-
17th April 2013, 03:28 PM
#11
Senior Member
Seasoned Hubber
நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றியோ அல்லது அதனுடைய சாதனைகளைப் பற்றியோ அல்லது அப்படங்களின் டைட்டில்களை மீண்டும் பயன் படுத்துவது பற்றியோ நமக்கு எந்த அளவிற்கு கவலை உள்ளதோ அதற்கு மேல் தயாரிப்பாளர்கள் அல்லது சம்பந்தப் பட்ட கலைஞர்களுக்கு இருக்க வேண்டும். வீரபாண்டிய கட்டபொம்மனாகட்டும், கர்ணனாகட்டும், நாம் தான் குரல் தருகிறோமே யன்றி சம்பந்தப் பட்ட தயாரிப்பாளர்கள் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. இதே போல் தான் படங்களுக்கு டைட்டில் வைக்கும் விஷயமும். சரஸ்வதி சபதம் படத்தைப் பொறுத்த மட்டில் தயாரிப்பாளர் ஏ.பி.என். தரப்பைக் கேட்காமல் டைட்டில் வைத்திருப்பார்களா என்பது சந்தேகமே. இதனைப் பற்றி அவர்களுக்கும் அதே அளவு கவலை அக்கறை இருக்க வேண்டும். அவர்கள் நடிகர் திலகத்தின் படங்கள் மேலும் அவர் மேலும் நம் அளவிற்கு ஈடுபாடும் அபிமானமும் வைத்திருப்பார்களா என்பது தெரியவில்லை. உதாரணம் திருவிளையாடல் திரைப்படத்தின் மறு வெளியீடு.
எனவே நாம் அவசரப் பட்டு உணர்ச்சி வேகத்தில் குரல் கொடுப்பதற்கு முன் இவற்றைப் பற்றி முழுதும் அறிந்து கொள்வதே சிறந்தது.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
17th April 2013 03:28 PM
# ADS
Circuit advertisement
Bookmarks