Page 101 of 401 FirstFirst ... 519199100101102103111151201 ... LastLast
Results 1,001 to 1,010 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #1001
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வர வர சில தனி காட்டு வேந்தர்களின் அட்டகாசம் தாங்க முடிவதில்லை. பதிவை ஆரம்பிக்கும் போதே சிலர் இப்படி,பலர் அப்படி என்று குறை சொல்லும் பாணிதான். யாராவது புண்ணியவான் ,ஆறாவது கட்டளையாக, வருபவர் எல்லோரையும் insult செய்து கொண்டே இருக்க கூடாது என்பதையும் சேர்த்தால் முதல் சங்கல்பம் எடுக்கும் ஆளாக இருப்பேன். நிறைய hits தான். எல்லோருக்கும் மாற்றி மாற்றி குறி வைத்து கொடுக்கிறார்.
    போட்டிக்கு பிள்ளை பெற்ற,நடிப்பு சீரியல் என்ன ஆனது?
    Last edited by Gopal.s; 14th October 2012 at 07:26 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1002
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரை இசை திலகம் கே. வீ. மகாதேவன்-

    தமிழ்,தெலுங்கு இரண்டு film industries கொண்டாடும் நபர்.

    folk (மக்களை பெற்ற மகராசி ,குமுதம்) ,குத்து (வண்ணக்கிளி),classical based folk (முதலாளி), light classical (பாவை விளக்கு) ,ghazal(தொழிலாளி) ,classical (திருவிளையாடல்,சங்கராபரணம்) எல்லாவற்றிற்கும் trend -setter (50 களில் இருந்து).இவரை தன் குரு என்று சொல்லி கொண்டாடினார் மெல்லிசை மன்னர்(அவர் குரு என்று அழைதத மற்றையோர் ராம மூர்த்தி, சுப்பையா நாயுடு,நவஷாத்).

    இவருடன் நடிகர் திலகம் பயணம் கூண்டு கிளி(1954 )யில் தொடங்கி, சிம்ம சொப்பனத்தில் (1984)முடிவுற்றது. இவர் மக்களை பெற்ற மகராசி, படிக்காத மேதை,பாவை விளக்கு,எல்லாம் உனக்காக,வளர்பிறை,வடிவுக்கு வளைகாப்பு,இருவர் உள்ளம்,குலமகள் ராதை,குங்குமம்,ரத்த திலகம,அன்னை இல்லம்,நவராத்திரி(100 வது NT படம்),செல்வம்,பேசும் தெய்வம்,பாலாடை,தில்லானா மோகனாம்பாள்,விளையாட்டு பிள்ளை,வியட்நாம் வீடு,எதிரொலி,அருணோதயம்,குலமா குணமா,வசந்த மாளிகை,எங்கள் தங்க ராஜா,சத்தியம்,உத்தமன்,சிம்ம சொப்பனம் என்ற சமூக படங்களுக்கும் , சம்பூர்ண ராமாயணம்,திருவிளையாடல்,மகாகவி காளிதாஸ்,சரஸ்வதி சபதம்,கந்தன் கருணை,திருவருட்செல்வர்,திருமால் பெருமை,ஹரி சந்திரா என்ற புராண படங்களுக்கும் நடிகர் திலகத்துக்காக கொடுத்துள்ளார்.

    1963 , 1966 இரண்டு ஆண்டுகளில் NT க்காக அதிக படங்களுக்கு இசையமைத்தவர் ஆவார்.
    .
    Last edited by Gopal.s; 16th October 2012 at 03:21 PM.

  4. #1003
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    வரும் புதன் அக்டோபர் 17அன்று நடிகர் திலகத்தின் திரையுலக வைர விழா ஆண்டு நிறைவாக மலர்வதை முன்னிட்டு அன்று காலை 11 மணி அளவில் ஒரு விழா நடக்கிறது. நடிகர் திலகம் முதன் முதலாக சக்சஸ் என்ற வசனம் பேசிய அந்த இடத்தில [ஒரு நினைவு சின்னம் ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில்] இந்த விழா நடைபெறும்.கூடுதல் விவரங்கள் தெரிந்தவுடன் பதிவிடப்படும்.

    அன்புடன்.

    கோவை டிலைட் திரையரங்கில் தங்கைக்காக திரையிடப்பட்டிருக்கிறது. [இளவல் ராகுல் ராமும் இதை பதிந்திருக்கிறார். நன்றி]

  5. #1004
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Murali Sir,
    I am doing the cut-paste of the Thiruvilaiyadal ,Baby Albert write-up of yours from the other thread.
    இன்று மாலை பேபி ஆல்பட் திரையரங்கில் [House Full] திருவிளையாடல் காவியத்தின் 25-வது நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திரையரங்கிற்கு வெளியே ஆரம்பித்து உள்ளே திரையரங்க வெளி வளாகம் முழுவதையும் பராசக்தி வைர விழாவிற்கு தயாரிக்கப்பட்ட பானர்கள் அலங்கரிக்க பலவற்றிக்கும் மாலை அணிவிக்கப்பட்டு ராஜ கம்பீரத்தோடு காட்சியளித்தன. வெளியே வெடிக்கப்பட்ட பட்டாஸ்-களின் எண்ணிக்கைக்கு கணக்கேயில்லை. எண்ணிக்கையில் மட்டுமல்ல அவை ஏற்படுத்திய ஒலி அதிர்வுகள் எக்மோர் ரயில் நிலையத்தையும் தாண்டி கேட்டிருக்கும். போக்குவரத்து ஸ்தம்பிக்க மக்கள் கூட்டம் இரு பக்கம் குவிய வாழ்தொலிகளும் ஆட்டங்களும் பட்டாஸ்-களின் வெடி சத்தமும் அந்த சுற்றுவட்டாரத்தையே சற்று நேரம் கலக்கி விட்டது உண்மை. அந்த வழியாக சென்றவர்கள், படம் பார்க்க அரங்கிற்கு வந்தவர்கள் அனைவரும் முதலில் புதிதாக வந்துள்ள படத்திற்குதான் இந்த அமர்க்களம் என நினைத்தனர். பிறகு நடிகர் திலகத்தின் பானர்களையும் சிவாஜியின் பெயர் வாழ்தொலிகளில் சொல்லபடுவது கேட்டு உண்மையை புரிந்துக் கொண்டனர்.

    திரையரங்க ஸ்டாலில் இருப்பவர்கள் நம்மிடம் அடித்த கமண்ட். நாங்களும் எத்தனையோ படங்களுக்கு ரசிகர்களையும் அவர்களின் ஆட்டப்பாட்டங்களையும் பார்த்திருக்கோம். ஆனால சிவாஜி ரசிகர்கள் போல் இவ்வளவு உணர்ச்சிமிக்க விசுவாசமிக்க ரசிகர்களை பார்த்ததேயில்லை. அது போல் இடைவேளையின் போது இரண்டு படங்களுக்கும் ஒரே நேரத்தில் இடைவெளி விடப்பட நமது ரசிகர்களின் அலப்பறையை பார்த்து இளைஞர்களே அதிசயித்து போனதோடு மட்டுமல்லாமல் அந்த அலப்பறையை தங்களின் அலைபேசிகள் மற்றும் சிலர் காமராவில் பதிவு செய்துக் கொண்டனர், அரங்கிற்கு உள்ளே வழக்கம் போல் பலத்த வரவேற்பு அதிலும் குறிப்பாக இறுதி எபிஸோடு வழக்கம் போல் மிகுந்த ஆரவாரத்துடன் ரசிக்கப்பட்டது எப்போதும் போல் பாட்டும் நானே அதிலும் ஆடும் கலையின் நாயகன் நானே வரியெல்லாம் உச்சகட்டம்.

    இறுதியாக ஒன்று. ஒரு நடுத்தர வயதுடைய நபர் அவருடன் மேலும் இரண்டு பேர்கள், அவர் ஒரு கேள்வி கேட்டார். சிவாஜி இறந்து பல வருஷம் ஆயிடுச்சிலே?

    ஆமாம் பதினோரு வருஷம் ஆயிடுச்சு.

    இப்பவுமா இவ்வளவு பேர் இப்படி இருக்காங்க?

    இன்னும் நிறையப் பேர் இருக்காங்க. ஏன் அப்படி கேட்கீறிங்க?

    இல்லே எதாவது லாபம்,பதவி பணம் இப்படி எதுவுமே கிடைக்க சான்ஸ் இல்லையே இருந்தும் இப்படி இருக்காங்கனா ரொம்ப உண்மையான மனுஷங்க என்று சொல்லிவிட்டு கூட வந்தவர்களிடம் இந்த விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டே போனதுதான் ஹைலைட்.

    அன்புடன்
    Reply With Quote

  6. #1005
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    sathish,
    Thanks for your links.
    Last edited by Gopal.s; 16th October 2012 at 08:03 AM.

  7. #1006
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    murali sir,
    Is thiruvilayadal going to be released like Karnan?The legal matter is solved ,I suppose?
    Last edited by Gopal.s; 16th October 2012 at 08:06 AM.

  8. #1007
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கே.வீ.மகாதேவன் சாரிடம் உள்ள சிறப்பம்சங்கள்-

    1) 95 % பாடல்களில், இந்திய பாரம்பரிய இசை கருவிகளை மட்டுமே உபயோக படுத்தி உள்ளார்.
    2)90 % பாடல்கள் பாட்டு எழுதி இசை அமைக்க பெற்றவை. கண்ணதாசன் வார்த்தைகளில், ஒரு கட்டுரை எழுதி கொடுத்தாலும் இசை அமைக்கும் வல்லமை கொண்டவர்.
    3) எடுத்து கொண்ட படத்துக்கு உரிய இசையை கொடுப்பார். இவரா அவரா என்றெல்லாம் பார்த்து இசையமைக்கும் வழக்கம் அறவே இல்லை.
    4) improvised மியூசிக் கொடுத்திருக்கிறாரே தவிர , assembled arrangements பாணியில் பண்ணியதே இல்லை.சில ஹிந்தி பாடல்களை உபயோக படுத்தி இருந்தாலும்,பெரும்பாலும் அசலானவை. ஸ்பானிஷில் கொஞ்சம்,arabian இல் கொஞ்சம் என்று உருவியதே கிடையாது.
    5) இவர் ஸ்டைல், இந்திய -வெஸ்டேர்ன் பாணி action படங்களுக்கு ஒத்து வராது. மற்ற படி எல்லா படங்களுக்கும் பொருந்துவார்.
    6) இவர் 69 இல் இருந்து 80 வரை தெலுங்கில் பிஸி ஆக இருந்ததால் தமிழில் ஆர்வம் காட்டவில்லை.

    என்னை கவர்ந்த பாடல்கள்-

    சமூக படங்களில்-
    சிட்டு குருவி சிட்டு குருவி, மணப்பாறை, போறவளே, ஆகா நம் ஆசை,ஏரி கரையின் மேலே , சீவி முடிச்சு,ஒரே ஒரு ஊரிலே,படித்ததினால்,ஆயிரம் கண் போதாது, வண்ண தமிழ்,காவியமா,ஆத்திலே தண்ணி வர,மாட்டுகார வேலா,வண்டி உருண்டோட,சித்தாடை கட்டிக்கிட்டு, மாமா மாமா மாமா,கல்யாணம்,கல்லிலே,என்னை விட்டு, மியாவ் மியாவ்,ஒருத்தி ஒருவனை,மெல்ல மெல்ல அருகில்,தட்டு தடுமாறி,கண்ணுக்குள்ளே,சிரித்து சிரித்து, ஹலோ ஹலோ,காட்டு ராணி, காட்டுக்குள்ளே,கட்டான,மலரும் கொடியும்,கங்கை கரை,கடவுள் மனிதனாக, யாரடி வந்தார்,காலம் என்னும் நதியினிலே, ராதே, இரவுக்கு ஆயிரம்,பகலிலே, உன்னை சொல்லி, கள்ள மலர், மயக்கம் எனது, தூங்காத கண்ணென்று(நிறைய பேர் லிஸ்டில் தமிழின் நம்பர் one ),பூந்தோட்ட, சின்னஞ்சிறிய,குங்குமம்,பறவைகள்,கண்ணெதிரே, இதய வீணை,கண்ணே கண்ணே, புத்தி சிகாமணி,நதிஎங்கே,அழகு சிரிக்கின்றது,ஏனழுதாய், பசுமை நிறைந்த, புத்தன் வந்த,தாழம் பூவே,பனி படர்ந்த,வாடை காற்றம்மா,மடி மீது,நடையா,எண்ணிரண்டு,மஞ்சள் முகமே,உன்னையறிந்தால்,சீட்டுக்கட்டு,வெள்ளிநிலா,ஆண்ட வன், என்ன கொடுப்பாய்,கன்னத்தில் என்னடி, ஒரே முறைதான், நவராத்திரி, இரவினில், சொல்லவா,போட்டது,
    ராஜாதி ராஜ மகா,அவளா சொன்னால்,என்னடி,ஒன்றா இரண்டா,எனக்காகவா,பட்டாடை,எங்கே ஆஹா எங்கே,அழகு தெய்வம்,நான் அனுப்புவது,இதய ஊஞ்சல்,பத்து மாதம்,பிள்ளை செல்வமே,நலம்தானா,மறைந்திருந்து,பாண்டியன் நானிருக்க,மழை முத்து ,கேளம்மா,உனக்கும் எனக்கும்,என்றும்,நல்ல நல்ல,எவரிடத்தும்,காதல் எந்தன் ,என்னம்மா,எலந்த பயம், அலேக்,மெல்ல,,மாறியது,சந்திப்போமா,காலமிது,சிரிப்பேன ்,ஒரு பக்கம்,பூ வைத்த,நெஞ்சம் உண்டு,கடவுள் ஏன்,நீல நிறம்,ஆசையிருக்கு,பாலக்காட்டு,உன்கண்ணில்,தொட்டால், டிக் டிக்,பதினாறு வயதினிலே,ஏன் ஏன் ஏன் ,குடிமகனே,மயக்கம் என்ன,இரண்டு மனம,யாருக்காக,கல்யாண ஆசை,இரவுக்கும் பகலுக்கும்.

    புராண,சரித்திர, படங்கள்-
    நான் சொல்லியா தெரிய வேண்டும்? திருவிளையாடல் முதல் ஆதி பராசக்தி வரை.
    Last edited by Gopal.s; 16th October 2012 at 03:24 PM.

  9. #1008
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    சண்டியர் கரண் என்ற கமல் ரசிகர் இந்த மன்றத்திலும் உறுப்பினராக இருக்கிறார் என நினைக்கிறேன் .

    அவர் தன் வலைப்பூவில் ஒரு பதிவு எழுதியிருக்கிறார் ..அதாவது கமல் மற்றும் எம்.ஜி.ஆர் படங்கள் மட்டும் தான் மறுவெளியீட்டில் ஓடியிருக்கிறதாம் .
    http://www.sandiyarkaran.com/2012/10/FilmReRelease.html

    கமல் , எம்.ஜி.ஆரோடு அவர் நிறுத்தியிருந்தால் நமக்கு வேலையில்லை .ஆனால் ஒரு பொன்மொழியை உதிர்த்தார் பாருங்கள்
    சில நடிகர்களுக்கு ஒன்றிரண்டு படம் ரி-ரிலீஸ் ஆகலாம், அதில் ஒரு படம் கூட (கர்ணன்) ஒரு வாரம் ஓடலாம்
    நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்

    கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளைக்கு
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  10. #1009
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    ஜோ,

    இவரின் முந்தைய பதிவுகளையும் கூட நான் பார்த்தேன். அதில் சிவாஜி விரோதம் தெளிவாக தெரிந்தது. மேலும் பழைய படங்களைப் பற்றிய எந்த விதமான விவரங்களும் தெரியாதவர் என புரிந்தது. உதாரணமாக ஜஸ்டிஸ் கோபிநாத் மற்றும் நான் வாழ வைப்பேன் படங்களின் நாயகன் யாரென்று கூட தெரியாமல் தவறாக எழுதியிருந்தார். இப்போது ரீரிலீசில் கர்ணனை தவிர வேறு எதாவது சிவாஜி படம் ஓடியிருக்கிறதா என்று கேட்கும் போதே தெரியவில்லையா? ஆகவே இப்படிப்பட்டவர்களின் பதிவுகளை எல்லாம் நாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. எத்தனை பேர் எத்தனை முறை எத்தனை வருடங்களாக முயற்சிக்கின்றனர்? ஆகவே இதையெல்லாம் ஓரத்தில் ஒதுக்கி நாம் நம் பயணத்தை எப்போதும் போல் தொடர்வோம்.

    அன்புடன்.

  11. #1010
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Come tomorrow October 17th will dawn. What is so great? Every year October 17th comes and goes.But this year is something special. Come tomorrow, Oct 17th signifies the Sashti poorthi celeberation of Nadippu in the world of Cinema. 60 years back on this day, one frail man answering to the name of V.C.Ganesan knocked at the doors of the film world and a day after he not only found the throne of the film world at his feet, he became the Monarch of all he survived. He also found a place in the hearts of millions and millions of people where he is firmly entrenched and will continue to remain there for eternity.

    Yes, the Kohinoor diamond of Tamil Cinema celebrates Diamond jubily tomorrow. Let it go on on on and on!.

    தமிழ் சினிமாவின் பொற்காலத்தை அதன் பல்வேறு வடிவங்களை தன திறமையினாலும் வெவ்வேறு பாத்திரப் படைப்புகள் மூலமாகவும், சிறப்பான கதையம்சம் கொண்ட திரை காவியங்களினாலும் அள்ள அள்ள குறையாத அமுத சுரபியாய் தன படங்களின் மூலம் நமக்கு வாரி வழங்கிய நடிப்புலக மேதை நடிகர் திலகம் அவர்கள் திரையில் தோன்றிய இந்த நன்னாளில் அவரை நமது கலையுலகிற்கு ஈன்ற கலை மகளுக்கு நமது மனமார்ந்த வணக்கங்கள்.

    சாகா வரம் பெற்ற கலையுலக சிரஞ்சீவி அவர்களின் திரை காவியங்களை என்றென்றும் கண்டு மகிழ்வோம்.

    அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்து அவரின் கலை திறமையை நாம் தரிசிக்க நமக்கு வாய்ப்பளித்ததற்கு இறைவனுக்கு மீண்டும் நன்றி.

    என்றென்றும் வாழட்டும் அவர் பெயர்! என்றென்றும் வளரட்டும் அவர் புகழ்! என்றென்றும் ஒலிக்கட்டும் அவர் சிம்ம குரல்!

    அன்புடன்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •