Page 353 of 401 FirstFirst ... 253303343351352353354355363 ... LastLast
Results 3,521 to 3,530 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #3521
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by P_R View Post
    பொருட்படுத்தத்தக்க கருத்தோ, உரையாடலுக்கான மொழியோ இல்லாத இடுகை என்ற போதிலும்,
    இருக்கலாம் ஆனால் ஊழல்களை விவரிக்க, அநீதியை விவரிக்க இந்த மொழி அதிகம்.இதற்காக சங்க இலக்கியங்களுக்கு போக வேண்டிய அவசியமில்லை.வகுப்பில் முதன் மாணவனாக இருந்தவன்,சீரழிந்து, பாஸ் மார்க் வாங்குவதற்கும் பாஸ் மார்க் வாங்கிகொண்டிருந்தவன் fail ஆவதற்கும் வேறுபாடுகள் உள்ளன.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3522
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்,

    தங்களின் அரிய பொக்கிஷ புகைப்பட பதிவுகள் அருமை. முடிந்தால் புகைப்படத்தின் விபரத்தையும் (புகைப்படத்திலிருப்பவர்கள் பெயர் அல்லது நிகழ்ச்சி) இயன்றவரை அளித்தால் நன்று.

    நன்றி
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  4. #3523
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    எங்கே ,எப்போது,எப்படி சந்திக்கலாம்? தயார்.
    ஜூலை மாதம் வந்தால் ஜோடி தேடும் வயது..

    மங்களூர் போண்டாவிற்கு நான் தயார்..அப்போ நீங்க?

  5. #3524
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    டியர் ராகுல்ராம் சார்,

    தங்களின் கிரஹப்பிரவேசம் பற்றிய பதிவு நன்று
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  6. #3525
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by KCSHEKAR View Post
    டியர் ராகுல்ராம் சார்,

    தங்களின் கிரஹப்பிரவேசம் பற்றிய பதிவு நன்று
    thanks sir

    This news I got from NET

    அமரர் சிவாஜி நடித்த 'சரஸ்வதி சபதம்' படத்தை கேவலப்படுத்துகிறார்கள் என்று அவரது Saraswathi Sabathamரசிகர்கள் குமுறி ஓய்ந்துவிட்டார்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும் சகஜம்தான் என்று இந்த விஷயத்தில் ஒதுங்கிக் கொள்ள முடியாது என்பது அவர்களது வாதம்.

    அதே பெயரில் இன்னொரு படத்தை எடுக்க ஏஜிஎஸ் நிறுவனம் முனைந்ததுதான் இந்த கோபத்திற்கெல்லாம் காரணம். ஆனால் இந்த குமுறலையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு படத்தின் விளம்பரத்தையே ஆர்வத்தோடு ரசிக்க ஆரம்பித்தார்கள் மக்கள். கூகுள் சர்ச் என்ஜினில் 'ப்ளீஸ் கூகுள், கடவுள் எங்க இருக்காருன்னு எனக்கு காட்டு' என அந்த விளம்பரத்தில் ஒரு வாசகத்தையும் வெளியிட்டு ஆர்வத்தை தூண்டிய படக்குழு இப்போது ஜரூராக மற்ற வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறது.

    படத்தின் இயக்குனர் சந்துரு மேற்பார்வையில் பிரமாண்டமான தேவலோக செட் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். தேவலோகம் என்றாலே சிம்மாசனம், புகை, தேவ கன்னிகைகள் என்றெல்லாம்தானே கற்பனை வரும்? ஆனால் அங்குதான் ட்விஸ்ட்.

    இந்த தேவலோகம் இந்த கம்ப்யூட்டர் காலத்திற்கேற்ப நவீன தொழில் நுட்பங்களை உள்ளடக்கி உருவாகிறது. கோட், சூட், டை கட்டிய கடவுள்கள். சிம்மாசனத்திற்கு பதிலாக சுழலும் நாற்காலிகள், கம்ப்யூட்டர்கள் என்று ஒரு மினி டைடல் பார்க்கையே தேவலோகமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    இவ்ளோ பண்றீங்க, இது பண்ண மாட்டீங்களா என்று பழைய தலைப்பையும் மாற்ற சொல்லி மறுபடியும் 'கிளம்புகிற' அதி தீவிர சிவாஜி ரசிகர்களுக்குதான் இந்த டீம் என்ன பதிலை வைத்திருக்கிறதென்று தெரியவில்லை.

  7. #3526
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ragulram11 View Post
    GRAHAPRAVESAM


    சண்டை வந்த உடன் மேஜர் யிடம் தன் மனைவிகாக ஆதரவாக பேசுவதும் அதே சமயம் அவளை கடித்துகொல்வதும் NT மட்டுமே சாத்தியம்.

    குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்
    I dont remember this scene in the movie. If it is there it would have been like nan kadavul Agori scene. How I missed it!!!!
    Ragul ram, wecome with your first Tamil posting. Well done.

  8. #3527
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அபூர்வ நிழற்படம்



    தலைவரின் அபூர்வ தோற்றம். உடனிருப்பதும் படத்திற்கு நன்றியும் ... நமது அன்பு முகநூல் நண்பர் எம்.எல்.கான் அவர்கள்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #3528
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-28

    கப்பலோட்டிய தமிழனின் நோக்கம், தேசியம், விடுதலைக்காக செய்த உன்னத தியாகங்கள்.ஒரு தனி மனிதன் தன் சொந்த பந்தங்கள் சொத்து சுகங்கள் அத்தனையும் தேசத்துக்காக அர்ப்பணித்த உன்னதம், தேச விடுதலைக்காக பொருளாதார ,வியாபார உத்தியை கையிலெடுத்த துணிச்சல் மிகுந்த enterprenership ,ஒரு முதலாளியாகவே இருந்தும், தொழிலாளர் உரிமைக்காக போராடும் நேர்மை, ஆதிக்கத்தை கண்டு அஞ்சாமை,ஆனால் கடைசியில் நம்பியவர்களால் கை விடப்பட்டதும் அல்லாமல், கண்டு கொள்ளாமலும் விட பட்ட சோகம் இவற்றை முன்னிறுத்திய super -objective கொண்ட உண்மை theme .

    இதில் வ.உ .சி இளமை காலங்கள் சொல்ல படவே இல்லை. ஆரம்பமே கல்யாணமாகி ,pleader பணியில் இருக்கும் நாட்களே. பொது வாழ்வின் ஆரம்ப நாட்களில் இருந்து தொடக்கம். பிறகு அவருடைய அந்நிய பொருள் பகிஷ்கரிப்பு, சுதேசி கப்பல் கம்பெனிக்கான முனைவு, தொழிற்சங்க, அரசியல் போராட்டங்கள் என்று விரியும். பிறகு சிறை வாழ்க்கை, வெளியில் வந்ததும் ஏமாற்றம் நிறைந்த பொது வாழ்வு மற்றும் தனி வாழ்வு. என்று மூன்று கட்டங்களில் விரியும்.

    இதற்காக நடிகர் திலகம் செய்த home work அபாரமானது. முதலில் மொழி. தமிழில் slangs ,ஓட்டபிடாரம் பிள்ளைகளுக்கு உரிய வட்டார மொழி என்பது இருந்தாலும் அது தொட்டு கொள்ள ஊறுகாய் போல ஒரு சில குடும்ப காட்சிகளில் உபயோக படுத்த படுவதோடு சரி.மற்ற படி ஒரு வழக்கறிஞர், பொது வாழ்க்கைக்கு வந்த, இலக்கியம் ,ஆங்கிலம் அறிந்த மனிதர்களுக்கு உண்டாகும் பொது மொழி தேர்ந்தெடுப்பு மிக சரியானது.(நினைத்திருந்தால் மக்களை பெற்ற மகராசி கொங்கு தமிழ் போல பிள்ளை தமிழ் பேசியிருக்கலாம்.).

    அடுத்து personality . ஒரு வசதியான வீட்டு படித்த மனிதர். முதலாளி ,leadership quality உள்ள abnormal enterprener and a practising lawyer .அதற்குரிய constructive arrogance ,மிடுக்கு, அதே நேரத்தில்
    exhibitionist politeness , commitment to the cause ,எதிரில் இருப்பவரின் தரமறிந்து நடக்கும் பழகும் இங்கிதம்,public life outwardly courageous conviction என்பவை கொண்ட முதல் கட்ட பாத்திர குண வார்ப்பு.

    இரண்டாவது கட்ட பாத்திர வார்ப்பு ,அவர் சிறையில் தனக்கு பழக்கமில்லா கடின உடலுழைப்பு, சிறிதே physical abuse , தனிமை சிறை வாசம் என்று உடலை சோர வைத்தாலும் மனதில் உறுதி தளரா நிலைமை.

    மூன்றாவது கட்டமோ , குடும்பம் சிதைந்து, அவர் உருவாக்கிய கம்பனியை வெள்ளையனுக்கே விற்று விட்ட துரோகம்,மக்களின் பாரா முகம், ஒன்றன் பின் ஒன்றாக நண்பர்களின் துயரம் மற்றும் இழப்பு, ஒரு defeatist introverted சுருங்கல், உடலும் மனமும் சோர்ந்து இலக்கிய பணியில் ஒதுங்கி மீதி நாட்களை இறப்பு வரை கடத்துவது என்கிற phase

    -----To be continued ..

  10. #3529
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    எங்கே ,எப்போது,எப்படி சந்திக்கலாம்? தயார்.
    http://www.mayyam.com/talk/showthrea...=1#post1042605
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  11. #3530
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-29

    படத்தின் துவக்கத்திலேயே எனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. எனக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் போது class teacher என் அம்மாதான்.டீச்சர் என்றுதான் வகுப்பிலும், பள்ளியிலும் கூப்பிட வேண்டும், அம்மா என்று கூப்பிட கூடாது என்று கண்டிப்பான உத்தரவு. கூப்பிட கூடாது என்ற deliberate consciousness என்னை அடிக்கடி தவற வைக்கும். முதல் காட்சியில் தந்தைக்கெதிராக ஒரு வழக்கில் ஆஜராகும் போது வாய் தவறி அப்பா என்று ஆரம்பித்து மன்னிக்கவும் எதிர் கட்சி வக்கீல் என்பார். சிறிதானாலும் என்னால் மறக்க முடியாது.

    ஒவ்வொருவருடனும் interract பண்ணும் போது அதற்குரிய ஒரு தனி சிறப்பான விசேஷம். சிவாவுடன் ஒரு மதிப்புக்குரிய ஆசிரிய தோழன் ,பாரதியுடன் விளையாட்டு கலந்த புரவல உரிமை, மாடசாமியிடம் மகனை போன்ற ஆனால் வேலையாள் என்ற நிலையும் தலை காட்டும் தோரணை, கப்பல் கம்பனி இயக்குன நிர்வாகிகளுடன் வணிக நோக்கம் கலந்த நட்பு,தொழிலாளர்களிடம் பரிவான ஒரு வாஞ்சை(பரிமாறிய சோற்றை எடுத்து உண்டு தரம் பார்க்கும் ஒரு leadership கலந்த exhibitionist good gesture ), adverse situation போது வெளிப்படும் assertive firmness (கப்பல் தர மறுக்கும் ஷா விடம்),திலக்கிடம் பேசும் போது பணிவும் ,மரியாதையும் கலந்த ஆங்கில(எவ்வளவு நல்ல உச்சரிப்பு) விண்ணப்பம்,ஆஷ் மற்றும் விஞ்ச் இவர்களுடன் விட்டு கொடுக்காத அலட்சிய பேச்சு என்று வ.உ .சி போல behave செய்து பாத்திரமாக வாழ்ந்திருப்பார்.

    சிறையில் தனக்கு பழக்கமில்லாத உடலுழைப்பில் ஈடு படுத்த படும் போது விருப்பமில்லா கஷ்டத்தை வெளியிடும் முறை, மனத்தை உறுதியாக வைத்திருக்க பிரயத்தனம் கலந்த மெனக்கெடல், டாக்டருடன் interract செய்யும் போது அலட்சியம் காட்டினாலும் இதற்கு மேல் என்ன என்ற வகையிலேயே, சிறையிலிருந்து விடுதலை என்றதும் நாட்டுக்கா விடுதலை என்று மேலுக்கு பேசினாலும், வெளியில் வந்ததும் அடையும் சுதந்திர உணர்வை ,அந்த காற்று பட்ட உணர்வை, பறவைகளை பார்த்து அடையும் பரவசத்தை காட்டியும் விடுவார்.

    ஏமாற்றத்தை உணர்ந்தாலும் (ஒருவர் கூட அழைக்க வராததில்), மேலுக்கு சமாதானம். சிவாவை பார்த்து அடையும் அதிர்ச்சி கலந்த பரவசம்,தம்பி மனநிலை பிறழ்வில் தலையில் அடித்து அடையும் தாங்கொணா துயரம், மக்களின் உதாசீனத்தை அனுபவித்து கூட்டுக்குள் முடங்கும் சுருக்கம், இழப்பில் காட்டும் ஏமாற்றம் நிறைந்த தனிமை சோகம் என்ற அளவில் method acting முறையில் மூன்று phases என்று வரும் நிலைகளிலும் பாத்திரத்தை வார்த்ததில் மூன்று முக்கிய compliments .

    முதல் ஒன்று சிவாஜியிடம் இருந்து சிவாஜிக்கு---- நான் நடித்ததிலேயே மிக சிறந்த பாத்திரம் என்று. இரண்டாவது வ.உ.சி மகன் ஆறுமுகத்திடம் இருந்து தந்தையை தத்ரூபமாக கண்டேன் என்றது. மூன்றாவது வ.உ .சி மற்றும் சுப்ரமணிய சிவாவை அனைத்து நிலைகளிலும் நேரில் கண்ட என் தாத்தா வின் பரவச compliment . "வேறு எவண்டா இப்படி பண்ண முடியும்? நடிக்கலைடா. அப்படியே வாழ்ந்துட்டான், நான் நேர்லயே பாத்திருக்கேண்டா அவர்களை எல்லாம். அதை வைச்சு சொல்றேன்". என்ற மனமார்ந்த பரவசம்.

    இதற்கு மேலும் வார்த்தை ஏது சொல்ல?

    -----To be continued .
    Last edited by Gopal.s; 14th May 2013 at 05:04 AM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •