Page 359 of 401 FirstFirst ... 259309349357358359360361369 ... LastLast
Results 3,581 to 3,590 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #3581
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Sowrirajann Sri View Post
    தொடர்கிறது....


    தமிழ் மொழியின் வலிமை அதை உரைகின்ற விதத்தில் உரைத்தால் தான் உறைக்கும் !

    அதன் வலிமை, வல்லமை அப்படி...!

    உதாரணமாக : ஆஹா...என்ற இந்த ஒரு வார்த்தை சந்தோஷம், அதிர்ச்சி, வேதனை, கிண்டல், கோபம், தாபம் மற்றும் பல உணர்சிகளுக்கு பயன்படுத்தி நாம் பார்திரிகிறோம்..! ஒன்றிற்கு வேறொன்றை பேசினால் விஷயமே மாறிவிடும்...அதுதான் தமிழின் வலிமை...!
    சீ போ என்பதை வெறுப்பு, உதாசீனம்,இயலாமை, மிரட்டல், செல்லமான காதல், அகந்தை, இத்தனைக்கும் புதிய பறவை, ராஜபார்ட் ரங்கதுரை, தீபம்,அவன் ஒரு சரித்திரம் ,தீர்ப்பு படங்களில் காட்டியவர் அவர்தானே? உச்சரித்து உடல் மொழி காட்டுவதில் ஒற்றை சொல்லுக்கு ஓராயிரம் பொருள்கள்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3582
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    சீ போ என்பதை வெறுப்பு, உதாசீனம்,இயலாமை, மிரட்டல், செல்லமான காதல், அகந்தை, இத்தனைக்கும் புதிய பறவை, ராஜபார்ட் ரங்கதுரை, தீபம்,அவன் ஒரு சரித்திரம் ,தீர்ப்பு படங்களில் காட்டியவர் அவர்தானே? உச்சரித்து உடல் மொழி காட்டுவதில் ஒற்றை சொல்லுக்கு ஓராயிரம் பொருள்கள்.
    தலைவர் சொல்லி காட்டிய ச்சீக்கள் சில! சொல்லாமல் சொன்னவை சில!!..

    வெறுப்பும் கோபமும் கலந்த ..வீரபாண்டிய கட்டபொம்மனின் ச்சீ
    கோபமும் இயலாமையும் கலந்த ..எதிரொலி கதாநாயகனின் ச்சீ
    விரக்தியும் வெறுப்பும் கலந்த நெஞ்சிருக்கும்வரை கதாநாயகனின் ச்சீ
    அலட்சியமும் கோபமும் கலந்த பாசமலர் கதாநாயகனின் ச்சீ
    விரக்தியும் மனமுதிர்ச்சியும் கலந்த முதல்மரியாதை கதாநாயகனின் ச்சீ
    சுயமரியாதையும்,இனப்பற்றும் கலந்த தேவர்மகன் மூத்த தேவரின் ச்சீ

    அப்புறம் செல்லமான காதலுக்கு ச்சீ என்பது பெண்களுக்கே உரித்தானது.
    மேலும் அது சீ போ இல்லை (மன்னிக்கவும் நெய்வேலி syllabus எனக்குத்தெரியாது)
    ச்சீ யும் இல்லை!! அது...... ச்சீய்!!
    Last edited by Ganpat; 15th May 2013 at 09:22 AM.

  4. #3583
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    dear vasudeven sir. I remain spellbound as this thread has been gaining momentum and overwhelming responses with amazing documentations from Gopal Sir, Ganpat Sir, Ragavendran Sir, Sowrirajan Sir..... I try to contribute in their shadows with the single most objective of establishing our NT's image in the minds of present generation as the one and only thespian of acting across the globe.

  5. #3584
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் பட நகைச்சுவை காட்சிகளில் மகுடம் போன்றது பராசக்தி முறுக்கு வடை காட்சி.
    அதை நினைவு கூர்ந்த நண்பர் சவுரிக்கு நன்றி.

    நாம் நினைவில் கொள்ள வேண்டியவை இரண்டு..
    இது அறுபது ஆண்டுகள் பழமையானது.
    இந்த கதாநாயகனுக்கு இது முதல் படம்.

    இப்போ அந்த காட்சிக்கு வருவோம்.
    பொதுப்படையாக அந்த நாயகன் செய்வது ஒரு ஏமாற்று வேலை.
    ஆனால் frame by frame பாருங்கள் எதிலாவது அவர் ஏமாற்றுவது போல தெரிகிறதா?
    அதை ஒரு விளையாட்டு போல ஆக்கியிருப்பார்..
    நான் செய்வது தவறுதான் ஆனால் அதற்கு காரணம் பசி என்பதை நடிப்பால் உணர்த்தியிருப்பார்.
    முறுக்கு விற்பவனின் பாடலை ரசித்துக்கொண்டே சாப்பிடுவது.
    அவனை ஒரு மனநோயாளி போல நடித்து ஒட வைப்பது.
    பிறகு அவைகளை ஒரு செல்வந்தரிடம் விற்கும்போது முன்ஜாக்கிரதையாக பணம் கேட்கும் சாமர்த்தியம்.
    ஒரு ரூபாய்க்கு சில்லறை இருக்கா எனஅவர் கேட்கும் போது இவர் முகத்தில் தோன்றும் ஒளி மற்றும் கள்ளச்சிரிப்பு.
    முடிவாக அந்த காட்சியை இயக்குனர் முடித்து வைக்கும் விதம்.

    இந்த ஒரு சரளத்தை நான் இதுவரை எந்த ஒரு திரைப்படகாட்சியிலும் கண்டதில்லை.

    வாருங்கள் நண்பர்களே,
    அந்த இனிஷியலற்ற பெருமாளுக்கும்,
    P.A.பெருமாளுக்கும்,
    நம் நெஞ்சார்ந்த வணக்கத்தை
    நன்றியுடன் சொல்லுவோம்.
    Last edited by Ganpat; 15th May 2013 at 10:17 AM.

  6. #3585
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    எதைப் பாராட்டுவது எனத் தெரியவில்லை...
    சரியான சமயத்தில் நம் அனைவரின் உள்ளத்தையும் பிரதிபலித்த வாசுதேவன் சாரின் வேண்டுகோளைப் பாராட்டுவதா
    அல்லது ...
    திரைத்தமிழ் ... நடிகர் திலகத்திற்கு முன் ... நடிகர் திலகத்திற்குப் பின் ...
    என்ற புதிய கோணத்தில் புதிய தொடரைத் துவக்கியுள்ள சௌரிராஜனைப் பாராட்டுவதா ....
    சீ...
    என்ற ஓரெழுத்தில் ஓராயிரம் பொருள் விளக்கும் மேதையின் சிறப்பைச் சொன்ன சௌரி.. அதற்கு தொடர் வளக்கம் தந்த கண்பத் ...
    அருமையான திருப்பம் பாடலைத் தந்த சதீஷைப் பாராட்டுவதா ..

    குழப்பமே இல்லை ..

    இவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு புலமையைப் புகுத்தியுள்ள அந்த மகா கலைஞனைத் தான்

    பாராட்ட வேண்டும்...

    ஈடு இணையில்லா ஒப்பற்ற கலைஞனே..

    தமிழ்த்தாயின் பெருமையை தரணியெங்கும் உரைத்த

    தவப் புதல்வனே...

    உங்களைத் தான் பாராட்ட வேண்டும்...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #3586
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அபூர்வ நிழற்படங்கள்

    தங்கை திரைப்படத்தின் டைட்டில் காட்சியில் நடிகர் திலகத்தின் ஓவியங்கள் இடம் பெற்றன.. அவற்றிலிருந்து





    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #3587
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-30

    ஸ்டெல்லா ஆட்லர் , stanilavsky மற்றும் ஸ்ட்ராஸ்பெர்க் என்ற தன் ஆசிரியர்களோடு கருத்து முரண் பட்டு வெளியேறும் போது நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார். 1927 இல் தமிழகத்தில் ஒரு உலக நடிப்பு மேதை பிறந்து தனக்கும் சிஷ்யனாக இருந்து, தன் குருக்களுக்கும் சிஷ்யனாக அபார திறமையால் இணைப்பு பாலம் போட போகிறார் என்று.

    ஸ்டெல்லா வெளியேறும் போது , ஒரு நடிகனின் நினைவுகளில் இருந்துதான் (sense memory)உணர்ச்சியை காட்ட வேண்டுமென்றால் அந்த மாதிரி நடிப்பே தனக்கு வேண்டாம் என்று declare செய்தார். வேறு வேறு கலாசாரம், வேறு வேறு மதிப்பீடுகள்(values ),வேறு வேறு காலநிலைகள், கொண்ட பாத்திரங்களில் நடிக்கும் போது ஒரு நடிகரின் தனிப்பட்ட பிரத்யேக பண்பாடு ,அனுபவித்த உணர்வு நிலைகள்,அனுபவங்கள் என்பவற்றை கொண்டு மட்டும் மேடையேறுவது, அந்த நடிகரை மேடையிலேயே நிர்வாணமாக்கி விடுவது போன்றது என்றும் ஸ்டெல்லா கருதினார்.அதனால் ஆய்வு செய்து வேறு வேறு நிலைகளினாலான நடிப்புக்கு faking the emotions (போலி செய்த உணர்வுகள்) என்பது அவசியமானால் செய்யத்தான் வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்டார்.

    உடற்பயிற்சி, குரல் பயிற்சி இவற்றுக்கு முக்கியத்துவம் தந்ததுடன்,ஒரு நடிகன் மேடையை ஆக்ரமிக்க வேண்டும் என்றும்,உடல் மொழியில் பண்பட்டு, குரலால் தெளிவாகவும்,பாவத்துடனும் ,தன்னை மீறிய ஆகிருதியுடன் (Size )மேடையை கௌரவிக்கும் வகையில் (Stage Presence ) இருக்க வேண்டும் என்றும் larger than life presentation அவசியம் என்றும் கருதினார்.

    போரடிக்காமல்,ஒரு நடிகன் தன் திறமையால் தன் நடிப்பின் அத்தனை அம்சங்களையும்,விருப்பங்களையும் நிறைவேற்றி கொண்டு ஒரு காட்சிக்கு வேண்டிய அபார character interpretation /manupulation செய்து அந்த காட்சியையே ஆக்ரமிக்க வலியுறுத்தினார்.

    அவரின் சில Quotes உங்கள் பார்வைக்கு ஆங்கிலத்திலேயே......

    In your choices lies your talents.

    Dont use your conscious past.Use your creative imagination to creat a past that belongs to your character.
    I dont want you to be stuck with your life.Its too little.

    You cant be boring.life is boring.weather is boring.Actors must not be boring.

    Life beats down and crushes the soul and art reminds you that you have one.

    -----To be Continued.
    Last edited by Gopal.s; 15th May 2013 at 04:10 PM.

  9. #3588
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    NT's Golden movies:

    1. Nallathoru Kudumbam - today at 7.30 pm in Murasu TV

    2. Iruvar Ullam on Sunday at 3.30 in Kalaignar TV

    Dont miss it

  10. #3589
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Today's Times of India on International Family Day



    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  11. #3590
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    டியர் செளரி சார்

    தமிழர்களுக்கு நடிகர் திலகத்தால் நினைவு படுத்தப்பட்ட பெரியவர்கள் - நல்ல தலைப்பு, நல்ல தொடக்கம். தொடருங்கள், நன்றி
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •