Page 350 of 401 FirstFirst ... 250300340348349350351352360400 ... LastLast
Results 3,491 to 3,500 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #3491
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    மிக அரிய புகைப்படம்.

    சகல கலைகளிலும் கைதேர்ந்த செம்மல், அடக்கமே உருவாய் இருந்த பெருமையை என்னவென்று சொல்வது!

    ஆதாரம்: 'தி ஹிந்து' நாளிதழ் December 15, 2012.
    தனது திறமை, கலையை மற்றவர்களை போல் விளம்பரம் செய்யாத நிறைகுடம் நடிகர் திலகம் வாழ்க பல்லாண்டு.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3492
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-27

    இந்தியாவிலேயே Docu -drama என வகை படும் ,biographical படங்களுக்கு முன்னோடி கப்பலோட்டிய தமிழன். அகில இந்திய அளவில் கொண்டாட பட்டு ,உலக அளவில் தூக்கி பிடிக்க பட்டிருக்க வேண்டிய உன்னத சிறந்த படைப்பு. திலக், விபின் சந்திரா, அரவிந்தர், லாலா லஜபதி முதலியோர் வழியில் வந்து இந்திய சுதந்திரத்திற்காக பல தியாகங்கள் செய்த ஒப்பற்ற தமிழன் வ.உ .சிதம்பரம் பிள்ளை. காங்கிரஸ் ,மற்றும் காந்தியோடு முரண் பட்டவர் என்பதாலேயே ,single political agenda கொண்டிருந்த (அதாவது சுதந்திரமே காந்தி,நேரு, காங்கிரஸ் சாதனை. மற்றோர் ஒரு பங்களிப்பும் இல்லை ) அன்றைய அரசாங்கத்திற்கு இந்த படம் உவப்பில்லை.திராவிட கட்சிகளுக்கும், உண்மையான தலைவர்களிடம் ஈடு பாடில்லை. (அது பிள்ளை ஆகவே இருந்த போதும்).ஆனால் உன்னத தேச பக்தர்களான பந்துலுவும்,நடிகர்திலகமும் இந்த தமிழனை தமிழர்களுக்கு கொண்டு சேர்த்தனர்.

    இந்த படம் நடிகர்திலகத்தின் histrionics என்று சொல்ல படும் உன்னத வேறுபட்ட நடிப்புக்கு அதிகம் scope இல்லாதது.உள்ளதை உள்ள படி உரைக்க வேண்டும். பார்த்து பழகிய contemporaries உயிரோடிருக்கும் போது ,இந்த தலைவனை ரத்தமும் சதையுமாக நம் முன் நிறுத்த வேண்டும்.கட்ட பொம்மன் போல அபார நடிப்பு திறமையால் கட்டபொம்மன் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று காட்டியது போல் செய்ய முடியாது. கப்பலோட்டிய தமிழன் எப்படி இருந்தார் என்று காட்ட வேண்டும்.

    இந்த மேதை தேர்ந்தெடுத்த நடிப்பு பள்ளி முறை Stanislavsky ,Strasberg method Acting சார்ந்தது. method Acting is not just acting or Reacting but behaving the way character should have done .அந்த பாத்திரமாக வாழ வேண்டும் ,அந்த வாழ்க்கை முறையின் உணர்வுகள் போலி செய்ய படாமல் ,நடிப்பவனின் நினைவில் அடுக்ககளில் இருந்து கட்டமைக்க பட்டு, வ.உ.சி. வாழ்க்கையோடு,பாத்திரத்தோடு பொறுத்த பட்டு இணைவு பெற வேண்டும்.

    நடிகர்திலகம் தேச பக்தி கொண்ட பாரம்பரியத்தில் இருந்து வந்தவர். அவரது தந்தை சுதந்திர போராட்டத்தில் ஈடு பட்டு குடும்பத்தை தவிக்க விட்ட தியாகி. சிறை சென்று பல அவதிகள் உற்றவர் .நினைவின் அடுக்குகளுக்கு பஞ்சமில்லாத வகையில் பின்னணி.

    இவ்வளவு அற்புதமான advantage இருக்கும் போது ,உண்மைக்கு மிக மிக அருகில் வந்த அற்புதமான திரைக்கதையும் தயாரான போது ,ஒரு கலைஞனின் அறிவும்,மனமும் ,உணர்வும் அதில் தோயும் பொது ,அதில் தோய்பவன் உலகத்திலேயே மிக சிறந்த நடிகனாக இருக்கும் போது, அந்த magic நிகழத் தானே வேண்டும்?

    நிகழ்ந்ததா?

    வரும் பாகங்களில் அலசுவோம்.

    ----To be continued .
    Last edited by Gopal.s; 13th May 2013 at 11:02 AM.

  4. #3493
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சகல கலா வல்லவர் நடிகர் திலகத்தின் மிக அபூர்வமான நிழற்படத்தை இங்கு பகிரந்து கொண்ட வாசு சார் தங்களுக்கு மிக்க நன்றி.

    இந்த வாத்தியம் பல ஆண்டுகளாக கோட்டு வாத்தியம் என்று அழைக்கப் பட்டு வந்தது. கோட்டு வாத்திய விற்பன்னரான, வானொலி நிலையத்தில் பணியாற்றிய, திரு நரசிம்மன் அவர்கள் தான் இதன் பெயரை சித்ர வீணா என மாற்றினார். அது மட்டுமல்லாமல் தன் புதல்வர்களையும் இந்தக் கலையில் விற்பன்னராக்கினார். இவருடைய மூத்த புத்ல்வர் தான் பிரபல சித்ர வீணா கலைஞர் திரு ரவிகிரண் அவர்கள். இவருடைய மற்றொரு புதல்வர் பிரபல கர்நாடக இசைப் பாடகரும் சித்ர வீணா கலைஞருமான திரு சசிகிரண் அவர்கள்.

    நடிகர் திலகம் கர்நாடக சங்கீதத்தில் முறைப் படி பயிலாவிட்டாலும் கேள்வி ஞானத்தின் மூலம் அதனுடைய நுணுக்ககங்களை நன்கு அறிந்தவர். அது மட்டுமின்றி கீர்த்தனைகளை சுருதி பிசகாமல் பாடத் தெரிந்தவர். ஆனால் தன்னுடைய ஞானத்தை விளம்பரப் படுத்திக் கொள்ள மாட்டார். நரசிம்மன் அவர்கள் நடிகர் திலகத்தின் மேல் மிகுந்த அன்பும் அவருடைய திறமையின் மேல் அதீத பற்றும் கொண்டவர். சங்கீத நுணுக்கங்களை அந்த வாத்தியத்தில் எப்படி கொண்டு வருவது என்பது பற்றி அவரிடம் நடிகர் திலகம் விளக்கம் கேட்கும் போது எடுத்த நிழற்படம் இது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #3494
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அரிய புகைப்படம்.

    நடிகர் திலகமே தெய்வம்

  6. #3495
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    kalakkunga Gopal.

    நடிகர் திலகமே தெய்வம்

  7. #3496
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அரிய புகைப்படம்.

    நடிகர் திலகமே தெய்வம்

  8. #3497
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #3498
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கொல்றீங்க வாசு சார். பம்மலார் , ராகவேந்தர் ,வாசு நிச்சயம் தலைவருக்கு வரபோகும் நினைவு மண்டபத்தை முழுவதுமாக ஆக்ரமித்தாலும் ஆச்சரியம் இல்லை.
    Last edited by Gopal.s; 13th May 2013 at 10:27 AM.

  10. #3499
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by goldstar View Post
    தனது திறமை, கலையை மற்றவர்களை போல் விளம்பரம் செய்யாத நிறைகுடம் நடிகர் திலகம் வாழ்க பல்லாண்டு.

  11. #3500
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    சகல கலா வல்லவர் நடிகர் திலகத்தின் மிக அபூர்வமான நிழற்படத்தை இங்கு பகிரந்து கொண்ட வாசு சார் தங்களுக்கு மிக்க நன்றி.

    இந்த வாத்தியம் பல ஆண்டுகளாக கோட்டு வாத்தியம் என்று அழைக்கப் பட்டு வந்தது. கோட்டு வாத்திய விற்பன்னரான, வானொலி நிலையத்தில் பணியாற்றிய, திரு நரசிம்மன் அவர்கள் தான் இதன் பெயரை சித்ர வீணா என மாற்றினார். அது மட்டுமல்லாமல் தன் புதல்வர்களையும் இந்தக் கலையில் விற்பன்னராக்கினார். இவருடைய மூத்த புத்ல்வர் தான் பிரபல சித்ர வீணா கலைஞர் திரு ரவிகிரண் அவர்கள். இவருடைய மற்றொரு புதல்வர் பிரபல கர்நாடக இசைப் பாடகரும் சித்ர வீணா கலைஞருமான திரு சசிகிரண் அவர்கள்.

    நடிகர் திலகம் கர்நாடக சங்கீதத்தில் முறைப் படி பயிலாவிட்டாலும் கேள்வி ஞானத்தின் மூலம் அதனுடைய நுணுக்ககங்களை நன்கு அறிந்தவர். அது மட்டுமின்றி கீர்த்தனைகளை சுருதி பிசகாமல் பாடத் தெரிந்தவர். ஆனால் தன்னுடைய ஞானத்தை விளம்பரப் படுத்திக் கொள்ள மாட்டார். நரசிம்மன் அவர்கள் நடிகர் திலகத்தின் மேல் மிகுந்த அன்பும் அவருடைய திறமையின் மேல் அதீத பற்றும் கொண்டவர். சங்கீத நுணுக்கங்களை அந்த வாத்தியத்தில் எப்படி கொண்டு வருவது என்பது பற்றி அவரிடம் நடிகர் திலகம் விளக்கம் கேட்கும் போது எடுத்த நிழற்படம் இது.

    விளக்கத்திற்கு நன்றி ராகவேந்திரன் சார்.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •