Page 105 of 401 FirstFirst ... 55595103104105106107115155205 ... LastLast
Results 1,041 to 1,050 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #1041
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    கோபால்,

    நீலவானம் பற்றி பார்த்தவர்கள் எழுதலாமே என்று ஒரு வரி போட்டு விட்டீர்கள். நான் ஏற்கனவே இந்தப் படத்தைப் பற்றிய ஒரு நீண்ட ஆய்வை இந்த திரியில் எழுதியுள்ளேன் இந்தப் படத்தை பற்றிய ஒரு awareness பலருக்கும் ஏற்பட வேண்டும் என்று ஏராளமான நபர்களுக்கு அந்த கட்டுரையையும் அனுப்பி வைத்துள்ளேன். இன்னும் சொல்லப்போனால ராகவேந்தர் போன்றவர்கள் என்னைப் பற்றி சொல்லும்போது இந்தப்படத்தையும் ஆண்டவன் கட்டளை படத்தையும் நான் எப்படி promote செய்தேன் என்று வெளியுலக நண்பர்களிடம் அடிக்கடி கூறுவர். அந்தளவிற்கு என்னை ஈர்த்த படம். என்னவோ தெரியவில்லை 1964 முதல் 1969 வரை வெளிவந்த சில பல நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை படங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அவற்றில் ஒரு சில பெரிய வெற்றியை பெறாமல் போயிருக்கலாம். ஆனாலும் அவை எனக்கு மிகவும் பிடித்தவை. அதில் நீலவானத்திற்கு தனி இடம் உண்டு.

    ஆரம்பம் முதல் முடிவு வரை நாயகியை முன்னிறுத்திய படம் என்ற போதிலும் எவ்வளவு வலிமையாக தன முத்திரையை ஆழமாக அதே சமயம் அமைதியாக பதித்திருக்கிறார் நடிகர் திலகம் என்றே எனக்கு வியக்க தோன்றும். அனாயாசமான நகைச்சுவை எல்லாம் தண்ணீர் பட்ட பாடாக பண்ணியிருப்பார். ராஜஸ்ரீயிடம் தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் விதம் பற்றி A ரோ B ரோ C ரோ என்ற கமன்ட், மில்லில் வேலை கிடைத்தவுடன் அறை நண்பன் I S R-யிடம் இனிமேல் டிக்கெட் கிழிக்க வேண்டியதில்லை கால் மேல் கால் போட்டு நாற்காலியில் உட்காருவேன் என்று சொல்லிக்கொண்டே மறந்து போய் ஓட்டை easy chair-ல் உட்கார்ந்து விழுவது எல்லாம் அதற்கு உதாரணம்.

    குழந்தைக்கு பெயர் வைக்கும் போது ராமசாமி, கந்தசாமி கருப்புசாமி என தேவிகாவை கிண்டல் அடிப்பது, உங்க அப்பா பெயரை வைக்கலாம் என்று தேவிகா சொல்லிவிட்டு உங்க அப்பா பெயர் என்ன என்று கேட்க பிச்சைகண்ணு என்று சொல்லிவிட்டு நல்லாயில்லைலே என்று மீண்டும் சிரித்துக் கொண்டே கிண்டலடிப்பது எல்லாமே ரசனை.

    நீங்கள் குறிப்பிட்டது போல் கொடைக்கானலில் அந்த குச்சி ஐஸ் சாப்பிடும் காட்சி கவிதை. மனைவி விரும்பி கேட்கிறாள் என்று தெரிந்தவுடன் இதுவா என்று ஒரு வித பிடிக்காத பாவத்துடன் யாராவது பார்த்து விட்டால் என்ற தர்மசங்கடத்துடன் முகத்தின் ஒரு பகுதியை கர்சீப்-பால் மூடிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தவுடன் எதிரில் நிற்கும் ஆளை பார்த்தவுடன் [ஒரு குழந்தை] அப்படியே அந்த சங்கடம் நீங்கி சந்தோஷமாக சிரிப்பாரே என்ன அருமையான வெளிப்பாடு?

    நீங்கள் குறிப்பிட்ட மற்றொரு விஷயம் வசனம். உண்மை, அந்த novaljin வசனத்தை விட்டு விட்டால் படு இயல்பு. தன் மகளை கல்யாணம் செய்துக் கொள்ள கேட்கும் முதலாளியிடம் பேசும் "வைத்தியம் பார்க்க வேண்டிய பொண்ணுக்கு கல்யாணம் பண்ணறேன்-னு சொல்லுறீங்களே" அதில் ஒன்று. அதே காட்சியில் தன் காதலிக்கு துரோகம் செய்ய முடியாது என்று நடிகர் திலகம் கூற அதற்கு சஹஸ்ரநாமம் சொல்லும் "துரோகம்-ங்கிற வார்த்தையை நீ சொன்னா தியாகம்-ங்கிற வார்த்தைக்கே அர்த்தமில்லாமல போயிடும்" மற்றொரு சாம்பிள்.

    படத்தின் இறுதிப் பகுதியில் தேவிகாவிற்கு உண்மை தெரிந்தவுடன் [உண்மை என்றால் சிவாஜி ராஜஸ்ரீயை காதலித்தது, தனக்கு கான்சர் இருப்பது] அவர் நடிகர் திலகத்திடம் நான் கர்ப்பிணி என்று சொன்னதையும் பொய்னு சொல்லிடாதீங்க என்று கெஞ்சி விட்டு, பொய்யா? என்று கேட்க பொங்கி வரும் அழுகையை அடக்கிக் கொண்டு நடிகர் திலகம் ஆமாம் என்று தலையாட்ட ஏன் அப்படி சொன்னீங்க என்று தேவிகா கேட்க நீ சந்தோஷமா இருக்கணும்-னு டாக்டர் சொன்னதனால பொய் சொன்னேன் என்று நடிகர் திலகம் சொல்ல "என்கிட்டே நீங்க பொய்யை தவிர வேற ஒண்ணுமே சொன்னதில்லையா" என்று விரக்தியாக கேட்கும் இடம் அப்படியே மனதில் தைத்து விடும்.

    வாங்க என்ற வெறும் ஒரு வார்த்தையை மட்டும் பேசி ஒரு மனிதனால் அரங்கில் அமர்ந்திருக்கும் அனைவரையும் ஆகர்ஷிக்க முடியுமா? முடியும் என காட்டியிருப்பார் நமது நடிகர் திலகம். [இதை எழுதும் போது என் அருகில் அமர்ந்து படம் பார்த்த நமது அருமை நண்பர் பார்த்தசாரதி அடித்த கமன்ட் நினைவிற்கு வருகிறது. "நீங்க அவர் ஒரு வார்த்தை வசனம் பேசுவதற்கு போயிட்டீங்க. ஒண்ணுமே பேசாம தலையில் ஒரு round hat கண்ணுக்கு கூலிங் கிளாஸ் போட்டு காலை மட்டும் வளைச்சு நிப்பார். தியேட்டரே அதிரும்"].

    இப்படி காட்சிவாரியாக சொல்லிக் கொண்டே போகலாம்.பிறிதொரு நாளில் பிறிதொரு நேரத்தில் பேசலாம்.

    அன்புடன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1042
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    nandri murali.

  4. #1043
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    முரளி சார்,
    என் ஒரு வரிக்கு இவ்வளவு மதிப்பு அளித்ததற்கு நன்றி.
    எனக்கு மிக பிடித்து ,எதிர்பார்த்த வெற்றியை அடையாத கருப்பு-வெள்ளைகள்-- (1965 -1971 ) நீல வானம்,செல்வம்,பேசும் தெய்வம்,பாலாடை,தேனும் பாலும்.
    Last edited by Gopal.s; 24th October 2012 at 08:17 AM.

  5. #1044
    Senior Member Seasoned Hubber Avadi to America's Avatar
    Join Date
    Apr 2008
    Posts
    827
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    நீலவானம் நினைவுகள்-
    நான் கிண்டியில் இன்ஜினியரிங் படித்து கொண்டிருந்த நாட்களில் ,எங்கள் கல்லூரி ஆடிடோரியம் பேர் பெற்றது.நிறைய பழைய தமிழ் படங்கள்(பெரும்பாலும் சிவாஜி) திரையிட படும். மிக சிறு வயதில் நான் பார்த்த நீலவானம் படம்(எட்டு வயதில்), மீண்டும் பதினெட்டு வயதினில் (1977 )பார்க்கும் அனுபவம். எதிர்பார்ப்பு அதிகம் இல்லாமல் போனதாலோ என்னவோ ரொம்ப பிடித்திருந்தது. மாணவர்கள் once more கேட்டு ரசிப்பது வாடிக்கை. அவர்களால் அதிக முறை (மூன்று) கேட்டு ரசிக்க பட்டவைகளில் ஒன்று ஒஹஹோ லிட்டில் ப்ளவேர் பாடல்.(மற்றவை வரவு எட்டணா,ஏன் ஏன் ஏன்,அனுபவம் புதுமை)
    எனக்கு நினைவில் பச்சென இருப்பவை.
    ஆரம்ப நகைச்சுவை காட்சிகள்.(சாந்தி தியேட்டர்,பிறந்த நாள், சிவாஜி வசிப்பிடம்)
    தேவிகா- சிவாஜி சம்பந்த பட்ட ஆரம்ப காட்சிகள்.
    ஒஹஹோ லிட்டில் பிலோவேர்.
    சிவாஜி-தேவிகா முதலிரவு(செம chemistry ),கொடைக்கானல் காட்சிகள்(ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே)
    சிவாஜி-தேவிகா குழந்தைக்கு பேர் வைக்கும் காட்சி.
    தேவிகா போட்டோ எடுத்து கொள்ள ஆசை படும் காட்சியில் சிவாஜி natural - overplay -underplay மூன்றையும் மூன்றே நிமிடத்தில் அடுத்தடுத்து கலந்து பண்ணும் அதகளம்.
    பாலச்சந்தரின் வசனங்கள்-லாஜிக் அருமை.
    மற்றவற்றை நேற்று பார்த்த அதிர்ஷ்டசாலிகள் விளக்கட்டும்.
    gopal sir,

    It's nice to hear theat the tradition of playing movies in CEG auditiorium is indeed long. I hope they still follow it.
    In theory there is no difference between theory and practice; in practice there is

  6. #1045
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    A to A,

    Not only in GEC, almost all colleges in Tamilnadu including Arts Colleges had this practice of screening old films in 16 mm format in their open air auditoriums. My college at Madurai [American] and Madura College had this practice and we had seen so many movies through this system.

    I have read app_engine write about this practice at REC, Trichy and Joe had in fact written how he had conducted this screenings at St.Joesph's,Trichy. With the advent of VCRs and later CDs and other advancements, this practice slowly stopped, I believe.

    Regards

  7. #1046
    Senior Member Veteran Hubber jaiganes's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    West Des Moines
    Posts
    3,701
    Post Thanks / Like
    Quote Originally Posted by groucho070 View Post
    Someone just clipped this part of Gouvaram. Can anyone get away with this type of amped up performance and still look awesome?????? MudiyumA? MudiyumAnggiren.

    Singamna idhu singam.
    posture, dialogue delivery, expressions - one needs to freeze every frame and understand what is acting.
    high pitch low- pitch - it is nothing - this is pichu odharifying stuff.
    Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
    - Gore Vidal

  8. #1047
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    A to A,

    Not only in GEC, almost all colleges in Tamilnadu including Arts Colleges had this practice of screening old films in 16 mm format in their open air auditoriums. My college at Madurai [American] and Madura College had this practice and we had seen so many movies through this system.

    I have read app_engine write about this practice at REC, Trichy and Joe had in fact written how he had conducted this screenings at St.Joesph's,Trichy. With the advent of VCRs and later CDs and other advancements, this practice slowly stopped, I believe.

    Regards
    முரளி சார்,
    என்னுடைய கண்டனத்தை பதிவு செய்கிறேன்.எங்களுடையது ஒரு proper theatre with good sound system .35 mm ,closed , 600 பேர் உட்கார்ந்து பார்க்கலாம்.
    அருமையான seating arrangements .இதை கண்ட கண்ட கல்லூரிகளின் open -air 16 mm களுடன் ஒப்பிட்டதற்கு தாங்கள் மன்னிப்பு கேட்கவில்லைஎன்றால், விளைவுகள் விபரீதமாகும்.
    Last edited by Gopal.s; 26th October 2012 at 07:40 AM.

  9. #1048
    Senior Member Seasoned Hubber Avadi to America's Avatar
    Join Date
    Apr 2008
    Posts
    827
    Post Thanks / Like
    Quote Originally Posted by jaiganes View Post
    Singamna idhu singam.
    posture, dialogue delivery, expressions - one needs to freeze every frame and understand what is acting.
    high pitch low- pitch - it is nothing - this is pichu odharifying stuff.
    man.... extraordinary acting.... thanks groucho for the clippings..
    In theory there is no difference between theory and practice; in practice there is

  10. #1049
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    I am cutting and Pasting Mr.Raghanedhar's original posting in other thread-
    அன்பு நண்பர்களே,
    சில நாட்களாக நம் திரிகளின் வேகம் [பாகம் 10ஐயும் சேர்த்து] குறைந்து வருகிறது. இதைப் பற்றி ஓரிரு நண்பர்கள் என்னிடம் வருத்தப் பட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கும் மற்ற நம் நண்பர்களுக்கும் சில விஷயங்களை சொல்ல விழைகிறேன்.

    நம் திரியின் தூண்களாக விளங்கும் பம்மலாரும் வாசுதேவனும் நாள் பொழுது பாராமல் ஊனுறக்கம் பாராமல், தம் பொருள் நேரம் அனைத்தையும் செலவழித்து இங்கே பல ஆவணங்களையும் நிழற்படங்களையும் தருகிறார்கள். சொந்த மன வருத்தங்களையும் பாராமல் அடியேனும் முடிந்த வரை கருத்துக்களையும் ஆவணங்களையும் பகிர்ந்து கொண்டு வருகிறேன். இதற்காக அவர்கள் பிரதி பலன் எதிர்பார்ப்பது இல்லை. ஆனால் நம் நண்பர்கள் குறைந்த பட்சம் ஒரு நன்றி கூறாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் இவர்களுடைய உழைப்பை கேலி செய்யும் விதத்தில் பதிவுகள் வரும் போது, அதனால் அவர்கள் மன வருத்தம் ஏற்படும் போது வாளாயிருப்பதும், நமக்கென்ன என்று இருப்பதும் பிறகு பதிவுகள் வரவில்லையே எனக் குறை கூறுவதும் வியப்பாகவும் வருத்தமாகவும் உள்ளது. ஏன் பதிவுகள் வருவதில்லை என்று ஒரு வினாடி சிந்தித்தாலும் விடை கிடைத்து விடும். தவறு எங்குள்ளது எனக் கண்டு பிடித்து அதனைக் களைந்தால் தானாக வேகம் தொடர்ந்து விடும். ஆனால் ஒவ்வொரு நண்பரும் கேள்வி கேட்பதில் காட்டும் வேகத்தை அதற்கான பதிலைத் தேடுவதில் காட்டுவதில்லை. பதிலைத் தேட வேண்டாம். அது அவர்கள் மனதிலேயே உள்ளது. மனிதாபிமான அணுகுமுறை அந்த பதிலைக் கையில் வைத்துக் கொண்டு காத்திருக்கிறது.

    எனவே சிந்தியுங்கள். நம் நண்பர்களுக்கு மன வருத்தம் என்றால் நமக்கே ஏற்பட்ட மாதிரி யல்லவா. அதைக் களைவதற்கான அணுகுமுறையைக் கடைப்பிடியுங்கள்.

    தங்களுடைய உண்மையான அன்பை வெளிப்படுத்துங்கள்.

    Unquote-


    ராகவேந்தர் சார், வாசு சார், பம்மலார் சார்,

    உங்கள் அனைவர் பதிவுகளையும் ரசித்து போற்றும் முதல் ஆள் நான்தான். நான் கிண்டலடிப்பது யார் மனதையும் புண்படுத்த அல்ல. ஒரு ஜாலியான relaxed atmosphere திரியில் உண்டாக்கவே. NT மாதிரி(ஜாலியாய்) பேசி,நடித்து காட்டுபவர்கள் பலர் அவரது பக்தர்கள்.நமக்குள் உள்ள நகைச்சுவை குறைபாட்டை களைந்தால் பல உண்மைகளுக்கு விடை கிடைத்து விடும். நான் வாசு சாரின் டூரிங் டாக்கீஸ் என்ற பிடித்த பதிவுக்கு பாராட்ட ,உங்கள் மூவர் பாணியில் ஒரு ஜாலி பாராட்டு பதிவு. அதையும் நீக்கியாயிற்று.(நீங்கள் எல்லோரும்,நான் கஞ்ச தனமாக பாராட்டுவதாக குத்தி காட்டியதால்)

    என்னை தாக்கி பதிவுகள் போடும் படி தாங்கள் போட்ட வேண்டுகோள் பதிவை மதித்து ,எல்லோரும் செயல் படும் படி,என் சார்பிலும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
    Last edited by Gopal.s; 26th October 2012 at 01:06 PM.

  11. #1050
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர்கள் திரியில் நான் ரசித்தவை-(அக்டோபர் 2012 )

    வாசு தேவன் (நெய்வேலி)-பிறந்த நாள் புகைப்படங்கள்,ஹெர்குலிஸ் இதழ் கட்டுரை, 150 ஆவது பக்கம்,மாலை மலர் ,தினத்தந்தி பிறந்த நாள் பதிவுகள் ,ஜெயா,பாலிமர் வீடியோ,காமராஜ்,லால் பகதூர் நினைவு புகை படங்கள்,தினமலர் தியாகராஜன் பேட்டி,celebration picture sites ,சிவந்த மண் படங்கள்,துணை ஆய்வு கட்டுரை(இம்மாத மிக சிறந்த பதிவு),நாயகிகள் (சரஸ்வதி) தொடர்,சண்டை காட்சி தொடர்(எங்கள் தங்க ராஜா), பிரபு பேட்டி,ஜகந்நாதன் அஞ்சலி,நெஞ்சிருக்கும் வரை படம், இதயக்கனி அப்துல் அமீத் பேட்டி,முக்தா நினைவுகள்,தமிழன் எக்ஸ்பிரஸ் பீட்டர் அல்போன்ச ,டூரிங் டாக்கீஸ் அனுபவம்(இம்மாத இரண்டாவது மிக சிறந்த பதிவு),திருப்பு முனை திரைப்படங்கள்,நன்றி கேட்ட(சினிமா) உலகம்.

    பம்மலார்- மாவீரன் சிவாஜி கலர் போட்டோ,எங்க ஊர் kalaigner ,43 வது பிறந்த நாள்,மனம் திறந்து பேசுகிறேன்,சவாலே சமாளி விளம்பரம்,எங்கள் தங்க ராஜா,சிவாஜி ஒரு சகாப்தம், எல்லா புகைப்படங்களும்.

    எஸ்வி சார்- ராமன் எத்தனை ராமனடி பிறந்த நாள் வாழ்த்து, வாசு 2000 பதிவு ஞான ஓளி வாழ்த்து,60 வது வருட பராசக்தி வாழ்த்து, அறிவாளி(ஹிந்து).

    ராகவேந்தர்- சினாத்ரா பாட்டில் சிவாஜி வீடியோ,அனந்த விகடன் tribute ,வைர விழா பதிவுகள், சங்கல்பங்கள்,சித்தூர் ராணி பத்மினி வீடியோ,இலக்கிய அணி பிறந்த நாள் காணொளிகள்,இதய கனி பிறந்த நாள் சிறப்பிதழ்,woodlands திருவிளையாடல் 25 வது நாள்,கண்ணதாசன் படம்,பராசக்தி கொண்டாட்ட பதிவு,

    கார்த்திக்- துணை பாராட்டு பதிவு,வயிற்றெரிச்சல் கொசுறு இணைப்பு,இசையமைப்பாளர் பதிவு,டூரிங் டாக்கீஸ் தொடர்ச்சி(அருமை).

    பார்த்தசாரதி-தவப்புதல்வன்,நல்லவன் ,நெஞ்சிருக்கும் பாடல்கள் ஆய்வு,, இசையமைப்பாளர் சர்ச்சை(என் ஆதரவாளராய்),.

    முரளி- திருவிளையாடல் ஆல்பர்ட்-25 வது நாள்.

    செல்வகுமார்- ஞான ஓளி பதிவு.

    சதீஷ்- படங்கள் லிங்க்.

    ABKHLABHI - இமயத்துக்கு இதய அஞ்சலி.

    புதுவரவு- jeev ,VankV ,pappimma ,எஸ்..வாசுதேவன் ,- வருக,வருக,வருக. தங்கள் பங்களிப்புகளை நல்குக.
    Last edited by Gopal.s; 31st October 2012 at 07:32 AM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •