநிலை போராட்டம்,எல்லாம் சம நிலையில் தேக்கிய ஒரு positive approach கொண்ட மிக நல்ல காவிய சித்திரம்தான் ஆலய மணி.
ஆலய மணியின் கதையை பார்ப்போம்.
பெரும் பணக்காரன் தியாக ராஜன் ,உறவினர் யாருமின்றி வாழும் தனியன். சிறு வயதில் அதீத possessive குணத்தினால்,நண்பன் ஒருவன் மரணத்திற்கு காரணமாகி (மீனா என்று பெயரிட பட்ட பொம்மைக்காக ) , சீர்திருத்த பள்ளியில் இருந்து மீண்டு , deep seated trauma வின் பாற்பட்டு குற்ற உணர்வில் இருந்து மீள துடிப்பவன்.அதீத கருணை, மனித நேயம், வள்ளன்மை,பெருந்தன்மை ஆகிய குணங்களை வளர்த்து மிருக குணங்களை பொசுக்கி வாழ நினைத்தாலும் அவ்வப்பொழுது தலை தூக்கும் போட்டி,பொறாமை குணங்களால் உந்த படுபவன். தற்செயலாய், சேகர் என்ற டாக்டருக்கு படிக்கும் ஒருவனின் நற்பண்புகளால் கவர பட்டு ,ஏழையான அவனை,சம-நிலை நண்பனாய் பாவித்து ஆதரித்து அன்பு செலுத்துகிறான்.சேகருக்கு வானம்பாடி என்ற புனை பெயர் காதலி. சேகருடன் சேர்ந்து படிக்கும் பிரேமா சேகரை ஒரு தலையாய் விரும்புகிறாள். பிரேமாவின் அப்பா ஆட்கொண்டான் பிள்ளையோ பண பேய். பெண்ணை தியாகுவிற்கு மணமுடிக்க விரும்புகிறார். தற்செயலாய் எஸ்டேட் கணக்கு பிள்ளை முத்தையாவின் இளைய மகள் மீனாவை சந்தித்து விரும்ப ஆரம்பிக்கிறான் தியாகு. சந்தர்ப்ப வசமாய் முத்தையாவின் மூத்த பெண் ,ஆட்கொண்டானால் வஞ்சிக்க படும் போது தலையிட்டு ,அந்த பெண்ணை விரும்பியவனே மணக்க காரணமான தியாகு,தன் நண்பன் சேகர் மூலம் தான் மீனாவை மணக்க விரும்புவதை தெரிவிக்கிறான். ஆனால் அந்த மீனாதான் ,தான் விரும்பிய வானம்பாடி என்ற உண்மை தெரிந்து அதிர்ச்சியடையும் சேகர்,தன் நண்பனின் விருப்பத்தை மதித்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறான்.மீனாவிடம் உண்மையை தியாகுவிடம் இருந்து மறைக்க சொல்கிறான்.
இதனால் பொறாமையடையும் ஆட்கொண்டான், மீனாவை பழிவாங்க, காரின் brake ஐ பிடுங்க,காப்பாற்ற முனையும் தியாகு,brain concoction மற்றும் multiple -fracture இனால் கால்களின் செயல் பாட்டை இழக்கிறான். திருமண நிச்சயம் செய்ய பட்ட மீனா ,தியாகுவிடம் ,தொடர்ந்து அன்பு செலுத்தி ஆதரவு காட்டுகிறாள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால்,மீனா -சேகரின் மேல் சந்தேகம் கொண்டு,சேகரை கொலை செய்ய மரண பாறைக்கு அழைத்து செல்கிறான் தியாகு . கொலை முயற்சியில் தப்பிக்கும் சேகர், உண்மையை சொல்ல,குற்ற உணர்ச்சியில் தியாகு தானே ,மரண பாறையில் இருந்து குதித்து விடுகிறான். பிறகு ,காப்பாற்ற பட்டு, கால்களை பெற்று, பிரேமா-சேகர், மீனா -தியாகு ,ஒன்று சேர சுபம்.
(தொடரும்)
Last edited by Gopal.s; 6th November 2012 at 07:09 AM.
Bookmarks