Page 326 of 401 FirstFirst ... 226276316324325326327328336376 ... LastLast
Results 3,251 to 3,260 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #3251
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-20


    விக்ரமனுக்கு படத்தில் சமவயது நண்பனே கிடையாது. அவன் வாழ்க்கையில் அன்னை ,தந்தை என்ற figure heads மன அளவில் கூட கிடையாது. சொன்ன படி சகலமும் மாமாதான்.

    அதனால் மாமாவுடன் விக்ரமனின் interractions மிக மிக கவனிப்பை பெற வேண்டிய ஒன்று.

    தன் பெண் நண்பிகளுடன் உல்லாசமாக வலம் வரும் மகுடாபிஷேக காட்சியில் சுயவிரும்பி(narcist ) விக்ரமன் தன் அழகை பற்றி கேட்பது கூட மாமாவிடமே. பிறகு கிளி பிள்ளை போல், சுயமாக எதுவும் பேசாமல், மறந்து விட்டேன் என கூறி, stuck ஆகி மாமா சொன்னதை (மிக முக்கிய அறிவிப்பு), போகிற போக்கில் தண்ணி குடித்தேன் என்பது போல அறிவிக்கும் பாணியில், சுய அறிவை மழுங்கடித்து வளர்க்க பட்ட குழந்தை ,ஆசிரியர் கூறியதை மனனம் செய்து போகிற போக்கில் ஒப்பிக்கும் பாணி. எனக்கு மாமா தேவை என்றதும் ஆமோதிக்காத கூட்டத்தை அதட்டும் போதே, குழந்தைக்கு மாமா ஒன்றுதான் உலகம் என்று அழுத்தம் கிடைத்து விடும்.

    தன் விருப்பத்தை மாமாவிடம் சொல்லும் போது , ஒரு நண்பனிடம் பேசும் அன்னியோன்யம் , தாயின் எதிரிலேயே ஒரு பெண்ணை(மந்திரியின் பெண்) கயமை நோக்கோடு கண்ணியமில்லாமல் பார்த்து, மாமா பெண் பிடித்து விட்டது என்று தாயிடம் சொன்னதும்,ஒரு அவசர விழைவு கலந்த ஆமோதிப்பு, கண்ணியமற்ற முறையில் மாமாவிடம் தோழன் ஸ்தானத்தில் ஒரு ஆபாச கமெண்ட் என்று யூகிக்கும் அளவில் ஒரு கிசுகிசுப்பு. முடிவெடுக்க திணறும் அத்தனை தருணங்களிலும் மாமாவிடம், சாவி நின்ற பொம்மை போல ஆலோசனை கேட்கும் எடுப்பார் கை பிள்ளை தனம்.(ஏதாவது சொல்லுங்கள் ரீதியில்).அதில் தனக்கு ஆபத்து வரும் ரீதியில் வந்தால் மட்டும் முழித்து கொண்டு யோசனயை நிராகரிக்கும் குழந்தை தனம் கொண்ட சுய நலம்.
    ஆனால் denial என்றோ, கேட்டது கிடைக்காத போதோ இந்த குழந்தை மாமாவையோ நிர்தாட்ஷன்யத்துடன் குத்தி குதறி திட்டும் ஜோர்.(நீங்கள் மீண்டும் கோட்டை விடாமலிருக்க. நானென்ன முட்டாளா. ஆமாம்.) களித்து,சிரித்து, சகலமுமான மாமாவை பணயமாக வைத்து பார்த்திபன் சவால் விடும் பொது, அப்படியும் செய்து பார்க்கலாமா என்று sadism கலந்த குரூரத்துடன் , குழந்தைத்தனமான குறு குறு ப்புடன் கேட்கும் விதம்.

    ஆனால் , பிடிபடும் நேரம் வரும் போது சுயநலத்துடன் (தண்ட- உன்னை என்ன செய்கிறேன் பார், பேத- மாமாதான் எல்லாம், தான- இந்த நாட்டை தருகிறேன், சாம- என்னை மன்னித்து விடு) குழந்தை கொஞ்ச நேரம் சுயநல அரசன் பாணியில் முயலும். ஆனால் மாமாவை போட்டு கொடுத்து தான் தப்பிக்கவும் தயங்காது.

    மாமாவிடம் நிஜமான கரிசனமோ ,மரியாதையோ இன்றி, விளையாட்டு தோழனாக,விபரீத மந்திரியாக,சொன்னதை நிறைவேற்றும் சேவகனாக என்றுதான் உறவே.

    இது மாதிரி ஒரு அற்புத மனோதத்துவ ரீதியான நடிப்பு வெளியீட்டை ,நானறிந்த எந்த உலக படத்திலும் கண்டதில்லை.

    ----To be continued .
    Last edited by Gopal.s; 5th May 2013 at 02:15 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3252
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    நடிகர்திலகம் ശിവാജി ഗനെസാൻ நடித்த தச்சோளி அம்பு இடுகை நன்று.
    பாராட்டிற்கு மிக்க நன்றி கோபால் சார்.!

  4. #3253
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் திலகம் மீது அன்புள்ளம் கொண்ட அனைவருக்கும் இந்த நடிகர் திலகம் 83ர்ட் பிறந்த நாள் விழா காட்சியினை சமர்பிக்கிறேன்...

    இதில் திரு.ஏவிஎம் சரவணன் அவர்களும் SRM பல்கலை கழக நிறுவனர் திரு.பாரிவேந்தர் aka PACHAIMUTHU அவர்களும், பேராசிரியர் ஞானசம்பந்தம் அவர்கள், நடிகர் திலகத்தை பற்றிய தங்கள் எண்ண அலைகளை பகிர்ந்துகொள்கிறார்கள். இது வெறும் உதட்டில் இருந்து வரும் வார்த்தைகள் அல்ல. உள்ளத்தில் இருந்து வருபவை.

    சாதுர்யம், ஆதிக்ய வெறிகொண்டு அடக்கியாளும் திறன், தலைகனம், திமிர், மற்றும் இதுபோல பல பயமுறுத்தும் குணங்களால் நம் நடிகர் திலகம் இவர்களை பேச வைக்கவில்லை.

    அன்பு, தன்னடக்கம், பாசம், பண்பு, மற்றவர்களை மதிக்கும் பாங்கு, தொழில் மீது கொண்ட அசாத்ய நம்பிக்கை, பக்தி, மற்றும் பல நல்ல குணங்களால் இவர்களது அன்பை சம்பாதித்தார்.!

    நடிகனாக மட்டுமே அவர் இருந்திருந்தால் இன்று நானோ நீங்களோ இதை எழுதிக்கொண்டு இருக்கவும் மாட்டோம், படித்துகொண்டு இருக்கவும் மாட்டோம்...

    திரைப்படங்களையே பார்த்துகொண்டிருக்கும் கண்களுக்கும், திரை சம்பந்தமான விஷயங்களையே இவ்வளவு நாள் கேட்டுகொண்டிருந்த காதுகளுக்கும், சிறிது மாறுதலுக்காக இங்கே இடுகை செய்கிறேன் !



    Last edited by Sowrirajan Sree; 4th May 2013 at 09:48 PM.

  5. #3254
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மனித சமுதாயத்துக்கும், மாணவ சமுதாயத்திற்கும், நடிகர் திலகத்தின் வாழ்கை ஒரு சாராம்சமாக பாடப்புத்தகத்தில் வரவேண்டும் என்று கூறும் திரு.பச்சைமுத்து அவர்கள்.....கேளுங்கள் ! சத்தியமான வார்த்தைகள் தொடர்கிறது .......

    http://www.youtube.com/watch?feature...e2S5Fo5xw&NR=1
    Last edited by Sowrirajan Sree; 4th May 2013 at 09:50 PM.

  6. #3255
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் திலகம் அவர்களின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ள அத்துணை உயிர்களுக்கும் ஓர் அரிய கண்ணொளி -

    பேராசிரியர் திரு. கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் நம் நடிகர் திலகத்தை பற்றிய ஆராய்ச்சியில் சிவாஜி - ஒரு பண்பாட்டியர் குறிப்பு என்ற இந்த கண்ணொளியை சமர்பித்திரிகிறார்.

    நடிகர் திலகம் திரைத்துறையில் இல்லையெனில் வறண்ட ஒரு திரைஉலகமாக தான் வறட்சியுடன் இருந்திருக்கும் என்கிறார் !

    கற்றவர்கள், கல்லாதவர்கள், உள்ளவர்கள், இல்லாதவர்கள், நல்லவர்கள், கெட்டவர்கள், ஆஸ்திகர்கள், நாஸ்திகர்கள் மற்றும் இது போன்ற அனைவருக்கும் நம் நடிகர் திலகம் ஒரு ஆச்சர்யமும், அதிசயமும், விந்தையும், விநோதமும், சந்தோஷமும், ஆர்வமும் ஒருங்கே பெற்ற ஓர் ஆராய்ச்சி வடிவமாகும் !


  7. #3256
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    மேலே உள்ள படத்தில் காணப் படுபவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பல படங்களுக்கும், தேவர் பிலிம்ஸ், இயக்குநர் ப. நீலகண்டன் இவர்களிடம் ஆஸ்தான அளவிலும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய திரு ராமமூர்த்தி அவர்கள். தமிழ்த் திரையுலகில் ஈடு இணையற்ற ஒளிப்பதிவு மேதை எனப் போற்றப் படுபவர். வசதிக்குறைவான அந்தக் கால கட்டத்திலேயே ACTION SEQUENCES எடுப்பதில் நிகரற்று விளங்கியவர். நடிகர் திலகத்தின் படங்களில் இவர் பணியாற்றியிருக்கிறார். அதில் குறிப்பிடத் தக்கது கர்ணன். நேற்று - 03.05.2013 தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் இவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கிய பேட்டி மறு ஒளிபரப்பு செய்யப் பட்டது. இந்தப் பேட்டியில் இவர் குறிப்பிட்ட ஒரு விஷயம் புதியதாகும்.

    கர்ணன் திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சி கிட்டத்தட்ட 960 அடிகளுக்கு எடுக்க திட்டமிடப் பட்டதாம். ஒரு யூனிட் பிலிம் 1000 அடிகளாம். அது ஒரு வட்ட டிராலி ஷாட். மிகவும் குறுகிய காலத்தில் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம். அதைப் பயன்படுத்துவதிலும் பல நிர்ப்பந்தங்கள். பிலிம் பற்றாக்குறை வேறு. டப்பிங் இல்லாத காரணத்தால் வசனத்தையும் ஒரே டேக்கில் எடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தம். குரலும் தெளிவாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம். இப்படி பல்வேறு நிர்ப்பந்தங்களையும் சந்தித்து அந்த காட்சியை படம் பிடித்து முடிக்க நடிகர் திலகம் எடுத்துக் கொண்டது ...

    JUST ONE TAKE AND ONE SHOT ...

    என்ன மனிதரய்யா இவர் தெய்வப் பிறவி என்றால் இவரன்றோ அதற்கு பொருத்தமானவர்.. தயாரிப்பாளர் தொழில் நுட்பக் கலைஞர்கள் சக கலைஞர்கள் என்று ஒரு லைட்பாயின் கஷ்டத்தைக் கூட உணர்ந்து யாருக்கும் சிரமம் வைக்காமல் தன் தொழிலை தெய்வமாய் மதித்து பணியாற்றிய இவருக்கு ஈடுண்டோ.

    இதனைத் தொடர்ந்து ராமமூர்த்தி அவர்கள் சொன்ன இன்னொரு விஷயம் ...

    நடிகர் திலகம் உருக்கமாக நடிக்கும் போது ஒளிப்பதிவு செய்வது மிகவும் சிரமம் என்றார். உணர்ச்சி வசப்படாமல் பணியாற்றுவது கடினம் என்றும், ஒளிப்பதிவு செய்யும் போது தம்முடைய கண்களில் கசியும் கண்ணீர் அந்த காமிரா லென்ஸையே மறைத்து விடுமாம்.

    ...

    சரி அந்தக் காட்சி எது ...

    கர்ணன் தன் தாயை சந்திக்கும் மிகப் பிரபலமான காட்சியே.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #3257
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post


    மேலே உள்ள படத்தில் காணப் படுபவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பல படங்களுக்கும், தேவர் பிலிம்ஸ், இயக்குநர் ப. நீலகண்டன் இவர்களிடம் ஆஸ்தான அளவிலும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய திரு ராமமூர்த்தி அவர்கள். தமிழ்த் திரையுலகில் ஈடு இணையற்ற ஒளிப்பதிவு மேதை எனப் போற்றப் படுபவர். வசதிக்குறைவான அந்தக் கால கட்டத்திலேயே ACTION SEQUENCES எடுப்பதில் நிகரற்று விளங்கியவர். நடிகர் திலகத்தின் படங்களில் இவர் பணியாற்றியிருக்கிறார். அதில் குறிப்பிடத் தக்கது கர்ணன். நேற்று - 03.05.2013 தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் இவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கிய பேட்டி மறு ஒளிபரப்பு செய்யப் பட்டது. இந்தப் பேட்டியில் இவர் குறிப்பிட்ட ஒரு விஷயம் புதியதாகும்.

    கர்ணன் திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சி கிட்டத்தட்ட 960 அடிகளுக்கு எடுக்க திட்டமிடப் பட்டதாம். ஒரு யூனிட் பிலிம் 1000 அடிகளாம். அது ஒரு வட்ட டிராலி ஷாட். மிகவும் குறுகிய காலத்தில் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம். அதைப் பயன்படுத்துவதிலும் பல நிர்ப்பந்தங்கள். பிலிம் பற்றாக்குறை வேறு. டப்பிங் இல்லாத காரணத்தால் வசனத்தையும் ஒரே டேக்கில் எடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தம். குரலும் தெளிவாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம். இப்படி பல்வேறு நிர்ப்பந்தங்களையும் சந்தித்து அந்த காட்சியை படம் பிடித்து முடிக்க நடிகர் திலகம் எடுத்துக் கொண்டது ...

    JUST ONE TAKE AND ONE SHOT ...

    என்ன மனிதரய்யா இவர் தெய்வப் பிறவி என்றால் இவரன்றோ அதற்கு பொருத்தமானவர்.. தயாரிப்பாளர் தொழில் நுட்பக் கலைஞர்கள் சக கலைஞர்கள் என்று ஒரு லைட்பாயின் கஷ்டத்தைக் கூட உணர்ந்து யாருக்கும் சிரமம் வைக்காமல் தன் தொழிலை தெய்வமாய் மதித்து பணியாற்றிய இவருக்கு ஈடுண்டோ.

    இதனைத் தொடர்ந்து ராமமூர்த்தி அவர்கள் சொன்ன இன்னொரு விஷயம் ...

    நடிகர் திலகம் உருக்கமாக நடிக்கும் போது ஒளிப்பதிவு செய்வது மிகவும் சிரமம் என்றார். உணர்ச்சி வசப்படாமல் பணியாற்றுவது கடினம் என்றும், ஒளிப்பதிவு செய்யும் போது தம்முடைய கண்களில் கசியும் கண்ணீர் அந்த காமிரா லென்ஸையே மறைத்து விடுமாம்.

    ...


    கர்ணன் தன் தாயை சந்திக்கும் மிகப் பிரபலமான காட்சியே.
    நீங்கள் சொன்னவுடன் என் கண்களில் அப்படியே அந்த காட்சி வந்து நின்றுவிட்டது...நடிகர்திலகம் அந்த கேமரா சுழலதொடங்கியதிலிருந்து முடியும் வரை...மிக நேர்த்தியாக அந்த "rotation ஐ, மிகவும் லாவகமாக கையாண்டிருப்பார். வேறு நடிகர்கள் நடித்திருந்தால் இந்தளவு நேர்த்தி, லாவகம் நிறைந்திருகுமா என்பது சந்தேகமே. ஒரு இடத்தில் அவர் தன் மார்பிலே போர்த்தியிருக்கும் தன் தாயின் பட்டுசேலை வழுக்கி விழுவதுபோல சரியும் ...நடிகர் திலகம் ஒரு 10 டிகிரி காமேரவிர்க்கு தக்க திரும்பும்போதே அதை வசனம் பேசிகொண்டே மிகவும் யதார்த்தமாக அந்த பட்டு சேலையை அதன் ஒரிஜினல் position உக்கு அட்ஜஸ்ட் செய்துவிடுவார் பாருங்கள்....அடேயப்பா ! ஒரு நடிகன் நீண்ட வசனம் பேசுகிறார் அதுவும் ஒரே டேக் இல் எடுக்க எல்லவரும் தயாரானநிலையில் அந்த சேலை சரிந்து விழபோகிறது என்று தெரிந்து அதை காட்சிக்கு பங்கம் விளைவிக்காமல், அதே நேரம் பார்பவர்களுக்கு அது அப்பட்டமாக தெரியாமல்இருக்க அதை லாவகமாக சரிசெய்து அதுவும் வசனம் பேசும்போதே எதெல்லாம் செய்கிறார் என்றால்.....அவர் சித்தர் அன்றி வேறு யார் ? நிச்சயம் அவர் திரை உலகின் முழு முதற் கடவுள் கணேச மூர்த்தி தான் ! ஐயமில்லை !

  9. #3258
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இதுவன்றோ சாதனை - வசந்த மாளிகை திருநெல்வேலியில் வெள்ளி மற்றும் சனிகிழமை (அதாவது இன்று) ஆறு காட்சிகள் முடிய ருபாய் 87,635 வசூலில் பட்டையை கிளப்பியுள்ளது.
    புதிய திரைப்படங்கள் அரங்கு நிறைவு காண தவறி, வசந்தமாளிகை இன்று மாலை காட்சி அரங்கு நிறைவு மற்றும் இரவு காட்சி கிட்டத்தட்ட அரங்கு நிறைவு ஏற்பட்டிருப்பதாக ஊராட்சி ஒன்றிய செயலாளரும் என் இனிய நண்பருமான திரு.குருமூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.

    நாளை மாலை ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்களுக்கு நோட்டுபுத்தகம் மற்றும் சீருடை இளைஞர் அணி சார்பாக வழங்கபோவதாக அறிவித்துள்ளார்..!

    "தொடும் சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை இந்த சக்கரம் சுற்றுதடா ....ஹா...ஹா....அதில் நான் சகரவர்தியடா ஹே...ஹே....! " - நிரூபித்துவிட்டீர்களே மறுபடியம் ஒருமுறை நடிகர் திலகமே !

  10. #3259
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-21


    விக்ரமன் அன்னையுடன் interract பண்ணும் காட்சிகள் நான்கே நான்குதான் ஆனாலும் , திரையுலகு நிலைத்திருக்கும் வரை ,நிலைத்திருக்க கூடிய காட்சிகள்.

    விக்ரமன் ஆட்சி முறை கண்டு கொதித்து போய் தாய் நல்லுரை (advise ) கூற வரும் காட்சியில், பாதி களியாட்டத்தில்,சீ, என்ன இது இடையூறு என்ற கோபத்துடன் ,பாதியில் மிட்டாய் பறிக்க பட்ட குழந்தையை போன்று காலை உதைத்து வேண்டா வெறுப்பாக ஊஞ்சலில் cool ஆக அமர்ந்து, ஒரு வார்த்தை பேசாமல் ,செவிடன் காதில் ஊதிய சங்கு என்பது போல்,indifference காட்டும் பாராமுகம். ஆனாலும் ,அன்னை சொல்லும் படி தவறு செய்கிறோமோ என்ற அவ்வப்போது குழந்தை குறிப்புடன் ஓர கண்ணால் ஒரு 20% குற்றவுணர்வுடன் பார்ப்பது என்று இந்த காட்சியில் ஒரு வார்த்தை கூட பேசாமல் விக்ரமன்-அன்னை உறவு நிலை பூரண பட்டு விடும். chekhov உயிரோடு இருந்திருந்தால் ,இந்த மேதையின் காலில் விழுந்து வணங்கி இருப்பான்.

    இரண்டாவது காட்சி, அமுதாவை அரண் மனைக்கு அழைத்து வந்து அறிமுக படுத்தும் காட்சி.தாய் (அதுவும் மகாராணி) அருகில் இருக்கும் விஷயமே விக்ரமனுக்கு பொருட்டில்லை.(தாய் என்ற image அவன் psyche இலேயே கிடையாது). ஒரு கண்ணியமற்ற காம பார்வை ,இரையை விழுங்கும் வெறியோடு, சம்மதத்தை கூட இங்கிதமின்றி கண்ணடித்து வெளியீடு.

    கடைசியில், சிறையில் பார்த்திபனுடன் தாயை பார்த்து விட்டு, துளி கூட ஈரமின்றி மாமாவின் கைது செய்யும் திட்டத்திற்கு மருந்திற்கு கூட மறுப்பு தெரிவிக்க மாட்டார்.ஆனால் தற்கொலை செய்ய முயலும் தாயை ,ஒரு நொடி தடுக்க பார்க்கும் கணம்,விக்ரமன் மனித தன்மை துளியே துளி எட்டி பார்த்தாலும், அடுத்த நொடி அசல் விக்ரமனாகி விடும்.பார்த்திபனை விடுதலை செய்ய மறுப்பதோடு, மரண தண்டனையை மாற்ற மன்றாடும் தாயின் குரலுக்கு செவி சாய்ப்பது போல் ,அதை விட கொடூர சித்திர வதையை தண்டனையாக்கி, இதை தடுத்தால் தாயென்றும் பார்க்க மாட்டேன் என்று சொல்லும் கொடூர தனம். mercurial swings என்று சொல்ல படும் உடல்,கை-கால் இயங்கு முறையில், அலையும் மனம்- கொடூரம்-சுயநலம்-சந்தேகம்-sadism -நிச்சயமற்ற தன்மை என்று தமிழில் வந்த காட்சிகளிலேயே நடிப்பாற்றலில் உச்சம் தொட்ட ஒன்று.

    இனி , காம விழைவு கொள்ளும் அமுதாவிடம் தொடர்பு காட்சிகள்.....(மாமாவின் அரசியல் ரீதியான வற்புரூத்தலினால்தான் மணக்கவே ஒப்புதல்).

    குதிரையில் தன்னை விக்ரமன் என்று எண்ணி mixed reaction இல் பார்க்கும் அமுதாவை ஏற இறங்க பார்த்து , மற்றோரை நிறுத்த சொல்லி ஆணையிடும் முறை. தாயின் முன் அமுதாவை பார்க்கும் பண்பற்ற முறை,மாமாவிடம் vulgar comments ஏற்கெனெவே பார்த்து விட்டோம்.

    அமுதாவிடம் பார்த்திபனாக நடிக்கும் விக்ரமன்(நடிக்க முயலுவதாக காட்டியிருப்பார் மேதை), அலை பாயும் கண்களுடன், tone down பண்ணினாலும், இயல்பை முற்றும் துறக்காமல் react பண்ணுவார். இது எந்த ரெட்டை வேடம் போட்ட ஆள் மாறாட்டம் பண்ணும் நடிகனும் செய்யாத சாதனை. பின்னால் பார்த்திபனும் விக்ரமனாக நடிக்கும் போது ,சாந்த பார்வை ,மித நடையுடன் கொஞ்சமே மற்றோருக்கு சந்தேகம் எழாதிருக்க tonal difference (சற்றே குறைபாடுள்ள) மட்டும் காட்டுவார். இந்த மேதை 1958இல் சாதித்த போது ,இதை கவனித்து சொல்ல சரியான விமரிசகர்கள் கூட இங்கில்லை.

    ஆனால் பார்த்திபன் பிடிபட்டதும், பரிந்து பேசும் அமுதாவை அடங்கு என்ற ரீதியில் முறைத்து ,மாமா இவளை மன்னித்து விடுவோம் என்றதும் ,அமுதா எதிர்த்து பேசும் போது ,காமம்-கோபம்-குரோதம் கொப்பளிக்க எனக்கு தேவை என்று சொல்லும் ஒரு நிமிட பார்வை...

    ஆனாலும் ,இந்த வளர்ந்த குழந்தைக்கு தன்னிடம் அமுதா நிஜமாகவே மயங்கி விட்டாள் என்று அசட்டு தனமான self -confidence உடன் தொடரும் இடத்தில்,சாவியை சுண்டி பார்க்கும் மூன்று முறையும் ,reaction காட்டும் முறையில் படி படியாய் reflex தேய்வதை எவ்வளவு அழகாக காட்டுவார்?இந்த அழகில் சுழன்றாடும் அமுதாவிற்கு தள்ளாட்டத்துடன் சுழன்றாடி சாயும் காட்சி...

    பார்த்திபனுடன் ,தன்னை போல ஒருவன் அரண்மனைக்குள் ஊடுருவி, அமுதாவை பார்க்க வருகிறான், தன்னை ஒரு முறை அவமான படுத்தி தப்பித்தவன் , என்ற முறையில் பிடி பட்டதும் ,சுற்றி வந்து கொடூர கோபத்துடன்,பிடிபட்டு விட்டாயே என்ற நக்கலுடன் curiosity யும் காட்டுவார்.(மேதை என்றால் சும்மாவா?). என்னை போலிருப்பது என்று குற்றம் சுமத்தி ,பார்த்திபன் பதில் சொன்னதும் ,மாமா இவன் மீது வேறு ஏதாவது குற்றம் சுமத்துங்கள் என்று அப்பாவித்தனமான இயலாமையுடன் desperation தொனிக்க கேட்பது..

    சிறை காட்சியில், பார்த்திபன் சகோதரன் என்று தெரிந்ததும் ஒரு நிமிட தடுமாற்றம் ....புரியா உணர்வு...blank feelings ... என்று ஒரு கண நேர expression .....

    இப்போது சொல்லுங்கள் ,நான் ஏன் இன்னும் விக்ரமனிடம் விரும்பியே ஆயுள் சிறை பட்டிருக்கிறேன் என்று?

    ------To be continued .(தற்போதைய உத்தம புத்திரன் பதிவுகள் 318-3175, 321-3204, 326- 3251, 326-3259)
    Last edited by Gopal.s; 5th May 2013 at 01:11 PM.

  11. #3260
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த மாதிரி தொடர் எழுத்துக்களை எப்படி index பண்ணி தொகுத்து படிப்பவர்கள் வேலையை சுலபமாக்குவது?திரியிலிருந்து voluntary retirement வாங்கிவிட்ட முரளியோ அல்லது ராகவேந்தர் சாரோ விளக்கலாம்.
    படிப்பவர்கள் வசதிக்காக-----(இந்தியாவின் ஒரே உலக அதிசயம்- பாகம் 1 இலிருந்து பாகம் 17 வரை.)
    பக்கம் - பதிவு எண்
    235 2348
    235 2349
    236 2356
    236 2357
    236 2358
    236 2359
    236 2360
    237 2364
    241 2403
    243 2422
    245 2441
    266 2658
    269 2681
    271 2704
    271 2708
    285 2848
    Last edited by Gopal.s; 5th May 2013 at 04:18 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •